என் மலர்
பெண்கள் மருத்துவம்
தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.
பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.
குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும்.
குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.
பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.
குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும்.
சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும்.
ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதையும், நல்ல மன வளர்ச்சியை கொண்டிருப்பதையும் அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்குக் கிடைக்கும் போதிய அளவிலான தாய்ப்பால் உறுதி செய்கிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராம் விளக்குகிறார்.
ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
அரிய பல சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை தவிர்க்கக் கூடாது. சிலருக்கு மார்பகங்கள் சிறிதாக இருக்கலாம்.
இதனால், போதிய அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா என்று சந்தேகப்படுவர். ஆனால், மார்பகங்களின் அளவுகள் ஒரு பிரச்சினையே அல்ல. குழந்தை பிறந்து விட்டால் தாய்ப்பால் ஊறுவது இயற்கையானது.
சத்துள்ள உணவுகளை உண்ணவில்லை என்றாலும் தாய்ப்பாலில் குழந்தைக்கான சத்துக்கள் நிரம்பியே காணப்படும். சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் எக்காரணம் கொண்டும் கடைகளில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.
குழந்தையின் உதடுகள் பால் குடிப்பது போல் அடிக்கடி சப்புக்கொட்டும். கைகளை அடிக்கடி முகம் மற்றும் வாய் நோக்கி கொண்டு செல்லும். குழந்தையின் இந்த அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தை அழத்தொடங்கும். குழந்தையை தாய் உடலுடன் ஒட்டி அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், குழந்தை பாதுகாப்பாக உணருவதோடு, குழந்தை அமைதியாக இருக்கும். அதன் உடலின் சர்க்கரை அளவு இயல்பாக இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் தலையும், தோள்பட்டைகளும் சரியான நிலையில் இருக்கும்படி அமர்ந்து தலையணையில் முதுகை சாய்த்து அமர்ந்த நிலையில் தரலாம்.
டாக்டர் முருகன் ஜெயராம்
ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
அரிய பல சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை தவிர்க்கக் கூடாது. சிலருக்கு மார்பகங்கள் சிறிதாக இருக்கலாம்.
இதனால், போதிய அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா என்று சந்தேகப்படுவர். ஆனால், மார்பகங்களின் அளவுகள் ஒரு பிரச்சினையே அல்ல. குழந்தை பிறந்து விட்டால் தாய்ப்பால் ஊறுவது இயற்கையானது.
சத்துள்ள உணவுகளை உண்ணவில்லை என்றாலும் தாய்ப்பாலில் குழந்தைக்கான சத்துக்கள் நிரம்பியே காணப்படும். சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் எக்காரணம் கொண்டும் கடைகளில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.
குழந்தையின் உதடுகள் பால் குடிப்பது போல் அடிக்கடி சப்புக்கொட்டும். கைகளை அடிக்கடி முகம் மற்றும் வாய் நோக்கி கொண்டு செல்லும். குழந்தையின் இந்த அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தை அழத்தொடங்கும். குழந்தையை தாய் உடலுடன் ஒட்டி அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், குழந்தை பாதுகாப்பாக உணருவதோடு, குழந்தை அமைதியாக இருக்கும். அதன் உடலின் சர்க்கரை அளவு இயல்பாக இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் தலையும், தோள்பட்டைகளும் சரியான நிலையில் இருக்கும்படி அமர்ந்து தலையணையில் முதுகை சாய்த்து அமர்ந்த நிலையில் தரலாம்.
டாக்டர் முருகன் ஜெயராம்
நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம்.
பெண்கள் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிலக்கு வருவதற்கு முன் பெண்களுக்கு ஏற்படுகிற உடல்நல பிரச்சினைகள்.
பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு, எரிச்சல், காரணமற்ற கோபம், உடல் எடை அதிகரித்து வயிறு உப்பியது போன்ற எண்ணம், மார்பகம் கனமாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், உணவு பிடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, அழுகை வருவது போன்ற பலவகையான உணர்வுகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ பாதிப்பு என்கிறது மருத்துவம். சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் மாதவிலக்கு சமயத்திலும் தொடர்கின்றன.
இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் திணறுகிறார்கள். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் இந்த பிரச்சினையைப்பற்றி அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான். ஏன் ஒவ்வொரு மாசமும் இப்படி பிரச்சினை பண்ற என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது.
