என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    ஒல்லியானவர்களுக்கு இந்த பிரச்சனை வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.
    தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு ‘பிளான்டார் பேசியைட்டிஸ்’ என்று பெயர்.

    குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதை தடுக்க ‘பர்சா’ எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டால் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்கு குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம்.

    30 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.

    நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளை செய்யாமல் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

    கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்கு குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப்பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப்பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் இதற்கு உதவும்.

    இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்த காலணிகள் பாதத்துக்கு சமமான அழுத்தத்தை தருவதில்லை. இவற்றை காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும். இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்கும் குதிகால் வலி வரும்.
    உங்கள் உடல்நலன் குறித்து நெருக்கமானவர்களிடம் பகிருங்கள். எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசவுகரியம் நேர்ந்தால் தொய்வின்றி சிகிச்சையை தொடர்வதற்கு அது உதவும்.
    20 வயதில் :

    * சரும பாரமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கும் வயது இது.
    * அழகு சாதன பொருட்கள் உடலுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * உடலில் சன்ஸ்கிரீன் பூசுவது அவசியமானது. அது சரும அழகை காப்பதோடு தோல் புற்றுநோயில் இருந்து தற்காத்துகொள்ளவும் உதவும்.

    30 வயதில் :

    * எலும்பு ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டிய வயது இது.
    * கால்சியம் அதிக அளவு உட்கொள்வதும், உடற்பயிற்சி மீது கவனம் செலுத்துவதும் அவசியமானது.
    * 30 வயது வரைக்கும் தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பிறகு வலுவை இழக்க தொடங்கி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * எலும்புகளை போலவே மூளை செல்களில் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

    40 வயதில் :

    உணவுபழக்கம்

    * சர்க்கரையை தவிர்க்க தொடங்க வேண்டியகாலகட்டம் இது.
    * காபி, ஜூஸ், பலகாரங்களில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்து கொள்ளுங்கள்.
    * ஆரஞ்சு ஜூஸில் அறவே சர்க்கரையை தவிர்த்து விடுங்கள்.
    * மூன்று வேளை உணவிலும் கூடுமானவரை பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்.
    * உடல் எடையை குறைப்பதற்கு பட்டினியாக இருக்க வேண்டியதில்லை.

    உடற்பயிற்சி

    * 40 வயதில் வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியமானது.
    * உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    * நடைப்பயிற்சி, ஜூம்பா, ஜாக்கிங் இவற்றுள் ஏதாவதொரு பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

    50 வயதில் :

    * உடலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற தொடங்கும் காலகட்டம் இது. நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது.
    * உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
    * 30, 40 வயதுகளில் பின்பற்றிய நல்ல பழக்கவழக்கங்கள் தான் உங்களின் தகுதியை உயர்த்தும். அவற்றை அப்படியே தொடருங்கள்
    * உங்களுக்கு நீங்களே ஆலோசகராக மாறிவிடுங்கள். அதே வேளையில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் தொழில் ரீதியாக ஆலோசனையோ, உதவியோ கேட்பதற்கு தயங்காதீர்கள்.
    * இந்த வயதில் தனிமைக்கு இடம் கொடுக்காதீர்கள். நான் தனிமையில் இல்லை என்பதை உறுதிபடுத்திகொண்டே இருங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள்.

    60 வயதில் :

    * உங்கள் வாழ்க்கையின் அடுத்த 20 ஆண்டுகள் அமைய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்க தயாராகுங்கள்.
    * உங்கள் செயல்பாடுகள் மெதுவாக இருந்தாலும் அதில் சுறுசுறுப்புக்கு குறை இருக்கக்கூடாது. அத்தகைய வாழ்க்கை முறைக்கு திரும்புங்கள். அதுவே உடலையும், மனதையும் புத்துணர்வுடன் செயல் பட வைக்கும். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படியுங்கள்.

