என் மலர்
பெண்கள் மருத்துவம்
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும்.
மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகமாக தாக்கும் நோய் பட்டியலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இடம் பிடித்துள்ளது. வாழ்நாளில் 53 பேரில் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பப்பையில் உள்ள செல்கள் அபரிமிதமாக வளர ஆரம்பிப்பது புற்றுநோய்க்கு காரணமாகிவிடுகிறது.
இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.
இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.
இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
உங்கள் உணவு முறை, உணர்வு, அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள், உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
தாய்மை என்பது ஒரு குழந்தையை கருவில் சுமப்பது மட்டுமல்ல. இந்த கால கட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விட சொல்லி அறிவுறுத்துவார்கள். அவர்கள் சொல்வது வெறுமனே மூட நம்பிக்கை என எடுத்து கொள்ளாமல், அதன் பின் இருக்கும் காரண அறிவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பேறு காலத்தில் நாம் செய்கிற செயல்கள் அனைத்தும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
உங்கள் உணவு முறை, உணர்வு, அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள், உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
உங்களுக்கும் குழந்தைக்குமான இடையே இருக்கும் கோடு மிக மென்மையானது. அந்த குழந்தைக்கு வெளிப்புறத்தில் இருந்து கிடைக்க கூடியது தாயின் தொடர்ச்சியான ஸ்பரிசம். உங்கள் தொடுகையை குழந்தையால் மிக விரைவாக உணர முடியும். இந்த தொடுகை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக வைத்திருக்க உதவும். எனவே அவ்வப்போது கருவில் இருக்கும் குழந்தையை, வயிற்றின் மேலிருந்து கீழாக மிக மென்மையாக வருடிக்கொடுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பாடலை மட்டும் கேட்கும் மனநிலையை உடைத்து நல்ல இசையை கேட்க பழகி கொள்ளுங்கள். நல்ல இசை, மனதை இதமாக வைத்திருக்கும் இசை, உங்கள் அழுத்தத்தை உடைத்து உங்களை புத்துணர்வாக வைத்திருக்கும் இசை குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும். நல்லவற்றை பார்ப்பது, படிப்பது மற்றும் கேட்பது போன்றவை குழந்தைக்கான ஞானமாக அமையும். நாம் முக்கியமாக நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு விட்டமின் டி மிக அதிகளவில் தேவைப்படும். எனவெ மென்மையான சூரியஒளி படும் வகையில் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்தினால் அது குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
உங்கள் உணவு முறை, உணர்வு, அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள், உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
உங்களுக்கும் குழந்தைக்குமான இடையே இருக்கும் கோடு மிக மென்மையானது. அந்த குழந்தைக்கு வெளிப்புறத்தில் இருந்து கிடைக்க கூடியது தாயின் தொடர்ச்சியான ஸ்பரிசம். உங்கள் தொடுகையை குழந்தையால் மிக விரைவாக உணர முடியும். இந்த தொடுகை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக வைத்திருக்க உதவும். எனவே அவ்வப்போது கருவில் இருக்கும் குழந்தையை, வயிற்றின் மேலிருந்து கீழாக மிக மென்மையாக வருடிக்கொடுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பாடலை மட்டும் கேட்கும் மனநிலையை உடைத்து நல்ல இசையை கேட்க பழகி கொள்ளுங்கள். நல்ல இசை, மனதை இதமாக வைத்திருக்கும் இசை, உங்கள் அழுத்தத்தை உடைத்து உங்களை புத்துணர்வாக வைத்திருக்கும் இசை குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும். நல்லவற்றை பார்ப்பது, படிப்பது மற்றும் கேட்பது போன்றவை குழந்தைக்கான ஞானமாக அமையும். நாம் முக்கியமாக நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு விட்டமின் டி மிக அதிகளவில் தேவைப்படும். எனவெ மென்மையான சூரியஒளி படும் வகையில் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்தினால் அது குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
பி.சி.ஓ.டி. பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுபடுத்தி விட்டால் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம்.
சினைப்பை நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையின் இருபுறம் உள்ள சினைப்பையில் நிறைய கருமுட்டைகள் இருக்கும். இந்த சினைப்பையில் கருமுட்டைகள் மாதந்தோறும் முதிர்ச்சி அடையும். இந்த சினைப்பை கருமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் போகும் பொழுது சின்ன சின்ன நீர்க்கட்டிகள் உருவாகி பின்பு நாளடைவில் பெரிய நீர்க்கட்டிகளாக வளர்ச்சியடைகின்றன.
