என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Estrogen Hormone"

    • இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்.
    • ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

    அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் தான். நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… அதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.

    இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு. பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது.

    இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள். இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக்கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பு இருக்கிறது. ஆனால் முன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர்.

    ஏற்கனவே ஏ.எச்.ஏ எனபடும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதயநோய் செயற்குழு ஒன்றினையும் அமைத்துள்ளது.

    நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டபடாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

    பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

    அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது. இப்போதில் இருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.

    கொழுபையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவில் இருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

    வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடைபயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமைடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    எவராலும் எபோதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக்கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

    பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது.

    பாஸ்டனில் உள்ள பெண்கள் மருத்துவமனை, மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கூடியுள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியபட்டது.

    சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும்.
    • மாதவிடாய் சுழற்சியில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மகளிரின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இரண்டுமே இன்றியமையாதது. மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும். இது பாலிகுலர் பிரீயட் என்று அழைக்கப்படுகிறது.


    இந்த காலகட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் கருமுட்டை விடுவிப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இனப்பெருக்க காலங்களில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. இதுதவிர சிறுநீரகங்களின் மேல் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் அடிபோஸ் திசுக்கள் (உடல் கொழுப்பு) ஈஸ்ட்ரோஜனை சுரக்கின்றன. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியும் ஈஸ்ட்ரோஜனை சுரக்கிறது.


    ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகள்

    ஈஸ்ட்ரோஜன் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் உட்பட உடலில் எல்லா இடங்களிலும் ஈஸ்ட்ரோஜன் செயல்படுகிறது.

    மனநிலையை மாற்றும் செரோடோனின் ரசாயனத்தையும் மூளையில் உள்ள செரோடோனின் ஏற்பிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

    மூளையில் 'நல்ல உணர்வு' ரசாயனங்களான எண்டோர்பின்களின் உற்பத்தி மற்றும் விளைவுகளை மாற்றியமைக்கிறது. நரம்புகளை சேதங்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நரம்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.


    சினைப்பைகள் கருமுட்டையை வெளியிடும் போது, கர்ப்பத்திற்கு தயார்படுத்த கருப்பையின் எண்டோமெட்ரியம் புறணியை அடர்த்தியாக்குகிறது. கருமுட்டை வெளிவரும் நாட்களில் ஈஸ்ட்ரோஜன் உச்சத்தை அடைகிறது. இது மிகவும் வளமான காலம். கர்ப்பப்பை சளிச்சுரப்பை அதிகரித்து கருவுறுதல் நிகழ, விந்தணு நீந்த உதவுகிறது.

    பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும். மார்பகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டாம் நிலை பாலின பண்புகளுக்கு வழிவகுக்கிறது. சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெற புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனுடன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    இந்த ஹார்மோன்கள் மாதவிடாயை சீராக வைத்திருக்க ஒரு நுட்பமான சமநிலையில் இணைந்து செயல்படுகின்றன. தாம்பத்தியத்திற்கு வசதியாக யோனி சுவர்களை மென்மையாகவும், மீள்தன்மையுடனும், உயவூட்டுவதாகவும் வைத்து, வலியைக் குறைக்கிறது.


    மெனோபாஸ் காலம்

    பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் அளவுகுறையும். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன்பே ஆரம்பிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது அதிகாரப்பூர்வமாக மெனோபாஸ் தொடங்குகிறது. இது பொதுவாக 51 வயதில் நடக்கும்.

    இந்த வயது நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் நின்றவுடன், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்து, யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தலைவலி, சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.


    ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலை ஏற்படுத்தும் உணவுகள்:

    ஆளி விதைகள் மற்றும் அலிசி விதைகள் (பிளாக் சீட்), சோயா பீன் இவைகளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், ஐசோபிளேவன் போன்றவை ஈஸ்ட்ரோஜன் சமநிலைக்கு உதவும்.

    பாலுக்கு மாற்றாக சோயா பால் குடிக்கலாம். உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள் விதைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், கோதுமை ஆகியவை நல்லது.

    மன அழுத்தத்தை நீக்க இறை பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான நேரம் இரவில் தூங்க வேண்டும்.

    ×