    70 வயதில் :

    * நீங்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய வயது இது.
    * இந்த வயதில் எலும்புகள் பலவீனமடைந்த நிலையில் இருக்கும். லேசாக ஏற்படும் காயம் கூட எலும்பு முறிவு பிரச்சனைக்கு வழிவகுத்து விடும். அதனால் நிதானமாக செயல் பட வேண்டும்.

    பொதுவான டிப்ஸ் :

    * வருடம் ஒருமுறையாவது உடல் பரிசோதனை மேற்கொள்வது சிறப்பானது.
    * உங்கள் உடல்நலன் குறித்து நெருக்கமானவர்களிடம் பகிருங்கள். எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசவுகரியம் நேர்ந்தால் தொய்வின்றி சிகிச்சையை தொடர்வதற்கு அது உதவும்.
    தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை உள்ள ஏழு நாள்கள் உலகத் தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
    எத்தனை மாதங்களுக்குத் தாய்ப்பால் புகட்டப்பட வேண்டும்?

    பிறந்த குழந்தைகளுக்குத் தரப்படும் முதல் தடுப்பு மருந்து, தாய்ப்பால். இதில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும், அதனுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அம்சங்களும் நிறைந்துள்ளன.

    ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும். தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும், தண்ணீர் கூட தேவையில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை வழங்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின்படி ஒரு குழந்தைக்குக் குறைந்தபட்சம் அதன் 2 வயது வரை அவசியம் தாய்ப்பால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம். சிலர் தங்கள் குழந்தைக்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவே தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிடுகிறார்கள். இவ்வாறு நிறுத்தப்படும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமாகக் காணப்படுவார்கள்.

    சிசேரியன் பிரசவம் எனில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா?

    இல்லை. பொதுவாக பிரசவமானவுடன் வெளிப்படும் தாய்ப்பாலுக்கு `கொலஸ்ட்ரம்' என்று பெயர். இது அடர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து முதல் 3 நாள்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் சுரக்கும். இது சிறிதளவு மட்டுமே சுரக்கக்கூடியது. ஆனால், அதை அறியாத பலர், தங்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கிறது என்று நினைத்துவிடுகிறார்கள். குழந்தை பால் குடிக்கத் தொடங்கியவுடனேயே அதன் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாய்க்கு பால் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தை பிறந்த அரை மணிநேரத்தில் அதற்கு முதல் பால் கொடுத்துவிடுவது நல்லது.

    எந்தெந்த உடல்நலக் குறைபாடு உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டக்கூடாது?

    ஹெச்.ஐ.வி இருக்கும் பெண், மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட நம் நாட்டில் அனுமதி உண்டு. ஒரு பெண் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, போதைப்பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தாலோ அவர் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சையில் இருப்பவர்களும் தாய்ப்பால் புகட்டக்கூடாது.

    கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்கலாமா?

    ஒரு பெண்ணுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், தொற்று ஏற்பட்டு குணமாகியிருந்தாலும் அவர் தாராளமாக தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். கொரோனா தொற்றுள்ள தாயின் உடலில் அந்த வைரஸுக்கு எதிராக உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் உடலில் சென்று சேர்வதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் தரும்போது கைகளைத் தூய்மையான நீரில் நன்றாகத் துடைத்துவிட்டு பால் தருவது, மாஸ்க் அணிந்திருப்பது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

    உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி பிறந்த குழந்தைக்கு அதன் 6 மாதம் வரையில் தாய்ப்பால் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். இந்நேரத்தில் பால் சுரப்பு இல்லை என்ற காரணத்தினாலோ, குழந்தையின் தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ உடனே பசும்பால், பால் பவுடர் போன்றவற்றை மாற்று உணவாகத் தருவதற்கு பதிலாக, `தாய்ப்பால்' வங்கியிலிருந்து பாலை தானமாக வாங்கி குழந்தைக்குத் தரலாம். அல்லது உறவினர்களில் யாராவது பாலூட்டும் தாய்மார்கள் இருந்தால் அவர்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்யலாம்.

