என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
    • உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும்.

    இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் தான் கருப்பையை உறுதியாக, வலுவாக வைத்திருக்கும் ஆதாரங்கள். இவை பலவீனமடையும் போது கருப்பை கீழ்ச்சரிவு ஏற்பட்டு, கருப்பை மெதுவாக கீழே இறங்குகிறது அல்லது யோனியிலிருந்து வெளியே வருகிறது.


    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுகப்பிரசவத்தின் போது அதிக நேரம் கடந்த கடினமான பிரசவங்கள், பிரசவத்தின் போது குழந்தையின் அளவு பெரிதாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது, மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரென குறைவது, நாள்பட்ட மலச்சிக்கல், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, கடினமான பொருட்களை எப்போதும் தூக்குதல், பிரசவத்திற்கு பிறகு உடனே கடினமான வேலைகளை செய்வது இவைகளால் கருப்பை கீழிறங்குதல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால், இடுப்பில் கனம் அல்லது இழுத்தல் போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகாமல் இருப்பது போன்ற உணர்வு, சிறுநீர் கசிவு, மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கத்தில் பிரச்சனை, உட்கார்ந்து இருக்கும் போதும் நடக்கும் போதும் சிரமமாக இருப்பது மற்றும் யோனி ஆடையில் தேய்ப்பது போன்ற உணர்வு, இடுப்பு அல்லது கீழ் முதுகில் அழுத்தம் அல்லது அசவுகரியம், பிறப்புறுப்பு திசு தளர்வாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் தாம்பத்தியம் சார்ந்த கவலைகள் ஏற்படும்.


    கருப்பை கீழிறங்குதல் அபாயத்தைக் குறைக்க மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முழு தானிய உணவுகளை உண்ண வேண்டும்.


    அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும். நாள்பட்ட இருமல் அல்லது மூச்சுக்குழாய் அழற்சிக்கு உடனே சிகிச்சை பெற வேண்டும். உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும். இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதற்கான கெகல் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    • முதல் முறையாக கருவுற்றவர்களுக்கு பிரசவம் குறித்து அதிக பயம் இருக்கும்.
    • கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

    முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

    அதே சமயம் பிரசவ வலிக்கும், பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி கர்ப்பிணிப் பெண்கள் அறிந்து கொள்வது அவசியமானது.


    பொதுவாக பிரசவ வலி என்பது மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் கவலையும் இருக்கும். பெண்ணின் கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இந்த வலி உணர்வு தொடங்கும். முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் நிகழ்வுகளும் நடக்கும்.

    பல பெண்கள் தங்களது இறுதி மூன்று மாதங்களில் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டதாக நினைத்து அடிக்கடி மருத்துவமனை செல்கிறார்கள். இது பொய் வலி அல்லது சூட்டு வலி என்பதை அறிந்த பிறகு வீடு திரும்புகிறார்கள்.

    பொய் வலி விட்டு விட்டு இருக்காது. தொடர்ந்து இருக்கும். உட்கார்ந்தால், நின்றால், படுத்தால் என நிலை மாறும் போது வலி குறையும். இடைவிடாத வலி இருந்தாலே அது பெரும்பாலும் பொய் வலி தான்.


    பிரசவ வலிகள் கீழ் முதுகில் தொடங்கி பின் அடிவயிற்றில் பரவி சில சமயங்களில் கால்கள் வரை பரவும். சில சமயங்களில் வயிற்றில் வலியை உண்டாக்கும். சிலநேரங்களில் வயிற்றுப்போக்குடன் இருக்கலாம்.

    கர்ப்பப்பை வாய் விரிவடைதல் மற்றும் வெளியேற்றத்தின் ஆரம்பமாக இருக்கலாம். குழந்தையின் தலை இடுப்புக்குள் இறங்கி இருக்கலாம். கர்ப்பிணியின் இடுப்பு மற்றும் மலக்குடல் மீது அதிக அழுத்தத்தின் உணர்வு இருக்கும்.

    • பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும்.
    • மாதவிடாய் சுழற்சியில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மகளிரின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இரண்டுமே இன்றியமையாதது. மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும். இது பாலிகுலர் பிரீயட் என்று அழைக்கப்படுகிறது.


    இந்த காலகட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் கருமுட்டை விடுவிப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இனப்பெருக்க காலங்களில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. இதுதவிர சிறுநீரகங்களின் மேல் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் அடிபோஸ் திசுக்கள் (உடல் கொழுப்பு) ஈஸ்ட்ரோஜனை சுரக்கின்றன. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியும் ஈஸ்ட்ரோஜனை சுரக்கிறது.


    ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகள்

    ஈஸ்ட்ரோஜன் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் உட்பட உடலில் எல்லா இடங்களிலும் ஈஸ்ட்ரோஜன் செயல்படுகிறது.

    மனநிலையை மாற்றும் செரோடோனின் ரசாயனத்தையும் மூளையில் உள்ள செரோடோனின் ஏற்பிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

    மூளையில் 'நல்ல உணர்வு' ரசாயனங்களான எண்டோர்பின்களின் உற்பத்தி மற்றும் விளைவுகளை மாற்றியமைக்கிறது. நரம்புகளை சேதங்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நரம்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.


    சினைப்பைகள் கருமுட்டையை வெளியிடும் போது, கர்ப்பத்திற்கு தயார்படுத்த கருப்பையின் எண்டோமெட்ரியம் புறணியை அடர்த்தியாக்குகிறது. கருமுட்டை வெளிவரும் நாட்களில் ஈஸ்ட்ரோஜன் உச்சத்தை அடைகிறது. இது மிகவும் வளமான காலம். கர்ப்பப்பை சளிச்சுரப்பை அதிகரித்து கருவுறுதல் நிகழ, விந்தணு நீந்த உதவுகிறது.

    பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும். மார்பகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டாம் நிலை பாலின பண்புகளுக்கு வழிவகுக்கிறது. சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெற புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனுடன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    இந்த ஹார்மோன்கள் மாதவிடாயை சீராக வைத்திருக்க ஒரு நுட்பமான சமநிலையில் இணைந்து செயல்படுகின்றன. தாம்பத்தியத்திற்கு வசதியாக யோனி சுவர்களை மென்மையாகவும், மீள்தன்மையுடனும், உயவூட்டுவதாகவும் வைத்து, வலியைக் குறைக்கிறது.


    மெனோபாஸ் காலம்

    பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் அளவுகுறையும். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன்பே ஆரம்பிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது அதிகாரப்பூர்வமாக மெனோபாஸ் தொடங்குகிறது. இது பொதுவாக 51 வயதில் நடக்கும்.

    இந்த வயது நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் நின்றவுடன், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்து, யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தலைவலி, சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.


    ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலை ஏற்படுத்தும் உணவுகள்:

    ஆளி விதைகள் மற்றும் அலிசி விதைகள் (பிளாக் சீட்), சோயா பீன் இவைகளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், ஐசோபிளேவன் போன்றவை ஈஸ்ட்ரோஜன் சமநிலைக்கு உதவும்.

    பாலுக்கு மாற்றாக சோயா பால் குடிக்கலாம். உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள் விதைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், கோதுமை ஆகியவை நல்லது.

    மன அழுத்தத்தை நீக்க இறை பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான நேரம் இரவில் தூங்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழைக்காலங்களில் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
    • துணிகளில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகின்றன.

    மழைக்காலங்களில் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அப்படியான ஒன்று தான், துவைத்த துணிகளை உலர்த்துவதும், ஈரப்பதத்தால் துணிகளில் இருந்து வரும் துர்நாற்றமும்.


    சுற்றுச்சூழலில் அதிக ஈரப்பதம் இருப்பதால் துவைத்த துணிகள் உலராமல் ஈரப்பதத்துடனே இருக்கும். இதனால், துணிகளில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகின்றன. இதைத் தவிர்க்க உதவும் சில எளிய வழிகள் இதோ...

    துணிகளை காய வைப்பது எப்படி?

    முதலில், மழைக்காலத்தில் அதிக எடையுள்ள துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போது, எந்த நேரத்தில் எந்த துணியை துவைக்க வேண்டும் என பிரித்துக்கொள்ள வேண்டும்.

    துணிகளை உலர்த்தும் முன் அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். வெளியிடங்கள் செல்வதற்கு தேவைப்படும் துணிகளை மட்டுமே துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது.


    வீட்டிற்குள் கயிறு கட்டி காயவைப்பதை விட துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகளில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்தலாம்.

    மழைக்காலங்களில் வீட்டிற்குள் துணிகளை காய வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், வீட்டில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஏர் பியூரிபையர் பேக் பயன்படுத்தலாம்.


    மாறாக, ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை ஒரு துணியில் கட்டி வைப்பதால் அறையில் இருக்கும் ஈரப்பதத்தை கல் உப்பு உறிஞ்சு விடுகிறது.

    தொடர் மழையின் போது, இந்த தந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஹேர் ட்ரையர் அல்லது டிஹைமிடிஃபையர் மூலம் துணிகளை உலர வைக்கலாம். 

    • IVF சிகிச்சை முறை.
    • IUI சிகிச்சை முறை.

    குழந்தையின்மைக்கு என்ன காரணம்?

    ஆணுக்கும், பெண்ணுக்கும் 30 வயதை கடந்தவுடன் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் கருமுட்டை குறைந்துவருவதாலோ அல்லது உயிரணுக்கள் செயல்பாடு குறைவாக இருப்பதனால் இருக்கலாம்.


    குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் செய்ய வேண்டியவை?

    மேலும் ஒரு பெண்ணுக்கு அவருடைய இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை நன்றாக இருக்கிறதா அல்லது கட்டிகள், சதை வளர்ச்சி ஏதும் இருக்கிறதா, பெலோப்பியன் குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    அடுத்து மிக முக்கியமான விஷயம் கருமுட்டையில் ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை அல்ட்ரா சவுண்ட் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் பரிசோதனை செய்யப்படும்.

    IUI சிகிச்சை

    ஆண்களுக்கு விந்தணுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, அவர்களுடைய விந்தணுக்களை எடுத்து அதில் தரமான உயிரணுக்களை பிரித்து எடுத்து அதனை ஒரு பெண்ணின் கருப்பையில் சேர்ப்பது தான் IUI சிகிச்சை முறை.

    இதை யார் யாருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றால் 30-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் தம்பதியினருக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும். இதற்கு ஒரு பெண்ணின் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும், ஆணின் உயிரணுக்களின் தரமும் நன்றாக இருக்க வேண்டும்.

    மேலும் முக்கியமாக பெண்ணுக்கு கருப்பை டியூப்களில் அடைப்பு எதுவும் இருக்கக்கூடாது. அதன்பிறகு கருப்பையில் உள்ள எண்டோமெண்ட்ரியம் அது தான் கரு பதியும் இடம் எனவே அது உறுதியாக இருக்க வேண்டும்.

    இந்த சிகிச்சை முறையை 30-ல் இருந்து 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தது 4 முறை மட்டுமே அளிக்கப்படுகிறது.

    40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த சிகிச்சை பலன் அளிக்குமா என்றால், சற்று சிரமம் தான். 40-ல் இருந்து 45 வயதிற்குள்ளாக ஒரு பெண்ணின் கருமுட்டையின் வளர்ச்சி குறையத் தொடங்குவதால் இந்த சிகிச்சை பலன் அளிக்காது.


    IVF சிகிச்சை என்றால் என்ன?

    இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் அல்லது கர்ப்பம் நிற்காத பெண்களுக்கு, IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த செயல்முறை பாதுகாப்பானதாகவும் வெற்றிகரமாகவும் கருதப்படுகிறது. இதனாலேயே இந்த சிகிச்சை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.

    இதற்கு முதலில், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கரு எந்த தரத்தில் உள்ளது என்று பார்க்கப்படுகிறது. இரண்டாவது மிக முக்கியமான விஷயம் பெண்ணின் வயது. இந்த இரண்டு விஷயங்களும் சரியானதாக இருந்தால், IVF -ன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த IVF சிகிச்சைக்கு முன், பெண்ணின் கருப்பையின் திறன் மற்றும் ஆணின் விந்தணுவின் தரம் ஆகியவை ஆராயப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு IVF சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    IVF சிகிச்சையில் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமன விஷயம் என்னவென்றால் இதில் 2 பகுதி உள்ளது. முதல் பகுதியில் பெண்ணிடம் இருந்து கருமுட்டை எடுப்பது, தரமான கருமுட்டைகளை எடுத்து ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை வளர வைப்பது எல்லாமே லேப்பில் நடக்கும், இரண்டாம் பகுதி எம்ரியோ டிரான்பர் அதாவது உருவான கருவிலேயே நல்ல தரமான கருவை எடுத்து கருப்பையில் சேர்ப்பது. இது தான் IVF சிகிச்சை முறை ஆகும்.

    • உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
    • மனஅழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.

    பெண்கள் பொதுவாக மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி, மன அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    மாதவிடாய் காலத்தில் ஒருசில பெண்களுக்கு வலி இருக்காது. ஆனால் சில பெண்களுக்கு, தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். அவர்கள் அதிக வயிற்றுவலி, ரத்தப்போக்கு காரணமாக மிகவும் பலவீனமாக உணர்வார்கள். இது போன்ற நேரத்தில், பெண்கள் நடைபயிற்சி செய்யலாமா?

    மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது, மேம்பட்ட சுழற்சி, மனநிலை மேம்பாடு, மனஅழுத்த குறைவு, எடை கட்டுப்பாடு, ஒட்டுமொத்த நலவாழ்வு உள்ளிட்ட பல நன்மைகளை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் நாட்களில் நடை பயிற்சி தவிர சில உடற்பயிற்சிகளும் செய்யலாம் என்று மகளிர்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கவனமாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.


    மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்

    மேம்படுத்தப்பட்ட ரத்தஓட்டம்

    மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது, உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். அதன் மூலம் மாதவிடாய் பிடிப்பு கட்டுப் படுத்தப்படும்.

    இதுதவிர, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது. ரத்தப்போக்கை திறம்பட நீக்குகிறது, உடலில் வலி, வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.

    மனநிலை மேம்படும்

    மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் எண்டோர்பின்களை வெளியிடுகின்றன. அக இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்த இது உதவுகிறது.

    பொதுவாக மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாறுபாடு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க, இந்த நாட்களில் நடைபயிற்சி செய்வது நல்லது.


    மனஅழுத்தத்தை குறைக்கும்

    மாதவிடாய் நாட்களில் பூங்கா, வயல்வெளி போன்ற இயற்கையான இடங்களில் அல்லது வீட்டுக்குள் ளேயே நடைபயிற்சி செய்யலாம். இது மனஅழுத் தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது. ஏனெனில், மாதவிடாய் நாட்களில் சாதாரணமாகவே மன அழுத்தம் அதிகரிக்கும். எடை கட்டுப்பாடு

    சீரான உடற்பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வழக்கமான நடைபயிற்சி, எடைக் கட்டுப்பாட்டுக்கு பெரிதும் உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாம். சில மாதவிடாய் கால அசவுகரியங்களைத் தணிக்க வும் இது உதவுகிறது.


    நலவாழ்வை மேம்படுத்தும்

    மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். இப்படி ஒட்டுமொத்த உடல் நலத்தையும் மேம்படுத் தும்.

    சரி, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதால் பாதிப்பே இல்லையா? அது குறித்தும் பார்க்கலாம்...

    ரத்தப்போக்கு Surveillance மாதவிடாய் நாட்களில் நடைபயிற்ச உள்ளிட்ட உடற்பயிற்சி செய்யும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கலாம். இது தற்காலிக அதிகரிப்பு தான். ஆரோக்கியத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.


    தசைச்சோர்வு

    மாதவிடாய் நாட்களில் தீவிரமான அல்லது நீடித்த நடைபயிற்சி, தசைச்சோர்வை ஏற்படுத்தும். குறிப்பாக கால்களில் அதிகப்படியான உடல் உழைப்பு, சோர்வு. பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

    சுகாதாரம்

    மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது தமது சுகாதாரத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

    • ஒரு வருடத்தில் 21 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் வருகிறது.
    • புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகமானால் புற்றுநோய் ஆபத்து.

    புற்றுநோய் என்பது இப்போது பரவலாகவே அதிகரித்து வருகிறது. புற்றுநோயை பொருத்தவரை என்றைக்குமே வருமுன் காப்பது என்பது தான் நல்லது. வந்த பிறகு தீர்ப்பது என்பது கவலை தரக்கூடிய விஷயமாகி விடும்.

    புற்றுநோயை வருமுன் காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. புற்றுநோய் என்ன காரணத்தினால் வரும் என்பது தெரிந்தால் தான் நாம் அதை தவிர்க்க முடியும்.


    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பவாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசி வந்து விட்டது. அதேபோல் இன்னும் சிலவகையான புற்றுநோயை தடுப்பதற்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால் பெண்களை அதிகமாக பாதிக்கின்ற ஒரு புற்றுநோய் மார்பக புற்றுநோய் தான்.

    இந்த மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகளை அறிய இன்று பலரும் இதை ஒரு ஆய்வாக எடுத்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

    உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்கின்ற புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் படி ஒரு வருட காலத்தில் 21 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் புற்றுநோயால் இறப்பது தான் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்.

    நமது நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் புதிய புற்றுநோயாளிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் 60 சதவீதம் பேருக்கு கடைசி நேரத்தில் தான் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.

    இந்த மார்பக புற்றுநோயின் முக்கியமான விஷயமே ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அதை முழுமையாக சரிப்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதும் நல்ல முறையில் வாழவும் முடியும்.


    மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்களை சொல்லி இருக்கிறார்கள். அந்த காரணங்களை தெரிந்து கொள்ளும் நிலையில் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகளை கடைபிடிக்க முடியும்.

    மரபுவழியாக:

    முக்கியமாக உங்கள் குடும்பங்களில் அம்மா, பாட்டி, சித்தி, அத்தை உள்ளிட்ட நெருங்கிய ரத்த சொந்தங்கள் யாருக்காவது ஏதாவது ஒரு வகை புற்றுநோய் வந்திருந்தாலோ அல்லது மார்பக புற்றுநோயோ, கர்ப்பவாய் புற்றுநோயோ வந்திருந்தால் கண்டிப்பாக அது உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    எனவே மரபு ரீதியாக மார்பக புற்றுநோய் மரபணு 1 (ப்ராக்கா 1), மார்பக புற்றுநோய் மரபணு 2 (ப்ராக்கா 2) இருக்கிறவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    எனவே உங்கள் குடும்பங்களில் யாருக்காவது புற்றுநோய் வந்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு மரபுவழி பரிசோதனை செய்து புற்றுநோய் மரபணு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அது பாசிட்டிவா அல்லது நெகட்டிவா என்று பார்த்தால் உங்களுடைய ஆபத்து காரணிகள் தெரியும்.

    குடும்ப மரபுவழி, ஹார்மோன் சார்ந்திருத்தல், உடல் ரீதியான வாழ்க்கை முறை காரணிகள் ஆகிய மூன்றும் தான் புற்றுநோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள் ஆகும்.


    ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும் பெண்கள்:

    பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பது தான். மார்பகத்தில் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஏற்பிகள் ஆகியவை இருக்கிறது.

    ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகும் போது இந்த ஏற்பிகளின் செயல்பாடுகள் அதிகரித்து செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். அதன் காரணமாக மார்பகத்தில் பால் சுரக்கும் பகுதியில் இருக்கிற எபிடெலியல் செல்கள் தூண்டப்பட்டு அது வளரத் தொடங்கி கூடுதலாக வளர்ச்சி அடைந்து புற்றுநோயாக மாறுகிறது.

    இந்த வகையில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

    பொதுவாக ஈஸ்ட்ரோஜன் அதிகமாக யாருக்கு இருக்கும் என்று பார்த்தால் ரொம்ப காலம் மார்பகத்தில் ஈஸ்ட்ரோஜன் உருவாகும் பெண்களுக்கு தான் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக பல பெண்கள் 11 வயதுக்கு முன்பே பருவமடைகிறார்கள். பருவமடைதல் என்பது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது. அதாவது அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் வரத்தொடங்கி விட்டது என்று அர்த்தம். இது குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பருவமடைதல் ஆகும்.


    இரண்டாவது தாமதமான மெனோபாஸ், அதாவது 50 வயதுக்கு மேலும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் ஆவர். இந்த 2 வகையான பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உள்ளது. மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் இது ஒரு ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.

    ஹார்மோன்கள் இயற்கையாக வருவது அதிகமாக இருக்கும் கால கட்டங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. அதனால் தான் சிறு வயதிலேயே பருவமடைந்த பெண்களுக்கு கண்டிப்பாக மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை ஆரம்ப நிலையிலேயே செய்ய வேண்டும்.

    மேலும் 50 வயதை கடந்த பெண்களுக்கு மாதவிலக்கு நிற்காமல் வந்துகொண்டே இருந்தால் கண்டிப்பாக அவர்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும்.


    தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்:

    இன்றும் பெண்களுக்கிடையே அதிகரித்து வருகிற ஒரு முக்கியமான பிரச்சனை கருத்தரிப்பதை தள்ளிப்போடுவது ஆகும்.

    30 வயதை கடந்த பெண்கள் குழந்தை பேறு பெறுவதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்வது அதிகரித்து வரும் இந்த காலகட்டங்களில் மிகவும் தாமதமாக கருத்தரிப்பது ஒரு ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.

    அதேபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் என்கிற ஹார்மோன் அதிகமாகும். ஈஸ்ட்ரோஜனுக்கு எதிராக இருக்கிற இன்னொரு ஹார்மோன் தான் புரோஜெஸ்ட்ரோன்.


    பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தான் இந்த புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உருவாகுதல் அதிகமாக இருக்கிறது. எனவே கருத்தரித்தல் தாமதமாகும் போது அதிக காலம் ஈஸ்ட்ரோஜன் உருவாகிறது.

    அதேபோல் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு இந்த புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனே இல்லாமல் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கமே அதிகமாக இருகிறது. இதனால்தான் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது புரோஜெஸ்டிரோன், ஆக்சிடோசின் உள்ளிட்ட எல்லா ஏற்பிகளும் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளின் உணர்திறனை குறைக்கும். இவை அனைத்தும் பால் சுரப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.

    எனவே தாய்ப்பால் சரியாக கொடுக்காத பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் தாக்கம் அதிகமாகி அதனால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    • மார்பக புற்றுநோயாளிகளில் 20 சதவீதம் மட்டுமே குடும்பவழி பாதிக்கப்பட்டவர்கள்.
    • கட்டிகள் மேமோகிராமால் கூட கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.

    நீண்ட காலமாக பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் ஆரம்ப கட்டத்திலேயே அதை கண்டறியாமல் விடுவதால் அதன் தீவிரமும் அதிகமாகி விடுகிறது. அதற்கு காரணம் மார்பக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே.


    பரம்பரை நோய் அல்ல:

    கண்டிப்பாக. எல்லோருக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் தான் மார்பக புற்றுநோய் வரும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை.

    புள்ளி விவரங்களின் படி ஒட்டுமொத்தமாக 100 சதவீத மார்பக புற்றுநோயாளிகளில் 20 சதவீதம் மட்டுமே குடும்பவழி பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பிற 80 சதவீதம் நோயாளிகளுக்கு பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் பாதித்துள்ளது.


    புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்:

    மார்பக புற்றுநோய் மட்டுமின்றி அனைத்து விதமான புற்றுநோய்களுமே வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மிக அவசியம். சரியான உயரம், எடை, பிஎம்ஐ நிர்வகித்தல் மற்றும் புகைப்பழக்கம், குடிப்பழக்கத்தை தவிர்த்தல் அவசியமானது. ஆனால் இதனால் மட்டுமே உங்களுக்கு புற்றுநோய் வராது என்று உறுதி கொடுக்க முடியாது.

    ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. எனவே, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் புற்றுநோய் காரணமாக கருத முடியாது. அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.


    உள்ளாடை:

    இந்த சந்தேகம் பலருக்கும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இது வீணாக பரவும் பொய் வதந்தி மட்டுமே. எந்த விதமான உள்ளாடைகளையும் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு கிடையாது என்பதே உண்மை.

    சர்க்கரை அளவு அதிகரித்தல்:

    எந்த ஒரு தனித்த உணவும் புற்றுநோயை உண்டாக்கும் என்று நிரூபிக்கப்பட்டதில்லை. ஆனால், நீண்ட நாட்களாகவே நீங்கள் அதிகமான அளவு சர்க்கரையை எடுத்து கொண்டு வரும்போது அதன் சங்கிலி தொடராக அதிகமான ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண வேண்டியிருக்கும். இதனால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

    இதுவே உங்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் காரணமாக அமையலாம். மேலும், பொதுவாகவே அதிகமான சர்க்கரையை எடுத்து கொள்வது நல்லது அல்ல.


    வருடம் ஒருமுறை மேமோகிராம்:

    பலரும் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் எடுப்பதால் மட்டுமே எந்தவிதமான புற்றுநோய் கட்டிகளையும் கண்டறிந்து விட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், சில நேரங்களில் சிறிய கட்டிகள் மேமோகிராமால் கூட கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.

    கிட்டத்தட்ட 20 சதவீத தவறுகள் இப்படியும் நடக்கிறது. அதற்காகத்தான் சுய பரிசோதனை முறையை பயன்படுத்த வேண்டும். அதே சமயம் வருடம் ஒருமுறை மேமோகிராம் செய்வது நல்லது.

    வாசனை திரவியங்கள்:

    இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக எந்தவிதமான சான்றுகளும் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியவில்லை. எனவே, அதற்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.


    புற்றுநோய் கட்டி வலியற்றதாக இருக்குமா?

    மார்பக புற்றுநோய் கட்டிகளிலேயே இரண்டு வகை உள்ளது. இது நார்மல் கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் என்று உள்ளது. அது வலியற்றதாகவும் அல்லது வலி கொடுப்பதாகவும் இருக்கலாம்.

    ஆனால், வலி கொடுக்கவில்லை என்பதற்காக அது நார்மல் என்றும் சொல்லிவிட முடியாது. எனவே நீங்கள் முதலில் சுய பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ளுதல். மேமோகிராம் மற்றும் இதர தேவையான பரிசோதனைகளை செய்து உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.

    வயதான மற்றும் நடுத்தர வயது பெண்களுக்கு மட்டும்தான் வருமா?

    இல்லை இதுவும் நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வரும் உண்மையற்ற விஷயம். மார்பக புற்றுநோய் இளம் வயதினிருக்கும் ஏற்படும். 20-30 சதவீதத்திற்கும் மேல் 20-லிருந்து 40 வயது வரை உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது.

    பலருக்கும் 20 , 25 வயதிலேயே மார்பக புற்றுநோய் வந்து விடுகிறது. இதை முன்னரே அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அதனால் சுய பரிசோதனையும் அதை தொடர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை செய்வதும் அதை தடுக்கவும் முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவும் முடியும்.

    பெண்களுக்கு மட்டும்தான் வருமா?

    இதுவும் பல நாட்களாக நம்பபடும் ஒன்று. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஏற்படும். ஆனால், பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மிக மிக அரிதாகவே மார்பக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால், ஆண்களுக்கும் அரிதாக மார்பக புற்றுநோய் ஏற்படும் என்பதே உண்மை.

    மார்பகத்தில் ஏதும் காயங்கள்:

    மார்பகத்தில் காயங்கள் ஏற்படுவதால் மார்பக புற்றுநோய் வராது. அந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் பரிசோதனைகள் மூலம் ஏற்கனவே இருக்கும் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருக்கின்றதே தவிர காயம் ஏற்பட்டதால் உங்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை.

    • கருப்பை வாய் பகுதியில் செல்கள் மாறும் போது கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது.
    • தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது.

    பெண்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் முக்கியமானது கருப்பை வாய் புற்றுநோய். ஏன் இந்த நோய்க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இதன் அறிகுறிகள் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.


    கருப்பை இணைக்கும் பெண்களின் கருப்பைவாய் பகுதியில் செல்கள் மாறும் போது கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது. இந்த புற்றுநோயானது அவர்களின் ஆழமான திசுக்களை பாதிக்கலாம்.

    மேலும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பெரும்பாலும் நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, யோனி மற்றும் மலக்குடல் ஆகியவற்றுக்கும் பரவக்கூடும்.


    கருப்பை வாய் புற்றுநோயின் பெரும்பாலான நிகழ்வுகள் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாக உண்டாகின்றன. இது தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது. கருப்பை வாய் புற்றுநோய் மெதுவாக வளர்ச்சியடையும், இது கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும் முன்பு கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் தீவிர பாதிப்பு கொண்டுள்ள பெண்களை கொல்லவே செய்கிறது.

    35 வயது முதல் 44 வயதுடைய பெண்கள் இதை அதிகம் எதிர்கொள்கிறார்கள். 15 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகளில் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர்.


    அறிகுறிகள்

    கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளை நீங்கள் சரிவர கவனிக்காமல் இருக்கலாம். ஏனெனில் இவை ஆரம்ப கட்ட அறிகுறிகளை உண்டாக்காது.

    * உடலுறவு கொள்ளும் போது வலி

    * உடலுறவுக்கு பிறகு வலி

    * மாதவிடாய்க்கு இடையில் வலி

    * மாதவிடாய் நின்ற பிறகு அல்லது இடுப்பு பரிசோதனைக்கு பிறகு அசாதாரண யோனி ரத்தப்போக்கு

    அசாதாரண யோனி வெளியேற்றம், இது கனமாகவும் துர்நாற்றமாகவும் இருக்கலாம். பரவிய பிறகு புற்றுநோய் உண்டாகலாம்.

    * இடுப்பு வலி

    * சிறுநீர் கழிப்பதில் சிக்கல்

    * வீங்கிய கால்கள்

    * சிறுநீரக செயலிழப்பு

    * எலும்பு வலி

    * எடை இழப்பு மற்றும் பசியின்மை

    * சோர்வு போன்றவை இருக்கலாம்.


    ஒரு பெண்ணுக்கு 21 அல்லது 22 வயது கடக்கும் போதே கருப்பை வாய்ப்புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது. பேப்ஸ்மியர் பரிசோதனை என்று அழைக்கப்படும் இந்த பரிசோதனை வலி இல்லாதது.

    ஒவ்வொரு பெண்ணும் உடலுறவு வாழ்க்கைக்கு நுழைந்த பிறகு பேப்ஸ்மியர் பரிசோதனை மிகவும் அவசியம். இதன் மூலம் தொற்று இருப்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

    இது ஹெச்பிவி வைரஸ் 200 முதல் 300 விதமானவை உண்டு. இதில் அதிகமாக 16 முதல் 18 வரையான வேரியண்ட்கள் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு காரணமாகிறது.

    21 முதல் 34 வயது வரை இருக்கும் பெண்கள் 2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்ய வேண்டும்.

    35 வயதை கடந்தாலே வருடம் ஒருமுறை பேப்ஸ் மியர் பரிசோதனை செய்ய வேண்டும். இதனோடு ஹெச்பிவி பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.

    • ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.
    • ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது. மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.

    டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இரண்டு வகையாக பிரிக்கப்படும்.

    முதல் வகை: இது விதைப்பையில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு. அவை விதைப்பைக்குள் கீழிறங்காத விதைகள், வழக்கமாக உள்ள எக்ஸ்-ஒய் குரோமோசோம்களுக்கு பதிலாக இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் காணப்படும் நிலை.


    விந்தணுக்கள் உற்பத்தி செய்யும் செம்னிபெரஸ் குழல்களில் லீடிக் செல், டூபுலார் செல், செர்டோலை செல்கள் இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு செர்டோலை செல்கள் மட்டுமே காணப்படும். லீடிக் செல்கள் தான் டெஸ்டோஸ்டிரோனின் சீரான உற்பத்திக்கு காரணம்.

    சிஸ்டிக் பைப்ரோசிஸ், தட்டம்மை நோயால் விதைகளில் ஏற்படும் தொற்று. விதைகளில் வரும் புற்றுநோய். ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.

    இரண்டாம் வகை: ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி இவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்யும் மூளையின் பாகங்கள் ஆகும். ஹைபோதாலமஸ் கோனாடோட்ரோபினை வெளியிடும் ஹார்மோனை உருவாக்குகிறது.


    இது பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சினைமுட்டை தூண்டுதல் ஹார்மோன் எப்.எஸ்.ஹெச் மற்றும் லுடினைசிங் ஹார்மோன் எல்.ஹெச் உருவாக்க சமிக்ஞை செய்கிறது.

    லுடினைசிங் ஹார்மோன் பின்னர் லீடிக் செல்கள் மூலம் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்கிறது.

    இரண்டாம் வகையில் பிட்யூட்டரி சுரக்கும் ஆண் இனப்பெருக்க ஹார்மோன்கள் குறைபாடு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கு காரணமாகிறது.


    அறிகுறிகள்:

    தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமை, விந்தணு குறைபாடு, முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பது, மார்பக திசுக்களின் வளர்ச்சி, எலும்பு நிறை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.


    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் அசைவ உணவுகளில், நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி வகைகள், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்.

    பருப்பு வகைகளில் பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள். பழங்களில், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்.

    காய்கறிகளில் சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை நல்ல பலன் தரும்.

    சித்த மருத்துவம்:

    சாலாமிசிரி லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பின்.

    மதன காமேஸ்வர லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, மாலை இரவு உணவிற்கு பின்.

    நெருஞ்சில் விதை, பூனைக்காலி விதை, நீர்முள்ளி விதை, சாரப்பருப்பு, சாதிக்காய், நிலப்பனைக்கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, அமுக்கரா கிழங்கு, சதாவரி கிழங்கு இவை சேர்ந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.
    • சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

    பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    நாம் முகத்துக்கு பயன்படுத்தப்படும் சார்க்கோல் என்பது ஆக்டிவேட்டடு சார்க்கோல் ஆகும். ஆக்டிவேட்டடு சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.

    இது அழகு சாதனப்பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.


    சருமத்தின் துளைகளில் இருக்கும் துகள்களை ஆழமாக சுத்தம் செய்ய இந்த சார்கோல் ஃபேஸ் மாஸ்க், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    சருமத்தில் இருக்கும் துகள்களால் சருமம் எளிதில் வெடிப்பு, எண்ணெய் பசை போன்றவற்றை உண்டாக்கும். இதை எளிதில் சரிசெய்வதற்கு சார்கோல் ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது.

    சார்கோல், அடைப்பை சரி செய்து சருமத்தை சுத்தமாக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் தொற்று முகப்பரு போன்றவை குறைகிறது.

    அதிகப்படியான வியர்வை, திறந்த காயம், அழுக்குப்படிவது மற்றும் முகச்சீர்ப்படுத்தும் கருவிகளை பலரும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சருமத்தில் அழுக்குகள் தேங்கும். அப்போது சார்கோல் பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.

    ஆக்டிவேட்டட் கரித்தூளில் உள்ள துகள்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை துடைக்க உதவுகிறது. மேலும் பளிச்சென்ற சருமத்தை அளிக்க உதவுகிறது.


    ஆக்டிவேட்டட் சார்கோல் எண்ணெய் சருமத்துக்கு சிறந்த துணையாக இருக்கும். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதால் சருமம் வறண்டிருந்தாலும் கூட, சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது.

    மேலும் இதை ஆலோவேரா உடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு சீரான பிரகாசத்தையும் கொடுக்க உதவுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
    • 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    கருத்தடை சாதனங்களில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு காப்பர்-டி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.


    இந்த காப்பர்-டி கருப்பையில் வைக்கும் போது இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது.

    இந்த திரவம் தான் விந்தணுக்களை கருமுட்டையுடன் சேராமல் தடுக்கிறது. இந்த காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவை கருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.


    மேலும் காப்பர் டி பொருத்திய பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    குழந்தை பிறந்தவுடன் காப்பர் டி பயன்படுத்தினால் பிரசவத்துக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் காத்திருக்கவும். மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.

    காப்பர் – டி நன்மைகள்

    காப்பர் – டி காப்பரால் செய்யப்பட்டது. இது நீண்ட காலம் நீடிக்கும். காப்பர் டி ஹார்மோன் அல்லாத பிறப்புக்கட்டுப்பாடு என்பதால் இது உடலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    காப்பர் – டி பயன்படுத்துவதால் உடலில் உள்ள எந்த ஹார்மோன்களையும் பாதிக்காது. கருத்தடை மாத்திரைகளால் உடலில் ஹார்மோன் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் காப்பர்– டி பயன்படுத்தலாம்.

    விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது.


    இந்த காப்பர் – டி பயன்பாடு உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    கருத்தடைக்காக உடலுறவில் குறுக்கிடாது. மேலும் இது 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். பலனளிக்கும் என்பதால் நிம்மதியாக பாதுகாப்பாக உணரலாம்.

    பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது இதை பயன்படுத்தலாம். ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான ரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகளின் அபாயத்தை கொண்டிருக்கவில்லை.


    தீமைகள்

    காப்பர் – டியின் பொதுவான பக்க விளைவுகள் என்றால் ஒழுங்கற்ற மற்றும் அதிக ரத்தப்போக்கு.

    மற்றொரு பக்க விளைவு மாதவிடாய் வலி அதிகரிக்கலாம்.

    குறிப்பாக பிரசவிக்காத பெண்களை விட பிரசவித்த பெண்கள் குறைவான பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறார்கள்.

    காப்பர் – டி பொருத்தும் போது வலி, செருகிய சில நாட்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலி பெரும்பாலான மக்களுக்கு இந்த பக்கவிளைவுகள் பொதுவாக 3-6 மாதங்களுக்குள் மறைந்துவிடும்.

    ×