என் மலர்tooltip icon

    குஜராத்

    • ஜி20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு காந்திநகரில் நடைபெற்றது
    • 2030 ஆம் வருடத்திற்கு முன்னதாகவே காசநோயை இந்தியா ஒழித்து விடும்

    அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் ஜி20. முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சினைகளில் உலகளாவிய ஒத்துழைப்புடன் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு கட்டமைப்பை வடிவமைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் சுழற்சி முறையில் தரப்படுகின்றது.

    1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 வரை ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா வகிப்பதால் 2023 ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது. இதையொட்டி ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஜி20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், "

    அடுத்து ஒரு பெரும் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் சுகாதார அவசரநிலை வரும் போது அதனை எதிர்கொள்ளும் வகையில் நம்மை நாம் இப்போதே தயார் செய்து கொள்ள வேண்டும். உலக சுகாதாரத்திற்கான பல உலகளாவிய முயற்சிகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒன்றிணைத்து நாம் ஒரே தளத்தில் கொண்டு வர முடியும். இதன் மூலம் ஒரே ஆராய்ச்சியை வேறு வடிவத்தில் வேறொருவர் செய்வதும் அதனால் நேரமும், பணமும் விரயமாவதை தவிர்க்கலாம்."

    "நமது புது முயற்சிகள் அனைத்தும் பொது நன்மைக்காக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும்படி பொதுவானதாக மாற்ற வேண்டும். இதன் மூலம் உலகளாவிய ஆரோக்கிய கட்டமைப்பை உருவாக்குதல் சாத்தியமாகும். "நிக்ஷே மித்ரா" எனப்படும் காசநோய் ஒழிப்பிற்கான நண்பர்கள் அமைப்பின் மூலம் மக்களின் பங்களிப்புடன், இந்தியா, முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான 2030 ஆம் வருடத்திற்கு முன்னதாகவே காசநோயை ஒழித்து விடும்," என்று மோடி கூறியிருந்தார்.

    2020ல் உலகெங்கும் பரவிய கொரோனா பெருந்தொற்றையும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் உயிர்சேதம் ஆகியவற்றை மறைமுகமாக குறிக்கும் விதமாகத்தான் இந்த உரையில் மோடி 'அடுத்த சுகாதார அவசரநிலை' என குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் சில பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன.
    • ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14-ந்தேதி நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா அல்லாத போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் அன்று விற்பனையாகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் மோதும் போட்டிக்களுக்கான டிக்கெட்டுகள் (சென்னை, டெல்லி, புனே) வருகிற 31-ந்தேதி விற்பனையாகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ந்தேதி விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையாகிறது.

    டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொண்டால் அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலில் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க இது கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. 3 முதல் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கான முன்பதிவு புக்கிங் முற்றிலும் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சமாக இருக்கிறது.

    இதேபோல அகமதாபாத் செல்வதற்கான விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்து உள்ளது. அக்டோபர் 13 முதல் 15 வரை மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் பெரும்பாலான விமானங்களின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை தான் கட்டணமாகும். உலக கோப்பை போட்டி காரணமாக 5 மடங்கு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் அமரலாம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குஜராத் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு
    • இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்

    மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அப்போது குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பார்வையிட்டார்.

    கட்ச் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப்படையின் வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

    ரூ.257 கோடி செலவில் கட்டப்படும் இந்த வளாகத்தில் நிர்வாக கட்டிடம், உணவகம், அலுவலர்கள் மெஸ், பயிற்சி மையம், அணிவகுப்பு மைதானம் மற்றும் 450-க்கும் மேற்பட்ட உப கரணங்களை பராமரிக்கும் பணிமனை ஆகியவை அடங்கும்.

    மேலும், ஹராமி நாலா மற்றும் எல்லைப் புறக்காவல் நிலையத்தை பார்வையிட்ட அவர், மேற்கில் உள்ள இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். இந்த எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கு 7 கண்காணிப்பு கோபுரங்களை உருவாக்க இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

    • தீ விபத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
    • தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியில் 10 மாடி கொண்ட ராஜஸ்தான் மருத்துவமனை உள்ளது. தனியார் அறக்கட்டளையால் இந்த ஆஸ்பத்திரி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் 20 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியின் காரணமாக அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை ஏற்படுத்தியதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட ஆஸ்பத்திரியின் அடித்தளத்தில் இருந்து வெளியே புகை வந்து கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.

    தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமாகும்.
    • அதிகாரிகளிடம் வசதியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டார்.

    பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்ற நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர், ராஜஸ்தான் பயணத்தை முடித்துகொண்டு இன்று மாலை பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்றார். அங்கு ராஜ்கோட் நகர் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். ரூ.1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமாகும்.

    ராஜ்கோட்டில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஹிராசர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையம், 2,534 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் இந்திய விமான நிலைய ஆணையம் 1,500 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை கட்டியுள்ளது.