    6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் உணவுகளைக் கடைகளில் வாங்கும்போது அது தயாரிக்கப்பட்ட தேதி, அவற்றில் அடங்கியிருக்கும் பொருள்கள், அரசின் அங்கீகாரம் போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்.

    குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.
    தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்ப்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    * தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.

    * குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.

    * ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுகிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரைகளாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.

    * பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.

    * ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.

    * பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது.

    ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக்களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும்.

    * குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

    * மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.

    * தாய்ப்பால் கொடுப்பது, கர்பபை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

    தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும்.
    பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தோள் பையை எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் தோள் பையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். தாங்கள் எடுத்து செல்லும் தோள் பை ஸ்டைலாகவும், அணிந்திருக்கும் ஆடைக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முன்பெல்லாம் ‘ஹேன்ட் பேக்’ பேஷனாக பார்க்கப்பட்டது. இன்றோ அது அத்தியாவசியமானதாக மாறிவிட்டது.

    இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் ஒன்று இருக்கிறது. பெண்கள் எவ்வளவு அழகான தோள்பையை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைவிட, அதன் உள்ளே என்னென்ன பொருட்களை வைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பது முக்கியம். என்னென்ன பொருட்கள் என்பது, அவர்கள் எந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை பொறுத்தது.

    பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய பேர் அது பற்றி சிந்திப்பதில்லை. தேவைக்கு அதிகமாக தோள் பையில் பொருட்களை திணித்து வைத்திருப்பார்கள். அதில் பாதி பொருட்களை பயன்படுத்தாமலேயே வீட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவார்கள்.

    பெண்கள் தங்கள் தேவைக்காக பொருட்களை வாங்கும்போது, தங்கள் தோள்பையில் வைக்கும் அளவுக்கு அவைகளில் சிறிய பொருட்களையும் தேர்ந்தெடுப்பார்கள். கண்ணாடி என்றால் சிறிய கண்ணாடி, சீப்பு என்றால் சிறிய சீப்பு.. இப்படி வகைவகையாக புதிய டிசைன்களில் வாங்குவார்கள். வெளியே புறப்படும்போது தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அவைகள் அத்தனையையும் தோள்பைக்குள் திணித்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது. வெளியே பயணங்களின்போதுதான் அது சுமையாக மாறுவதை உணருவார்கள்.

    கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் மடிக்கணினியும் அவசியம் எடுத்து செல்ல வேண்டியதிருக்கிறது. அதோடு தண்ணீர் பாட்டில், புத்தகம், நோட்டு, மதிய உணவு, செல்போன், அலங்கார அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. அதிகமான சுமை தோளை அழுத்தும். அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.

    பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும், எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும், தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உடல் சமநிலையை இழக்கும். கனமான கைப்பை வைத்திருப்பவர்கள் சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலி தோன்றும். என்ன காரணத்திற்காக வலி ஏற்படுகிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தேவையற்ற பல பரிசோதனைகளை செய்யவேண்டிய தாகிவிடும்.

    தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும். இப்போது நிறைய பாக்கெட்டுகளை கொண்ட சவுகரியமான தோள்பைகள் வந்துவிட்டன. அவைகளை வாங்கி, அது அதற்குரிய இடங்களில் பொருட்களைவைத்தால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் குவிவதையும் தவிர்த்துவிடலாம்.

    பெண்கள் கவனிக்க..

    தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை:

    * பெரிய பட்டை கொண்ட பைகளை தேர்ந்தெடுங்கள்.

    * கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். அப்போது தான் உடலை சமநிலைப்படுத்த முடியும்.

    * அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும், விரல்களும் மரத்துப் போய்விடக்கூடும். ரத்த ஓட்டம் தடைபடுவதால் அந்த பாதிப்பு தோன்றும். அந்த சமயத்தில் ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

    * எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. ‘லைட் வெயிட்’ பைகளை வாங்குங்கள்.
    கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும்.
    கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் 6 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட சிலருக்கு முதுகுவலி வரலாம். கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.

    கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும். எனவே, இந்த நிலைகளை கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.

    * பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.

    * உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்

    * தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.

    * பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.

    * முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.

    * முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.

    * கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
    வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் பெரும்பாலும் இயந்திரங்கள் போல் பணியாற்றிக்கொண்டிருப்பதால், நேரத்தை சரிவர கணிக்காமல் வெகுநேரம் சிறுநீர் கழிக்காமலே இருந்துவிடுகிறார்கள்.
    பெண்கள் பொதுவாக தாங்கள் செய்யும் வேலைகளில் அப்படியே மூழ்கிவிடுகிறார்கள். அப்படி மூழ்கிவிடும்போது தன்னையே மறந்துவிடுகிறார்கள். அப்போது உணவு பற்றியோ, இயற்கையான இதர விஷயங்களை பற்றியோ அவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

    பெண்களின் உடல் நிலை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் தெரியுமா?

    வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் பெரும்பாலும் இயந்திரங்கள் போல் பணியாற்றிக்கொண்டிருப்பதால், நேரத்தை சரிவர கணிக்காமல் வெகுநேரம் சிறுநீர் கழிக்காமலே இருந்துவிடுகிறார்கள். டாய்லெட் போவதற்கு விரும்பாத அவர்கள் அதனால் தண்ணீரும் பருகுவதில்லை. இந்த மாதிரியான பழக்கம் கொண்டவர்கள் சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீர் பையில் கற்கள் ஆகிய இரண்டு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    கவனிக்க வேண்டியவை: தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். சிறுநீரை அடக்கிவைக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிடவேண்டும்.

    சில பெண்கள் நேரத்துக்கு உணவு உட்கொள்வதி்ல்லை. காலையில் அவசர அவசரமாக உணவு தயாரித்துவிட்டு, அலுவலகத்திற்கு கிளம்பும் அவர்கள் முதலில் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள். காலை உணவை நேரத்துக்கு சாப்பிடும் சிலர், மதிய நேரங்களில் வேலையில் மூழ்கியபடி மதிய உணவுக்கு விடைகொடுத்துவிடுகிறார்கள். இப்படி உணவை தவிர்ப்பவர்கள் வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். அசிடிட்டி தொந்தரவு, இரைப்பையில் உள்ள உணவுத் துணுக்குகள் உணவுக் குழாய்க்கு மேல் எழுப்பி எரிச்சலையும்- குமட்டலையும் உருவாக்குதல், ஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். நேரத்திற்கு உணவு சாப்பிடாதவர்களில் சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு சரியில்லாமல் ஆகி, கழிப் பறையை நோக்கி செல்லவேண்டிய அவஸ்தையும் உருவாகும்.

    கவனிக்க வேண்டியவை: எவ்வளவு அவசரமும், பரபரப்பும் இருந்தாலும் காலை உணவை நேரத்துக்கு சாப்பிட்டுவிடுங்கள். நீங்கள் காலை உணவை தவிர்க்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் உடலை பலவீனமாக்கி, நோய்களுக்கு வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். காலை உணவுக்கும்- மதிய உணவுக்கும் இடையில் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். இடைவேளை நேரங்களில் பிஸ்கெட், பழம் போன்றவைகளை சாப்பிடுங்கள். நேரத்துக்கு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும், இளமைக்கும் அவசியமானது.

    கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவைகளை பயன்படுத்தி வேலைபார்க்கும் பெண்கள் தேவையான அளவு அவ்வப்போது ஓய்வெடுக்காவிட்டால் முதுகு வலி, கழுத்து வலி போன்றவைகளால் அவதிப்படுவார்கள். ஒரே நிலையில் இருந்தால் தசைகள் இறுக்கமாகிவிடும். அந்த இறுக்கம்தான் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான வலிகளுக்கு காரணம். கம்ப்யூட்டரில் மணிக் கணக்கில் வேலை பார்ப்பவர்களுக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பு, கை எலும்புகள், கண்களிலும் பாதிப்பு ஏற்படும். அத்தகைய பாதிப்புகள் அவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி, நோயாளிகளாக மாற்றிவிடும்.

