என் மலர்
பெண்கள் மருத்துவம்
சுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது முக்கியம்.
இன்றைக்கு இணையதளம் இலவசமாக கிடைப்பதால், அதை ஆக்கப்பூர்வமாக எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக, எதற்கெடுத்தாலும் இணையதளத்தை நாடுகிறார்கள். வரைமுறையின்றி எதை வேண்டுமானாலும் பார்க்கிறார்கள். இது பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடும்.
அப்படி ஒரு விபரீத விளையாட்டு ஒரு ஆசிரியையின் உயிரை விலையாக்கி இருக்கிற செய்தி கவலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவருக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கணவர் சமூகவலைத்தளத்தை பார்த்து நண்பரின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தையை பெற்றெடுத்த தாய் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நிச்சயம் எளிதில் கடந்துபோகக் கூடியதில்லை. சுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புவார்கள்; விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது முக்கியம் அல்லவா?
பொதுவாகவே இன்றைய சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. எதற்கெடுத்தாலும் பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ‘மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் வீட்டிலேயே 10-க்கும் அதிகமான பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்கள். ஆனால் மருத்துவத்துறை அபரிமித வளர்ச்சியை அடைந்திருக்கும் நிகழ்காலத்தில், மருத்துவமனையில் பெரும்பாலும் ‘சிசேரியன்’ மூலம் தானே பிரசவம் நடக்கிறது?’ என்று அலட்டிக்கொள்கிறார்கள். அதாவது, டாக்டர்கள் வேண்டுமென்றே ‘சிசேரியன்’ மூலம் பிரசவம் பார்ப்பதாக ஒரு மனநிலை சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது.
இப்படி பழையகாலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்துவதே முதலில் தவறு. அந்த காலத்தில் உடல் உழைப்பை நம்பி தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள். ஆண்களும், பெண்களும் சரிக்கு சமமாக வேலை செய்தார்கள். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமாயிற்று.
அந்த காலத்தில் மருத்துவமனைகளும் வெகுகுறைவு. இதனால் வேறுவழியும் இல்லை. அவர்கள் வீட்டில் தான் பிரசவம் பார்த்தாக வேண்டும். ஆனால் இன்றைய நிலை அப்படியானதல்ல. ஊருக்கு ஊரு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, நாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை.
இதையெல்லாம் விட முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பு வீட்டில் சுகப்பிரசவம் பார்த்தார்கள் என்று நாம் சொல்கிறோம். உண்மை என்னவென்றால், அப்போது பிரசவத்தின்போது தாய் இறப்பதும், பிறந்த குழந்தை இறப்பதும் அதிகமாக இருந்தது.
15 குழந்தைகள் பெற்றிருந்தால் 3 குழந்தைகள் பல வீடுகளில் பிறக்கும்போதே இறந்திருந்தன. 1000 பிரசவங்களில் சுமார் 300 தாய்மார்கள் வரை இறப்பை சந்தித்தனர். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்களை பாருங்கள் இது புலப்படும்.
ஆனால், இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. பிரசவத்தின்போது, தாய் இறப்பு விகிதமும், சேய் இறப்பு விகிதமும் பல மடங்கு குறைந்துவிட்டது. இந்த புள்ளி விவரங்கள் இந்தியா மட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.
சுகப்பிரசவம் வேண்டும் என்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், மருத்துவர்களின் ஆலோசனையும் இன்றி வீட்டில் சுயமாக பிரசவம் பார்ப்பது அறிவுடமை ஆகாது. யூடியுப் போன்ற சமூகவலைத்தள வீடியோக்களை நம்பினால் ஏமாந்துதான் போவோம்.
இன்றைக்கும் மேலைநாடுகள் சிலவற்றில் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளோடு இதை செய்கிறார்கள். இதற்காக மருத்துவர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது அரசு பயிற்சி பெற்ற நர்சுகள் வீடுகளுக்கு வந்து பிரசவம் பார்க்கிறார்கள்.
ஆனால், இங்கே அதற்கான வாய்ப்புகள் இருக் கிறதா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பொதுவாக, சுகப்பிரசவம் வேண்டும் என்றால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அன்றைய காலத்தில் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் மருத்துவம் வளரவில்லை. இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆனால் மனிதனின் ஆரோக்கியம் குறைந்துவிட்டது.
எல்லாவற்றுக்கும் பழைய காலத்தை ஒப்பிடும் நாம், அவர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்வை பெற எதையும் செய்வதில்லை. பிறகு சுகப்பிரசவம் மட்டும் வேண்டுமென்றால் எப்படி முடியும்?