சினைப்பை நீர்க்கட்டி
இதனால் பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு வராமல் போவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நிலையில் உள்ள சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை ஆங்கில மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ். அல்லது பி.சி.ஓ.டி. என்று அழைக்கிறார்கள். இந்த பி.சி.ஓ.எஸ். நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்பவர்கள் 40% மேலும் கிட்டதட்ட 60% பேர் இந்த அறிகுறிகளை உணர்ந்தும் சிகிச்சை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுபடுத்தி விட்டால் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம்.இன்றைய சூழலில் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இந்த பி.சி.ஓ.எஸ். நோய் ஆட்டுவிக்கிறது.
மாதவிடாய் கோளாறுகள்
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி,
அதிகரித்த மாதவிடாய் ரத்தப்போக்கு அல்லது மிகவும் குறைவான மாதவிடாய் ரத்தப்போக்கு.
மாதவிடாய் ஏற்படாமல் நின்றுபோதல்.
சிலருக்கு மாதவிலக்கு தவறாமல் உண்டாகும் ஆனால் மாதந்தோறும் சினை உற்பத்தி நடக்காது. அதாவது அவர்களது சினைப்பைகளிலிருந்து மாதந்தோறும் முட்டை வெளிப்படாமல் இருக்கும்.முடி அதிகமாக உதிர்தல் அல்லது முகம், மார்பு, முதுகு, வயிறு போன்ற தேவையற்ற இடங்களில் பெண்களுக்கு முடிவளர்ச்சி காணல், சிலருக்கு முடியில்லாமல் வழுக்கை உண்டாகும்.
உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் எடை மிகவும் அதிகரித்து காணும், முகப்பருக்கள் உண்டாதல். கருச்சிதைவு உண்டாதல் - உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சினைப்பைகளிலிருந்து சினைமுட்டையானது வெளிப்படாததனால் இந்த நிலை ஏற்படுகிறது.
கழுத்து, மார்பு, தொடை, அக்குள் பகுதியில் கருமை நிறப்படைகள் உண்டாதல். தலைவலி, ஒற்றைத்தலைவலி உண்டாதல். உடல் பருமன் காரணமாக இரவில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உண்டாகும்.
60 சதவீத பெண்கள் பாதிப்பு
இன்றைய சூழ்நிலையில் பல பெண்களின் முக்கியமான மன அழுத்தத்திற்கு காரணம் சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவு ஆகும். இந்த சினைப்பை நீர்க்கட்டி முக்கியமாக இளம் வயதிலேயே (9-12 வயது) பூப்படையும் பெண்களுக்கு உண்டாகிறது. சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவினால் பெரும்பான்மையான பெண்கள் குழந்தையின்மை பிரச்சினைகளினால் அவதியுறுகின்றனர்.
60% பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இயற்கை முறையிலேயே சித்த மருத்துவம் மேற்கொண்டு நம் உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ளலாம். இதை கண்டறியவில்லையென்றால் பின்பு முற்றிய நிலையில் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் ஹார்மோன் அதிகரித்து சர்க்கரை நோய் உண்டாகும். மேலும் இதயகோளாறுகள் மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.
காரணங்கள்
இன்றைய சூழ்நிலையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது. வெளி உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதாலும், காரமான உணவுகளை உண்பதாலும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் உருவாகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
செய்யக்கூடாதவை
அதிகளவு கார்போஹைட்ரேட் சத்து உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். சர்க்கரை சார்ந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பானங்கள் மற்றும் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
செய்யவேண்டியவை
பெண்கள் உணவில் பப்பாளிபழம், அன்னாச்சிபழம், மாதுளம்பழம் போன்ற பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
விட்டமின் டி மற்றும் ஒமேகா - 3 பேட்டி ஆசிட் சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களான கேரட், மணத்தக்காளிக்கீரை, மீன், முட்டை, பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நார்ச்சத்து உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவது நல்லது.
தினமும் ஆரோக்கியமாக உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
உடல் எடையை பெண்கள் இயல்பான எடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாதம் இருமுறை பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
பெண்களின் ஆரோக்கியம் வருங்கால சந்ததினருக்கு மிகவும் முக்கியம். மேற்கண்ட எளிய மருத்துவத்தில் ஏதாவது 2 குறிப்புகளை தவறாமல் கடைப்பிடித்தாலே சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி, குழந்தையின்மை பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாகும்.