    கவனிக்க வேண்டியவை: எப்போதும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி உட்காரவேண்டும். முதுகின் பின்பகுதி இருக்கையுடன் ஒட்டியநிலையில் அமையவேண்டும். கால் பாதங்கள் தரை அல்லது பலகையில் பதிந்திருக்கவேண்டும். கால்களை தொங்கப்போட்ட நிலையிலோ, கால்களை இருக்கையிலே மடக்கிவைத்த நிலையிலோ அமரக்கூடாது. தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலைபார்க்காமல் சிறிது நேரம் எழுந்து நிற்கவேண்டும். பின்பு சிறிது தூரம் நடக்கவேண்டும். இவ்வாறு செய்து உடலை நெகிழ்வாக்கிக்கொள்ளவேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தினை இடதும், வலதுமாக சற்று திருப்பி கழுத்தின் இறுக்கத்தை குறைத்தால், கழுத்து வலி தோன்றுவதை தவிர்க்க முடியும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.

    மனஅழுத்தம் பெண்களுக்கு இப்போது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வீட்டுப் பிரச்சினைகளும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகளும் சேர்ந்து அவர்களுக்கு மனஅழுத்தத்தை தருகிறது. இதனால் மற்றவர்கள் மீது கோபம், எரிச்சல் போன்றவை தோன்றும். குடும்ப உறவிலும் அது சிக்கலை உருவாக்கும். இந்த மனஅழுத்தத்தை சரிவர கையாண்டு, அதில் இருந்து மீளாவிட்டால் அது லைப் ஸ்டால் ேநாய்கள் உருவாக காரணமாகிவிடும். மன அழுத்தம் நீங்காவிட்டால் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை தோன்றிவிடும்.

    கவனிக்கவேண்டியவை: இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள ரிலாக்ஸ்சிங் டெக்னிக்கை கையாளவேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ளவேண்டும். அடிக்கடி மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விடவேண்டும். இதன் மூலம் மனதும், உடலும் இலகுவாகும். எப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தோன்றினாலும் அப்போதெல்லாம் ஆழமான சுவாசத்தை ஏற்படுத்துங்கள். தினமும் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குவதும் மிக அவசியம்.

    இரவுப் பணி, காலைப் பணி என்று அடிக்கடி மாறும் ஷிப்டுகள் பெண்களின் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும். அவர்கள் தூங்க முடியாமலும் தவிப்பார்கள். ஒற்றைத் தலைவலியும் அவர்களை அடிக்கடி தாக்கும். எப்போதும் சோர்வாகவே இருப்பதாகவும் உணர்வார்கள்.

    கவனிக்க வேண்டியவை: ஒரே மாதிரியான ஷிப்டை ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடியுங்கள். இரவில் வேலை என்றால் பகலில் நன்றாக தூங்கும் சூழ்நிலையை உருவாக்குங்கள். சரியான நேரத்திற்கு சமச்சீரான சத்துணவையும் உட்கொள்ளுங்கள்.
    இயற்கையாக கர்ப்பமடைந்த பெண்கள் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கவேண்டியதில்லை. உறவுகொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
    பெண்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது விஞ்ஞானரீதியாக நல்லது. உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

    கணவரின் புகைப்பழக்கம் பெண்களின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் அவருடைய உயிரணுக்களைப் பாதிப்பதால், அவருக்குக் குறைபாடான அணுக்கள் உருவாகி பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைப் பேற்றை உருவாக்கக்கூடும். பிறக்கும் குழந்தையும் எடை குறைவாகப் பிறக்க நேரிடும்.

    கர்ப்பிணிகள் கணவர் வெளியிடும் புகையை உள்ளிழுக்கும்போது அதில் உள்ள நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கர்ப்பிணிகளின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் அபாயம் உண்டு.

