என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது.
    • அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும்.

    புரோசன் ஷோல்டர் எனப்படும் உறைந்த தோள்பட்டை என்பது தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது. வலிஇருக்கிறது என்பதற்காக தோள்பட்டையை நீண்ட நேரம் அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    தோள்பட்டையின் மூட்டுகள் இணைப்புத் திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளது. உறைந்த தோள்பட்டை நிலையில் இணைப்புத் திசுக்களின் உட்பகுதி கடினமடைந்து, தோள் மூட்டின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது கை முறிவு போன்ற நிலைகளில் நீண்ட காலத்திற்கு தோள் மூட்டை அசையாமல் வைத்திருந்தால் இது வரும் வாய்ப்பு அதிகம். கீழ்க்கண்ட காரணிகள் உறைந்த தோள்பட்டை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

     1) 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்களுக்கு, உறைந்த தோள்பட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    2) நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்கள், அல்லது குறைந்த உடல் இயக்கம் உள்ளவர்களுக்கு உறைந்த தோள்பட்டை பாதிப்பு வரும் ஆபத்து அதிகம்.

    3) உடைந்த தோள் மூட்டு, பக்கவாதம் போன்ற நோய் நிலையில் உறைந்த தோள்பட்டை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

    4) நீரிழிவு நோய், அதிக தைராய்டு (ஹைப்பர் தைராய்டிசம்), குறை தைராய்டு (ஹைப்போ தைராய்டிசம்), பார்கின்சன் நோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு உறைந்த தோள் பட்டை வரும் வாய்ப்புகள் அதிகம்.

     அறிகுறிகள்:

    உறைந்த தோள்பட்டை நோயின் ஒரு பிரிவு அதிக வலி கொண்ட உறைதல் நிலை' எனப்படும். இந்தநிலையில் தோள் மூட்டின் எந்தவொரு சிறு அசைவும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும் தோள்பட்டையை அசைக்க இயலாது, அல்லது அசைக்கும்போது வலி கடுமையாக இருக்கும். இந்த நிலை 2 முதல் 9 மாதங்கள் வரை நீடிக்கும்.

    இரண்டாம் நிலையான உறைந்த நிலையில் தோள் மூட்டின் வலி குறையக்கூடும். இருப்பினும், தோள்பட்டை கடினமாகி தோள்மூட்டை பயன்படுத்துவது மிகவும் சிரமமாகிறது. இந்த நிலை 4 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

    மூன்றாம் நிலையான தாவிங் அல்லது உருகும் நிலையில் தோள்பட்டை நகரும் திறன் மேம்படத் தொடங்குகிறது. உறைந்த தோள்மூட்டு

    சித்த மருத்துவம்:

    இந்த நோய் சித்தர்களால் கூறப்பட்டுள்ள வாத நோய்களில் ஒன்றாகும். வாத நோய்களில் முக்குற்றங்களில் மிகுந்து நிற்கும் வாதத்தை சமன்படுத்த பேதி மருந்தை சித்த மருத்துவர்களின் அறிவுரை படி எடுத்து அதன் பிறகு நோய்க்குரிய மருந்தை சாப்பிட வேண்டும்.

    1) ரச கந்தி மெழுகு 500 மி.கி. இருவேளை பனை வெல்லத்தில் வைத்து சாப்பிட வேண்டும்.

    2) சேராங்கொட்டை நெய் 5 மி.லி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. நாகப்பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

    4) தோள் மூட்டின் வலி உள்ள இடங்களில் விடமுட்டி தைலம், உளுந்து தைலம், காயத்திரு மேனி தைலம், வாத கேசரி தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    5) எந்தக்கை பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தக்கையின் முழங்கை பகுதியை உயர்த்தி, தோள்பட்டையை நீட்டுவதற்கு மென்மையான அழுத்தத்தைச் செலுத்தி, மேலே கொண்டு வரும் பயிற்சியை செய்யவேண்டும். இதை ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

    • ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது.
    • ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.

    சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்ய ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது. 100 கிராம் ஓட்சில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து, 68 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் புரதம் மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பர போன்ற தாதுக்களும் இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்டபின் ரத்தத்தில் குளுக்கோஸ் உடனே உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

    இதில் உள்ள பீட்டா குளுகான்' என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், 'அவான்என்திரமைட் என்ற அல்கலாய்டு செல்களில் அழற்சியை தடுப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் ஓட்ஸ் சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி குறைந்து, அடிக்கடி நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவும். இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவு. ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.

     பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்சை அறியாமையால் வாங்கி உட்கொண்டு, ஆரோக்கியத்துடன் இருப்பதாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஓட்சில் 'ஸ்டீல் கட் ஒட்ஸ்', 'ரோல்டு ஓட்ஸ், 'இன்ஸ்டன்ட் ஓட்ஸ்' என்று மூன்று வகை உள்ளது. இதில் பதப்படுத்தப்படாத ஒட்ஸ் ஸ்டீல் கட் ஒட்ஸ் ஆகும். இதன் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் 53. கொஞ்சம் பதப்படுத்திய ரோல்டு ஓட்சின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 57 ஆகும்.