அந்தப் பெண்கள் ‘பி.எம்.எஸ்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மாதவிலக்குக்கு முந்தைய பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது நோயல்ல மாதவிலக்குக்கு முந்தைய சமயத்திலும் சிலருக்கு மாதவிலக்கு சமயத்திலும் ஏற்படுகிற சிறிய அளவிலான மன அழுத்தம் என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பாக சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். டென்சன் காரணமாக ரத்த அழுத்தம் உயராமல் இருக்கத்தான் இந்த உப்புக் கட்டுப்பாடு. இதோடு கூட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த சமயத்தில் மன இறுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மாதவிலக்கு நாட்களில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். மாதவிலக்கு முடியும் போது இந்தப் பிரச்சினையும் தானாக மறைந்துவிடும்.
பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு, எரிச்சல், காரணமற்ற கோபம், உடல் எடை அதிகரித்து வயிறு உப்பியது போன்ற எண்ணம், மார்பகம் கனமாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், உணவு பிடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, அழுகை வருவது போன்ற பலவகையான உணர்வுகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ பாதிப்பு என்கிறது மருத்துவம். சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் மாதவிலக்கு சமயத்திலும் தொடர்கின்றன.
இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் திணறுகிறார்கள். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் இந்த பிரச்சினையைப்பற்றி அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான். ஏன் ஒவ்வொரு மாசமும் இப்படி பிரச்சினை பண்ற என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது.
அந்தப் பெண்கள் ‘பி.எம்.எஸ்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மாதவிலக்குக்கு முந்தைய பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது நோயல்ல மாதவிலக்குக்கு முந்தைய சமயத்திலும் சிலருக்கு மாதவிலக்கு சமயத்திலும் ஏற்படுகிற சிறிய அளவிலான மன அழுத்தம் என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பாக சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். டென்சன் காரணமாக ரத்த அழுத்தம் உயராமல் இருக்கத்தான் இந்த உப்புக் கட்டுப்பாடு. இதோடு கூட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த சமயத்தில் மன இறுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மாதவிலக்கு நாட்களில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். மாதவிலக்கு முடியும் போது இந்தப் பிரச்சினையும் தானாக மறைந்துவிடும்.
பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.
நம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் இன்றைக்கு சுமார் 300 தொழிலக வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வறிக்கை.
நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாகச் செலுத்தி வருகின்றன.
சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன. பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.
பிறக்கும் குழந்தையின் உடலிலும் பல வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது, என்கிறது.
இக்குழுவானது, சில குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட பிறகு அதிலிருந்த ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது பல வகையான வேதிப்பொருட்கள் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை, நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாசுபட்ட சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையையும் சென்றடையும் என்ற உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பச்சிளம் குழந்தைகளின் உடலையும் பாதிப்படையச் செய்யும் நிலையை ஏற்படுத்துவது வேதனையிலும் வேதனையே!
நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாகச் செலுத்தி வருகின்றன.
சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன. பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.
பிறக்கும் குழந்தையின் உடலிலும் பல வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது, என்கிறது.
இக்குழுவானது, சில குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட பிறகு அதிலிருந்த ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது பல வகையான வேதிப்பொருட்கள் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை, நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாசுபட்ட சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையையும் சென்றடையும் என்ற உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பச்சிளம் குழந்தைகளின் உடலையும் பாதிப்படையச் செய்யும் நிலையை ஏற்படுத்துவது வேதனையிலும் வேதனையே!
பெண்கள் இரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம்.
இந்தியாவில் சுமார் 70 சதவீதம் பேருக்கு ரத்தசோகை குறைபாடு உள்ளது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தசோகை ‘அனீமியா‘ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரத்தசோகை குறைபாடுகளுக்கு ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மாதவிலக்கு போன்ற காரணங்களால் அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு.