பொதுவாக சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்றால் ரத்தத்தில் 12 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். கருவறையில் இருந்து முதலில் குழந்தையின் தலை வெளியே வர வேண்டும். பிரசவமான 15 நிமிடங்களுக்குள் நஞ்சு வெளியே வர வேண்டும். அல்லது, வெளியே எடுக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் அதிகபடியான உதிரப்போக்கு காரணமாக தாய் உயிரிழக்க நேரிடும்.
திருப்பூரில் நடந்த சம்பவத்தில் நஞ்சு வெளியே வராததால் தான் அந்த ஆசிரியை இறந்தார். ஒருவேளை அவருக்கு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்திருந்தால், இன்றைக்கு அவர் தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்திருப்பார்.
அனைத்திலும் புதுமைக்கு மாறிவிட்டு, பிரசவம் மட்டும் வீட்டில் சுகமாக நடக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது. நம் மனமும், உடலும் மாறிவிட்டன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை நமக்கு அருள்புரியும்.
சிசேரியன் பிரசவங்கள் குறைய வேண்டும். சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு; அதுதான் விருப்பமும் கூட. ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது கணவனும், மனைவியும் தான்.
இதற்கு, கருத்தரிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சரியான திட்டமிடல் அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லாத இக்காலகட்டத்தில், உடற் பயிற்சி அவசியமாகிறது. அதே போல, கர்ப்ப காலங்களில் மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும். பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே, சுகப்பிரசவம் ஏற்படுமா? அல்லது சிக்கலான பிரசவமாக இருக்குமா? என்பது தெரிந்துவிடும். இதை மருத்துவரிடம் கேட்டறிந்து, அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை குடும்பத்தினரோடு சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம் சாத்தியமே.
மகப்பேறு மருத்துவர் சாய் பிரசன்னா குமார்
அப்படி ஒரு விபரீத விளையாட்டு ஒரு ஆசிரியையின் உயிரை விலையாக்கி இருக்கிற செய்தி கவலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவருக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கணவர் சமூகவலைத்தளத்தை பார்த்து நண்பரின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தையை பெற்றெடுத்த தாய் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நிச்சயம் எளிதில் கடந்துபோகக் கூடியதில்லை. சுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புவார்கள்; விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது முக்கியம் அல்லவா?
பொதுவாகவே இன்றைய சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. எதற்கெடுத்தாலும் பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ‘மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் வீட்டிலேயே 10-க்கும் அதிகமான பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்கள். ஆனால் மருத்துவத்துறை அபரிமித வளர்ச்சியை அடைந்திருக்கும் நிகழ்காலத்தில், மருத்துவமனையில் பெரும்பாலும் ‘சிசேரியன்’ மூலம் தானே பிரசவம் நடக்கிறது?’ என்று அலட்டிக்கொள்கிறார்கள். அதாவது, டாக்டர்கள் வேண்டுமென்றே ‘சிசேரியன்’ மூலம் பிரசவம் பார்ப்பதாக ஒரு மனநிலை சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது.
இப்படி பழையகாலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்துவதே முதலில் தவறு. அந்த காலத்தில் உடல் உழைப்பை நம்பி தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள். ஆண்களும், பெண்களும் சரிக்கு சமமாக வேலை செய்தார்கள். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமாயிற்று.
அந்த காலத்தில் மருத்துவமனைகளும் வெகுகுறைவு. இதனால் வேறுவழியும் இல்லை. அவர்கள் வீட்டில் தான் பிரசவம் பார்த்தாக வேண்டும். ஆனால் இன்றைய நிலை அப்படியானதல்ல. ஊருக்கு ஊரு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, நாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை.
இதையெல்லாம் விட முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பு வீட்டில் சுகப்பிரசவம் பார்த்தார்கள் என்று நாம் சொல்கிறோம். உண்மை என்னவென்றால், அப்போது பிரசவத்தின்போது தாய் இறப்பதும், பிறந்த குழந்தை இறப்பதும் அதிகமாக இருந்தது.
15 குழந்தைகள் பெற்றிருந்தால் 3 குழந்தைகள் பல வீடுகளில் பிறக்கும்போதே இறந்திருந்தன. 1000 பிரசவங்களில் சுமார் 300 தாய்மார்கள் வரை இறப்பை சந்தித்தனர். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்களை பாருங்கள் இது புலப்படும்.
ஆனால், இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. பிரசவத்தின்போது, தாய் இறப்பு விகிதமும், சேய் இறப்பு விகிதமும் பல மடங்கு குறைந்துவிட்டது. இந்த புள்ளி விவரங்கள் இந்தியா மட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.
சுகப்பிரசவம் வேண்டும் என்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், மருத்துவர்களின் ஆலோசனையும் இன்றி வீட்டில் சுயமாக பிரசவம் பார்ப்பது அறிவுடமை ஆகாது. யூடியுப் போன்ற சமூகவலைத்தள வீடியோக்களை நம்பினால் ஏமாந்துதான் போவோம்.
