என் மலர்
பெண்கள் மருத்துவம்
ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்களையும், அதை குறைக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும். பொதுவாக நேராக நிமிர்ந்து நிற்கும்போது இடுப்பு பகுதியில் இருந்து மூட்டு பகுதி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தொடைப் பகுதியில் தசைகள் குவிந்திருந்தால் அங்கு கொழுப்பு சேர்ந்திருப்பதாக அர்த்தம். அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. சில எளிய பயிற்சிகள் மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்கள்:
மரபியல்: தொடையின் வெளிப்புற பகுதியில் கொழுப்புகளை உருவாக்குவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பருவமடைதல்: இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும். சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.
கர்ப்பம்: ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினைக்கு கர்ப்பமும் மற்றொரு காரணியாக அமைந்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் பங்களிப்பு முக்கியமானது. இவை கர்ப்பகாலம் முழுவதும் சுரக்கக்கூடியது. இதில் ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.
உட்காருதல்: உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.
கொழுப்பு: உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும். உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.
உணவு: ஒரு நாளைக்கு மூன்று முறை சாலட் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் புட்’ சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.
முதுகு: முதுகின் அடிப்பகுதிக்கும், ‘சாடில் பேக்குகளுக்கும்’ இடையே நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
மரபியல்: தொடையின் வெளிப்புற பகுதியில் கொழுப்புகளை உருவாக்குவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பருவமடைதல்: இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும். சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.
கர்ப்பம்: ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினைக்கு கர்ப்பமும் மற்றொரு காரணியாக அமைந்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் பங்களிப்பு முக்கியமானது. இவை கர்ப்பகாலம் முழுவதும் சுரக்கக்கூடியது. இதில் ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.
உட்காருதல்: உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.
கொழுப்பு: உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும். உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.
உணவு: ஒரு நாளைக்கு மூன்று முறை சாலட் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் புட்’ சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.
முதுகு: முதுகின் அடிப்பகுதிக்கும், ‘சாடில் பேக்குகளுக்கும்’ இடையே நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.
திருமணம் முடிந்து முதலிரவுக்குள் அடியெடுத்துவைக்கும் தம்பதிகளை பற்றிய ருசிகரமான ஆய்வுகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா ஆய்வு களுமே, ‘அது எந்த தம்பதிக்கும் முழுமையான சுகத்தை தரும் இரவாக அமைந்ததில்லை’ என்றே குறிப்பிடுகின்றன. அடுத் தடுத்த நாட்களே அவர்களது ஆசைகளை தீர்த்துவைக்கின்றன என்று குறிப்பிடுகின்றன. சில புதுமணத் தம்பதிகளின் முதலிரவு அனுபவங்களை கேட்போம்!
அனீஷ் தனக்கு பணம், நகை எதுவும் தேவையில்லை. பெண் அழகாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விதித்தான். அவன் எதிர்பார்த்தது போன்ற பெண்ணை பெற்றோர் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்தார்கள். அந்த பெண் மிகவும் நல்லவள். ஆனால் முதலிரவில், கணவருடன் தனிமையில் நெருங்க தயங்கினாள். அதனால் அவன், மனைவி தன்னிடம் பிரியமாக இல்லை. அவளை தன்னிடம் ஒப்படைக்க தயங்குகிறாள் என்று நினைத்துவிட்டான். அதனால் அவர்களது முதலிரவு தள்ளிப்போனது. புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து, ஒவ்வொரு நாளையும் தள்ளிக்கொண்டே இருந்தாள். அவளை ஏதோ ஒரு விஷயம் ஆட்டிப்படைப்பது, அவனுக்கு புரிந்தது.
பலமுறை அதுபற்றி அவன் பேச முயற்சித்தும், அவளிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணுக்குரிய பொலிவு அவள் முகத்தில் மலராமல் போனது பெற்றோரை கவலைக்குள்ளாக்கியது. அவளது பயத்துக்கும், தயக்கத்துக்கும் உண்மையான காரணம் எது என்பதை வெகுகாலம் கழித்தே அவர்களால் கண்டறிய முடிந்தது.
திருமணமான அவளுடைய தோழிகளில் சிலர், தங்களுக்கு அன்று வலி அனுபவம் ஏற்பட்டதாக அவளிடம் பகிர்ந்திருக்கிறார்கள். அதை கற்பனை செய்துபார்த்து, தனக்கும் அதுபோன்ற வலி ஏற்பட்டுவிடும் என்று அவள் பயந்துவிட்டதாலே, கணவரின் நெருக்கத்தை தவிர்த்திருக்கிறாள். முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த பயத்தை போக்குவதற்குள் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது.
வித்யாவின் கதை இன்னொரு மாதிரியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில் அவள் கதிகலங்கிப் போய் இருந்தாள். மணப்பெண்ணுக்குரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. பெற்றோர் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய நெருங்கிய தோழி அவளை தனியே அழைத்து விசாரித்தாள். வித்யாவோ அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து போக கவலையாக இருக்கிறது என்றாள். தோழி அதை நம்பவில்லை. அவள் எதையோ மறைக்க முயற்சிப்பது புரிந்தது. எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். நான் தீர்வு சொல்கிறேன் என்று ஆறுதலாக பேசினாள்.
அப்போது தயக்கத்தில் இருந்து விடுபட்ட வித்யா, ‘முதலிரவை நினைத்து பயப் படுகிறேன்’ என்றாள். அப்படி என்ன பயம் என்று தோழி கேட்டபோது கண்ணீர் விட்டு அழுதபடி, அறியாத வயதில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டாள். ‘என்னவென்றே தெரியாத வயதில் நிகழ்ந்து விட்ட தவறுக்கு தான் காரணம் இல்லை என்றாலும் அது அடிக்கடி மனதுக்குள் வந்து காயப் படுத்துகிறது. அதனால் முதலிரவை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்படி திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவது?’ என்று கேள்வி எழுப்பியவள், ‘எனக்கு உறுத்தலாகவும், பயமாகவும் இருக்கிறது. என்னை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டால் என் கணவர், என் குடும்பத்தை பற்றியும் கேவலமாக நினைத்து விடுவார்’ என்று கதறியழுதாள்.
அவளுக்கு ஆறுதல் சொன்ன தோழி, ‘நீ அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கிறது. எனக்குகூட நடந்திருக்கிறது. நான் அதை கெட்டகனவாக நினைத்து மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. அதை திரு மணத்திற்கு பின்பு உன் கணவரிடம் சொன்னால் தேவையற்ற பிரச்சினைதான் ஏற்படும்’ என்று சரியான முறையில் விளக்கம் கொடுத்தாள்.
வித்யாவிற்கு நடந்தது என்னவென்றால், தனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலத்தில் அவள் தனது தோழனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டாள். அதன் பின்பு தன்னை திருத்தி, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், தான் உறவு கொண்டது வருங்கால கணவருக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை வாட்டிவதைத்ததற்கான காரணம்!
இதுபோல பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.
மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும். அதில் அலட்சியம்காட்டக் கூடாது. தேவைப்பட்டால் அதற்குரிய கவுன்சலிங்கை பெறவேண்டும். அவளது மனதில் இருக்கும் குழப்பங்களை அகற்றிவிட்டு, அதன் பின்பு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தால்தான், முதல் இரவு மட்டுமின்றி எல்லா இரவுகளும் இனிக்கும்.
திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப் பக்குவத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி விடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக்கூடாது.
ஆய்வுகள் சொல்வதுபோல் முதலிரவு இனிக்காவிட்டாலும், அடுத்தடுத்து வரும் அனைத்து இரவுகளையும் இன்பமயமானதாக ஆக்க கணவனும்- மனைவியும் மனம்விட்டுப்பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கையும் கொள்ளவேண்டும்.
அனீஷ் தனக்கு பணம், நகை எதுவும் தேவையில்லை. பெண் அழகாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விதித்தான். அவன் எதிர்பார்த்தது போன்ற பெண்ணை பெற்றோர் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்தார்கள். அந்த பெண் மிகவும் நல்லவள். ஆனால் முதலிரவில், கணவருடன் தனிமையில் நெருங்க தயங்கினாள். அதனால் அவன், மனைவி தன்னிடம் பிரியமாக இல்லை. அவளை தன்னிடம் ஒப்படைக்க தயங்குகிறாள் என்று நினைத்துவிட்டான். அதனால் அவர்களது முதலிரவு தள்ளிப்போனது. புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து, ஒவ்வொரு நாளையும் தள்ளிக்கொண்டே இருந்தாள். அவளை ஏதோ ஒரு விஷயம் ஆட்டிப்படைப்பது, அவனுக்கு புரிந்தது.