பொதுவாக ரத்தசோகை பிரசவத்தை சிக்கலாக்கி உயிருக்கே கூட ஆபத்தை விளைவித்து விடுகிறது. இத்தகைய ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் திவ்யா கூறியதாவது:-
ரத்தசோகை
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதே ரத்தசோகை எனப்படும். ரத்தத்தின் சிவப்பணுக்குள் இருக்கும் புரதம் தான் ஹீமோகுளோபின் ஆகும். இந்த ஹீமோகுளோபினில் இரும்புச்சத்து இருக்கும். இத்தகைய சிவப்பணுக்கள் தான் ரத்தத்தில் பிராணவாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. பொதுவாக சிவப்பணுக்கள் 110 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும். அதன்பிறகு அது சிதைந்து விடும். ரத்தசோகை என்பது பெண்களை பொறுத்தவரை ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் இன்றி அவர்கள் வளர்கின்றனர் என்பதே அதற்கு காரணம் ஆகும். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது தேவையான அளவுக்கு சக்தி இல்லாமல் போகிறது. அதனால் உடல் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி வயதுக்கு வந்தவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.
அறிகுறிகள்
இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் ரத்தசோகையால், சோர்வு உண்டாகும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கால் எலும்புகள் பலமிழக்கும். அப்போது பித்தம் அதிகரிப்பதால் ரத்தம் சீர்கெடும். இதனால் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி வரும். இதுதவிர கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் உண்டாகும்.
சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததை போன்ற உணர்வு, செரிமானமின்மை, உடல் வெளுத்து போகுதல், கை, கால்களில் நகம் உடைந்து போகுதல், வீக்கம், முடி கொட்டுதல், வாயின் ஓரத்தில் புண் உண்டாகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதுதவிர முகவீக்கம், கண், நாக்கு வெளுத்து காணப்படுதல், மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாக அல்லது தாறுமாறாக துடிப்பது, குளிர்ச்சியான சூழலை தாங்க முடியாத நிலை, நாக்கு உலர்ந்து போவதால் சுவையுணர்வு பாதிக்கப்படுவது, அதிகம் வியர்ப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
காரணங்கள்
பெண்கள் கர்ப்பம் ஆகுவதற்கு முன்பு அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், பிரசவத்தின் போது இரும்புச்சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ரத்தசோகை அதிகமாக ஏற்படும். இளவயதில் திருமணம் ஆவதால் இந்த குறைபாடு வர வாய்ப்புள்ளது. இதுதவிர வலுவற்ற அல்லது பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தசோகை உண்டாகும்.
வயிற்றில் உண்டாகும் புண், கட்டி, வீக்கம், புற்றுநோய் இவற்றால் உள்ளே ஏற்படும் ரத்தகசிவாலும் ரத்தசோகை ஏற்படலாம். இதுதவிர ஒரு சில நோய்கள் காரணமாக சீக்கிரமாக சிவப்பணுக்கள் சிதைவதாலும், அப்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாலும் உண்டாகலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நோய் தொற்றுகளை போக்கும் சில மருந்துகள், நச்சு பொருட்களாலும் ரத்தசோகை உண்டாகும். இதுதவிர இன்னும் சில காரணங்கள் உள்ளன.

பிரசவத்தின் போது...
கர்ப்ப காலத்தில் பெண்களின் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 10.5 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. அதற்காக 5 அல்லது 6-வது மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதும், அதிக ரத்தசோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றிக்கொள்வதும் நல்லது. அதேபோல் 7 அல்லது 8-வது மாதத்தில் ரத்த ஊசி போட்டுக்கொள்வதும், 8 அல்லது 9-வது மாதத்தில் ரத்தம் ஏற்றிக்கொள்வது பிரசவத்தை சிக்கலின்றி எளிதாக்கும்.
பொதுவாக பிரசவத்தின்போது ரத்தப்போக்கு 500 மில்லி லிட்டர் வரை இருக்கலாம். அதுவே அறுவை சிகிச்சை என்றால் 1 லிட்டர் வரையிலும் ரத்தப்போக்கு இருக்கலாம். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அதனை அவர்களால் தாங்கி கொள்ள இயலாது. மேலும் 5 அல்லது 6 குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இரும்புச்சத்து மாத்திரை
குடலில் இருக்கும் நாக்கு பூச்சிகள் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ளும். அதனால் சத்து குறைபாடு உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காக பூச்சி மாத்திரை சாப்பிட வேண்டும். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், அதாவது 11 முதல் 12 வயதில் உள்ளவர்களுக்கும், ஒரு சிலருக்கு 20 வயது வரை கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் அவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
பொதுவாக ஆண்களுக்கு ரத்தத்தில் 15 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் என்ற அளவிலும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை இருப்பது நல்லது. இது ஆரோக்கியமான வாழ்வை தரும். சாதாரணமாக ரத்த பரிசோதனையிலேயே ரத்தசோகையை கண்டுபிடித்து விடலாம்.