க.சக்தி சுப்பிரமணியன்
(சித்த மருத்துவர்)
செல்: 9042411002,
9042215986
சினைப்பை நீர்க்கட்டி
இதனால் பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு வராமல் போவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நிலையில் உள்ள சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை ஆங்கில மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ். அல்லது பி.சி.ஓ.டி. என்று அழைக்கிறார்கள். இந்த பி.சி.ஓ.எஸ். நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்பவர்கள் 40% மேலும் கிட்டதட்ட 60% பேர் இந்த அறிகுறிகளை உணர்ந்தும் சிகிச்சை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுபடுத்தி விட்டால் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம்.இன்றைய சூழலில் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இந்த பி.சி.ஓ.எஸ். நோய் ஆட்டுவிக்கிறது.
மாதவிடாய் கோளாறுகள்
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி,
அதிகரித்த மாதவிடாய் ரத்தப்போக்கு அல்லது மிகவும் குறைவான மாதவிடாய் ரத்தப்போக்கு.
மாதவிடாய் ஏற்படாமல் நின்றுபோதல்.
சிலருக்கு மாதவிலக்கு தவறாமல் உண்டாகும் ஆனால் மாதந்தோறும் சினை உற்பத்தி நடக்காது. அதாவது அவர்களது சினைப்பைகளிலிருந்து மாதந்தோறும் முட்டை வெளிப்படாமல் இருக்கும்.முடி அதிகமாக உதிர்தல் அல்லது முகம், மார்பு, முதுகு, வயிறு போன்ற தேவையற்ற இடங்களில் பெண்களுக்கு முடிவளர்ச்சி காணல், சிலருக்கு முடியில்லாமல் வழுக்கை உண்டாகும்.
உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் எடை மிகவும் அதிகரித்து காணும், முகப்பருக்கள் உண்டாதல். கருச்சிதைவு உண்டாதல் - உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சினைப்பைகளிலிருந்து சினைமுட்டையானது வெளிப்படாததனால் இந்த நிலை ஏற்படுகிறது.
கழுத்து, மார்பு, தொடை, அக்குள் பகுதியில் கருமை நிறப்படைகள் உண்டாதல். தலைவலி, ஒற்றைத்தலைவலி உண்டாதல். உடல் பருமன் காரணமாக இரவில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உண்டாகும்.
60 சதவீத பெண்கள் பாதிப்பு
இன்றைய சூழ்நிலையில் பல பெண்களின் முக்கியமான மன அழுத்தத்திற்கு காரணம் சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவு ஆகும். இந்த சினைப்பை நீர்க்கட்டி முக்கியமாக இளம் வயதிலேயே (9-12 வயது) பூப்படையும் பெண்களுக்கு உண்டாகிறது. சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவினால் பெரும்பான்மையான பெண்கள் குழந்தையின்மை பிரச்சினைகளினால் அவதியுறுகின்றனர்.
60% பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இயற்கை முறையிலேயே சித்த மருத்துவம் மேற்கொண்டு நம் உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ளலாம். இதை கண்டறியவில்லையென்றால் பின்பு முற்றிய நிலையில் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் ஹார்மோன் அதிகரித்து சர்க்கரை நோய் உண்டாகும். மேலும் இதயகோளாறுகள் மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.
காரணங்கள்
இன்றைய சூழ்நிலையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது. வெளி உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதாலும், காரமான உணவுகளை உண்பதாலும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் உருவாகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
செய்யக்கூடாதவை
அதிகளவு கார்போஹைட்ரேட் சத்து உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். சர்க்கரை சார்ந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பானங்கள் மற்றும் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
செய்யவேண்டியவை
பெண்கள் உணவில் பப்பாளிபழம், அன்னாச்சிபழம், மாதுளம்பழம் போன்ற பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
விட்டமின் டி மற்றும் ஒமேகா - 3 பேட்டி ஆசிட் சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களான கேரட், மணத்தக்காளிக்கீரை, மீன், முட்டை, பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நார்ச்சத்து உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவது நல்லது.
தினமும் ஆரோக்கியமாக உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
உடல் எடையை பெண்கள் இயல்பான எடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாதம் இருமுறை பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
பெண்களின் ஆரோக்கியம் வருங்கால சந்ததினருக்கு மிகவும் முக்கியம். மேற்கண்ட எளிய மருத்துவத்தில் ஏதாவது 2 குறிப்புகளை தவறாமல் கடைப்பிடித்தாலே சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி, குழந்தையின்மை பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாகும்.