பலமுறை அதுபற்றி அவன் பேச முயற்சித்தும், அவளிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணுக்குரிய பொலிவு அவள் முகத்தில் மலராமல் போனது பெற்றோரை கவலைக்குள்ளாக்கியது. அவளது பயத்துக்கும், தயக்கத்துக்கும் உண்மையான காரணம் எது என்பதை வெகுகாலம் கழித்தே அவர்களால் கண்டறிய முடிந்தது.
திருமணமான அவளுடைய தோழிகளில் சிலர், தங்களுக்கு அன்று வலி அனுபவம் ஏற்பட்டதாக அவளிடம் பகிர்ந்திருக்கிறார்கள். அதை கற்பனை செய்துபார்த்து, தனக்கும் அதுபோன்ற வலி ஏற்பட்டுவிடும் என்று அவள் பயந்துவிட்டதாலே, கணவரின் நெருக்கத்தை தவிர்த்திருக்கிறாள். முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த பயத்தை போக்குவதற்குள் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது.
வித்யாவின் கதை இன்னொரு மாதிரியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில் அவள் கதிகலங்கிப் போய் இருந்தாள். மணப்பெண்ணுக்குரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. பெற்றோர் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய நெருங்கிய தோழி அவளை தனியே அழைத்து விசாரித்தாள். வித்யாவோ அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து போக கவலையாக இருக்கிறது என்றாள். தோழி அதை நம்பவில்லை. அவள் எதையோ மறைக்க முயற்சிப்பது புரிந்தது. எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். நான் தீர்வு சொல்கிறேன் என்று ஆறுதலாக பேசினாள்.
அப்போது தயக்கத்தில் இருந்து விடுபட்ட வித்யா, ‘முதலிரவை நினைத்து பயப் படுகிறேன்’ என்றாள். அப்படி என்ன பயம் என்று தோழி கேட்டபோது கண்ணீர் விட்டு அழுதபடி, அறியாத வயதில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டாள். ‘என்னவென்றே தெரியாத வயதில் நிகழ்ந்து விட்ட தவறுக்கு தான் காரணம் இல்லை என்றாலும் அது அடிக்கடி மனதுக்குள் வந்து காயப் படுத்துகிறது. அதனால் முதலிரவை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்படி திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவது?’ என்று கேள்வி எழுப்பியவள், ‘எனக்கு உறுத்தலாகவும், பயமாகவும் இருக்கிறது. என்னை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டால் என் கணவர், என் குடும்பத்தை பற்றியும் கேவலமாக நினைத்து விடுவார்’ என்று கதறியழுதாள்.
அவளுக்கு ஆறுதல் சொன்ன தோழி, ‘நீ அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கிறது. எனக்குகூட நடந்திருக்கிறது. நான் அதை கெட்டகனவாக நினைத்து மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. அதை திரு மணத்திற்கு பின்பு உன் கணவரிடம் சொன்னால் தேவையற்ற பிரச்சினைதான் ஏற்படும்’ என்று சரியான முறையில் விளக்கம் கொடுத்தாள்.
வித்யாவிற்கு நடந்தது என்னவென்றால், தனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலத்தில் அவள் தனது தோழனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டாள். அதன் பின்பு தன்னை திருத்தி, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், தான் உறவு கொண்டது வருங்கால கணவருக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை வாட்டிவதைத்ததற்கான காரணம்!
இதுபோல பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.
மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும். அதில் அலட்சியம்காட்டக் கூடாது. தேவைப்பட்டால் அதற்குரிய கவுன்சலிங்கை பெறவேண்டும். அவளது மனதில் இருக்கும் குழப்பங்களை அகற்றிவிட்டு, அதன் பின்பு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தால்தான், முதல் இரவு மட்டுமின்றி எல்லா இரவுகளும் இனிக்கும்.
திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப் பக்குவத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி விடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக்கூடாது.
ஆய்வுகள் சொல்வதுபோல் முதலிரவு இனிக்காவிட்டாலும், அடுத்தடுத்து வரும் அனைத்து இரவுகளையும் இன்பமயமானதாக ஆக்க கணவனும்- மனைவியும் மனம்விட்டுப்பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கையும் கொள்ளவேண்டும்.
நவீன சிகிச்சை முறைகளால் தற்போது 20 முதல் 30 வயது என்றால் 70 சதவீத வெற்றி வாய்ப்பும், 30 முதல் 40 வயது என்றால் 60 சதவீதம் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.
பெண்கள் பூப்பெய்தும் காலம் முதல் தொடரும் சமச்சீரற்ற கால இடைவெளிகளில் ஏற்படும் மாத விடாய், கரு முட்டை உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்கள், கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகள், சினை குழாய் அடைப்பு, கரு முட்டையில் உருவாகும் பி.சி.ஓ. குறைபாடுகள், பரம்பரையின் காரணமாக மகப்பேரின்மை, கரு முட்டையில் சாக்லெட் சிட்ஸ் எனப்படும் நீர்க்கட்டிகள், கர்ப்பப் பை கட்டிகள் என பல பிரச்சினைகளால் குழந்தையின்மை ஏற்படலாம்.
இதற்கு உரிய முறையில் பரிசோதனை செய்து அதற்குரிய தீர்வை அளிக்கிறோம். ஆண்களைப் பொறுத்தவரையில் விந்துக்களின் எண்ணிக்கை, வீரியம் மற்றும் அடர்த்தியில் குறைபாடு, அதன் நீந்தும் திறனில் இருக்கும் கோளாறுகள், விந்து உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், உடல் பருமன், வாழிட மற்றும் பணியிடச் சூழல், நீரிழிவு, ரத்த அழுத்தம் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களுக்கு செய்யும் பரிசோதனையில் இவைகள் தெரிய வந்ததும் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகளால் குணப்படுத்த முயல்கிறோம். அது முழுமையான பலன்களை தராத தருணத்தில்தான் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி பரிந்துரை செய்கிறோம்.
திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்றாலோ, ஐ.யூ. ஐ. என்ற சிகிச்சையை 6 முறை எடுத்து தோல்வி கண்டவர்களுக்கோ, விந்தணு எண்ணிக்கையில் முன்னேற்றம் கிட்டாதவர்களுக்கோதான் இவ்வித சிகிச்சை பொருந்தும்.
அதே போல் பெண்களிடத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு கருமுட்டை வெடிப்பதில் பிரச்சினை இருந்தாலோ, சினைக் குழாயில் அடைப்பு இருந்தாலோ, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், மீண்டும்,மீண்டும் கருக்குழாயில் கட்டிகள் தோன்றினாலோ இவ்வித சிகிச்சையில்தான் பலன் பெற இயலும். எங்களின் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் டியூப் பேபியை வெற்றி கரமாக உருவாக்கி தம்பதியர்களின் சந்தோஷத்தில் பங்கெடுத்திருக்கிறோம். ஹார்மோன் ஊசி மூலம் கரு முட்டையை உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாளில் அதை ஸ்கேன் மூலம் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கணவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை சுத்திகரித்து சேமித்து வைத்திருப்பதை இணைப்போம்.
இதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுவும், கரு முட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்குகிறோம். ஒரு சிலருக்கு ஆரோக்கியமான விந்தணுவின் நீந்தும் திறன் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் போது, அதனை கரு முட்டையில் நேராக ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறோம். கடந்த 29 ஆண்டுகளுக் கும் மேலாக பல்லாயிரக்கணக் கான பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்து அவர்களுக்கு தாலாட்டு பாடும் பாக்கியத்தை அளித்திருக்கிறோம். இது பழனியில் மட்டுமல்லாது கோவை, மதுரை, சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரத்திலும் தொடர்கிறது.
-டாக்டர் எஸ்.சந்திரலேகா, மகப்பேறு மருத்துவ நிபுணர்
இதற்கு உரிய முறையில் பரிசோதனை செய்து அதற்குரிய தீர்வை அளிக்கிறோம். ஆண்களைப் பொறுத்தவரையில் விந்துக்களின் எண்ணிக்கை, வீரியம் மற்றும் அடர்த்தியில் குறைபாடு, அதன் நீந்தும் திறனில் இருக்கும் கோளாறுகள், விந்து உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், உடல் பருமன், வாழிட மற்றும் பணியிடச் சூழல், நீரிழிவு, ரத்த அழுத்தம் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களுக்கு செய்யும் பரிசோதனையில் இவைகள் தெரிய வந்ததும் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகளால் குணப்படுத்த முயல்கிறோம். அது முழுமையான பலன்களை தராத தருணத்தில்தான் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி பரிந்துரை செய்கிறோம்.
திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்றாலோ, ஐ.யூ. ஐ. என்ற சிகிச்சையை 6 முறை எடுத்து தோல்வி கண்டவர்களுக்கோ, விந்தணு எண்ணிக்கையில் முன்னேற்றம் கிட்டாதவர்களுக்கோதான் இவ்வித சிகிச்சை பொருந்தும்.
அதே போல் பெண்களிடத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு கருமுட்டை வெடிப்பதில் பிரச்சினை இருந்தாலோ, சினைக் குழாயில் அடைப்பு இருந்தாலோ, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், மீண்டும்,மீண்டும் கருக்குழாயில் கட்டிகள் தோன்றினாலோ இவ்வித சிகிச்சையில்தான் பலன் பெற இயலும். எங்களின் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் டியூப் பேபியை வெற்றி கரமாக உருவாக்கி தம்பதியர்களின் சந்தோஷத்தில் பங்கெடுத்திருக்கிறோம். ஹார்மோன் ஊசி மூலம் கரு முட்டையை உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாளில் அதை ஸ்கேன் மூலம் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கணவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை சுத்திகரித்து சேமித்து வைத்திருப்பதை இணைப்போம்.
இதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுவும், கரு முட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்குகிறோம். ஒரு சிலருக்கு ஆரோக்கியமான விந்தணுவின் நீந்தும் திறன் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் போது, அதனை கரு முட்டையில் நேராக ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறோம். கடந்த 29 ஆண்டுகளுக் கும் மேலாக பல்லாயிரக்கணக் கான பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்து அவர்களுக்கு தாலாட்டு பாடும் பாக்கியத்தை அளித்திருக்கிறோம். இது பழனியில் மட்டுமல்லாது கோவை, மதுரை, சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரத்திலும் தொடர்கிறது.
நவீன சிகிச்சை முறைகளால் தற்போது 20 முதல் 30 வயது என்றால் 70 சதவீத வெற்றி வாய்ப்பும், 30 முதல் 40 வயது என்றால் 60 சதவீதம் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறோம். குழந்தையின்மைக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய தீர்வையும் முன் வைக்கிறோம். தம்பதிகளின் உச்சபட்ச சந்தோஷம் குழந்தைகள் தான். கரு பதியமிடுவதில் வெற்றியை உறுதி செய்ய இன்று ஏராளமான நவீன மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதனால் பலன்களும், வெற்றி வாய்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆரோக்கியமாகவும், குழந்தை பிறப்பையும் உறுதி செய்கின்றன. இதனால் தாலாட்டும் தாய் மடியை தருகிறோம்.
மேலும் விவரங்களுக்கு: 88832 52111
-டாக்டர் எஸ்.சந்திரலேகா, மகப்பேறு மருத்துவ நிபுணர்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
தாய்மை என்பது ஒவ்வாரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழும் முக்கியமான தருணமாகும். குழந்தையை கருவில் தாங்கும் போது உடலிலும், மனதிலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். சில வகை உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சிலவகை உணவுகள சாப்பிட்ட வேகத்திலேயே வாந்தியாக வெளியேற்றப்படும்.கர்ப்ப காலத்தில் எந்த விதமான ணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார் திருவிடைமருதூர் அரசு மருத்துவனை மகப்பேறு மருத்துவர் ஏ.ஆர்த்தி
கர்ப்ப காலத்தில் எல்ல சத்துக்களும் சரி விகிதத்தில் அடங்கிய உணவை மட்டும் தேவையான அளவு சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் 5 முதல் 9 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உடல்எடை, எளிதான பிரவத்துக்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை குறைவாக உண்ண வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, பால், காய்கறிகள், இறைச்சி, சோயா பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை சாறு, மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
இரும்புச்சத்து- முருங்ககைக்கீரை, முருங்கைக்காய், சுண்டடைக்காய், கடலைமிட்டாய், பேரீச்சம்பழம், முட்டை, ஈரல், கைக்குத்தல் அவல், கேழ்வரகு, உலர்திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
கால்சியல்- பால், முட்டை, வெண்ணெய், கேழ்வரகு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஃபோலிக் அமிலம் - பீன்ஸ், ஆரஞ்சு, கைக்குத்தல் அரிசி, பேரீச்சம் பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி - ஆரஞ்சி, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, போன்ற பழங்களை சாப்பிடலாம்.
வைட்டமின் பி12 - அசைவ உணவுகள் அனைத்தையும் சாப்பிடலாம்.
சைவ உணவு உண்பவர்கள் இந்த வைட்டமின் மாத்திரை வடிவத்தில் எடுத்துகொள்ளலாம்.
ரத்தசோகை - இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோய் - மா, பழா, வாழை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சி, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். அரிசி உணவை குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தம் - உப்பு, எண்ணெய் அளவை குறைத்து கொள்ள வேண்டும். ஊறுகாய் போன்ற பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது.
தைராய்டு - உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் கர்ப்பிணிகள் முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எல்ல சத்துக்களும் சரி விகிதத்தில் அடங்கிய உணவை மட்டும் தேவையான அளவு சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் 5 முதல் 9 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உடல்எடை, எளிதான பிரவத்துக்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை குறைவாக உண்ண வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, பால், காய்கறிகள், இறைச்சி, சோயா பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை சாறு, மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
இரும்புச்சத்து- முருங்ககைக்கீரை, முருங்கைக்காய், சுண்டடைக்காய், கடலைமிட்டாய், பேரீச்சம்பழம், முட்டை, ஈரல், கைக்குத்தல் அவல், கேழ்வரகு, உலர்திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
கால்சியல்- பால், முட்டை, வெண்ணெய், கேழ்வரகு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஃபோலிக் அமிலம் - பீன்ஸ், ஆரஞ்சு, கைக்குத்தல் அரிசி, பேரீச்சம் பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி - ஆரஞ்சி, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, போன்ற பழங்களை சாப்பிடலாம்.
வைட்டமின் பி12 - அசைவ உணவுகள் அனைத்தையும் சாப்பிடலாம்.
சைவ உணவு உண்பவர்கள் இந்த வைட்டமின் மாத்திரை வடிவத்தில் எடுத்துகொள்ளலாம்.
ரத்தசோகை - இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோய் - மா, பழா, வாழை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சி, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். அரிசி உணவை குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தம் - உப்பு, எண்ணெய் அளவை குறைத்து கொள்ள வேண்டும். ஊறுகாய் போன்ற பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது.
தைராய்டு - உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் கர்ப்பிணிகள் முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
தாய்மையை எதிர்கொண்டு கருவை சுமக்கும் பெண்களுக்கு சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு நிகழ்ந்துவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.6 மில்லியன் கருச்சிதைவுகள் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் தினமும் 10 பெண்கள் பாதுகாப்பற்ற கருச்சிதைவு காரணமாக இறக்கும் அபாயமும் இருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நோய் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.
குழந்தையை இழந்ததை நினைத்து மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது. கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
* புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது அவசியம். அவை ரத்த செல்களை அதிகரிக்கச் செய்யும். அவித்த முட்டை, மீன், அவகொடா, பாலாடை, பட்டாணி, ஆரஞ்சு, கேரட், பச்சை இலை காய்கறிகள், வாழைப்பழம், பாதாம் போன்றவற்றில் புரதம் அதிகம் கலந்திருக்கும்.
* எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. முள்ளங்கி, முலாம்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடக் கூடாது. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
* மீன், கோழி இறைச்சி, முட்டை, ஆட்டு இறைச்சி, ஈரல், பழங்கள், காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை விரும்பி சாப்பிடலாம். இவற்றுள் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்திருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
* குறைந்த அளவு கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம். அவற்றின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெறலாம். புரதம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கும்.
* காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளிலும் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.
* கருச்சிதைவிற்கு பிறகு, அதிகமாக வியர்வை வெளியேறக்கூடும். நீரிழப்பும் ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளலாம்.
* உலர்ந்த பழங்கள், இஞ்சி, பூண்டு, எள், பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கருச்சிதைவு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், உடல் நிலையை மோசமாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ‘ஜங்க் புட்ஸ்’, சர்க்கரை சார்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கு, சுரைக்காய் போன்ற உடலை குளிர்விக்கக் கூடிய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* துணி துவைத்தல், தண்ணீர் வாளிகளைத் தூக்குதல் போன்ற எடை தூக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
* கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் வலி அல்லது பிடிப்பை குறைக்க சூடான கடுகு அல்லது எள் எண்ணெய்யை தடவலாம். அத்துடன் உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு, கை, கால்கள், உள்ளங்கைகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.
* கருச்சிதைவுக்குப் பிறகு, உடலில் பிடிப்புகள் இருக்கலாம். ‘ஹாட் பேக்’ எனப்படும் சாதனத்தை பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும்.
