என் மலர்tooltip icon

    சமையல்

    • பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்.
    • இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவு.

    தேவையான பொருட்கள்

    பார்லி தூள் - 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)

    பார்லி அரிசி - 4 டீஸ்பூன்

    பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்

    மிளகு தூள் - 3 டீஸ்பூன்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    துளசி இலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

    பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டீ, காபியுடன் சாப்பிட இந்த போண்ட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - 200 கிராம்,

    கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - 1

    தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2,

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

    இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.

    குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
    • குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    குடைமிளகாய் - ஒன்று

    முட்டை - 2

    வெங்காயம் - ஒன்று

    தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)

    ப.மிளகாய் - 1

    கேரட் துருவியது - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பெரும்பலானோர் வீட்டில் காலை உணவு இட்லியாக தான் இருக்கும்.
    • இன்று புதுவகையான இட்லியை செய்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 2 கப்

    சர்க்கரை- 3 தேக்கரண்டி

    உளுந்தம் பருப்பு - 3/4 கப்

    தேங்காய் பால் - 3/4 கப்

    உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    உலர் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 5 மணி நேரத்திற்கு ஊற வைத்து, அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதனுடன் அரைத்த 2 மாவையும் ஒன்றாக சேர்த்து கலந்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் உப்பு, 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.

    சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும்.

    இந்தக் கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    3 மணி நேரம் கழித்து மாவை வாழை இலைகளை கோன் போல் செய்து கொள்ளவும். செய்த கோனை டம்ளர்களில் வைக்கவும். அப்போது மாவு கீழே ஊற்றாது. அந்த கோனில் மாவை ஊற்றி வழக்கம் போல இட்லி சட்டியில் வைத்து மூடி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

    வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் கோன் இட்லி ரெடி.

    இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்

    முட்டை - 2

    வெங்காயம் - 2,

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - சிறிது,

    உப்பு - 1/2 ஸ்பூன்,

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும்.
    • நுங்கு வைத்து விதவிதமான ரெசிபிகள் தயார் செய்யலாம்.

    'இயற்கை ஜெல்லி' என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றும். கல்லீரல் இயக்கத்தை சீராக்கும். கொழுப்பைக் குறைக்கும். இதைக் கொண்டு விதவிதமான ரெசிபிகள் தயார் செய்யலாம்.

    தேவையானப் பொருட்கள்

    நுங்கு - 10

    எலுமிச்சம்பழச் சாறு - 2 தேக்கரண்டி

    சர்க்கரை - 5 தேக்கரண்டி

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதனுடன் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    அதை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.

    கலவையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மிக்சியில் அரைத்து, மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கவும்.

    இதேபோல தொடர்ந்து நான்கு முறை செய்யவும்.

    இப்பொழுது நாவில் கரையக் கூடிய சில்லென்ற 'நுங்கு ஐஸ்கிரீம்' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் எத்தனையோ வகை ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க..
    • சிக்கன்ல பொடிமாஸ் செஞ்சிருக்கீங்களா ? இப்போ செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    எலுமிபில்லாத சிக்கன் - 250 கிராம்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    குடைமிளகாய் - 1

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - கால் டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் -தேவைக்கு ஏற்ப

    செய்முறை:

    குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    வாணலியில் சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆற வைத்து மிக்சிஜாரில் போட்டு திரித்திரியாக அரைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சிக்கன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாயத் தூள், கரம் மசாலா தூள், சிறிது உப்பு(சிக்கன் வேகவைக்கும் போது உப்பு சேர்த்துள்ளது) சேர்த்து நன்றாக கிளறவும்.

    சிக்கன் உதிரிஉதிரியாக வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ஜூஸ் சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது.
    • குழந்தைகளுக்கு இது சத்தான ஜூஸ்.

    தேவையான பொருட்கள்

    நெல்லிக்காய் - 6

    கறிவேப்பிலை- சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    புதினா - சிறிதளவு

    உப்பு -தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நெல்லிக்காயை கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காயை போட்டு அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய ஜூஸை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாலைப்பொழுது, டீயுடன் வடை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும்.
    • சக்கரவள்ளி கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சக்கரவள்ளி கிழங்கு - 2,

    ப.மிளகாய் - 3

    வெங்காயம் - 1

    நிலக்கடலை - ஒரு கப்,

    அரிசி மாவு - 2 ஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயில் நிலகடலையை போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    சக்கரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி விட்டு துருவிக்கொள்ளவும்.

    துருவிய சக்கரவள்ளிக்கிழங்குடன் பொடித்த நிலக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    இறுதியாக இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு சற்று கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

    அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை வடை போன்று தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பிசைந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் வடை செய்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான சக்கரவள்ளி கிழங்கு வடை ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    இட்லி அரிசி - 1 கப்

    உளுந்து - அரை கப்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    ஜவ்வரிசி - 5 டீஸ்பூன்

    உப்புபு - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும்.

    இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும்.

    தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான தட்டு இட்லி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள காரசட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி

    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி

    பூண்டு - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×