என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள்.
    பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.

    மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

    30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.

    மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

    கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.

    பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

    ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.

    இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும்.
    கர்ப்பிணிகளை கொரோனா கூடுதலாக தாக்கும் என்று கூறுவது சரியா? இல்லை! ஆனால் சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கும் உண்டு. கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

    கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன. ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.

    கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.

    அந்தந்த காலகட்டங்களில் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டரை சந்திப்பதை தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கும். லேசான உடல் உபாதைகள் இருந்தால் டாக்டரை போனில் அழைத்து ஆலோசனை பெற்றால் போதுமானது.

    கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் முன்பின் யோசிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக டாக்டரை சந்திக்க செல்லவேண்டாம். முதலில் உங்கள் மகப்பேறு டாக்டருக்கு தகவலைத் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை செய்த பின்பு அங்கு செல்லுங்கள். ஆனால் இதில் காலதாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது.

    பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள். உங்களோடு சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யையும் பாதுகாக்கவேண்டியது இருக்கிறது. அதனால் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.

    தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம். ஆனாலும் இதுவரை உள்ள மருத்துவ ஆய்வுத் தகவல்கள்படி, பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்றே தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒருசிலருக்கு மாதம் முழுமை அடையும் முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியனும் தேவைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

    சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.

    பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.

    தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது. குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.
    காதணி முதல் கண்கவர் ஆடைகள் வரை விதவிதமான டிசைன்களை ஆன்லைனில் ரசித்து பார்த்து ஆர்டர் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
    “பெண்கள் கடைக்கு சென்று மாதவிடாய் கால நாப்கின் வாங்கும் விஷயத்தில் அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலுள்ள ஆண்களிடம் நாப்கின் வாங்கி தர சொல்வதற்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் நேரடியாக சென்று வாங்க வேண்டி இருக்கிறது. கடையில் கூட்டமாக இருக்கும்போது கேட்பதற்கும் சில பெண்கள் தயங்குகிறார்கள்.

    நாப்கினை பேப்பரில் மடித்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது மன நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் நாப்கின் வாங்கும் விஷயத்தில் நானும் நெருக்கடியை சந்தித்திருக்கிறேன். “நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு சிரமப்பட்டு நிறைய பெண்கள் காட்டன் நாப்கின்களை உபயோகிப்பதில்லை. மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் விலையும் அதிகமாக இருக்கிறது.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

    * மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.

    *உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    *டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

    * மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

    * மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

    *வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

    * இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.

    * காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

    *நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    *உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.
    நம்முடைய உணவுமுறையில் ஒரு நாளுக்கு மூன்று வேளை உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். மூன்று வேளை உணவை 5 அல்லது வேளையாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதுஎன்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பலருக்கும் 3 வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் நொறுக்குத்தீனி சாப்பிடவில்லை என்றால் அந்த நாளே முழுடையடையாதது போல் இருக்கும். மாலை மேகங்களை பார்க்கும் போது குளிர்ந்த காற்றை உணரும் போது காரசாரமாக பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் வேலைக்கு நடுவே ஏலக்காய் சேர்ந்த சூடான டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம். இவற்றை தவிர்த்து மாலை நேர சிற்றுண்டியை ஆரோக்கியமானதாக மாற்றி கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.

    மாலையில் டீ, காபிக்கு பதிலாக மோர், கிரீன் டீ, முலிகை டீ, பாதாம் பால் குடிக்கலாம். நார்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடலாம்.

    புரதச்சத்து நிறைந்த நட்ஸ், உலர்பழங்கள் சாப்பிடலாம்.

    காய்கறி சாண்ட்விச், காய்கறி சாலட் உடன் அக்ரூட் பருப்பு, பேரீச்சம் பழம் சேர்த்து கொள்ளலாம்.

    பழங்கள் சேர்த்த ஸ்மூர்த்தி, லஸ்ஸி பருகலாம்.

    சிறுதானிய புட்டு, பணியாரம், காய்கறி சூப் குடிக்கலாம்.

    இந்திய உணவு கலாசாரத்தை பொறுத்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளுக்க உடல் உடையை குறைக்கும் தன்மை உள்ளது, காரணம், ஆரோக்கியமான சமையல் முறை மற்றும் சமையல் பொருட்கள்.

    கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இடம் பெறும் கொழுப்பு பொருட்கள், சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கலோரி, சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் எடையை அதிகரிக்க செய்யும். மேலும் சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன் போன்ற  நோய்களை உண்டாக்கும். ஆகையால் மாலை சிற்றுண்டி பட்டியலில் நீக்க வேண்டியசில உணவுகள் இதோ...