    மூன்றாவது வகையான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் அதிகமாக பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் 83 என்ற மிக அதிக மான அளவை அடைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு இதை சாப்பிட்டவுடன் உடனே ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் ஸ்டீல் கட் ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆனால், இன்ஸ்டன்ட் ஒட்சின் கிளைசிமிக் இன்டக்ஸ் மிக அதிகம் என்பதால், இதனை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தமுறை கடையில் ஓட்ஸ் வாங்கும் பொழுது ஸ்டீல் கட் ஓட்ஸ் அல்லது ரோல்டு ஓட்சை வாங்கி பயன் படுத்துங்கள். இன்ஸ்டன்ட் ஓட்சை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    • பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சினைகள் உள்ளன.
    • உள்ளிருந்து சரி செய்யக்கூடிய மருந்து பொருட்கள்.

    குளிர்காலம் என்பதால் பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. வறட்டு இருமலை உள்ளிருந்து சரி செய்யக்கூடிய வைத்தியத்திற்கு, தொண்டையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொருட்களை உட்கொள்வது மிகச்சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    சித்தரத்தை- 50 கிராம்

    அதிமதுரம்- 50 கிராம்

    கடுகு- 50 கிராம்

    வெந்தயம்- 50 கிராம்

     பயன்படுத்தும் முறை

    சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் இந்த 4 பொருட்களையும் வறுத்து அரைத்த பிறகு நன்கு ஆறவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் இரண்டு வேளை அரை ஸ்பூன் எடுத்து இதை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். அல்லது இந்த பொடியை ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி சாப்பிட்ட பின்பு தினமும் இரண்டு வேலை குடித்து வரலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட வர வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து முழு நிவாரணம் தரும்.

    இந்த பொடியுடன் ஓமவல்லி, துளசி, முசுமுசுக்கை, ஆடாதோடை இலை, திருநீற்று பச்சிலை, தும்பை இலை போன்ற இலைகளில் ஏதேனும் ஒன்றை சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து குடித்து வந்தாலும் வறட்டு இருமல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.

    சாப்பிடக்கூடாதவை:

    ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது.

    குளிர்ச்சியான பானங்கள் அருந்த கூடாது.

    குளிர்ச்சியான ஆகாரங்கள் சாப்பிட கூடாது.

    சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

    மூச்சி பயிற்சி செய்ய வேண்டும்.

    • உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
    • பெண்கள் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "DEPRESSION" நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வு, சிந்தனை மற்றும் செயலை பாதிக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் வீட்டில் அல்லது வேலையில் சரியாகச் செயல்படுவதற்கான திறனை உங்களில் இருந்து தடுக்கும்.

    முதல்படி

    அதிலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாம் இதில் பாதிக்கப்படுகின்றார்கள். இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்கள் வாழ்நாளில் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பொதுவான மனநல கோளாறு. இந்த மனநல கோளாறு தற்கொலைக்கு வழிவகுக்கும். இது பொதுவாக உங்களின் வேலை, தூக்கம், படிப்பு மற்றும் சாப்பிடும் திறனில் தலையிடுகிறது. இந்த அறிகுறிகள் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கும்.

    இரண்டாம் படி

    இது டிஸ்டிமியா என்றும் அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் கடுமையானவை அல்ல மற்றும் நீண்ட காலம் நீடிக்கும், இது பொதுவாக குறைந்தது 2 ஆண்டுகள் நீடிக்கும்.

     அறிகுறிகள்

    உதவியற்றதாக உணர்தல்

    ஆர்வமின்மை

    அதிக தூக்கமின்மை

    எரிச்சல்

    எடை மாற்றங்கள்

    ஆற்றல் இழப்பு

    பொறுப்பற்ற செயல்கள்

    தலைவலி, முதுகுவலி, வயிற்று வலி

    சுய வெறுப்பு

    அமைதியின்மை

    குறைவான சிந்தனை

    அதிகம் பேசுதல்

    ஆளுமை மாற்றங்கள்

    நினைவக சிரமங்கள்

    உடல் வலி

    சோர்வு

    பசியிழப்பு

    உடலுறவில் ஆர்வம் இழப்பு

    இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும் தான். ஆனால் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கு என்று செல்லகூடாது. எப்போது செல்ல வேண்டும் என்று முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    மனஅழுத்தம் அதிகரித்து உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாலே உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைத்தியசாலை செல்வதற்கு மனம் இல்லை என்றால், உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் பேசவும். இவ்வாறு செய்தாலும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது மாரடைப்பு மட்டுமே.
    • முதுகுத் தண்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் மொபைல் பயன்படுத்துவது எப்படி?