* கருச்சிதைவுக்கு பின்பு உணர்ச்சிவசப்பட்ட மனச்சோர்வை அனுபவிக்கக்கூடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆறுதல், மனச்சோர்வை குறைக்க உதவும்.
* மருத்துவரின் ஆலோசனையின்படி உடலில் ஆற்றலை மீட்டெடுக்க உதவும் இரும்பு, கால்சியம் மற்றும் பிற அடிப்படை வைட்டமின்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* மரபணு பிரச்சினைகளால் கருவில் ஏற்படும் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாய்க்கு நோய் பாதிப்பு ஏற்படுதல், அதிக உடல் எடை, நீண்ட தூர பயணம், அடிக்கடி பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் போன்ற காரணங்களால் கர்ப்பம் தானாகவே கலையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
* கருச்சிதைவுக்கு பிறகு அடுத்த கர்ப்பத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைவெளி தேவை. இது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். கருப்பையில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் வழிவகுக்கும்.
* ரத்த இழப்பு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மாதவிடாய் சுழற்சி தாமதமாகலாம். உடல் நலத்தை கவனித்துக்கொள்வதை பொறுத்து மாதவிடாய் சுழற்சி அமையும். சிலருக்கு கருச்சிதைவுக்கு 2-3 மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி தொடங்கலாம். எனவே பீதி அடையவேண்டாம். மிகவும் காலதாமதமானால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
* உடல் நலத்தை பேணுவதற்கு வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கருச்சிதைவு என்பது வேதனை தரும் விஷயம். அதனை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது அவசியமானது.
திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான நாட்களுக்கு இடையே மணமகள், எளிமையான, நிலையான உணவு திட்டத்தை கடைப்பிடிப்பது நல்லது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட உடனேயே மணமகன்-மணமகள் வீடு விழா கோலம் பூண்டுவிடும். திருமண ஆடை, அலங்கார ஷாப்பிங், வரவேற்பு, உபசரிப்புகள், நெருங்கிய உறவினர்கள் அழைப்பு, அழைப்பிதழ் அச்சடிப்பு என திருமண பணிகள் சுறுசுறுப்பு அடைந்துவிடும். திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான நாட்களுக்கு இடையே மணமகள், எளிமையான, நிலையான உணவு திட்டத்தை கடைப்பிடிப்பது நல்லது. அதுவே இயற்கையான அழகை பராமரிக்க பக்கபலமாக அமைந்திருக்கும். திருமண கோலத்தில் பார்க்கும்போது அழகுக்கு அழகு சேர்க்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்:
1. தினமும் இரவு 7.30 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.
2. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதில் 30 நிமிட நடைப்பயிற்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
3. மினி உணவுக்கொள்கையை பின்பற்ற வேண்டும். அதாவது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தவறாமல் சிறிதேனும் ஏதாவதொரு உணவை சாப்பிட வேண்டும்.
4. இதுநாள் வரை துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக இவற்றையெல்லாம் அறவே தவிர்த்துவிட வேண்டும். முழு கோதுமை, ராகி, ஓட்ஸ், கோதுமை பிரெட், பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். புரதம், பச்சை இலை காய்கறிகள், சாலட்டுகள் உணவில் தவறாமல் இடம்பெற வேண்டும். வெள்ளை அரிசி, அரிசி மாவு, மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற வெள்ளை நிற உணவு பதார்த்தங்களை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
5. அவகொடா, நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை, சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. அவை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கொழுப்புகளாக கருதப்படுகின்றன.
6. கீரைகளை மறந்துவிடாதீர்கள். உணவின் ஒரு பகுதியாக ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுங்கள்.
7. தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவதை இலக்காக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கைவசம் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்திருக்க வேண்டும். இளநீர், அதிக நீர்ச்சத்தை உள்ளடக்கிய பழங்கள், காய்கறி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் பருகலாம். அப்படி நீரேற்றமாக வைத்துக்கொள்வது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். பொலிவான சருமம், அழகான நகங்கள், பளபளப்பான கூந்தல் போன்ற அம்சங்களை தக்க வைத்துக்கொள்ளவும் உதவும். உடல் எடை குறைவதற்கும் வித்திடும்.
8. மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒதுக்கி வையுங்கள். கேக்குகள், பிஸ்கெட், பதப்படுத்தப்பட்ட சாறு போன்ற டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை தவிருங்கள்.
தினமும் பின்பற்ற வேண்டியவை:
காலை: காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து ஊறவைத்த 4-5 பாதாம், ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். இஞ்சி, எலுமிச்சை கலந்த நீர் அல்லது சீரகம் ஊறவைக்கப்பட்ட நீர் பருகலாம். தண்ணீரில் ஊறவைத்த லவங்கப்பட்டையை சிறிதளவு சாப்பிடலாம். கிரீன் டீ பருகலாம்.
காலை உணவு: இட்லி, காய்கறிகள் கலந்த சாம்பார் அல்லது ஓட்ஸ், உப்புமா சாப்பிடலாம். ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடலாம். சிறிதளவு பப்பாளி அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம்.
காலை 11 மணி: சுண்டல் / வேர்க்கடலை / முளையிட்ட தானியங்களால் செய்யப்பட்ட சாலடுகள் இவற்றுள் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். கீரை சாலட் / பழ சாலட்டும் சாப்பிடலாம். சாலட்டுகளுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் தூவி அலங்கரித்துக்கொள்ளலாம்.
மதிய உணவு: சிறிதளவு அரிசி சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். வெந்தயம் இலை, முருங்கை இலையில் தயாரான குழம்பை சேர்த்துக்கொள்ளலாம். தயிர் சாதம் அல்லது தயிர் கலந்தும் சாப்பிடலாம்.
மாலை நேர சிற்றுண்டி: பழ சாலட் / நட்ஸ் / ஒரு டம்ளர் மோர் / வேர்க்கடலை சாலட் ருசிக்கலாம்.
இரவு: அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் சாப்பாத்தியுடன் கோழி குழம்பு, கிரில் சிக்கன் சாப்பிடலாம். சைவ பிரியர்கள் சப்பாத்தியுடன் பருப்பு குழம்பு, சால்ஜி மற்றும் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ளலாம்.
திருமண ஏற்பாட்டில் கடைசி நேரங்களில் செய்யும் சிறு தவறுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதற்கு இடம் கொடுக்காமல் புன்னகையுடன் காட்சியளியுங்கள்.
ஊட்டச்சத்தியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி சீரான உணவுப்பழக்கத்தையும், வழக்கமான உடற்பயிற்சியையும் பின்பற்றுவது திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் பொருட்கள்:
திருமணத்திற்கு முன்பு ஒளிரும் சருமத்தை பெறுவதற்கு அவசியம் சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள் என்னென்ன தெரியுமா?
பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முகப்பருவை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். ரத்தத்தையும் சுத்திகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாதுளை: இது மிருதுவான, குழந்தை போன்ற மென்மையான சரும பொலிவை ஏற்படுத்தி கொடுக்கும். மாதுளை பழத்தை அப்படியே சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் ருசிக்கலாம்.
பாதாம்: இதில் வைட்டமின் ஈ சத்து நிரம்பியுள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
தக்காளி: இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் லைகோபீன் சருமம் வயதாவதை தடுக்கக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் அளிக்கும்.
மேலும் தக்காளியில் உள்ள அமில தன்மையானது, கரும் புள்ளிகள், பருக்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி: இது சரும நிறத்தை மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது. தோல் சுருக்கங்களை குறைக்கவும் உதவி செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
திருமணத்திற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும்?
புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட சீரான உணவை உண்ணுங்கள். உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள்.
தொப்பை, கொழுப்பை கரைக்கும் உணவுகள் எவை?
அவகொடா, வாழைப்பழம், பெர்ரி, கிவி, அத்தி, அன்னாசி போன்ற பழங்கள், தயிர், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள். இவற்றை சாப்பிடுவதுடன் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்றுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.
திருமணத்திற்கு முன்பு எப்படி உடல் மெலிய முடியும்?
மூன்று முறை சாப்பிடுவதற்கு பதிலாக ஐந்து, ஆறு முறை என பிரித்து சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள். உணவில் கலோரிகளைத் தவிருங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சியை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
முகத்தை பளபளப்பாக்கும் உணவு எது?
பாதாம், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், மாதுளை தவிர, அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள், சிவப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் (சால்மன் மற்றும் ஹெர்ரிங்) ஆகியவை முகத்திற்கு பிரகாசம் ஏற்படுத்தி கொடுக்கக்கூடியவை.
கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்:
1. தினமும் இரவு 7.30 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.
2. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதில் 30 நிமிட நடைப்பயிற்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
3. மினி உணவுக்கொள்கையை பின்பற்ற வேண்டும். அதாவது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தவறாமல் சிறிதேனும் ஏதாவதொரு உணவை சாப்பிட வேண்டும்.
4. இதுநாள் வரை துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக இவற்றையெல்லாம் அறவே தவிர்த்துவிட வேண்டும். முழு கோதுமை, ராகி, ஓட்ஸ், கோதுமை பிரெட், பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். புரதம், பச்சை இலை காய்கறிகள், சாலட்டுகள் உணவில் தவறாமல் இடம்பெற வேண்டும். வெள்ளை அரிசி, அரிசி மாவு, மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற வெள்ளை நிற உணவு பதார்த்தங்களை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
5. அவகொடா, நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை, சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. அவை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கொழுப்புகளாக கருதப்படுகின்றன.
6. கீரைகளை மறந்துவிடாதீர்கள். உணவின் ஒரு பகுதியாக ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுங்கள்.
7. தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவதை இலக்காக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கைவசம் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்திருக்க வேண்டும். இளநீர், அதிக நீர்ச்சத்தை உள்ளடக்கிய பழங்கள், காய்கறி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் பருகலாம். அப்படி நீரேற்றமாக வைத்துக்கொள்வது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். பொலிவான சருமம், அழகான நகங்கள், பளபளப்பான கூந்தல் போன்ற அம்சங்களை தக்க வைத்துக்கொள்ளவும் உதவும். உடல் எடை குறைவதற்கும் வித்திடும்.
8. மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒதுக்கி வையுங்கள். கேக்குகள், பிஸ்கெட், பதப்படுத்தப்பட்ட சாறு போன்ற டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை தவிருங்கள்.
தினமும் பின்பற்ற வேண்டியவை:
காலை: காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து ஊறவைத்த 4-5 பாதாம், ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். இஞ்சி, எலுமிச்சை கலந்த நீர் அல்லது சீரகம் ஊறவைக்கப்பட்ட நீர் பருகலாம். தண்ணீரில் ஊறவைத்த லவங்கப்பட்டையை சிறிதளவு சாப்பிடலாம். கிரீன் டீ பருகலாம்.
காலை உணவு: இட்லி, காய்கறிகள் கலந்த சாம்பார் அல்லது ஓட்ஸ், உப்புமா சாப்பிடலாம். ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடலாம். சிறிதளவு பப்பாளி அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம்.
காலை 11 மணி: சுண்டல் / வேர்க்கடலை / முளையிட்ட தானியங்களால் செய்யப்பட்ட சாலடுகள் இவற்றுள் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். கீரை சாலட் / பழ சாலட்டும் சாப்பிடலாம். சாலட்டுகளுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் தூவி அலங்கரித்துக்கொள்ளலாம்.
மதிய உணவு: சிறிதளவு அரிசி சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். வெந்தயம் இலை, முருங்கை இலையில் தயாரான குழம்பை சேர்த்துக்கொள்ளலாம். தயிர் சாதம் அல்லது தயிர் கலந்தும் சாப்பிடலாம்.
மாலை நேர சிற்றுண்டி: பழ சாலட் / நட்ஸ் / ஒரு டம்ளர் மோர் / வேர்க்கடலை சாலட் ருசிக்கலாம்.
இரவு: அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் சாப்பாத்தியுடன் கோழி குழம்பு, கிரில் சிக்கன் சாப்பிடலாம். சைவ பிரியர்கள் சப்பாத்தியுடன் பருப்பு குழம்பு, சால்ஜி மற்றும் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ளலாம்.
திருமண ஏற்பாட்டில் கடைசி நேரங்களில் செய்யும் சிறு தவறுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதற்கு இடம் கொடுக்காமல் புன்னகையுடன் காட்சியளியுங்கள்.
ஊட்டச்சத்தியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி சீரான உணவுப்பழக்கத்தையும், வழக்கமான உடற்பயிற்சியையும் பின்பற்றுவது திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் பொருட்கள்:
திருமணத்திற்கு முன்பு ஒளிரும் சருமத்தை பெறுவதற்கு அவசியம் சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள் என்னென்ன தெரியுமா?
பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முகப்பருவை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். ரத்தத்தையும் சுத்திகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாதுளை: இது மிருதுவான, குழந்தை போன்ற மென்மையான சரும பொலிவை ஏற்படுத்தி கொடுக்கும். மாதுளை பழத்தை அப்படியே சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் ருசிக்கலாம்.
பாதாம்: இதில் வைட்டமின் ஈ சத்து நிரம்பியுள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
தக்காளி: இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் லைகோபீன் சருமம் வயதாவதை தடுக்கக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் அளிக்கும்.
மேலும் தக்காளியில் உள்ள அமில தன்மையானது, கரும் புள்ளிகள், பருக்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி: இது சரும நிறத்தை மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது. தோல் சுருக்கங்களை குறைக்கவும் உதவி செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
திருமணத்திற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும்?
புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட சீரான உணவை உண்ணுங்கள். உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள்.
தொப்பை, கொழுப்பை கரைக்கும் உணவுகள் எவை?
அவகொடா, வாழைப்பழம், பெர்ரி, கிவி, அத்தி, அன்னாசி போன்ற பழங்கள், தயிர், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள். இவற்றை சாப்பிடுவதுடன் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்றுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.
திருமணத்திற்கு முன்பு எப்படி உடல் மெலிய முடியும்?
மூன்று முறை சாப்பிடுவதற்கு பதிலாக ஐந்து, ஆறு முறை என பிரித்து சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள். உணவில் கலோரிகளைத் தவிருங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சியை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
முகத்தை பளபளப்பாக்கும் உணவு எது?
பாதாம், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், மாதுளை தவிர, அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள், சிவப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் (சால்மன் மற்றும் ஹெர்ரிங்) ஆகியவை முகத்திற்கு பிரகாசம் ஏற்படுத்தி கொடுக்கக்கூடியவை.
தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.
பிரசவத்திற்கு பிறகு சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், தூக்கத்தில் மிரண்டு எழுந்திருப்பது. குழந்தையைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுதல், குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியுமா? என்கிற பயம். வீட்டில் தனியே இருக்கவும், வெளியே செல்லவும் பயப்படுதல், அழுகை, கோபம், யாரைப் பார்த்தாலும் எரிச்சல், தலைவலி, டென்ஷன், பசியின்மை, எந்த வேலையிலும் ஆர்வமின்மை.
இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில் தாய்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம்.
டாக்டர்கள் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச்சரியாக இனம் காண முடியும். அவர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கண்டறிவதற்கு என கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு இளம் தாய்மார்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள்.
முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமன்றி, அவரின் குடும்பத்தாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். “உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். பயப்படாதே” என மன தைரியம் கொடுப்பதுதான் முக்கியமான சிகிச்சை. இதில் கணவரின் பங்கு மிக முக்கியமானது.
சில குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். உதவிக்கு ஆட்கள் இல்லாதநிலையில் தூக்கமின்றி, குழந்தையைப் பார்த்துக்கொள்வது இளம் தாய்மார்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கும். இது அதிகரித்தால் மன அழுத்த நோயாக உருவெடுக்கலாம்.
எனவே, மனைவியைச் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கணவர் அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம்.
மன அழுத்தத்தில் இருக்கும் இளம் தாய்மார்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான மனப்பான்மை கொண்ட நபர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை தூங்கும்போது குட்டித்தூக்கம் போடலாம்.
தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.
இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில் தாய்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம்.
டாக்டர்கள் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச்சரியாக இனம் காண முடியும். அவர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கண்டறிவதற்கு என கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு இளம் தாய்மார்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள்.
முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமன்றி, அவரின் குடும்பத்தாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். “உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். பயப்படாதே” என மன தைரியம் கொடுப்பதுதான் முக்கியமான சிகிச்சை. இதில் கணவரின் பங்கு மிக முக்கியமானது.
சில குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். உதவிக்கு ஆட்கள் இல்லாதநிலையில் தூக்கமின்றி, குழந்தையைப் பார்த்துக்கொள்வது இளம் தாய்மார்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கும். இது அதிகரித்தால் மன அழுத்த நோயாக உருவெடுக்கலாம்.
எனவே, மனைவியைச் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கணவர் அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம்.
மன அழுத்தத்தில் இருக்கும் இளம் தாய்மார்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான மனப்பான்மை கொண்ட நபர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை தூங்கும்போது குட்டித்தூக்கம் போடலாம்.
தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.
மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும்.
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
மாதவிடாய் கால வலி இரண்டு வகை
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.