    இந்த விமான நிலையம், 3,040 மீட்டர் (3.04 கிமீ) நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதையைக் கொண்டுள்ளது. அங்கு 14 விமானங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படலாம் என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 2017 ல், சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி நடத்தினார்.

    இந்நிலையில், இன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர், விமான நிலைய வளாகத்தில் நடந்து சுற்றிப்பார்த்தார். அதிகாரிகளிடம் வசதியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டார்.

    மேலும், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.860 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    நாளை, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமி கான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    • படுகாயமடைந்தவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.

    குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

    அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • சுமார் 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சாட்டிலைட் பகுதியில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு சொகுசு காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக சீறிப்பாய்ந்து வந்த ஜாகுவார் கார், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கூடியிருந்த மக்கள் மீது மோதியது.

    இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

    சுமார் 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விரைவான நடவடிக்கையாக அகமதாபாத் போலீசார் நேற்று நகரில் உள்ள இஸ்கான் பாலத்தில் ஒன்பது பேரை நசுக்கி கொன்ற கார் டிரைவர் தத்யா படேலை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிறகு, குஜராத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட தத்யா படேல் மற்றும் அவரது தந்தை பிரக்னேஷ் ஆகியோரை நேற்று நள்ளிரவில் விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து வந்தது.

    இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகு கைகளை கூப்பி மன்னிப்பு கேட்பது காணப்பட்டது.

    • ஏற்கனவே விபத்து நடந்த நிலையில், அங்கு திரண்டிருந்த மக்கள் மீது கார் மோதியது.
    • 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சாட்டிலைட் பகுதியில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு சொகுசு காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக சீறிப்பாய்ந்த வந்த ஜாகுவார் கார், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் பூபேந்திர பட்டேல், தனது இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

    • இன்று அதிகாலை ஒரு லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன
    • வழியாக வந்த சொகுசு கார் விபத்தை பார்க்க கூடி நின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்- காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று அதிகாலை ஒரு லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் சிலரும் போலீசாருக்கு உதவியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் ஏராளமானோர் கூடிநின்றனர். இந்த வேளையில் அந்த வழியாக வந்த சொகுசு கார் விபத்தை பார்க்க கூடி நின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் போலீஸ்காரர், ஊர்க்காவல்படை வீரர் உள்பட 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் நின்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த கொடூர விபத்தில் பலர் 20 முதல் 25 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் இறந்தவர்கள் பொடாட், சுரேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காயம் அடைந்தவர்களில் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சோலா சிவில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காட்சிகள் சமூக வலதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உத்தரவிட்டு உள்ளார்.

    • மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.
    • பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    சூரத் :

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும்விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

    இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.

    சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் காதவி, 'பென்டகை முந்துவது எங்கள் நோக்கமல்ல. தேவை அடிப்படையிலேயே இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதனால், வைரத் தொழிலில் ஈடுபடுவோர் இனி தினமும் மும்பை செல்லவேண்டிய தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    'இந்த கட்டிடம், சூரத் வைரத் தொழில்துறையின் ஆற்றல், வளர்ச்சியை காட்டுகிறது. இந்திய தொழில்முனைவு ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது கூடுதல் தகவல்.

    • குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
    • அதில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர் .

    புதுடெல்லி:

    கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    இவர்களில் மத்திய மந்திரியான சுப்ரமணியம் ஜெய்சங்கர் கிருஷ்ணசுவாமி ஆகஸ்டு 18-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும்.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றில் மேற்கு வங்காளத்தில் 6 இடங்கள், குஜராத்தில் 3 இடங்கள் மற்றும் கோவாவில் ஓர் இடத்தில் வாக்கெடுப்பு எதுவும் நடைபெறாது. ஏனெனில், இந்த இடங்களில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லை.

    பா.ஜ.க.வில் 5 வேட்பாளர்கள், திரிணாமுல் காங்கிரசில் 6 வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களில் எஸ். ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    • மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார்.
    • பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது.

    அகமதாபாத்:

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்தியாவின் 22வது சட்ட ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பொது சிவில் சட்டம் பற்றிய பெரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் பார்வைகள் மற்றும் யோசனைகளை கோரியிருந்தது. 

    இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார். இதையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான பல்வேறு திட்டங்களையும் அவை செயல்படுத்தப்படும் நிலை குறித்தும் குஜராத் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அகமதாபாத் வந்திருந்தார்.

    அப்பொழுது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

    பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது. நமது அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக, 'மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இது அவசியம்' என்று கூறியிருந்தார்.

    பாஜகவும், அதன் அரசும் அரசியல் சட்டத்தை மாற்றப்போவதாக காங்கிரஸ் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. பொது சிவில் சட்டம் உங்களுக்கு எதிரானது அல்ல என்பதை இஸ்லாமியர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இதில் அரசியல் செய்வதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனை கொண்டு வருவது மிகவும் முக்கியம். பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களின் விரோதியோ அல்லது தலித்களின் விரோதியோ அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×