search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
    X

    உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

    • தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.

    உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    இந்நிலையில், சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    மேலும், 4,700 அலுவலகங்கள் உள்ள இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×