    சோடா, கார்பனேட்டட்பானங்கள் அதிக சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்த்த குளிர்பானங்கள்

    சாக்லேட், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த கேக், குக்கீஸ்,

    எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் மற்றும் இறைச்சி.

    வனஸ்பதி, வெண்ணெய், கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கிராஸ்பீத் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள்.

    இந்த சிற்றுண்டிகளின் பெயரை கேட்டவுடனேயே சுவைப்பதற்கு தூண்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி இவற்றை தவிர்த்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    அழகையும், ஆரோக்கியத்தையும் பிட்னெஸ் தரும் என்பது தெரிந்தபோதிலும் பெரும்பாலான பெண்கள் திடீரென்று ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்.
    `பிட்னெஸ்' எனப்படும் உடல்கட்டுக்கோப்பு, உடற்பயிற்சியால் கிடைக்கும் என்பது பெண்கள் அனைவருக்குமே தெரியும். அழகையும், ஆரோக்கியத்தையும் பிட்னெஸ் தரும் என்பது தெரிந்தபோதிலும் பெரும்பாலான பெண்கள் திடீரென்று ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டால் `உடற்பயிற்சி செய்ய நேரமில்லை' என்பார்கள் அல்லது `உடற்பயிற்சி செய்தும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை' என்பார்கள். தங்குதடையின்றி பிட்னெஸ், டயட் போன்றவைகளை தொடர பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து விஷயங்கள்:

    1. இன்றே தொடங்குங்கள்

    உடற்பயிற்சியை `நாளை தொடங்கலாம்' என்று நீங்கள் நினைத்தால், தோல்வியின் முதல் படியை மிதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நாளை என்பது தள்ளிப்போட கையாளக்கூடிய வழிமுறை. பிட்னெஸ் தேவை என்று நீங்கள் முடிவுசெய்துவிட்டால் இன்றே அதற்கான அடிப்படை வேலைகளை தொடங்கிவிடவேண்டும். உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் இருந்துகொண்டிருக்கும் சோம்பேறித்தனம்தான் நாளை என்று தள்ளிவைக்கும் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்கும். அதனால் தள்ளிவைக்காமல் இன்றே தொடங்கிவிடுங்கள்.

    2. பிடித்தமான பிட்னெஸ் கார்னர்

    வீட்டில் உங்களுக்கு பிடித்தமான இடம் ஒன்றை பிட்னெஸ் கார்னர் ஆக்கவேண்டும். அங்கு உங்களை உடற்பயிற்சிக்கு தூண்டும் படங்கள் இடம்பெறவேண்டும். உங்களுக்கு தன்னம்பிக்கை தந்து உற்சாகப்படுத்தும் வாசகங்களை அங்கு எழுதிவைக்கவேண்டும். உள்ளறை அலங்கார செடிகளை வைத்தும் அலங்காரப்படுத்தலாம்.

    டம்பல்ஸ் போன்ற எளிய உடற்பயிற்சி கருவிகளை உங்களது கைக்கு எட்டும்தூரத்தில் வைத்திருங்கள். இதர உபகரணங்களையும் கவரும் விதத்தில் அடுக்கிவைத்தால், அவைகளை பார்க்கும்போதெல்லாம் உடற் பயிற்சி செய்யும் உற்சாக மனநிலை வந்துவிடும். அந்த அறையில் போதுமான அளவு காற்றும் வெளிச்சமும் இருக்கவேண்டும். பால்கனி, வராந்தா வில்கூட பிட்னெஸ் கார்னர் அமைத்துக்கொள்ளலாம்.

    3. கண்ணாடியில் பாருங்கள்

    உடை அலங்காரத்தோடு பலமுறை உங்களை கண்ணாடியில் பார்த் திருப்பீர்கள். அப்படி எதுவும் இல்லாமல் ஒருமுறை உங்கள் உடலை கண்ணாடியில் பாருங்கள். அப்போதுதான் அதிக உடல் எடை, சில இடங்களில் தொளதொளவென்று இருத்தல் போன்ற குறைபாடுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும். கண்ணாடியில் பார்க்கும் அந்த தருணத்தில்தான் பிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணருவீர்கள். உடல் கட்டுக்கோப்பாக இருப்பது வாழ்க்கையின் பரிசாக அமையும். கட்டுக் கோப்பான உடல் உருவானால் ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்கும்.

    4. ரிசல்ட்டுக்கு முக்கியத்துவம் வேண்டாம்

    ரிசல்ட் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக காட்டும் ஆர்வத்தைவிட, தொடங்கிய செயலை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதே சிறந்தது. உடல் எடையை குறைப்பது போன்ற செயல்களுக்கு உடனடி பலன் கிடைக்காது. அதே நேரத்தில், `பலன் தாமதமாகத்தான் கிடைக்கும்' என்ற எண்ணம், உடற்பயிற்சி மீது இருக்கும் ஆர்வத்தை குறைக்கவும் அனுமதித்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதைவிட, ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து தொடர்ந்து பிட்னெஸ் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும்.

    5. சரியானதை மட்டும் செய்யுங்கள்

    சில வகை உடற்பயிற்சிகள் செய்வதற்கு கடினமானதாக இருக்கும். ஆனால் அதனால் கிடைக்கும் பலன்கள் மிக குறைவாகவே இருக்கும். எல்லோருக்கும் எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் முழுபலனை தந்துவிடாது. அதனால் உங்கள் வயது, ஆரோக்கிய நிலை, உடல் அமைப்புக்கு பொருத்தமான பயிற்சிகளையே மேற்கொள்ளவேண்டும். அதற்கு ஜிம் பயிற்சியாளர் ஒருவரது ஆலோசனை உங்களுக்கு தேவைப்படும்.

    6. கலோரி கணக்கும் தேவை

    உடல் பருமன் கொண்டவர்கள் உடற்பயிற்சியால் மட்டும் அதை சாதித்துவிட முடியாது. உடல் இயக்கத்திற்கு தேவையான அளவு உட்கொள்ளும் உணவையும் குறைக்கவேண்டும். அதனால் அவர்கள் அன்றாட உணவில் விழிப்பாக இருக்கவேண்டும். அதோடு எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதையும் கணக்கிட்டு உண்பது அவசியம். இதை கணக்கிடுவதற்காகவே சில ஆப்கள் இருக்கின்றன. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

    7. ருசியாகும் உணவு

    நன்றாக உடற்பயிற்சி செய்த பின்பு உணவு சாப்பிட்டால் அது ருசி நிறைந்ததாக இருக்கும். ஏன்என்றால் அப்போது உடலுக்கு உணவின் தேவை அதிகமாக இருக்கும். ஜீரணமும் வேகமாக நடக்கும். அப்போது கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு உடலுக்கு தேவைப்படும். அளவுக்கு மிகாமல் சாப்பிடவேண்டும்.

    8. உங்களுக்கான நேரம்

    வாழ்க்கையில் நாம் பொன், பொருள், பணம், பதவி போன்று பலவற்றையும் பெறுகிறோம். ஆனால் அவை அனைத்தையும் அனுபவிக்க ஆரோக்கியமான உடல் அவசியம். அதனை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம்தான் பெற முடியும் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குங்கள். அதனை தினமும் உங்களுக்கான நேரமாக கருதுங்கள்.

    9. விமர்சனத்தை ஒதுக்குங்கள்

    நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதை பார்த்துவிட்டு நண்பர்களில் யாராவது, `எந்த பயிற்சி செய்தும் உன் உடல் தோற்றத்தில் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லையே' என்று சொல்லலாம். அது போன்ற கமெண்டுகளில் கவனத்தை செலுத்தாதீர்கள். உடற்பயிற்சியை தொடங்கும் நாளிலே `அதுபோன்ற எதிர்மறையான விமர்சனங்களுக்கு செவிசாய்க்கமாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிலர், உடற்பயிற்சி செய்யும் குண்டானவர்களை பார்த்து `உடற்பயிற்சி செய்ததும் உங்கள் உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது' என்று வேண்டும் என்றே சொல்வார்கள். அதையும் நம்பிவிடக்கூடாது.

    10. அதிகம் வேண்டாம்

    விரைவாக பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காக வேகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். அதுபோல் அதிக நேரமும் உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டாம். அதிக நேர பயிற்சி உடலுக்கு சோர்வைத்தந்து, ஆர்வத்தை குறைத்துவிடும். அதோடு சிலருக்கு உடலில் எதிர் மறையான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.
    உடல் பருமனால் பெருமளவு பெண்கள் அவதிப்படுகிறார்கள். அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், வீட்டு வைத்தியத்தினால் அதற்கு தீர்வு காணலாம். எப்படி தெரியுமா?
    உடல் பருமனால் பெருமளவு பெண்கள் அவதிப்படுகிறார்கள். உடலில் அதிக அளவு கொழுப்பு சேருவதே உடல் பருமனுக்கான காரணமாகும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல், இனிப்புகள் - ஐஸ் கிரீம் - குளிர்பானங்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், மதுப்பழக்கம் போன்றவை படிப்படியாக உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகின்றன. தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவதும், அட்ரீனல் ஹார்மோன் சுரப்பது அதிகரிப்பதும் கூட உடலை பருமனாக்கும்.

    உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் அது உடலை நோய்களின் கூடாரமாக்கிவிடும். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், மூட்டு நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை உருவாக காரணமாகிவிடும். பின்பு உடல் எடையை குறைப்பதும், அதனால் உருவான நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதும் கடினமான காரியமாகிவிடும். அதனால் ஒவ்வொருவரும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், வீட்டு வைத்தியத்தினால் அதற்கு தீர்வு காணலாம். எப்படி தெரியுமா?

    இஞ்சியில் ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் போன்ற சக்தி தரும் பொருட்கள் இருக்கின்றன. அவை செரிமானத்திறனை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் திறனையும் பெற்றிருக்கிறது. இஞ்சியை தோல் சீவி அரைத்து பிழிந்து, மூன்று தேக்கரண்டி அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவில் தேனையும் எடுத்து, இரண்டையும் ஒரு கப் இளம்சூடான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

    வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, கீழாநெல்லி, நெல்லிக்காய் போன்றவைகளை சம அளவில் எடுத்து இடித்து, 2 தேக்கரண்டி அளவு எடுக்கவும். அதனை இளம் சூடு நீரில் கலந்து பருகினால் உடலில் கொழுப்பு குறைவதோடு எடையும் கட்டுக்குள் வரும்.

    பெருஞ்சீரகத்தை பொடித்து அரை தேக்கரண்டி அளவில் நீரில் கலந்து காலையும், மாலையும் பருகிவந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

    ஒரு கப் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம அளவில் கலந்து பருகுவதும் நல்லது. இவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கொழுப்பையும் குறைக்கிறது. உடல் எடையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தக்காளி, முட்டைகோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, பிராகோலி, ஆப்பிள், ஓட்ஸ், பாதாம், வால்நட், மோர் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    வெள்ளை ரொட்டி, பட்டைதீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம். உடல் பருமன் கொண்டவர்கள் தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகளை பின்பற்றினால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
    கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.
    புதுடெல்லி

    கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி போடுவோருக்கும் சில வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

    இதுபற்றிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-

    * 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு பிறகு ஆபத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு.

    * கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து அதிகரிக்காது.

    * கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.

    * கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. மற்றவர்களைப் போலவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கிறது. பக்கவிளைவுகள் லேசானதுதான். லேசான காய்ச்சல் வரலாம். ஊசி செலுத்திய இடத்தில் வலி வரலாம். 3 நாட்கள் வரை பாதிப்பு இருக்கலாம்.

    * மிக அரிதாக 1.5 லட்சம் பேரில் ஒரு கர்ப்பிணிக்கு, தடுப்பூசி போட்ட 20 நாளில் சில முக்கிய அறிகுறிகள்( மூச்சு திணறல், வாந்தி, வயிற்று வலி, கைகால்களை அழுத்தும்போது வலி, மூட்டு வீக்கம், சருமத்தில் சிராய்ப்பு,தொடர் தலைவலி போன்றவை) இருக்கலாம். இதுகுறித்து அவர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    * கர்ப்ப காலத்தில் கொரோனா தாக்கினால், குழந்தையை பிரசவித்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    * கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    - கொரோனா தடுப்பூசி பற்றிய மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்கள பணியாளர்கள் தெரிவிப்பதை எளிதாக்கும் வகையில் கேள்வி பதில் வடிவில் குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    குளிர்காலத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.
    தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ணநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதனால் காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய  செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

    தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.

    பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும். அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.

    சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால் அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள். அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.

    சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும். ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.

    மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும். அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும். அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.
    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

    சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

    தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.

    கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.

    பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.
    பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    விவாகரத்து, பிடித்தமானவர்களின் திடீர் மரணம், வேலை இழப்பு போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். இதில் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்சைமர் சங்கமும் ‘‘60 வயதுக்குட்பட்ட பெண்களில் 6 பேரில் ஒருவர் அல்சைமர் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால் 11 பேரில் ஒருவருக்குத்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது’’ என்கிறது.

    அமெரிக்காவின் ஹான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சிந்தியா முன்ரோ, ‘‘மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது சிரமமானது. ஆனால் மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்தால் அது எளிதானது. மேலும் வயதாகும்போது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் ஆய்வு முடிவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன அழுத்தம் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. சாதாரணமாக மன அழுத்தம் ஏற்படும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு அதிகரிக்கும்.

    மீண்டும் மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசால் அளவு மிக அதிகமாகிவிடும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். மன அழுத்த ஹார்மோன் அளவு உயர்வது நினைவுத்திறனை பாதிக்க செய்துவிடும்” என்கிறார்.

    பேராசிரியர் முன்ரோ குழுவினர் 900 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 63 சதவீதம்பேர் பெண்கள். அவர்கள் சராசரியாக 47 வயதை கடந்தவர்கள். மன அழுத்தம் நீடிக்கும்போது மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
    வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.
    பெண்கள் பெரும்பாலும் ஆடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் காண்பிக்கும் அக்கறையை உள்ளாடை வாங்கும் விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இறுக்கமான, தடிமனான, தவறான அளவு கொண்ட பிராவை தேர்ந்தெடுத்தால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அடிப்பகுதியில் ஒயர் கொண்ட இறுக்கமான பிராவை அணிந்து தூங்கும்போது பாதிப்புகள் அதிகமாகும். தவறான பிரா தேர்வால் ஏற்படும் இன்னல்கள் பற்றி பார்ப்போம்.

    இறுக்கமான பிரா அணியும்போது ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதிலும் எலாஸ்டிக் அல்லது ஒயர் பதிக்கப்பட்ட பிராவை அணியும்போது பாதிப்பு அதிகமாகும். அவை இயல்பாகவே இறுக்கத்தை ஏற்படுத்திவிடும். தூங்கும்போது இத்தகைய பிராவை அணிவது அசவுகரியத்தை உண்டாக்கும். இறுக்கமான பிரா அணிவது தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். சவுகரியமாக தூங்க முடியாது.

    இறுக்கமான பிரா அணிவது உடல் பகுதியில் எரிச்சல், தடிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இரவில் தூக்கமும் தடைப்பட்டு போகும். தூங்கும்போது அடிப்பகுதியில் ஒயர்கள், பட்டைகள் இல்லாத பிராவை உபயோகிப்பது நல்லது. வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

    எலாஸ்டிக் தன்மை கொண்ட பிராக்கள் இறுக்கத்தை உண்டாக்கும்போது அவை உடலில் பதியும் பகுதிகளில் நிறமிகள் பாதிப்புக்குள்ளாகும். தூங்கும்போது இந்த பிராக்களை அணியும்போது நிறமிகள் அதிகமாகும். அதன் மூலம் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும். மென்மையான அல்லது உடலமைப்புக்கு பொருந்தும் தளர்வான பிராவை அணிந்து கொள்வது நல்லது.

    தொடர்ந்து இறுக்கமான பிரா அணிந்தால் நிணநீர் அடைப்பு பிரச்சினையும் உண்டாகும். இது பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படும். மார்பகங்களில் நீர் வீக்கம் பிரச்சினையும் ஏற்படும். வலியற்ற கட்டிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    கோடை காலங்களில் இறுக்கமான பிரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரிக்கும். செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும். காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் நல்லது.
    இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது.
    தூக்கம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதுதான். எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருமே தினமும் இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் உடல் அமைப்பும், குடும்ப சூழலும் பெண்களை போதுமான அளவில் தூங்கஅனுமதிப்பதில்லை.

    பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பாலினரீதியாக இருக்கும் சில கடமைகளும் அவர்களின் தூக்கத்தை குறைக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. அதாவது மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்பக்காலம், பிரசவ காலம், பெற்றெடுத்த குழந்தையை பாலூட்டி வளர்க்கும் காலம், மெனோபாஸ் போன்றவைகளில் அவர்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்துபோகிறது.

    மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் மனச்சோர்வும், உடல்சோர்வும் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.

    கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.

    பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும். நிறைய பெண்கள் நாள்பட்ட மூட்டு வலி, நுரையீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தன்மையால் தொடர்ச்சியாக ஆழ்ந்து தூங்க முடியாமல் தவிப்பார்கள்.

    பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.

    பெண்கள் நன்றாக தூங்கவேண்டுமானால் முதலில் மனதை அமைதியாக்கவேண்டும். தசைகளை நெகிழவைக்கும் பயிற்சிகளை செய்து உடல் இறுக்கத்தை குறைக்கவேண்டும். இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிடவேண்டும். மசாலாக்கள் அதிகம் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
    ×