உணவு முறைகள்
இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது எப்போதும் நல்லது. கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், உலர் திராட்சை, அத்திப்பழம், பலாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தியடைந்து ரத்தசோகை நீங்கும். முளை கட்டிய பயறு, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், உளுந்தங்களி சாப்பிடுவதும் நன்மை தரும்.
ரத்தசோகை ஏற்பட்டால் வைட்டமின்-12 குறைபாடும் உண்டாகும். அது நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். பொதுவாக ரத்தசோகையில், சாதாரணமானவை, தீவிரமானவை உள்பட பல வகைகள் உண்டு. ரத்தசோகை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பநிலையிலேயே ரத்தசோகையை கண்டறிந்து விட்டால் எளிதில் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுவாக ரத்தசோகை பிரசவத்தை சிக்கலாக்கி உயிருக்கே கூட ஆபத்தை விளைவித்து விடுகிறது. இத்தகைய ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் திவ்யா கூறியதாவது:-
ரத்தசோகை
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதே ரத்தசோகை எனப்படும். ரத்தத்தின் சிவப்பணுக்குள் இருக்கும் புரதம் தான் ஹீமோகுளோபின் ஆகும். இந்த ஹீமோகுளோபினில் இரும்புச்சத்து இருக்கும். இத்தகைய சிவப்பணுக்கள் தான் ரத்தத்தில் பிராணவாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. பொதுவாக சிவப்பணுக்கள் 110 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும். அதன்பிறகு அது சிதைந்து விடும். ரத்தசோகை என்பது பெண்களை பொறுத்தவரை ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் இன்றி அவர்கள் வளர்கின்றனர் என்பதே அதற்கு காரணம் ஆகும். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது தேவையான அளவுக்கு சக்தி இல்லாமல் போகிறது. அதனால் உடல் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி வயதுக்கு வந்தவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.
அறிகுறிகள்
இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் ரத்தசோகையால், சோர்வு உண்டாகும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கால் எலும்புகள் பலமிழக்கும். அப்போது பித்தம் அதிகரிப்பதால் ரத்தம் சீர்கெடும். இதனால் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி வரும். இதுதவிர கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் உண்டாகும்.
சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததை போன்ற உணர்வு, செரிமானமின்மை, உடல் வெளுத்து போகுதல், கை, கால்களில் நகம் உடைந்து போகுதல், வீக்கம், முடி கொட்டுதல், வாயின் ஓரத்தில் புண் உண்டாகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதுதவிர முகவீக்கம், கண், நாக்கு வெளுத்து காணப்படுதல், மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாக அல்லது தாறுமாறாக துடிப்பது, குளிர்ச்சியான சூழலை தாங்க முடியாத நிலை, நாக்கு உலர்ந்து போவதால் சுவையுணர்வு பாதிக்கப்படுவது, அதிகம் வியர்ப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
காரணங்கள்
பெண்கள் கர்ப்பம் ஆகுவதற்கு முன்பு அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், பிரசவத்தின் போது இரும்புச்சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ரத்தசோகை அதிகமாக ஏற்படும். இளவயதில் திருமணம் ஆவதால் இந்த குறைபாடு வர வாய்ப்புள்ளது. இதுதவிர வலுவற்ற அல்லது பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தசோகை உண்டாகும்.
வயிற்றில் உண்டாகும் புண், கட்டி, வீக்கம், புற்றுநோய் இவற்றால் உள்ளே ஏற்படும் ரத்தகசிவாலும் ரத்தசோகை ஏற்படலாம். இதுதவிர ஒரு சில நோய்கள் காரணமாக சீக்கிரமாக சிவப்பணுக்கள் சிதைவதாலும், அப்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாலும் உண்டாகலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நோய் தொற்றுகளை போக்கும் சில மருந்துகள், நச்சு பொருட்களாலும் ரத்தசோகை உண்டாகும். இதுதவிர இன்னும் சில காரணங்கள் உள்ளன.

பிரசவத்தின் போது...
கர்ப்ப காலத்தில் பெண்களின் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 10.5 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. அதற்காக 5 அல்லது 6-வது மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதும், அதிக ரத்தசோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றிக்கொள்வதும் நல்லது. அதேபோல் 7 அல்லது 8-வது மாதத்தில் ரத்த ஊசி போட்டுக்கொள்வதும், 8 அல்லது 9-வது மாதத்தில் ரத்தம் ஏற்றிக்கொள்வது பிரசவத்தை சிக்கலின்றி எளிதாக்கும்.