மாதவிடாய் கால வலி இரண்டு வகை
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.
கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், தொப்பையைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக, காலையில் உணவை தவிர்ப்பது, குறைவாக உணவு உட்கொள்வது என உடல் எடையை குறைக்க ஏதேதோ தவறான வழிமுறைகளைப் பின்பற்றி தோல்வியடைகின்றனர்.
திருமணம் வரை சரியான நேரத்துக்குச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு, குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை அதிகரித்துவிடுகின்றனர். கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், தொப்பையைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக, காலையில் உணவை தவிர்ப்பது, குறைவாக உணவு உட்கொள்வது என உடல் எடையை குறைக்க ஏதேதோ தவறான வழிமுறைகளைப் பின்பற்றி தோல்வியடைகின்றனர். கர்ப்ப காலத்தில், உடல் தசைகள் தளர்வடைந்து விடுகின்றன. கர்ப்பப்பையும் வயிறும் விரிவடைவதால், வயிற்றில் உள்ள தசைகள் பிரியும். இதனால், பெண்களின் உடல் அமைப்பு மாறுபடும். சரியான ‘டயட்’ உடன், சில உடற்பயிற்சிகளைச் செய்தாலே போதும், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறலாம். 1. ஆப்ளிக்ஸ் வித் டம்பெல்ஸ் (Obliques with Dumbbells)தாய்மைக்குப் பிறகு ‘6 உடற்பயிற்சிகள்'
தரையில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். காலை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி 45 டிகிரியில் பின்புறமாகச் சாய வேண்டும். கைகளால் டம்பெல்லைப் பிடித்து, மார்புக்கு நேராக வைக்க வேண்டும். இப்போது, டம்பெல்லுடன் கைகள் மற்றும் மேல் உடலை இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும். இதனை 15 முறை என 2 செட்டாக செய்யலாம்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிய தசையான ஆப்ளிக்ஸை வலுவாக்கும்.
2. சுவிஸ் பால் அப்ஸ் (Swiss ball abs)
சுவிஸ் பந்து மீது கால்களை அகட்டி உட்கார வேண்டும். முதுகெலும்பு முழுவதும் பந்தில் இருக்கும்படி சாய்ந்துகொள்ள வேண்டும். கைகளை மடக்கி, தலைக்குப் பின்பக்கத்தில் வைக்க வேண்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்து, வெளியேவிட்டபடி, தலையை உயர்த்தி முன் வர வேண்டும். மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். பயிற்சியின்போது கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இதை, 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: மேல் வயிறு, அடி வயிறு, முதுகுப் பகுதி வலுப்பெறும்.
3. சுவிஸ் பால் வித் லெக் ரெய்ஸ் (Swiss ball with leg raise)
தரையில் மல்லாந்து படுத்து, கைகளை இடுப்புக்குப் பின் வைத்து, அழுத்திக்கொள்ள வேண்டும். கால்களை நன்கு அகட்டி, சுவிஸ் பந்தை கால்களுக்கு இடையில் வைக்க வேண்டும். இப்போது, கால்களை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இது போல் 15 முறை 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றின் மையத்தில் உள்ள ரெக்டஸ் அப்டாமினிஸ் (Rectus abdominis) தசையை வலிமையாக்கும். தொப்பையைக் குறைத்து, நல்ல உடல் அமைப்பைத் தரும்.
4. அப்பர் கிரென்ச்சஸ் (Upper crunches)
தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டிய நிலையில் இருக்கட்டும். இப்போது கால்களை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து மேலே உயர்த்தி கால்களைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர், வந்த நிலையிலேயே பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். இதுபோல், 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்யலாம்.
பலன்கள்: மேல் வயிற்றுக்கு நல்ல பயிற்சி. கொழுப்பைக் கரைத்து, பிட்டான தோற்றத்தைத் தரும்.
5. சைடு பிளாங்க் (Side plank)
பக்கவாட்டில் படுத்து, இடது கையால் உடலைத் தாங்க வேண்டும். வலது கையை இடுப்பின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, இடுப்பை உயர்த்தி ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், வலது புறத்துக்கும் செய்ய வேண்டும். இதை 5 முதல் 10 முறை செய்யலாம்.
பலன்கள்: இது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், முழு உடலுக்குமான பயிற்சி இது.
6. மெடிசின் பால் வித் க்ரன்ச்சஸ் (Medicine ball with crunches)
நேராகப் படுத்து, மெடிசின் பந்தை மூட்டின் அடியில் வைத்து, 45 டிகிரியில் எழுந்து, பந்தை மூட்டு பகுதிக்கு மேல் கொண்டு வரவேண்டும். இரு கைகளால் பிடித்தபடி பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 12 முதல் 15 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றில் உள்ள தசைகள் உறுதியாகும்.
தரையில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். காலை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி 45 டிகிரியில் பின்புறமாகச் சாய வேண்டும். கைகளால் டம்பெல்லைப் பிடித்து, மார்புக்கு நேராக வைக்க வேண்டும். இப்போது, டம்பெல்லுடன் கைகள் மற்றும் மேல் உடலை இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும். இதனை 15 முறை என 2 செட்டாக செய்யலாம்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிய தசையான ஆப்ளிக்ஸை வலுவாக்கும்.
2. சுவிஸ் பால் அப்ஸ் (Swiss ball abs)
சுவிஸ் பந்து மீது கால்களை அகட்டி உட்கார வேண்டும். முதுகெலும்பு முழுவதும் பந்தில் இருக்கும்படி சாய்ந்துகொள்ள வேண்டும். கைகளை மடக்கி, தலைக்குப் பின்பக்கத்தில் வைக்க வேண்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்து, வெளியேவிட்டபடி, தலையை உயர்த்தி முன் வர வேண்டும். மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். பயிற்சியின்போது கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இதை, 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: மேல் வயிறு, அடி வயிறு, முதுகுப் பகுதி வலுப்பெறும்.
3. சுவிஸ் பால் வித் லெக் ரெய்ஸ் (Swiss ball with leg raise)
தரையில் மல்லாந்து படுத்து, கைகளை இடுப்புக்குப் பின் வைத்து, அழுத்திக்கொள்ள வேண்டும். கால்களை நன்கு அகட்டி, சுவிஸ் பந்தை கால்களுக்கு இடையில் வைக்க வேண்டும். இப்போது, கால்களை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இது போல் 15 முறை 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றின் மையத்தில் உள்ள ரெக்டஸ் அப்டாமினிஸ் (Rectus abdominis) தசையை வலிமையாக்கும். தொப்பையைக் குறைத்து, நல்ல உடல் அமைப்பைத் தரும்.
4. அப்பர் கிரென்ச்சஸ் (Upper crunches)
தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டிய நிலையில் இருக்கட்டும். இப்போது கால்களை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து மேலே உயர்த்தி கால்களைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர், வந்த நிலையிலேயே பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். இதுபோல், 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்யலாம்.
பலன்கள்: மேல் வயிற்றுக்கு நல்ல பயிற்சி. கொழுப்பைக் கரைத்து, பிட்டான தோற்றத்தைத் தரும்.
5. சைடு பிளாங்க் (Side plank)
பக்கவாட்டில் படுத்து, இடது கையால் உடலைத் தாங்க வேண்டும். வலது கையை இடுப்பின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, இடுப்பை உயர்த்தி ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், வலது புறத்துக்கும் செய்ய வேண்டும். இதை 5 முதல் 10 முறை செய்யலாம்.
பலன்கள்: இது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், முழு உடலுக்குமான பயிற்சி இது.
6. மெடிசின் பால் வித் க்ரன்ச்சஸ் (Medicine ball with crunches)
நேராகப் படுத்து, மெடிசின் பந்தை மூட்டின் அடியில் வைத்து, 45 டிகிரியில் எழுந்து, பந்தை மூட்டு பகுதிக்கு மேல் கொண்டு வரவேண்டும். இரு கைகளால் பிடித்தபடி பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 12 முதல் 15 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றில் உள்ள தசைகள் உறுதியாகும்.
குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவை தாண்டியும் குழந்தை பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.
கருவுறாமை என்றால் என்ன?
கருவுறாமை என்றால் பெண்களால் இயற்கையாக கருவுற முடியாததை குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு கால கட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம். இந்த கருவுறாமை பிரச்சினை ஆண் மற்றும் பெண் என்று இரு பாலருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகி்ன்றன.
இந்த கருவுறாமைக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.
ஏன் ஏற்படுகிறது?