க.சக்தி சுப்பிரமணியன்
(சித்த மருத்துவர்)
செல்: 9042411002,
9042215986
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
முதலில் பெண்கள் மார்பக சுய பரிசோதனையை அடிக்கடி செய்து வர வேண்டும். அப்படி செய்வதாலேயே மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். மாதந்தோறும் மாதவிடாய் நாட்கள் முடிந்த பிறகு பரிசோதனை செய்வது தான் சரியானது. ஒருசிலருக்கு மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு மார்பகங்களில் வலி ஏற்படலாம். அப்போது சுய பரிசோதனை செய்வது தவறு. கண்ணாடி முன்பு நின்று மார்பகங்களை பார்க்க வேண்டும். ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின்னர் புண், அரிப்பு, நிற மாற்றம் உள்ளதா என்று கவனியுங்கள். இடது கையால் வலது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும்.
அதேபோல வலது கையால் இடது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது ஏதாவது கட்டி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். சில சமயங்களில் சாதாரண கட்டிகள் கூட மார்பகங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குளிக்கும் போது தினமும் மார்பகங்களை தொட்டு மாற்றம் உள்ளதா என்பது கவனித்து வருவது மிகவும் சிறந்தது. மார்பகங்கள் பற்றி எப்படி மருத்துவரிடம் சந்தேகம் கேட்பது என்று தயக்கம் காட்டினால், பின்விளைவுகள் மோசமாக அமையலாம். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டுபிடித்தால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விட முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தல், குழந்தைக்கு தாய்ப்பால் வழங்காமல் தவிர்த்தல், குழந்தைப்பேறு தள்ளிப்போடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதோடு அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கூட புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.
40 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். ஆனால் இப்போது 25 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வயது முதலே ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருத்துவரை சந்தித்து மார்பகத்தில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் உடனே அறிவுரை பெறவேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எதற்காக இப்படி அழுத்தமாக பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறோம் என்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம். நோயின் தீவிரம் அதிகமாகிவிட்டால் குணப்படுத்துவது சிரமமாகிவிடும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோய் பாதிப்பை வைத்து அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி வழங்கப்படும். வலி இல்லாமல் மார்பகத்தில் கட்டி இருந்தால், அது புற்றுநோய் கட்டியாகவும் இருக்கலாம். அந்த சூழலில் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை அது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டால், சுலபமாக ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்திவிட முடியும்.
அதுவே கட்டியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வலி அதிகமாகும் போது சிகிச்சைக்கு வந்தால் அப்போது சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழப்பு ஏற்படலாம். மூன்றாம், நான்காம் கட்ட புற்றுநோய் என்றால் உயிருக்கு ஆபத்து தான். முதல் இரண்டு கட்டங்கள் பிரச்சனை இல்லை. மருத்துவரிடம் சென்று தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆரம்பத்தில் வீட்டில் பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். அதன்பிறகு கட்டி இருப்பது போல உணர்ந்தால் மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்ல வேண்டும்.
அதேபோல வலது கையால் இடது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது ஏதாவது கட்டி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். சில சமயங்களில் சாதாரண கட்டிகள் கூட மார்பகங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குளிக்கும் போது தினமும் மார்பகங்களை தொட்டு மாற்றம் உள்ளதா என்பது கவனித்து வருவது மிகவும் சிறந்தது. மார்பகங்கள் பற்றி எப்படி மருத்துவரிடம் சந்தேகம் கேட்பது என்று தயக்கம் காட்டினால், பின்விளைவுகள் மோசமாக அமையலாம். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டுபிடித்தால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விட முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தல், குழந்தைக்கு தாய்ப்பால் வழங்காமல் தவிர்த்தல், குழந்தைப்பேறு தள்ளிப்போடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதோடு அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கூட புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.
40 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். ஆனால் இப்போது 25 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வயது முதலே ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருத்துவரை சந்தித்து மார்பகத்தில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் உடனே அறிவுரை பெறவேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எதற்காக இப்படி அழுத்தமாக பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறோம் என்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம். நோயின் தீவிரம் அதிகமாகிவிட்டால் குணப்படுத்துவது சிரமமாகிவிடும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோய் பாதிப்பை வைத்து அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி வழங்கப்படும். வலி இல்லாமல் மார்பகத்தில் கட்டி இருந்தால், அது புற்றுநோய் கட்டியாகவும் இருக்கலாம். அந்த சூழலில் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை அது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டால், சுலபமாக ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்திவிட முடியும்.
அதுவே கட்டியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வலி அதிகமாகும் போது சிகிச்சைக்கு வந்தால் அப்போது சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழப்பு ஏற்படலாம். மூன்றாம், நான்காம் கட்ட புற்றுநோய் என்றால் உயிருக்கு ஆபத்து தான். முதல் இரண்டு கட்டங்கள் பிரச்சனை இல்லை. மருத்துவரிடம் சென்று தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆரம்பத்தில் வீட்டில் பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். அதன்பிறகு கட்டி இருப்பது போல உணர்ந்தால் மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்ல வேண்டும்.
நமக்கு ஏற்படும் ஒருசில நோய்கள் பாலினத்தை பொறுத்து தீவிரமாகவும், மிதமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றைத்தலைவலி
தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம்.
தூக்கமின்மையால் அவதிப்படுபர்களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிக சிந்தனை மற்றும் போதுமான இடைவெளியில் உணவு உண்ணாத காரணத்தாலும் இந்த தலைவலி உண்டாகும்.
உணவு ஒவ்வாமையால் கூட ஒற்றைத்தலைவலி ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து உட்கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.
டென்ஷன் தலைவலி
டென்ஷன் தலைவலி மனஅழுத்தம், சோர்வு காரணமாக ஏற்படுகிறது. 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த தலைவலி அதிகம் வருகிறது.
அதிக வேலை, மன உளைச்சல், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. தொடர்ந்து திரையை பார்ப்பது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சோர்வு, மது அருந்துவது, சைனஸ், சளித்தொல்லை போதுமான அளவு தண்ணீர் பருகாதது போன்ற காரணங்களாலும் டென்ஷன் தலைவலி ஏற்படுகிறது.
டென்ஷன் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு போதுமான அளவு ஓய்வுதான் அருமருந்து. டென்ஷன் தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
வலிப்பு நோய்
தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது வலிப்பு நோய். இது மூளையில் ஏற்படும் அளவுக்கு மீறிய மின்னிறக்கத்தால் அடிக்கடி ஏற்படும் தாக்கமாகும். தற்போது வலிப்பு நோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்வர்கள், மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்த பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு நோயின் காரணத்தை அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
பக்கவாதம்
மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. முன் அறிகுறிகள் எதுமின்றி திடீரென ஏற்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என குறிப்பிடுகிறார்கள். ரத்த ஓட்டத்தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு முக்கியக்காரணம் கொழுப்பு படிவுகள் தான். ரத்தச் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமே முக்கியக்காரணமாகும்.
மூளைக்கட்டி
மூளைக்கட்டி எந்த வயதிலும் யாருக்கும் வரலாம். இது ஏற்படுவதற்கான சரியான காரணத்தை மருத்துவர்களால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. தலை வலி, வலிப்பு, பார்வை குறைபாடு, வாந்தி, நடத்தை மற்றும் ஆளுமையில் ஏற்படும் திடீர் வித்தியாசங்கள், நடப்பதிலும், உடலை சமப்படுத்துவதிலும் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பேச்சில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மூளைக்கட்டியின் அறிகுறிகளாகும்.
தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம்.
தூக்கமின்மையால் அவதிப்படுபர்களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிக சிந்தனை மற்றும் போதுமான இடைவெளியில் உணவு உண்ணாத காரணத்தாலும் இந்த தலைவலி உண்டாகும்.
உணவு ஒவ்வாமையால் கூட ஒற்றைத்தலைவலி ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து உட்கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.
டென்ஷன் தலைவலி
டென்ஷன் தலைவலி மனஅழுத்தம், சோர்வு காரணமாக ஏற்படுகிறது. 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த தலைவலி அதிகம் வருகிறது.
அதிக வேலை, மன உளைச்சல், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. தொடர்ந்து திரையை பார்ப்பது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சோர்வு, மது அருந்துவது, சைனஸ், சளித்தொல்லை போதுமான அளவு தண்ணீர் பருகாதது போன்ற காரணங்களாலும் டென்ஷன் தலைவலி ஏற்படுகிறது.
டென்ஷன் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு போதுமான அளவு ஓய்வுதான் அருமருந்து. டென்ஷன் தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
வலிப்பு நோய்
தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது வலிப்பு நோய். இது மூளையில் ஏற்படும் அளவுக்கு மீறிய மின்னிறக்கத்தால் அடிக்கடி ஏற்படும் தாக்கமாகும். தற்போது வலிப்பு நோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்வர்கள், மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்த பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு நோயின் காரணத்தை அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
பக்கவாதம்
மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. முன் அறிகுறிகள் எதுமின்றி திடீரென ஏற்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என குறிப்பிடுகிறார்கள். ரத்த ஓட்டத்தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு முக்கியக்காரணம் கொழுப்பு படிவுகள் தான். ரத்தச் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமே முக்கியக்காரணமாகும்.
மூளைக்கட்டி
மூளைக்கட்டி எந்த வயதிலும் யாருக்கும் வரலாம். இது ஏற்படுவதற்கான சரியான காரணத்தை மருத்துவர்களால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. தலை வலி, வலிப்பு, பார்வை குறைபாடு, வாந்தி, நடத்தை மற்றும் ஆளுமையில் ஏற்படும் திடீர் வித்தியாசங்கள், நடப்பதிலும், உடலை சமப்படுத்துவதிலும் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பேச்சில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மூளைக்கட்டியின் அறிகுறிகளாகும்.
சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
கணவர் குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள், தங்களுடைய உணவில்… குறிப்பாக, காலை உணவில் ஏன் அத்தனை கவனமாக இருப்பதில்லை? ஆனால் காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம்.
பல இல்லத்தரசிகள் காலை உணவில் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள்.
அறிவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் காலை உணவில் வைட்டமின், மினரல்ஸ், கார்ப்போ ஹைட்ரேட்ஸ் கிடைக்கும். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்சை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு. அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்..
இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை சாப்பிடலாம்.
`நேரமாச்சு’ என அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
பல இல்லத்தரசிகள் காலை உணவில் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள்.
அறிவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் காலை உணவில் வைட்டமின், மினரல்ஸ், கார்ப்போ ஹைட்ரேட்ஸ் கிடைக்கும். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்சை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு. அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்..
இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை சாப்பிடலாம்.
`நேரமாச்சு’ என அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
மாதவிடாய் திடீரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம்.
மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு சீராக இருக்கும்போது உடல் இயக்கமும் சீராக இருக்கும். ஹார்மோன்கள் சமநிலை இன்றி காணப்படும்போது பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பங்களிப்பு முக்கியமானது. அதன் உற்பத்தி சீராக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தி இயல்பைவிட அதிகரிக்கும்போது பெண்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்பட தொடங்கும். பொதுவாக பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலங்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், அதிக மருந்துகள் சாப்பிடுவது போன்றவை ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். உடல் பருமன் அதிகரிப்பதும், குறிப்பாக இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதும் ஈஸ்ட்ரோஜன் அளவு கூடியிருப்பதற்கான அறிகுறியாகும்.
உடற்பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும் உடல் எடை குறையாமல் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஈஸ்ட்ரோஜனுக்கும் அதில் பங்கு இருக்கிறது.
மாதவிடாய் திடீரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம். நினைவாற்றலுக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்களின் உடல் நலனில் ஈஸ்ட்ரோஜனின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், அதன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தி இயல்பைவிட அதிகரிக்கும்போது பெண்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்பட தொடங்கும். பொதுவாக பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலங்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், அதிக மருந்துகள் சாப்பிடுவது போன்றவை ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். உடல் பருமன் அதிகரிப்பதும், குறிப்பாக இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதும் ஈஸ்ட்ரோஜன் அளவு கூடியிருப்பதற்கான அறிகுறியாகும்.
உடற்பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும் உடல் எடை குறையாமல் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஈஸ்ட்ரோஜனுக்கும் அதில் பங்கு இருக்கிறது.
மாதவிடாய் திடீரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம். நினைவாற்றலுக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்களின் உடல் நலனில் ஈஸ்ட்ரோஜனின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், அதன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும்.
குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.
தடுக்கும் வழி
புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.
இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.
ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனைகளையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.
தடுக்கும் வழி
புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.
இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.
ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனைகளையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் (ஞாபகமறதி) நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.
பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.
பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார்.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.
ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.
பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.
பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார்.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.
ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைந்தால் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, துணையின் ஆரோக்கியத்திலும், ஆயுளிலும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 4,400 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். உடல் ரீதியான செயல்பாடுகள், உடல் நலம், பாலினம், வயது, கல்வி, வருவாய், வாழ்க்கை திருப்தி உள்பட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆய்வு செய்ததில் 16 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள்.
வயது முதிர்வு, குறைந்த பொருளாதார நிலை, குறைந்த உடல் உழைப்பு, மோசமான உடல் ஆரோக்கியம் போன்றவை இறப்புக்கு காரணமாக இருந்திருக்கின்றன. உறவில் திருப்தி இல்லாத நிலை, வாழ்க்கையில் திருப்தியின்மை போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
இதன் மூலம் மகிழ்ச்சியான துணை இருந்தால் இறப்பும் தள்ளிப்போகும், ஆயுள் கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 4,400 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். உடல் ரீதியான செயல்பாடுகள், உடல் நலம், பாலினம், வயது, கல்வி, வருவாய், வாழ்க்கை திருப்தி உள்பட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆய்வு செய்ததில் 16 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள்.
வயது முதிர்வு, குறைந்த பொருளாதார நிலை, குறைந்த உடல் உழைப்பு, மோசமான உடல் ஆரோக்கியம் போன்றவை இறப்புக்கு காரணமாக இருந்திருக்கின்றன. உறவில் திருப்தி இல்லாத நிலை, வாழ்க்கையில் திருப்தியின்மை போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
இதன் மூலம் மகிழ்ச்சியான துணை இருந்தால் இறப்பும் தள்ளிப்போகும், ஆயுள் கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் மாதாந்திர அவஸ்தையான மாதவிடாய் வலியை போக்க ஏராளமான பாட்டி வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
பெண்களின் மாதாந்திர அவஸ்தை மாதவிடாய். சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்…
* முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம். இதனால் வயிற்றுவலி குறையும்.
* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும். சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.
* வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
* முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம். இதனால் வயிற்றுவலி குறையும்.
* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும். சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.
* வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது.
மது அருந்துகிறவர்களில் நிறைய பேருக்கு அது உடலுக்குள் எங்கெங்கு செல்கிறது, என்னென்ன செய்கிறது, எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் தெரியாது. அதை தெரிந்துகொண்டால் மது அருந்துவதை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, அதை தெரிந்துகொள்ளவும் பலர் விரும்புவதில்லை.
ஒருவர் அருந்தும் மது முதலில் இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்திடும் நிலையில், மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறு குடலுக்கு ரத்தம் ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஈரலுக்கு வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறும். அப்போது அதன் செயல்பாடு சீரில்லாமல் போகும். காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.
சிலர் விலை உயர்ந்த பிராண்ட் மதுவை அருந்துவதாக கூறி, தங்களை ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள். விலை உயர்ந்தது அனைத்தும் தரம் உயர்ந்தது என்றோ, ஆபத்து குறைந்தது என்றோ கருதிவிட முடியாது. எவ்வளவு விலை உயர்ந்த மதுவை குடித்தாலும் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும். மதுவில் நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. எல்லாம் ஒன்றுதான். மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் ஒட்டுமொத்தமாக அது உடலைக் கெடுக்கத்தான் செய்யும்.
மது ரத்தத்தில் கலக்கும்போது முதலில் உணர்வு நரம்புகளைத்தான் பாதிக்கும். அதனால் காலப்போக்கில் போதையை உணர முடியாத அளவுக்கு நரம்புகள் மரத்துப்போகும். அதனால்தான் பலரும் போதையின் தன்மை தெரியாமல் தடுமாறி, உளறிக்கொட்டுகிறார்கள். உடலின் உள்ளே செல்லும் மது, உடலில் பெரும்பகுதிகளை பாதிக்கும். மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாசத்தடை நோய்களும் அவர்களை தாக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றலும் குறைந்து கொண்டேபோகும். மது பாலியல் ஆர்வத்தை கட்டுப்படுத்திவிடும். இன்பத்தை உணரும் தன்மையும் குறைந்துபோகும். மது அருந்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நரம்பு மண்டல கட்டமைப்புகளும் சீர்குலையும். அப்போது இதயத்துடிப்பு அதிகமாகி, ரத்த அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும். சர்க்கரை நோய் இருந்தால் அதுவும் கூடிவிடும்.
மது அருந்துகிறவர்கள் விரைவாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவார்கள். காலப்போக்கில் மதுப்பழக்கம் அவர்களை மனநலக்கோளாறு கொண்டவர்களாகவும் ஆக்கிவிடும். ஏன்என்றால், மதுவின் போதையில் அவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாதவர்களாகிவிடுகிறார்கள். ஆல்கஹால் பொதுவாகவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தால் மனநலம் சீர்குலையும். மது அருந்துபவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுவார்கள். வேலையிலும் அவர்களால் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது.
மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்தும் ஆண்களின் ஈரல் பாதிக்கப்படுவதுபோன்று, மது அருந்தும் பெண்களின் ஈரலும் பாதிக்கப்படும். அதனால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் பெண்களிடம், ஆண் ஹார்மோன் அதிகம் சுரந்து, பெண் தன்மை குறையும். பெண்களின் உடலில் ஆண்தன்மை அதிகரிப்பது அவர்களது இனப்பெருக்கத்திறனை குறைத்துவிடும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக புறக்கணித்துவிட வேண்டும். ஏன்என்றால் தாய் அருந்தும் மதுவின் தாக்கம் குழந்தையின் இயல்பிலும், தோற்றத்திலும், செயல்பாட்டிலும், ஆரோக்கியத்திலும் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பமாக இருக்கும் பெண் மது அருந்துவது, அவளது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமாகிவிடும். மது அருந்துவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கமும் தாய்க்கு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ஒருவர் அருந்தும் மது முதலில் இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்திடும் நிலையில், மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறு குடலுக்கு ரத்தம் ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஈரலுக்கு வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறும். அப்போது அதன் செயல்பாடு சீரில்லாமல் போகும். காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.
சிலர் விலை உயர்ந்த பிராண்ட் மதுவை அருந்துவதாக கூறி, தங்களை ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள். விலை உயர்ந்தது அனைத்தும் தரம் உயர்ந்தது என்றோ, ஆபத்து குறைந்தது என்றோ கருதிவிட முடியாது. எவ்வளவு விலை உயர்ந்த மதுவை குடித்தாலும் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும். மதுவில் நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. எல்லாம் ஒன்றுதான். மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் ஒட்டுமொத்தமாக அது உடலைக் கெடுக்கத்தான் செய்யும்.
மது ரத்தத்தில் கலக்கும்போது முதலில் உணர்வு நரம்புகளைத்தான் பாதிக்கும். அதனால் காலப்போக்கில் போதையை உணர முடியாத அளவுக்கு நரம்புகள் மரத்துப்போகும். அதனால்தான் பலரும் போதையின் தன்மை தெரியாமல் தடுமாறி, உளறிக்கொட்டுகிறார்கள். உடலின் உள்ளே செல்லும் மது, உடலில் பெரும்பகுதிகளை பாதிக்கும். மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாசத்தடை நோய்களும் அவர்களை தாக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றலும் குறைந்து கொண்டேபோகும். மது பாலியல் ஆர்வத்தை கட்டுப்படுத்திவிடும். இன்பத்தை உணரும் தன்மையும் குறைந்துபோகும். மது அருந்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நரம்பு மண்டல கட்டமைப்புகளும் சீர்குலையும். அப்போது இதயத்துடிப்பு அதிகமாகி, ரத்த அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும். சர்க்கரை நோய் இருந்தால் அதுவும் கூடிவிடும்.
மது அருந்துகிறவர்கள் விரைவாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவார்கள். காலப்போக்கில் மதுப்பழக்கம் அவர்களை மனநலக்கோளாறு கொண்டவர்களாகவும் ஆக்கிவிடும். ஏன்என்றால், மதுவின் போதையில் அவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாதவர்களாகிவிடுகிறார்கள். ஆல்கஹால் பொதுவாகவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தால் மனநலம் சீர்குலையும். மது அருந்துபவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுவார்கள். வேலையிலும் அவர்களால் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது.
மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்தும் ஆண்களின் ஈரல் பாதிக்கப்படுவதுபோன்று, மது அருந்தும் பெண்களின் ஈரலும் பாதிக்கப்படும். அதனால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் பெண்களிடம், ஆண் ஹார்மோன் அதிகம் சுரந்து, பெண் தன்மை குறையும். பெண்களின் உடலில் ஆண்தன்மை அதிகரிப்பது அவர்களது இனப்பெருக்கத்திறனை குறைத்துவிடும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக புறக்கணித்துவிட வேண்டும். ஏன்என்றால் தாய் அருந்தும் மதுவின் தாக்கம் குழந்தையின் இயல்பிலும், தோற்றத்திலும், செயல்பாட்டிலும், ஆரோக்கியத்திலும் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பமாக இருக்கும் பெண் மது அருந்துவது, அவளது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமாகிவிடும். மது அருந்துவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கமும் தாய்க்கு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.