பொதுவாக பிரசவத்தின்போது ரத்தப்போக்கு 500 மில்லி லிட்டர் வரை இருக்கலாம். அதுவே அறுவை சிகிச்சை என்றால் 1 லிட்டர் வரையிலும் ரத்தப்போக்கு இருக்கலாம். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அதனை அவர்களால் தாங்கி கொள்ள இயலாது. மேலும் 5 அல்லது 6 குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இரும்புச்சத்து மாத்திரை
குடலில் இருக்கும் நாக்கு பூச்சிகள் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ளும். அதனால் சத்து குறைபாடு உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காக பூச்சி மாத்திரை சாப்பிட வேண்டும். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், அதாவது 11 முதல் 12 வயதில் உள்ளவர்களுக்கும், ஒரு சிலருக்கு 20 வயது வரை கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் அவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
பொதுவாக ஆண்களுக்கு ரத்தத்தில் 15 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் என்ற அளவிலும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை இருப்பது நல்லது. இது ஆரோக்கியமான வாழ்வை தரும். சாதாரணமாக ரத்த பரிசோதனையிலேயே ரத்தசோகையை கண்டுபிடித்து விடலாம்.
உணவு முறைகள்
இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது எப்போதும் நல்லது. கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், உலர் திராட்சை, அத்திப்பழம், பலாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தியடைந்து ரத்தசோகை நீங்கும். முளை கட்டிய பயறு, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், உளுந்தங்களி சாப்பிடுவதும் நன்மை தரும்.
ரத்தசோகை ஏற்பட்டால் வைட்டமின்-12 குறைபாடும் உண்டாகும். அது நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். பொதுவாக ரத்தசோகையில், சாதாரணமானவை, தீவிரமானவை உள்பட பல வகைகள் உண்டு. ரத்தசோகை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பநிலையிலேயே ரத்தசோகையை கண்டறிந்து விட்டால் எளிதில் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் மலச்சிக்கல் பிரச்சனையும் ஒன்றாகும். இந்த பிரச்சனைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் உடம்பில் ஏராளமான மாற்றங்களை பெண்கள் சந்திக்க நேரிடும். அதில், மலச்சிக்கல் பிரச்சனை பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும்.
இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது, அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும். அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு சீரகம் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.
* வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
* தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.
* நவதானியங்களால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகமாவதை தவிர்ப்பதோடு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.
* ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
* தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்.
இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது, அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும். அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு சீரகம் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.
* வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
* தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.
* நவதானியங்களால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகமாவதை தவிர்ப்பதோடு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.
* ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
* தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்.
பெண்கள் தொடர்ந்து ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும் என்றும் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்று சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
நவீன பேஷன் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்தக்கால பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை, குதிகால் செருப்புகள். அவை பெண்களின் நடைக்கும், உடைக்கும் பொருத்தமான தேர்வாக அமைகிறது. அவைகளை அணிவதை அலங்காரத்துடன் கூடிய அந்தஸ்து சார்ந்த விஷயமாக பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
‘நான்கு பேர் மத்தியில் அழகாக, கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். தன்னை அனைவரும் நவீன பெண்ணாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது தற்கால பெண்களின் சிந்தனையாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து அணிவதால் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்பது சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
இந்தியாவில் 68 சதவீதம் பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை விரும்பி அணிகிறார்கள். இது கால்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அதனை அணிந்து சரியாக நடக்க பழகாவிட்டால் எந்த நேரத்திலும் சறுக்கி விழ நேரிடும். அப்படி உடலின் சமநிலை தவறி கீழே விழும்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற சிக்கலான இடத்தில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதும் கடினமானது.

எலும்பு இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு வலி, வேதனையை உண்டாக்கும். நரம்புகள் சுளுக்கி, வலி வீக்கம் தோன்றும். இடுப்பின் அருகே நரம்புகள் ஒன்றோடொன்று சுற்றிக்கொண்டு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூட சிரமமாக இருக்கும். அதிலும் 12 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
மூட்டுகள்தான் நமது உடலைத் தாங்குகின்றன. அது சமநிலையை இழக்கும் போது இடம் மாறி பிறழ்ந்து போகும். அத்தகைய சிக்கல் நேர்ந்தால் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களில் 90 சதவீதம் பேர் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உயரமான காலணி அணிவதால் உடல் எடை முன்னுக்கு தள்ளப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மாறுகிறது. உடலுக்கு தேவையற்ற அழுத்தமும் ஏற்படுகிறது.