அண்ட விடுப்பின் போது ஏற்படும் சிக்கல். கர்ப்பப்பை குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள், கர்ப்பப்பை வாயில் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவும் காரணம் ஆகும். இப்படிப்பட்டவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
அதிக வயதானாலும் பெண்களுக்கு கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது. ஆகவே குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
இது தவிர ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக அவர்களின் உடல் எடையை சரியான நிலையில் வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சால சிறந்தது. இதையெல்லாம் விட கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்கு தேவையான சுரப்பிகள் ரத்தத்தில் கலந்திருக்காது. அதுவும் கருவுறாமையை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சினை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் சுதா கூறினார்.
கருவுறாமை என்றால் என்ன?
கருவுறாமை என்றால் பெண்களால் இயற்கையாக கருவுற முடியாததை குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு கால கட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம். இந்த கருவுறாமை பிரச்சினை ஆண் மற்றும் பெண் என்று இரு பாலருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகி்ன்றன.
இந்த கருவுறாமைக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.
ஏன் ஏற்படுகிறது?
அண்ட விடுப்பின் போது ஏற்படும் சிக்கல். கர்ப்பப்பை குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள், கர்ப்பப்பை வாயில் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவும் காரணம் ஆகும். இப்படிப்பட்டவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
அதிக வயதானாலும் பெண்களுக்கு கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது. ஆகவே குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
இது தவிர ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக அவர்களின் உடல் எடையை சரியான நிலையில் வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சால சிறந்தது. இதையெல்லாம் விட கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்கு தேவையான சுரப்பிகள் ரத்தத்தில் கலந்திருக்காது. அதுவும் கருவுறாமையை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சினை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் சுதா கூறினார்.
பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள், உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
முதல் குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் பிரசத்துக்கு முந்தைய உடல் வலிமையை மீண்டும் பெற ஆரோக்கியமானஉணவு மட்டுமே போதாது. தளர்வடைந்த வயிற்று தசைகள், கருப்பை மற்றும் உடல் உறுப்புகளை மீண்டும் நன்றாக செயல்படுவதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மசாஜ் செய்வதும் அவசியம்.
பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
மசாஜ் என்பது எண்ணெய்யை உடலில் தேய்த்து விடுவது மட்டுமல்ல. அதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டே மசாஜ் செய்ய வேண்டும். அதன் மூலமே முழுமையான பலன்களை பெற முடியும். பிரசவித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற சில மசாஜ் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஸ்வீடிஷ் மசாஜ்
கிளாசிக் மசாஜ் என்றும் இந்த முறை குறிப்பிடப்படுகிறது. உடலின் முக்கிய நரம்புகளை மென்மையாக தேய்த்து விடுவது பிசைவது குலுக்குவது, தட்டுவது என பல முறைகளில் இந்த மசாஜ் செய்யப்படுகிறது. பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யப்படும் இந்த மசாஜ் மூலம், எளிதாக புத்துணர்ச்சியும், அமைதியும் பெற முடியும்.
ஜமு மசாஜ்
இந்தோனேசியாவில் பரவலாக இங்வகை மசாஜ் அளிக்கப்படுகிறது.நமது நாட்டிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. மருத்துவ ரீதியாக பல நன்மைகள் அடங்கியுள்ள இந்த மசாஜ் செய்வதற்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வேர்கள், மரப்பட்டைகள் பூக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தளர்ந்த வயிற்று தசைகள் இறுக்கமடைவதற்கு உதவியாக இருப்பதுடன் பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தொப்பை பிரச்சனைக்கும் இந்த மசாஜ் நல்ல தீர்வாக அமையும்.
கால் ரிஃப்ளெக்சாலஜி
கால்களில் உள்ள தசைகளை வலுவாக்க இந்த மசாஜ் உதவியாக இருக்கிறது. கால்களில் அமைந்துள்ள அக்குபிரஷர் புள்ளிகள் இந்த முறையில் தூண்டிவிடப்படுவதால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும். மகப்பேறு முடிந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு, உடல் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இந்த மசாஜ் நல்ல பலன் அளிக்கும்.
மூலிகை குளியல்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமானது மூலிகை குளியல், பிரசவத்திற்கு முன்னரும், பின்னரும் தாய்மார்களுக்கு மூலிகை குளியல் அளிக்கப்படுவது நல்லது. மருததுவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை நீரில் ஊற வைத்து அதில் குளிக்க செய்து மசாஜ் அளிக்கப்படும். அதனால் நரம்புகள் வலுவடைந்து உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
அக்குபிரஷர்
உடலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட புள்ளிகளை தேர்வு செய்து அங்கே விரல்கள் மூலம் மென்மையாக அழுத்தம் கொடுத்து நரம்புகளை தூண்டச்செய்யும் முறை இதுவாகும். உடல் வலியை அகற்றவும், அசவுகரியங்களை நீக்கவும் அக்குபிரஷர் முறை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. பல நன்மைகளை கொண்ட இம்முறையை பின்பற்றும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றிருக்கும் நிலையில் தையல் போடப்பட்ட காயம் ஆறும் வரை இம்முறையை மேற்கொள்ளக்கூடாது.
பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
மசாஜ் என்பது எண்ணெய்யை உடலில் தேய்த்து விடுவது மட்டுமல்ல. அதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டே மசாஜ் செய்ய வேண்டும். அதன் மூலமே முழுமையான பலன்களை பெற முடியும். பிரசவித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற சில மசாஜ் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஸ்வீடிஷ் மசாஜ்
கிளாசிக் மசாஜ் என்றும் இந்த முறை குறிப்பிடப்படுகிறது. உடலின் முக்கிய நரம்புகளை மென்மையாக தேய்த்து விடுவது பிசைவது குலுக்குவது, தட்டுவது என பல முறைகளில் இந்த மசாஜ் செய்யப்படுகிறது. பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யப்படும் இந்த மசாஜ் மூலம், எளிதாக புத்துணர்ச்சியும், அமைதியும் பெற முடியும்.
ஜமு மசாஜ்
இந்தோனேசியாவில் பரவலாக இங்வகை மசாஜ் அளிக்கப்படுகிறது.நமது நாட்டிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. மருத்துவ ரீதியாக பல நன்மைகள் அடங்கியுள்ள இந்த மசாஜ் செய்வதற்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வேர்கள், மரப்பட்டைகள் பூக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தளர்ந்த வயிற்று தசைகள் இறுக்கமடைவதற்கு உதவியாக இருப்பதுடன் பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தொப்பை பிரச்சனைக்கும் இந்த மசாஜ் நல்ல தீர்வாக அமையும்.
கால் ரிஃப்ளெக்சாலஜி
கால்களில் உள்ள தசைகளை வலுவாக்க இந்த மசாஜ் உதவியாக இருக்கிறது. கால்களில் அமைந்துள்ள அக்குபிரஷர் புள்ளிகள் இந்த முறையில் தூண்டிவிடப்படுவதால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும். மகப்பேறு முடிந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு, உடல் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இந்த மசாஜ் நல்ல பலன் அளிக்கும்.
மூலிகை குளியல்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமானது மூலிகை குளியல், பிரசவத்திற்கு முன்னரும், பின்னரும் தாய்மார்களுக்கு மூலிகை குளியல் அளிக்கப்படுவது நல்லது. மருததுவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை நீரில் ஊற வைத்து அதில் குளிக்க செய்து மசாஜ் அளிக்கப்படும். அதனால் நரம்புகள் வலுவடைந்து உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
அக்குபிரஷர்
உடலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட புள்ளிகளை தேர்வு செய்து அங்கே விரல்கள் மூலம் மென்மையாக அழுத்தம் கொடுத்து நரம்புகளை தூண்டச்செய்யும் முறை இதுவாகும். உடல் வலியை அகற்றவும், அசவுகரியங்களை நீக்கவும் அக்குபிரஷர் முறை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. பல நன்மைகளை கொண்ட இம்முறையை பின்பற்றும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றிருக்கும் நிலையில் தையல் போடப்பட்ட காயம் ஆறும் வரை இம்முறையை மேற்கொள்ளக்கூடாது.
முதல் ஆறு மாதங்களும் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற பல வகை வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
இந்த உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கென ஓடி ஓடி உழைத்து தரமான கல்வியும் சொத்தும் சேர்த்து வைப்பதே முதற்கடமையாக கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பெற்றொர்கள் தர வேண்டிய, குறிப்பாக ஒரு தாய் தரவேண்டிய முக்கியமான சொத்து என்ன தெரியுமா? ‘தாய்ப்பால்’ தான். குழந்தைப் பிறந்த ஒரு மணி நேரத்தில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருவது மிக மிக அவசியம். முதல் ஆறு மாதங்களும் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற பல வகை வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
இயற்கையிலேயே குழந்தைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்ப்பால் நன்றாகவே சுரக்கும்.ஒரு சில பெண்களுக்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய்ப்பால் தர இயலாமல் போகலாம்.மற்றபடி, தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும் சுரக்க வைப்பதறக்கும் பல வழிமுறைகள் உள்ளன.பால் கொடுக்கும் தாய் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.பருப்பு, பால், நெய், கீரை வகைகள், முட்டை, பழவகைகள், கொட்டைகள் போன்றவை தினமும் உணவில் இருக்க வேண்டும்.நன்றாகத் தண்ணீர் குடிக்கவேண்டும்.