    பெண்கள் கருத்தரித்திருப்பதை அவர்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ, எரிச்சலோ இல்லாமல் வெள் ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றல், மார்பகங்கள் பெரியதாகவும், வலி மற்றும் உறுத்தலுடன் இருத்தல், மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகவும் தோன்றுவது போன்றவை அதன் அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றும்.

    இயற்கையாக கர்ப்பமடைந்த பெண்கள் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கவேண்டியதில்லை. உறவுகொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி சிசுவை பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம். இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

    இப்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவு கொண்டாலும், குறைந்தது ஆறு மாதம் வரையில் கருத்தரிக்காவிட்டால் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். அதன் பின்பும் கருத்தரிக்காவிட்டால் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும்.

    புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்குகிறது.

    பெண்ணின் கரு முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட வேண்டும். உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.
    இறுக்கமான பிராக்களை அணிவது ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, நிணநீர் திசுக்களையும் தாக்கும். இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
    பெண்கள் இறுக்கமான பிரா அணிவதனால் பல்வேறுவிதமான உடல்சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சரியான அளவுகொண்ட பிராவை தேர்வு செய்து அணிவது உடல் தோற்றத்துக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பொருத்தமாக அமையும். இறுக்கமான பிராக்களை அணிவது ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, நிணநீர் திசுக்களையும் தாக்கும். இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

    ஆக்சிஜன் பற்றாக்குறை: இறுக்கமான பிரா அணிவது ஆக்சிஜன் பற்றாக் குறைக்கும் வழிவகுக்கும். அதாவது மார்பக பகுதியில் போதுமான அளவு ஆக்சிஜன் உட்செல்ல முடியாமல் தடுக்கப்படும் நிலை உருவாகும். அடிப்பகுதியில் மெல்லிய கம்பிகள், இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிராக்களை அணியும்போது அவை இறுக்கமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகும். மார்பக பகுதியில் வடுக்கள் ஏற்படலாம். நுரையீரல் திசுக்கள் சேதமடையவும் கூடும். இவையும் புற்றுநோய் உருவாகுவதற்கான சூழலை அதிகப்படுத்திவிடும்.

    சரும சேதம்: மார்பக பகுதியில் சிவந்து போகுதல், கீறல் போன்ற தழும்புகள் தென்பட்டால் அணியும் பிரா மிகவும் இறுக்கமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். இறுக்கமான பிரா மார்பக சருமத்தை பலவிதங்களில் பாதிக்கிறது.

    நிணநீர் பாதிப்பு: இறுக்கமான பிராக்கள் மார்பகத்தின் ஆரோக் கியத்தை பெரிதும் பாதிக்கும். மார்பகங்களில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுதான் நிணநீரின் இயல்பான செயல்பாடாகும். ஆனால் இறுக்கமான பிராக்கள் நிணநீர் திரவங்களின் ஓட்டத்தை குறைப்பதோடு மார்பகங்களில் நச்சுக்களை உருவாக்கவும் செய்யும். இதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

    மார்பக அழுத்தம்: இறுக்கமான பிராவை அணிவது மார்பக பகுதியில் தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும். அது மார்பக திசு செல்களுக்கு சேதத்தை விளைவிக்கும். அதனால் பிரா தேர்வில் அலட்சியம் கொள்ளக்கூடாது. மார்பகத்திற்கு ஏற்றதாக சரியான அளவில் மட்டுமே அணியவேண்டும்.

    இறுக்கமான பிராவை நாள் முழுவதும் அணிவது உடலுக்கு அசவு கரியத்தை ஏற்படுத்தும். அன்றாட நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்பவர்கள் பொருத்தமான பிராவை தேர்ந்தெடுக்காவிட்டால் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு தொடர்ச்சியாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருக்கிறதா என்றும் பாருங்கள்.