ஹைஹீல்ஸ் செருப்புகளின் வடிவமைப்பு முறையால் நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள் இயற்கைக்கு மாறாக முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதனால் உடலை சமநிலைப்படுத்திக்கொள்வதற்கு எலும்புகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூமியில் சமநிலையில் நடந்து பழகிய கால்கள் ஹைஹீல்ஸ் ரூபத்தில் திடீரென்று சரக்கஸ் செய்வது போல் நடைபயில்வது சிரமமானது. காலணியின் உயரத்திற் கேற்ப உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்புகளும் ஏற்படும்.
பெண்களே நாகரிக மோகத்தைவிட, உடல் ஆரோக்கியம் மிக முக்கியமல்லவா!
‘நான்கு பேர் மத்தியில் அழகாக, கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். தன்னை அனைவரும் நவீன பெண்ணாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது தற்கால பெண்களின் சிந்தனையாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து அணிவதால் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்பது சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
இந்தியாவில் 68 சதவீதம் பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை விரும்பி அணிகிறார்கள். இது கால்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அதனை அணிந்து சரியாக நடக்க பழகாவிட்டால் எந்த நேரத்திலும் சறுக்கி விழ நேரிடும். அப்படி உடலின் சமநிலை தவறி கீழே விழும்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற சிக்கலான இடத்தில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதும் கடினமானது.

எலும்பு இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு வலி, வேதனையை உண்டாக்கும். நரம்புகள் சுளுக்கி, வலி வீக்கம் தோன்றும். இடுப்பின் அருகே நரம்புகள் ஒன்றோடொன்று சுற்றிக்கொண்டு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூட சிரமமாக இருக்கும். அதிலும் 12 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
மூட்டுகள்தான் நமது உடலைத் தாங்குகின்றன. அது சமநிலையை இழக்கும் போது இடம் மாறி பிறழ்ந்து போகும். அத்தகைய சிக்கல் நேர்ந்தால் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களில் 90 சதவீதம் பேர் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உயரமான காலணி அணிவதால் உடல் எடை முன்னுக்கு தள்ளப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மாறுகிறது. உடலுக்கு தேவையற்ற அழுத்தமும் ஏற்படுகிறது.
ஹைஹீல்ஸ் செருப்புகளின் வடிவமைப்பு முறையால் நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள் இயற்கைக்கு மாறாக முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதனால் உடலை சமநிலைப்படுத்திக்கொள்வதற்கு எலும்புகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூமியில் சமநிலையில் நடந்து பழகிய கால்கள் ஹைஹீல்ஸ் ரூபத்தில் திடீரென்று சரக்கஸ் செய்வது போல் நடைபயில்வது சிரமமானது. காலணியின் உயரத்திற் கேற்ப உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்புகளும் ஏற்படும்.
பெண்களே நாகரிக மோகத்தைவிட, உடல் ஆரோக்கியம் மிக முக்கியமல்லவா!
மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.
நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.
இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.
நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.
அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.
அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.
ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.
அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.
அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.
ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.
பெண்கள் சில பொருட்களை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் அலர்ஜிகளின் வகைகள் பற்றியும் அதனை குணப்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அலர்ஜி வகைகள் மற்றும் அதிலிருந்து குணமாவதற்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
* இன்றைய பெண்களுக்கு இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்…. மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.
முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். ‘ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்சனைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது.
அல்லது ‘லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை’ என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் தடவி, அதன் மேலாக வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்சனை தீரும்.
* முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோலில் கோடு போட்டது போல் பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும்.
நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்துவிடுவது தான் நல்லது.
* அழகழகாக மின்னும் சில நவீன வகை மெட்டல் நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு தங்கம்கூட அலர்ஜியை ஏற்படுத்தும்.
இவர்கள் உலோகத்தால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்தலாம்.
* இன்றைய பெண்களுக்கு இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்…. மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.
முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். ‘ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்சனைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது.
அல்லது ‘லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை’ என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.