இன்றைக்கும் மேலைநாடுகள் சிலவற்றில் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளோடு இதை செய்கிறார்கள். இதற்காக மருத்துவர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது அரசு பயிற்சி பெற்ற நர்சுகள் வீடுகளுக்கு வந்து பிரசவம் பார்க்கிறார்கள்.
ஆனால், இங்கே அதற்கான வாய்ப்புகள் இருக் கிறதா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பொதுவாக, சுகப்பிரசவம் வேண்டும் என்றால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அன்றைய காலத்தில் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் மருத்துவம் வளரவில்லை. இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆனால் மனிதனின் ஆரோக்கியம் குறைந்துவிட்டது.
எல்லாவற்றுக்கும் பழைய காலத்தை ஒப்பிடும் நாம், அவர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்வை பெற எதையும் செய்வதில்லை. பிறகு சுகப்பிரசவம் மட்டும் வேண்டுமென்றால் எப்படி முடியும்?
பொதுவாக சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்றால் ரத்தத்தில் 12 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். கருவறையில் இருந்து முதலில் குழந்தையின் தலை வெளியே வர வேண்டும். பிரசவமான 15 நிமிடங்களுக்குள் நஞ்சு வெளியே வர வேண்டும். அல்லது, வெளியே எடுக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் அதிகபடியான உதிரப்போக்கு காரணமாக தாய் உயிரிழக்க நேரிடும்.
திருப்பூரில் நடந்த சம்பவத்தில் நஞ்சு வெளியே வராததால் தான் அந்த ஆசிரியை இறந்தார். ஒருவேளை அவருக்கு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்திருந்தால், இன்றைக்கு அவர் தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்திருப்பார்.
அனைத்திலும் புதுமைக்கு மாறிவிட்டு, பிரசவம் மட்டும் வீட்டில் சுகமாக நடக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது. நம் மனமும், உடலும் மாறிவிட்டன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை நமக்கு அருள்புரியும்.
சிசேரியன் பிரசவங்கள் குறைய வேண்டும். சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு; அதுதான் விருப்பமும் கூட. ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது கணவனும், மனைவியும் தான்.
இதற்கு, கருத்தரிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சரியான திட்டமிடல் அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லாத இக்காலகட்டத்தில், உடற் பயிற்சி அவசியமாகிறது. அதே போல, கர்ப்ப காலங்களில் மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும். பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே, சுகப்பிரசவம் ஏற்படுமா? அல்லது சிக்கலான பிரசவமாக இருக்குமா? என்பது தெரிந்துவிடும். இதை மருத்துவரிடம் கேட்டறிந்து, அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை குடும்பத்தினரோடு சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம் சாத்தியமே.
மகப்பேறு மருத்துவர் சாய் பிரசன்னா குமார்
கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம்.
கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.
கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மார்பு எக்ஸ்ரே, இசிஜி, எக்கோகார்டியோகிராபி, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் முழுமையான ரத்தப் பரிசோதனைகள் அவசியப்படும்.
பொதுவாக, கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாலோ, கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாலோ, கால்களை கால் மனையில் வைத்து உயர்த்திக் கொண்டாலோ கால் வீக்கம் குறைந்து விடும்.

தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது, கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். பகலில் பணிகளுக்கு இடையில் சிறிது நேரம் நடப்பது நல்லது. கர்ப்ப கால உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். முறையான யோகாவும் நீச்சல் பயிற்சியும் மிக நல்ல பயிற்சிகள்.
கர்ப்பிணிகள் சத்துள்ள சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டால், சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பைக் குறைத்துக் கொள்வதும் பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது. அதிகம் காபி குடிக்கக்கூடாது. தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது முக்கியம்.
இடுப்பில் இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது. இறுக்கமான காலணிகளை அணிவதும் கூடாது. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியவே வேண்டாம். மருத்துவர் யோசனைப்படி ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனப்படும் கால் மீளுறைகளை அணிந்து கொள்ளலாம். பகலில் வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மார்பு எக்ஸ்ரே, இசிஜி, எக்கோகார்டியோகிராபி, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் முழுமையான ரத்தப் பரிசோதனைகள் அவசியப்படும்.
பொதுவாக, கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாலோ, கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாலோ, கால்களை கால் மனையில் வைத்து உயர்த்திக் கொண்டாலோ கால் வீக்கம் குறைந்து விடும்.

தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது, கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். பகலில் பணிகளுக்கு இடையில் சிறிது நேரம் நடப்பது நல்லது. கர்ப்ப கால உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். முறையான யோகாவும் நீச்சல் பயிற்சியும் மிக நல்ல பயிற்சிகள்.
கர்ப்பிணிகள் சத்துள்ள சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டால், சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பைக் குறைத்துக் கொள்வதும் பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது. அதிகம் காபி குடிக்கக்கூடாது. தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது முக்கியம்.
இடுப்பில் இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது. இறுக்கமான காலணிகளை அணிவதும் கூடாது. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியவே வேண்டாம். மருத்துவர் யோசனைப்படி ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனப்படும் கால் மீளுறைகளை அணிந்து கொள்ளலாம். பகலில் வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.
* முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
* குறைப்பிரசவம் நிகழலாம்.
* கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
* குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
* பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.
பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.
கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
* முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
* குறைப்பிரசவம் நிகழலாம்.
* கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
* குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
* பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.
பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.
கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.
மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய உட்பொருள் இது. இரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.
கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கலாம்.

கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம் ஈடுகட்டப்படாதபோது இரத்தசோகை வருகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.
இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட்டுகளை கால்சியம் சப்ளிமென்ட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்சனையை ஏற்படுத்தி இரத்த சோகைக்குக் காரணமாகும்.
பொதுவாகவே பெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள். இரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.
மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய உட்பொருள் இது. இரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.
கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கலாம்.

கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம் ஈடுகட்டப்படாதபோது இரத்தசோகை வருகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.
இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட்டுகளை கால்சியம் சப்ளிமென்ட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்சனையை ஏற்படுத்தி இரத்த சோகைக்குக் காரணமாகும்.
பொதுவாகவே பெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள். இரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.
எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். பெண்களின் கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை இது.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.
சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.

கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.
ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.
கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.
சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.

கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.
ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.
கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம்.
முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் தோன்றினால், உடனே பயம் பற்றிக் கொள்ளும். தனக்கோ, வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடுமோ என மனம் பதறுவார்கள்.
ஏற்கெனவே குழந்தை பெற்றவர்கள் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும்போது, காலில் வீக்கம் ஏற்பட்டால், ‘இதெல்லாம் இயல்புதானே, பிரசவத்துக்குப்பிறகு சரியாகி விடும்’ என அலட்சியமாக இருப்பார்கள். இந்த இரண்டு மனப்பான்மைகளும் கூடாது.
கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.
கர்ப்பகால கால்வீக்கத்தை பிரச்சனை கொண்ட கால்வீக்கம், பிரச்சனை இல்லாத கால்வீக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமஸ்டரில் அதாவது ஏழாவது மாதத்தில் - கால் வீக்கம் வந்தால், பெரும்பாலும் பிரச்சனை இருக்காது. இயல்பான கால் வீக்கமாகத்தான் இருக்கும்.
ஒரு சிலருக்கு மட்டுமே இதுவும் பிரச்சனை உள்ள கால்வீக்கமாக இருக்கும். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே கர்ப்பிணிக்குக் காலில் வீக்கம் தோன்றினால், கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.
கர்ப்பத்தின்போது முதல் ஆறுமாதங்கள் வரை குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி முழுமையடையப் போவதால், எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.
இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.
இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்தாலோ அல்லது இரவில் படுத்து எழுந்தாலோ வடிந்துவிடும். இது இயல்பு.

சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் வடிந்து விடுகிறது என்றால் அது ‘பிரச்சனை இல்லாத வீக்கம்’ என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்படுகிறது என்றாலோ, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் வடிய மறுக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளும் அவசியப்படும்.
கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து(Blood urea) அதிகமாகும்போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.பெரிய வயிறுகர்ப்பத்தில் வளரும் குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.
இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும். பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.
கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதே வேளையில் காலில் வீக்கம் தோன்றினால், வாரம் ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்படும். அணுச்சிதைவு உண்டாகும். அதன் காரணமாக புரதச்சத்து வெளியேறும். இது சிறுநீரகத்தின் வழியாகச் சென்று சிறுநீரில் வெளியேறும். இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும்; வளரும் குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் சிறுநீரில் மட்டும் புரதம் வெளியேறும்.
இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள். லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.
சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும். ரத்த சோகை உள்ளவர்களுக்குப் புரதச்சத்து குறைவதும், புரதம் குறைந்துள்ளவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதும் உண்டு. இதயக்கோளாறுகள் இருப்பவர்களுக்கு...
இதயத்தில் பிரச்சனை என்றாலும் கால்கள் இரண்டும் வீங்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது. பல பெண்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது முதன்முறையாகத் தெரிய வருவதே கர்ப்ப காலத்தில்தான்.
ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் இதய நோய்ச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களுக்கு...
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு இன்னும் வீக்கம் அதிகமாகும். இவர்களுக்கு கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.
ஏற்கெனவே குழந்தை பெற்றவர்கள் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும்போது, காலில் வீக்கம் ஏற்பட்டால், ‘இதெல்லாம் இயல்புதானே, பிரசவத்துக்குப்பிறகு சரியாகி விடும்’ என அலட்சியமாக இருப்பார்கள். இந்த இரண்டு மனப்பான்மைகளும் கூடாது.
கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.
கர்ப்பகால கால்வீக்கத்தை பிரச்சனை கொண்ட கால்வீக்கம், பிரச்சனை இல்லாத கால்வீக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமஸ்டரில் அதாவது ஏழாவது மாதத்தில் - கால் வீக்கம் வந்தால், பெரும்பாலும் பிரச்சனை இருக்காது. இயல்பான கால் வீக்கமாகத்தான் இருக்கும்.
ஒரு சிலருக்கு மட்டுமே இதுவும் பிரச்சனை உள்ள கால்வீக்கமாக இருக்கும். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே கர்ப்பிணிக்குக் காலில் வீக்கம் தோன்றினால், கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.
கர்ப்பத்தின்போது முதல் ஆறுமாதங்கள் வரை குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி முழுமையடையப் போவதால், எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.
இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.
இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்தாலோ அல்லது இரவில் படுத்து எழுந்தாலோ வடிந்துவிடும். இது இயல்பு.

சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் வடிந்து விடுகிறது என்றால் அது ‘பிரச்சனை இல்லாத வீக்கம்’ என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்படுகிறது என்றாலோ, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் வடிய மறுக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளும் அவசியப்படும்.
கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து(Blood urea) அதிகமாகும்போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.பெரிய வயிறுகர்ப்பத்தில் வளரும் குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.
இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும். பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.
கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதே வேளையில் காலில் வீக்கம் தோன்றினால், வாரம் ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்படும். அணுச்சிதைவு உண்டாகும். அதன் காரணமாக புரதச்சத்து வெளியேறும். இது சிறுநீரகத்தின் வழியாகச் சென்று சிறுநீரில் வெளியேறும். இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும்; வளரும் குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் சிறுநீரில் மட்டும் புரதம் வெளியேறும்.
இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள். லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.
சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும். ரத்த சோகை உள்ளவர்களுக்குப் புரதச்சத்து குறைவதும், புரதம் குறைந்துள்ளவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதும் உண்டு. இதயக்கோளாறுகள் இருப்பவர்களுக்கு...
இதயத்தில் பிரச்சனை என்றாலும் கால்கள் இரண்டும் வீங்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது. பல பெண்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது முதன்முறையாகத் தெரிய வருவதே கர்ப்ப காலத்தில்தான்.
ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் இதய நோய்ச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களுக்கு...
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு இன்னும் வீக்கம் அதிகமாகும். இவர்களுக்கு கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடலாம்.
கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.
* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.
* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.
* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.
* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.
* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.
* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.
* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.
* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.
* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.
* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
பெண்களை பாதிக்கும் PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு சில எளிய உணவுமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருக்கிறது என்றும், 18 சதவீதம் பெண்களுக்கு இதனாலேயே மலட்டுத் தன்மை உண்டாகிறது’ என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி PCOS கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்கும் பொருட்டு பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, வெள்ளை ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, கம்பு, சோளம்) போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடவும்.
* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு சீராக இருக்கவும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவை அதிக நார் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களும்
பெற்றுள்ளன.
* புரதம் நிறைந்த உணவுகளை கார்போஹைட்ரேட் உணவுடன் சேர்த்து உண்ணும்பொழுது ரத்த குளுக்கோஸ் உயர்வதை கட்டுப்படுத்த உதவி புரிகிறது. இட்லி-சாம்பார், பொங்கல்-சாம்பார், சப்பாத்தி-முட்டைகறி, புட்டு-கடலைகறி போன்றவற்றை குறிப்பிடலாம்.
* ஒரு நாளைக்கு 2400 மில்லி கிராமுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ளும் பழக்கத்தை பழகிக் கொள்வது நல்லது. உப்புக்குப் பதிலாக எலுமிச்சை சாறு, வினிகர், மிளகு, மூலிகைகள் பயன்படுத்தலாமே!
* 4 அல்லது 5 வகை எண்ணெய்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். கடலை, எள், கடுகு ஆலிவ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வெவ்வேறு உணவுகளுக்கு உபயோகிக்க பழகுங்கள்.
* பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதை(Flax seeds) நல்ல வகை கொழுப்புக்கள் நிறைந்திருக்கிறது. இவ்வகையான உணவுகள் சிற்றுண்டிக்கு சரியான தேர்வாகிறது.
* ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 முறை மீன் சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களைப் பெற உதவுகிறது.

* அனைத்து விதத்திலும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், சர்க்கரை வகைகளை தவிர்ப்பது மிக அவசியமாகும்.
* தினமும் 2 - 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதில் வெள்ளரி, புதினா அல்லது எலுமிச்சை சேர்ப்பதன் மூலம் உங்கள் குடிநீரை சுவையள்ளதாக மாற்றலாம்.
இன்னும் சில டிப்ஸ்...
* இரவு தூக்கம் குறைந்தது 6 - 8 மணி நேரம் இருப்பது அவசியம். ஏனெனில் தூக்கமின்மை ஹார்மோன் அளவையும் செயல்பாட்டையும் நிச்சயம் பாதிக்கும்.
* உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி அவசியம். ஏரோபிக் பயிற்சிகளும் வலிமை பயிற்சியையும் இணைந்து செய்யும் பொழுது நல்ல பயனைக் கொடுக்கும்.
* உங்கள் மாதவிடாய் நாட்களை குறிப்பு வைக்க தொடங்குங்கள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி அதாவது இரு சுழற்சிக்கு 40 - 50 நாட்களுக்கு மேல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு PCOS டயட் பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உணவை அக்கறையோடு தேர்வு செய்தால் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்!
* ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்கும் பொருட்டு பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, வெள்ளை ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, கம்பு, சோளம்) போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடவும்.
* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு சீராக இருக்கவும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவை அதிக நார் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களும்
பெற்றுள்ளன.
* புரதம் நிறைந்த உணவுகளை கார்போஹைட்ரேட் உணவுடன் சேர்த்து உண்ணும்பொழுது ரத்த குளுக்கோஸ் உயர்வதை கட்டுப்படுத்த உதவி புரிகிறது. இட்லி-சாம்பார், பொங்கல்-சாம்பார், சப்பாத்தி-முட்டைகறி, புட்டு-கடலைகறி போன்றவற்றை குறிப்பிடலாம்.
* ஒரு நாளைக்கு 2400 மில்லி கிராமுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ளும் பழக்கத்தை பழகிக் கொள்வது நல்லது. உப்புக்குப் பதிலாக எலுமிச்சை சாறு, வினிகர், மிளகு, மூலிகைகள் பயன்படுத்தலாமே!
* 4 அல்லது 5 வகை எண்ணெய்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். கடலை, எள், கடுகு ஆலிவ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வெவ்வேறு உணவுகளுக்கு உபயோகிக்க பழகுங்கள்.
* பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதை(Flax seeds) நல்ல வகை கொழுப்புக்கள் நிறைந்திருக்கிறது. இவ்வகையான உணவுகள் சிற்றுண்டிக்கு சரியான தேர்வாகிறது.
* ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 முறை மீன் சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களைப் பெற உதவுகிறது.

* அனைத்து விதத்திலும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், சர்க்கரை வகைகளை தவிர்ப்பது மிக அவசியமாகும்.
* தினமும் 2 - 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதில் வெள்ளரி, புதினா அல்லது எலுமிச்சை சேர்ப்பதன் மூலம் உங்கள் குடிநீரை சுவையள்ளதாக மாற்றலாம்.
இன்னும் சில டிப்ஸ்...
* இரவு தூக்கம் குறைந்தது 6 - 8 மணி நேரம் இருப்பது அவசியம். ஏனெனில் தூக்கமின்மை ஹார்மோன் அளவையும் செயல்பாட்டையும் நிச்சயம் பாதிக்கும்.
* உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி அவசியம். ஏரோபிக் பயிற்சிகளும் வலிமை பயிற்சியையும் இணைந்து செய்யும் பொழுது நல்ல பயனைக் கொடுக்கும்.
* உங்கள் மாதவிடாய் நாட்களை குறிப்பு வைக்க தொடங்குங்கள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி அதாவது இரு சுழற்சிக்கு 40 - 50 நாட்களுக்கு மேல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு PCOS டயட் பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உணவை அக்கறையோடு தேர்வு செய்தால் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்!
சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாக இருக்கும். இதன் எதிரொலியாக முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் ரோம வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகிறது. இந்த சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது.
PCOS சில அறிகுறிகள்:
* முறையற்ற மாதவிடாய் சுழற்சி (45 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது அல்லது ஒரு வருடத்தில் 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி)
* சினைப்பை சற்று பெரிதாக (தொகுதி பெரும்பாலும் (>10cc) காணப்படும் மற்றும் பல சிறிய கட்டிகள் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் மூலம் இதை அறியலாம்.
* முகம் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் அதிக ரோம வளர்ச்சி
* முகப்பரு
* எடை அதிகரித்தல் (முக்கியமாக வயிற்றுப் பகுதியில்) மேலும் எடை குறைப்பதில் கடினம்.
* கழுத்து மற்றும் பிற பகுதிகளில் கருந்திட்டுகள் ஏற்படுவது (dark skin patches).
* இடுப்பு வலியோடு மன அழுத்தம்.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் இருந்தால், PCOS பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

PCOS எதனால் ஏற்படுகிறது?
PCOS என்பது சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் Luteinizing hormone அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சராசரி அளவை விட அதிகமாக இருப்பின் அது சினைப் பையில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண் ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது.
மரபணுக்களும் கூட இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்கோ PCOS இருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்றவருக்கும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். PCOS-க்கு சிகிச்சை பொதுவாக PCOS-க்கு கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிக அவசியமானது.
* ஹார்மோன் சமநிலைபடுத்துதல்
* டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்தல்.
* மாதவிடாய் முறைப்படுத்துதல்
* உங்கள் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.
* உடல் எடையைக் குறைத்தல் ஆயிவற்றை பரிந்துரை செய்வார்கள்.
PCOS சில அறிகுறிகள்:
* முறையற்ற மாதவிடாய் சுழற்சி (45 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது அல்லது ஒரு வருடத்தில் 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி)
* சினைப்பை சற்று பெரிதாக (தொகுதி பெரும்பாலும் (>10cc) காணப்படும் மற்றும் பல சிறிய கட்டிகள் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் மூலம் இதை அறியலாம்.
* முகம் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் அதிக ரோம வளர்ச்சி
* முகப்பரு
* எடை அதிகரித்தல் (முக்கியமாக வயிற்றுப் பகுதியில்) மேலும் எடை குறைப்பதில் கடினம்.
* கழுத்து மற்றும் பிற பகுதிகளில் கருந்திட்டுகள் ஏற்படுவது (dark skin patches).
* இடுப்பு வலியோடு மன அழுத்தம்.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் இருந்தால், PCOS பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

PCOS எதனால் ஏற்படுகிறது?
PCOS என்பது சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் Luteinizing hormone அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சராசரி அளவை விட அதிகமாக இருப்பின் அது சினைப் பையில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண் ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது.
மரபணுக்களும் கூட இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்கோ PCOS இருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்றவருக்கும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். PCOS-க்கு சிகிச்சை பொதுவாக PCOS-க்கு கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிக அவசியமானது.
* ஹார்மோன் சமநிலைபடுத்துதல்
* டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்தல்.
* மாதவிடாய் முறைப்படுத்துதல்
* உங்கள் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.
* உடல் எடையைக் குறைத்தல் ஆயிவற்றை பரிந்துரை செய்வார்கள்.
ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், மன அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட்டாலும், நம்முடைய உணவுமுறையால் இதைச் சரிப்படுத்திவிடலாம்.
'பொதுவாக, 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய மாதவிலக்கு, பலருக்கு இரண்டு, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைகூட வந்து பெரும் அவஸ்தையை ஏற்படுத்தும். ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், மன அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட்டாலும், நம்முடைய உணவுமுறையால் இதைச் சரிப்படுத்திவிடலாம்.
'நம் உடலில் எஃப்.எஸ்.எச். (ஃபாலிக்கல் ஸ்டிமுலேட் ஹார்மோன்) என்ற ஹார்மோன் உள்ளது. இதுதான் பெண்களுக்கு ஓவரியில் முட்டை உருவாகத் தூண்டுகோள். இந்த 'ஃபாலிக்கல் ஸ்டிமுலேஷன்’ நன்றாக இருக்க வேண்டும். தைராய்ட் ஹார்மோன் சுரப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி அனைத்து ஹார்மோன்களும் ஒத்துழைத்தால்தான், கருப்பையில் மாதவிடாய் சுழற்சி ஓர் ஒழுங்குமுறையில் இருக்கும்.
ஆனால், ஒழுங்கற்ற மாதவிலக்கு உள்ளவர்களுக்கு முட்டை எப்போது வெளிப்படுகிறது என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது. இதற்கு மிக முக்கியக் காரணம், நம் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். கம்பங்களியும் உளுத்தங்களியும் சாப்பிட்டு வளர்ந்த நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தனர். இன்றைய இளைய தலைமுறையினர் இனிப்பு, உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்.
குழந்தைப்பருவத்திலிருந்தே இந்தப் பழக்கம் ஆரம்பித்துவிடுவதால், அவர்கள் வளர்ந்த பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது இல்லை. இளம் வயதில் பால் பொருட்கள், மில்க் சாக்லேட் சாப்பிடுவதால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும். பிற்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
தைராய்ட் உள்ளிட்ட ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை, கருப்பையின் சுவரில் வரும் அடினோமையோசிஸ் பிரச்சனைகள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனை வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சித்த மருத்துவத்தின்படி, பெண்களின் உடலில் பித்தம் சரியாக இருக்க வேண்டும். பித்த அளவில் மாறுபாடோ, கபம் கூடுதலாக இருந்தாலோ, மாதவிலக்கு தள்ளிப்போகும். மேலும், உடலில் இருக்க வேண்டிய வளர்சிதை மாற்ற வேகம் சரியான அளவில் இல்லை என்றாலும், மாதவிலக்கில் பிரச்சனை ஏற்படும். எதனால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.
உடலில் கபம் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க வேண்டும். அசோக மரத்தின் (வீட்டு வாசலில் உயரமாக வளர்ந்திருக்கும் நெட்டிலிங்க மரத்தை, சிலர் அசோக மரம் என்று தவறாக நினைப்பார்கள்) பட்டையை எடுத்து கஷாயம் தயாரித்துப் பருகுவதாலும் ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சனையை ஒழுங்குபடுத்தலாம். மேலும், மருத்துவரின் பரிந்துரைப்படி சோற்றுக்கற்றாழை லேகியம் எடுத்துக்கொண்டாலும் இப்பிரச்சனை சீராகும். அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வெந்தயம் சாப்பிடுவதும் நல்லது. அதைவிட, 'ஆடாதொடை கற்கம்’ அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் குணப்படுத்தும்.''
'நம் உடலில் எஃப்.எஸ்.எச். (ஃபாலிக்கல் ஸ்டிமுலேட் ஹார்மோன்) என்ற ஹார்மோன் உள்ளது. இதுதான் பெண்களுக்கு ஓவரியில் முட்டை உருவாகத் தூண்டுகோள். இந்த 'ஃபாலிக்கல் ஸ்டிமுலேஷன்’ நன்றாக இருக்க வேண்டும். தைராய்ட் ஹார்மோன் சுரப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி அனைத்து ஹார்மோன்களும் ஒத்துழைத்தால்தான், கருப்பையில் மாதவிடாய் சுழற்சி ஓர் ஒழுங்குமுறையில் இருக்கும்.
ஆனால், ஒழுங்கற்ற மாதவிலக்கு உள்ளவர்களுக்கு முட்டை எப்போது வெளிப்படுகிறது என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது. இதற்கு மிக முக்கியக் காரணம், நம் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். கம்பங்களியும் உளுத்தங்களியும் சாப்பிட்டு வளர்ந்த நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தனர். இன்றைய இளைய தலைமுறையினர் இனிப்பு, உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்.
குழந்தைப்பருவத்திலிருந்தே இந்தப் பழக்கம் ஆரம்பித்துவிடுவதால், அவர்கள் வளர்ந்த பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது இல்லை. இளம் வயதில் பால் பொருட்கள், மில்க் சாக்லேட் சாப்பிடுவதால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும். பிற்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
தைராய்ட் உள்ளிட்ட ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை, கருப்பையின் சுவரில் வரும் அடினோமையோசிஸ் பிரச்சனைகள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனை வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சித்த மருத்துவத்தின்படி, பெண்களின் உடலில் பித்தம் சரியாக இருக்க வேண்டும். பித்த அளவில் மாறுபாடோ, கபம் கூடுதலாக இருந்தாலோ, மாதவிலக்கு தள்ளிப்போகும். மேலும், உடலில் இருக்க வேண்டிய வளர்சிதை மாற்ற வேகம் சரியான அளவில் இல்லை என்றாலும், மாதவிலக்கில் பிரச்சனை ஏற்படும். எதனால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.
உடலில் கபம் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க வேண்டும். அசோக மரத்தின் (வீட்டு வாசலில் உயரமாக வளர்ந்திருக்கும் நெட்டிலிங்க மரத்தை, சிலர் அசோக மரம் என்று தவறாக நினைப்பார்கள்) பட்டையை எடுத்து கஷாயம் தயாரித்துப் பருகுவதாலும் ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சனையை ஒழுங்குபடுத்தலாம். மேலும், மருத்துவரின் பரிந்துரைப்படி சோற்றுக்கற்றாழை லேகியம் எடுத்துக்கொண்டாலும் இப்பிரச்சனை சீராகும். அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வெந்தயம் சாப்பிடுவதும் நல்லது. அதைவிட, 'ஆடாதொடை கற்கம்’ அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் குணப்படுத்தும்.''
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.
பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.
இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.
35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது.
இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.
எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.
நோயைத் தடுக்கும் முறைகள்
நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்.
உணவில் கல்சியம், வைட்டமின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.
இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.
பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.
இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.
35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது.
இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.
எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.
நோயைத் தடுக்கும் முறைகள்
நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்.
உணவில் கல்சியம், வைட்டமின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்க கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.
* வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
* தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும். புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.
* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.
* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.
* வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
* தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும். புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.
* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.