    கழுத்து புண்: மிகவும் இறுக்கமான பிராவை அணிவது, தசைகளுக்கு கூடுதல் இறுக்கத்தை ஏற்படுத்துவதால், கழுத்து மற்றும் முதுகு வலி தோன்றக்கூடும். இறுக்கமான பிராக்கள் தோள்பட்டை வலியையும் உண்டாக்கும். அதனால் நெஞ்சை நிமிர்த்தி இயல்பாக நடக்க முடியாத சூழலும் ஏற்படலாம்.
    மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.
    மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும் மார்பகங்களில் வலி இருக்கும். மார்பகங்களில் வீக்கம், கனத்த உணர்வு, வலி போன்ற அந்த மாற்றங்களின் பின்னணி, தீர்வுகள், வாழ்க்கை முறை பற்றி பார்க்கலாம்.

    மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்(premenstrual syndrome) பிரச்னைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

    இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி
    விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

    எவை எல்லாம் சாதாரணமானவை?

    * வீக்கம்
    * மென்மையாதல்
    * வலி
    * எரிச்சல்

    மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?

    * கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.
    * கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட்  என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
    * மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
    * மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
    * உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

    எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

    * மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்.
    * மார்பகங்களிலிருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்.
    * உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால். தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்.
    * மாதவிலக்கு முடிந்தபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்.
    * மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்.
    * மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்.

    இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.
    வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்

    * மார்பகங்களில் வலியோ, வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும்.

    * மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் இ மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.

    சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

    * வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்
    * பசலைக்கீரை
    * ஆலிவ்
    * சோளம்
    * கேரட்
    * வாழைப்பழம்
    * பழுப்பரிசி
    மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா?
    சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார்மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது.

    இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!

    சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும்.

    தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது.

    பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.

    பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது.

    மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனப்படுகிறது.

    மார்பக பிரச்சினைகள்

    சிஸ்ட்கள் மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.

    பைரோடினோமா இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.

    காலக்டோரியா அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.  கைனகோமேஸ்டியா ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது. மஸ்டிடிஸ் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. மாஸ்டால்ஜியா மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது. மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி. மார்பக புற்றுநோய் பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.

     மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா?

    இதைப் பற்றி வெளியில் பேசவோ, சொல்லவோ தயங்கி எத்தனையோ பேர் தங்களுடைய உயிரையே பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    உங்கள் மார்பகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கினால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறியலாம்.உங்கள் உடலில் கொழுப்புச் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது என்பதை உணரலாம்.

    மாதவிடாய் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் மார்பக அளவுகளில் வேறுபாடு தெரியும். அவை உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது. இவற்றைத் தாண்டி மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் பெண்களின் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சருமத்தில் வறட்சி, உதடுகளில் வெடிப்பு போன்ற அறி குறிகள் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்றநிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும். உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தைராய்டு, நீரிழிவு பற்றிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    சில பெண்களுக்கு கன்னம், உதட்டின் மேல்பகுதி, தாடை மீது தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். அது உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லை என்பதை குறிக்கும். கருப்பைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹார்மோன் குறைபாட்டிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களின் அடிப்பகுதியில் உள்ள சதையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதும் உடல் நல பாதிப்பை குறிக்கும். கண்கள் சோர்வடைந்திருந்தாலும், வீங்கியிருந்தாலும் அது நாள்பட்ட ஒவ்வாமை பிரச் சினையாக இருக்கக்கூடும். சருமம் திடீரென்று வெளிறிய நிறத்திற்கு மாறி இருந்தால் அது ரத்த சோகைக்கான அறிகுறியாகும். சிலருக்கு கன்னம் மற்றும் உடல் பகுதியில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். அது குடல் அழற்சி நோய் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு நேரும்.

    சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் போல் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். அவை அதிக அளவில் இருந்தால் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். பெரும்பாலானவர் களுக்கு முடி உதிர்தல் கவலை தரும் பிரச்சினையாக இருக்கிறது. அத்துடன் கண் இமைகள், புருவங்களில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கினால் அவர் கள் உடனடியாக உடலை பரிசோதிக்க வேண்டும்.
    ×