* நெற்றியில் வைத்துக் கொள்ளும் சாந்து, தரமற்ற குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள பசையினால் வரக்கூடிய அலர்ஜி இது. இதனால் நெற்றிப் பகுதி தோல் உரிந்து சிவப்பாகத் தடித்துவிடும்.

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் தடவி, அதன் மேலாக வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்சனை தீரும்.
* முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோலில் கோடு போட்டது போல் பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும்.
நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்துவிடுவது தான் நல்லது.
* அழகழகாக மின்னும் சில நவீன வகை மெட்டல் நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு தங்கம்கூட அலர்ஜியை ஏற்படுத்தும்.
இவர்கள் உலோகத்தால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்தலாம்.
பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றுள் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
கிரீன் டீ, உலகளவில் பரவலாக பருகப்படும் ஆரோக்கிய பானம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அது மார்பக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மரபணுக்கள் சேதம் ஆகாமல் தடுக்கவும் துணைபுரிகிறது. கிரீன் டீயை தொடர்ந்து பருகிவந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும். ஆனால் தரமான கிரீன் டீயை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
உடலில் புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் காய்கறி வகையை சேர்ந்த பிராக்கோலிக்கு இருக்கிறது. மார்பகம், சிறுநீர்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் அது முக்கியபங்கு வகிக்கிறது.

காளான்களை தொடர்ந்து உணவில் சேர்ப்பதும் அவசியமானது. காளான்களை தினமும் உணவில் சேர்க்கும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தக்காளி பழங்களை வேகவத்து உணவில் சேர்த்தால் உடல்நலம் மேம்படும். அதிலிருக்கும் லீகோபின் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது. பெண்களின் உடலில் லீகோபின் அதிகம் சேர்ந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரட்டில் கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. உடலில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் பெண்கள் கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது.
கிரீன் டீ, உலகளவில் பரவலாக பருகப்படும் ஆரோக்கிய பானம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அது மார்பக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மரபணுக்கள் சேதம் ஆகாமல் தடுக்கவும் துணைபுரிகிறது. கிரீன் டீயை தொடர்ந்து பருகிவந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும். ஆனால் தரமான கிரீன் டீயை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
உடலில் புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் காய்கறி வகையை சேர்ந்த பிராக்கோலிக்கு இருக்கிறது. மார்பகம், சிறுநீர்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் அது முக்கியபங்கு வகிக்கிறது.

காளான்களை தொடர்ந்து உணவில் சேர்ப்பதும் அவசியமானது. காளான்களை தினமும் உணவில் சேர்க்கும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தக்காளி பழங்களை வேகவத்து உணவில் சேர்த்தால் உடல்நலம் மேம்படும். அதிலிருக்கும் லீகோபின் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது. பெண்களின் உடலில் லீகோபின் அதிகம் சேர்ந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரட்டில் கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. உடலில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் பெண்கள் கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது.
மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
நாளை (ஆகஸ்டு 1-ந் தேதி) உலக தாய்ப்பால் தினம்.
குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.
குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.
இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.
ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
போதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.
சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.
குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.
குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.
எப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.
குழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.
நீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.
அதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தாய்ப்பால் புகட்டும் இயல்பைப் போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம்.
உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது; தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
நம் நாட்டில் குழந்தை பிறந்தபோது, 80 முதல் 90 சதவீதம் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், ஆறாவது மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் கூட தாய்ப்பால் குடிப்பதில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றம் அடையாமலிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம்.
அனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் தமிழ்நாடு இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள். இந்த நற்போக்கு நன்கு வளர்க!
மருத்துவர் தாரா நடராசன், முன்னாள் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி
குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.
குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.
இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.
ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
போதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.
சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.
குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.
குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.
எப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.
குழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.
நீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.
அதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தாய்ப்பால் புகட்டும் இயல்பைப் போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம்.
உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது; தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
நம் நாட்டில் குழந்தை பிறந்தபோது, 80 முதல் 90 சதவீதம் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், ஆறாவது மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் கூட தாய்ப்பால் குடிப்பதில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றம் அடையாமலிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம்.
அனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் தமிழ்நாடு இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள். இந்த நற்போக்கு நன்கு வளர்க!
மருத்துவர் தாரா நடராசன், முன்னாள் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி






