என் மலர்
சமையல்
- பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கு ஏற்றது.
- அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.
டீ டைம் என்று சொன்னதும் அனைவரின் நினைவுக்கு வருவது ஒரு கிளாஸ் டீயும், இரண்டு பிஸ்கட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டீ பிஸ்கட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இன்று நாம் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். கடைகளில் வாங்கும் பிஸ்கட்டில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எதையும் சேர்க்காமல் நாம் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அருமையான பிஸ்கட்டை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கண்டன்ஸ்டு மில்க்- 1 பாட்டில்
சோளமாவு (கான்பிளவர்)- ஒரு கப்
வெண்ணெய்- 25 கிராம்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள கான்பிளவர் மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பவுளில் கண்டன்ஸ்டு மில்கை ஊற்றி அதில் சிறிது சிறிதாக கான்பிளவர் மாவை சேர்த்து கிளர வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கலவை வந்தவுடன் அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளற வேண்டும். வெண்ணெய் சேர்த்தவுடன் மாவுக்கலவையை நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் பிஸ்கட்டுகளாக திரட்டி ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் வரிசையாக அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான இரும்புக் கடாயின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதை அடுப்பில் 10 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் தயாராக பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். கிரிஸ்பியான பட்டர் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பிஸ்கட்டுகளை எடுத்து காற்று புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக சாப்பிடுவதற்கும் மிகவும் உகந்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.
- வயதுக்கு வந்த பெண்கள் முதல் வயதானவர்கள் வரை உண்பதற்கு ஏற்றது.
- கருப்பு உளுந்தஞ்சோறு எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
இன்றும் பல கிராமங்களில் உளுந்தஞ்சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
அரிசி மற்றும் உளுந்து கொண்டு செய்யப்படும் உளுத்தம் சோறு தமிழகத்தின் பராம்பரிய உணவு. இன்றும் பல கிராமங்களில் உளுத்தம் சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்து சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி- ஒரு கப்
கருப்பு உளுந்து (உடைத்தது)- அரை கப்
பூண்டு- 10 பல்
தேங்காய் துருவல்- கால் கப்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கருப்பு உளுந்தை ஒரு கடாயில் 5 நிமிடம் சிறிது நிறம்மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அரிசியையும், உளுந்தையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி (பூண்டு நிறம் மாறக்கூடாது) அதனுடன் அரிசி ஒரு பங்குக்கு 3 பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
பின்னர் ஒரு கொதி வந்தது. தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதையடுத்து குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் சிறிதளவு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சாப்பிடுவதற்கு முன்னர் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். இதற்கு நாட்டுக்கோழி குழம்பும், கறிக்குழம்பும் அல்லது எள்ளு துவையல் சேர்த்து சாப்பிடுவது சூப்பரான காமினேஷன்.
- சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- ஒரு கப்
ராகி மாவு- அரை கப்
உப்பு- ஒரு சிட்டிகை
தேங்காங் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
வேர்கடலை பொடித்தது- கால் கப்
பொடித்த வெல்லம்- அரை கப்
வாழை இலை-1
செய்முறை:-
முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.
இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.
ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.
ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா- ஒரு கப்
முட்டை- 1
உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
பால்- அரை கப்
தேங்காய் பால்- ஒரு கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
நெய்- தேவையான அளவு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.
- குழந்தைகள் ஸ்கூலுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்ல ஏற்றது.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு -கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
கோகோ பவுடர்- 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி - 10 நம்பர்
காய்ச்சாத பால் - 100 மி.லி
செய்முறை:-
ஒரு வாய் அகன்ற பாத்திரத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம்.
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பதற்கு ஒரு சிறந்த ஸ்நாக்காக இந்த ராகி பிஸ்கட் இருக்கும். சுகர் நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். செய்து பாருங்கள்.
- சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்
வெல்லம் -300 கிராம்
வேர்கடலை - 200 கிராம்
ஏலக்காய்- 4 நம்பர்
நெய் - தேவையான அளவு
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:-
ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.
90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.
- பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
- சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:-
பாசி பயறு - 200 கிராம்
நாட்டுச்சர்க்கரை 250 கிராம்
வேர்கடலை - 100 கிராம்
ஏலக்காய் - 4 நம்பர்
உப்பு -ஒரு சிட்டிகை
நெய் - 3 கரண்டி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health
- எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
- ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
நெய் - ஒரு கப்
கோதுமை மாவு-ஒரு கப்
நாட்டு சர்க்கரை - ஒரு கப்
உப்பு -ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 நம்பர்
செய்முறை:-
ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.
அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.
இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு
- செய்வதற்கு மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்:
புலுங்கல் அரிசி -ஒரு கப்
நெய் - இரண்டு ஸ்பூன்
வெல்லம் -ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் தூள் -ஒரு சிட்டிகை
முந்திரி
செய்முறை:-
அரிசியை தண்ணீர் விட்டு கழுவி எடுத்து அதனை ஒரு கடாயில் போட்டு நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் சூடு தணிந்ததும் அதனை மிக்சியில் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பொடித்த அரிசியுடன், தேங்காய், ஏலக்காய், வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடிக்க வேண்டும். உருண்டை பிடித்த அரிசி உருண்டையின் மீது முந்திரிகளை அலங்கரித்து பரிமாறலாம். அரிசி உருண்டை தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. செய்வதற்கும் மிகவும் எளிதானது.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
முறுக்கு - தேவையான அளவு
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
ஓமப்பொடி - 1 கப்
சீஸ் துருவல் - 1 கப்
சட்னி தயாரிக்க:
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சட்னி தயாரிக்க:
ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.
சாண்ட்விச் தயாரிக்க:
வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும்.
பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கேழ்வரகில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
- கேழ்வரகில் அதிக அளவில் புரதம் உள்ளது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு – 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4
பேரீச்சை – 5
காய்ச்சியப் பால் – 200 மி.கி
ஏலப்பொடி – 1 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப
செய்முறை:
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.
அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 500 கிராம்
வெங்காயம் - 2
கோதுமை மாவு - 4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 3
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 6
அன்னாசி பூ - 1
கடுக்காய் - 1 சிறியது
கிராம்பு - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஜாதிப்பத்திரி - 3 துண்டு
கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.
அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.
பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.
பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