குழந்தை வாய் வைத்து பால் உறிய உறியதான் தாயின் நரம்பு மண்டலத்திற்கு சிக்னல் சென்று நன்றாக பால் சுரக்கும்.அந்த சிக்னல்களை சரியாக அறிவதற்குத் தான் தாய்ப்பால் ஊட்டும்பொழுது பெண்கள் மற்றெந்த சிந்தனையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவியல் கூறுகிறது.நம் முன்னோர்களும் இதனால் தான் பால் கொடுக்கும் பொழுது தாயும் சேயும் தனிமையாக ஒரு அறையில் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
சில பல காரணங்களால் புட்டிப்பாலுக்கு மாறிவிட்டால், அக்குழந்தை மீண்டும் தாய்ப்பாலை ஏற்றுக்கொள்வது மிக மிக கடினமாகிறது.எனவே குழந்தைப்பெற்ற ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே தருவேன் என்று உறுதி கொள்ளவேண்டும். பால் கொடுப்பதிலும் குடிப்பதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பிரத்யேகமாக இதற்கென்றிருக்கும் “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” அதாவது “தாய்ப்பால் ஆலோசகர்” களை அணுகி தீர்வுக் காணலாம்.
தாய்க்கு மார்பகக் காம்பு சரியாக இல்லாதிருத்தல் (அ) சிறியதாக இருத்தல், உள்நோக்கி இருத்தல், பால் கொடுக்கும் பொழுது குழந்தையை சரியான முறையில் வைத்துக்கொள்ளாமை என இவற்றில் எதுவாய் இருந்தாலும் பால் சரியாக சுரக்காது, பால் பத்தாமல் குழந்தை அழுதுக் கொண்டிருக்கும். இந்த சவால்களுக்கு, “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” சரியான தீர்வை கற்றுத்தருவார்கள்.இன்று பல மருத்துவமனைகளில் முக்கியமாக தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
தாய்ப்பால் சுரப்பதில் “முன்பால்” “பின்பால்” என இருவிதமாக சுரக்கிறது. பால் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து முதல் ஐந்து நிமிடங்களுக்கு “முன்பால்” வரும்.இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும்.இதனால்தான் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தனியாக தண்ணீர் தர தேவையில்லை.இதன் பின்னர் வரும் “பின்பால்” புரதம், கொழுப்பு, கலோரிச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவேதான் ஒரு பக்கம் முழுமையாக குடித்து முடித்தபின்பு மறுபக்கம் பால் புகட்டவேண்டும், அல்லது ஒருமுறை ஒரு மார்பகத்தில் பால் கொடுத்தால் அடுத்தமுறை தரும்பொழுது அடுத்தப்பக்கம் தர வேண்டும். இவ்வாறு செய்வதனால் குழந்தைக்கு நீர் மற்றும் புரதச் சத்து முழுமையாக கிடைத்து நன்கு வளர உதவும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பசி நீங்கி நன்கு தூங்க ஆரம்பிக்கும்.ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஏழு முறை சிறுநீர் கழிக்கும்.மூன்று அல்லது நான்கு முறை மலம் கழிக்கும்.தினம் 15--20 கிராம் எடை ஏறும்.சில தாய்மார்கள் குழந்தை பச்சையாக மலம் கழிக்கிறது என்று கவலை கொள்வார்கள்.அவ்வாறு கவலைகொள்ள தேவை இல்லை.குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு அதன் குடலில் உற்பத்தியாகும் பித்த நீர் சரியாக உணவுடன் கலக்காமல் மலத்துடன் வெளியேறுவதால் மலம் பச்சையாக இருக்கும்.குழந்தை வளர வளர அது சரியாகிவிடும்.மேலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாளில் அதிகமாக மலம் கழித்தலோ அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை மலம் கழித்தாலோ நார்மல் தான், அதற்கும் கவலைத் தேவை இல்லை.
இயற்கையிலேயே குழந்தைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்ப்பால் நன்றாகவே சுரக்கும்.ஒரு சில பெண்களுக்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய்ப்பால் தர இயலாமல் போகலாம்.மற்றபடி, தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும் சுரக்க வைப்பதறக்கும் பல வழிமுறைகள் உள்ளன.பால் கொடுக்கும் தாய் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.பருப்பு, பால், நெய், கீரை வகைகள், முட்டை, பழவகைகள், கொட்டைகள் போன்றவை தினமும் உணவில் இருக்க வேண்டும்.நன்றாகத் தண்ணீர் குடிக்கவேண்டும்.
குழந்தை வாய் வைத்து பால் உறிய உறியதான் தாயின் நரம்பு மண்டலத்திற்கு சிக்னல் சென்று நன்றாக பால் சுரக்கும்.அந்த சிக்னல்களை சரியாக அறிவதற்குத் தான் தாய்ப்பால் ஊட்டும்பொழுது பெண்கள் மற்றெந்த சிந்தனையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவியல் கூறுகிறது.நம் முன்னோர்களும் இதனால் தான் பால் கொடுக்கும் பொழுது தாயும் சேயும் தனிமையாக ஒரு அறையில் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
சில பல காரணங்களால் புட்டிப்பாலுக்கு மாறிவிட்டால், அக்குழந்தை மீண்டும் தாய்ப்பாலை ஏற்றுக்கொள்வது மிக மிக கடினமாகிறது.எனவே குழந்தைப்பெற்ற ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே தருவேன் என்று உறுதி கொள்ளவேண்டும். பால் கொடுப்பதிலும் குடிப்பதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பிரத்யேகமாக இதற்கென்றிருக்கும் “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” அதாவது “தாய்ப்பால் ஆலோசகர்” களை அணுகி தீர்வுக் காணலாம்.
தாய்க்கு மார்பகக் காம்பு சரியாக இல்லாதிருத்தல் (அ) சிறியதாக இருத்தல், உள்நோக்கி இருத்தல், பால் கொடுக்கும் பொழுது குழந்தையை சரியான முறையில் வைத்துக்கொள்ளாமை என இவற்றில் எதுவாய் இருந்தாலும் பால் சரியாக சுரக்காது, பால் பத்தாமல் குழந்தை அழுதுக் கொண்டிருக்கும். இந்த சவால்களுக்கு, “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” சரியான தீர்வை கற்றுத்தருவார்கள்.இன்று பல மருத்துவமனைகளில் முக்கியமாக தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
தாய்ப்பால் சுரப்பதில் “முன்பால்” “பின்பால்” என இருவிதமாக சுரக்கிறது. பால் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து முதல் ஐந்து நிமிடங்களுக்கு “முன்பால்” வரும்.இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும்.இதனால்தான் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தனியாக தண்ணீர் தர தேவையில்லை.இதன் பின்னர் வரும் “பின்பால்” புரதம், கொழுப்பு, கலோரிச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவேதான் ஒரு பக்கம் முழுமையாக குடித்து முடித்தபின்பு மறுபக்கம் பால் புகட்டவேண்டும், அல்லது ஒருமுறை ஒரு மார்பகத்தில் பால் கொடுத்தால் அடுத்தமுறை தரும்பொழுது அடுத்தப்பக்கம் தர வேண்டும். இவ்வாறு செய்வதனால் குழந்தைக்கு நீர் மற்றும் புரதச் சத்து முழுமையாக கிடைத்து நன்கு வளர உதவும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பசி நீங்கி நன்கு தூங்க ஆரம்பிக்கும்.ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஏழு முறை சிறுநீர் கழிக்கும்.மூன்று அல்லது நான்கு முறை மலம் கழிக்கும்.தினம் 15--20 கிராம் எடை ஏறும்.சில தாய்மார்கள் குழந்தை பச்சையாக மலம் கழிக்கிறது என்று கவலை கொள்வார்கள்.அவ்வாறு கவலைகொள்ள தேவை இல்லை.குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு அதன் குடலில் உற்பத்தியாகும் பித்த நீர் சரியாக உணவுடன் கலக்காமல் மலத்துடன் வெளியேறுவதால் மலம் பச்சையாக இருக்கும்.குழந்தை வளர வளர அது சரியாகிவிடும்.மேலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாளில் அதிகமாக மலம் கழித்தலோ அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை மலம் கழித்தாலோ நார்மல் தான், அதற்கும் கவலைத் தேவை இல்லை.






