search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்களுக்கும் ஒரு குழந்தை... அதற்கு செய்ய வேண்டியவை
    X
    உங்களுக்கும் ஒரு குழந்தை... அதற்கு செய்ய வேண்டியவை

    உங்களுக்கும் ஒரு குழந்தை... அதற்கு செய்ய வேண்டியவை

    நவீன சிகிச்சை முறைகளால் தற்போது 20 முதல் 30 வயது என்றால் 70 சதவீத வெற்றி வாய்ப்பும், 30 முதல் 40 வயது என்றால் 60 சதவீதம் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.
    பெண்கள் பூப்பெய்தும் காலம் முதல் தொடரும் சமச்சீரற்ற கால இடைவெளிகளில் ஏற்படும் மாத விடாய், கரு முட்டை உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்கள், கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகள், சினை குழாய் அடைப்பு, கரு முட்டையில் உருவாகும் பி.சி.ஓ. குறைபாடுகள், பரம்பரையின் காரணமாக மகப்பேரின்மை, கரு முட்டையில் சாக்லெட் சிட்ஸ் எனப்படும் நீர்க்கட்டிகள், கர்ப்பப் பை கட்டிகள் என பல பிரச்சினைகளால் குழந்தையின்மை ஏற்படலாம்.

    இதற்கு உரிய முறையில் பரிசோதனை செய்து அதற்குரிய தீர்வை அளிக்கிறோம். ஆண்களைப் பொறுத்தவரையில் விந்துக்களின் எண்ணிக்கை, வீரியம் மற்றும் அடர்த்தியில் குறைபாடு, அதன் நீந்தும் திறனில் இருக்கும் கோளாறுகள், விந்து உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், உடல் பருமன், வாழிட மற்றும் பணியிடச் சூழல், நீரிழிவு, ரத்த அழுத்தம் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களுக்கு செய்யும் பரிசோதனையில் இவைகள் தெரிய வந்ததும் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகளால் குணப்படுத்த முயல்கிறோம். அது முழுமையான பலன்களை தராத தருணத்தில்தான் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி பரிந்துரை செய்கிறோம்.

    திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்றாலோ, ஐ.யூ. ஐ. என்ற சிகிச்சையை 6 முறை எடுத்து தோல்வி கண்டவர்களுக்கோ, விந்தணு எண்ணிக்கையில் முன்னேற்றம் கிட்டாதவர்களுக்கோதான் இவ்வித சிகிச்சை பொருந்தும்.

    அதே போல் பெண்களிடத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு கருமுட்டை வெடிப்பதில் பிரச்சினை இருந்தாலோ, சினைக் குழாயில் அடைப்பு இருந்தாலோ, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், மீண்டும்,மீண்டும் கருக்குழாயில் கட்டிகள் தோன்றினாலோ இவ்வித சிகிச்சையில்தான் பலன் பெற இயலும். எங்களின் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் டியூப் பேபியை வெற்றி கரமாக உருவாக்கி தம்பதியர்களின் சந்தோஷத்தில் பங்கெடுத்திருக்கிறோம். ஹார்மோன் ஊசி மூலம் கரு முட்டையை உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாளில் அதை ஸ்கேன் மூலம் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கணவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை சுத்திகரித்து சேமித்து வைத்திருப்பதை இணைப்போம்.

    இதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுவும், கரு முட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்குகிறோம். ஒரு சிலருக்கு ஆரோக்கியமான விந்தணுவின் நீந்தும் திறன் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் போது, அதனை கரு முட்டையில் நேராக ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறோம். கடந்த 29 ஆண்டுகளுக் கும் மேலாக பல்லாயிரக்கணக் கான பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்து அவர்களுக்கு தாலாட்டு பாடும் பாக்கியத்தை அளித்திருக்கிறோம். இது பழனியில் மட்டுமல்லாது கோவை, மதுரை, சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரத்திலும் தொடர்கிறது.

    நவீன சிகிச்சை முறைகளால் தற்போது 20 முதல் 30 வயது என்றால் 70 சதவீத வெற்றி வாய்ப்பும், 30 முதல் 40 வயது என்றால் 60 சதவீதம் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறோம். குழந்தையின்மைக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய தீர்வையும் முன் வைக்கிறோம். தம்பதிகளின் உச்சபட்ச சந்தோஷம் குழந்தைகள் தான். கரு பதியமிடுவதில் வெற்றியை உறுதி செய்ய இன்று ஏராளமான நவீன மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதனால் பலன்களும், வெற்றி வாய்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆரோக்கியமாகவும், குழந்தை பிறப்பையும் உறுதி செய்கின்றன. இதனால் தாலாட்டும் தாய் மடியை தருகிறோம்.

    மேலும் விவரங்களுக்கு: 88832 52111

    -டாக்டர் எஸ்.சந்திரலேகா, மகப்பேறு மருத்துவ நிபுணர்
    Next Story
    ×