    1990-களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது மாரடைப்பு மட்டுமே. ஆனால்ல இந்த காலகட்டத்தில் இதயநோய்க்கு ஈடாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் வாட்டி வதைப்பது கழுத்து வலி மற்றும் முதுகு தண்டு வலி தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு சீரியசான பிரச்சினையையாக உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியுமா?. ஆம் சரி செய்ய முடியும் என்று கூறுகிறார், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விக்னேஷ் புஷ்பராஜ்....அவர் கூறியதாவது:-

    இளைஞர்களிடம் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்தே அவர்களின் கழுத்து வலியும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது என்றே கூற வேண்டும். முதலில் மொபைல் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். அதாவது மொபைல் பயன்பாடு பற்றி அல்ல, கழுத்துக்கும், முதுகுத் தண்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மொபைல் போனை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுவாக மொபைல் போனை பேசுவதற்காக பயன்படுத்துவதை விட வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பார்கவும், கேம் விளையாடவுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு யாரும் மொபைல் போனை முகத்துக்கு நேராக வைத்து நிமிர்ந்து பார்ப்பது இல்லை. கைக்கு நேருக்கு நேர் வைத்து பார்க்கல, நாம தான் போன தேடி போய் பார்க்கிறோம்.

     குனிந்து கொண்டே மொபைல் பார்த்தால் கழுத்தில் இவ்வளவு பாரம் கூடுமா?

    மொபைல் போனை நிமிர்ந்த நிலையில் நேராக வைத்து பார்க்கும் போது, கழுத்தின் மேல் உள்ள தலையின் எடை வெறும் 5 கிலோ தான். ஆதே மொபைல் போனை நாம் 10 டிகிரி குனிந்து பார்க்கும்போது, நம் கழுத்தின் மீது 18 கிலோ வரை எடை கூடி பாரத்தை மேலும் அதிகரிக்கும். அதே 25 டிகிரி வரை குனிந்து பார்க்கும் போது 18 கிலோ முதல் 28 கிலோ வரை கழுத்தின் மீது எடை கூடும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபனமான ஒன்று.

    இப்படி பல மணி நேரம் குனிந்து கொண்டு மொபைல் போன் பார்ப்பதனால், கழுத்து பகுதியில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். நாளடைவில் அந்த அழுத்தத்தால் கழுத்துப் பகுதியில் தசை தேய்மானம் ஏற்படும். பின் அதுவே எலும்புத் தேய்மானமாக மாறி வலி அதிகரிக்கும்.

    தசை தேய்மானம் எலும்புத் தேய்மானமாக மாறிய பிறகு மெல்லமெல்ல நரம்பை பாதிக்கும். அதன் விளைவு கை, கால் நரம்புகளை பாதித்து நடப்பது, எழுதுவது கடினமாகி, ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிப்பது கூட சிரமமாகும் அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.

    வாழ்க்கை முறையில் சின்னதொரு மாற்றம் செய்தால் இந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதாக தவிர்க்க முடியும். அனைத்திற்கும் தீர்வாய் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய விஷயம் மொபைல் போனை நிமிர்ந்து முகத்துக்கு நேர்வைத்து பார்ப்பது தான்.

    இது ஒரு சின்ன மாற்றம் இத நாம பண்ணிட்டோம் அப்படின்னு வச்சிட்டோம்னா, ஒரு முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் பார்த்து அவங்க உங்க கழுத்து எலும்பு தேஞ்சுடுச்சு நரம்பு தேஞ்சுருச்சு நரம்பு நசுங்கிடுச்சு அப்படின்னு சொல்றதையும் பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு சர்ஜரி நடக்க இருக்கிறதையும் தவிர்க்க முடியும்.

    • பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.
    • நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா இவை மூன்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. உலகில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் இவை மூன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கைகள், நோய் அறியும் விதம், சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.

    குறிப்பாக நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. அவற்றின் பாரம்பரிய தன்மைக்கேற்ப வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமானது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

     சித்தா:

    தோற்றம்: பண்டைய தமிழகத்தில் வேரூன்றிய மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தை உருவாக்கிய பெருமை சித்தர்களுக்கு உண்டு.

    அடிப்படை: பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.

    சிகிச்சை முறை: தாதுக்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தியானம், யோகா மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றையும் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    நோய் கண்டறிதல்: மருத்துவ பரிசோதனை, சிறுநீர் மற்றும் நாடித் துடிப்பு போன்றவைகளுடன் பித்தம், கபம், வாதம் போன்றவற்றின் சமநிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

     ஆயுர்வேதம்:

    தோற்றம்: இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறையாக விளங்குகிறது. ஆயுர் என்பது நீண்ட வாழ்வையும், வேதம் என்பது நூலையும் குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் செல்வாக்கு பெற்ற மருத்துவ முறையாக திகழ்கிறது.

    அடிப்படை: சாத்வீக, ராட்சத, தமச ஆகிய முக்குணங்களுக்கு இணையாக ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் கூறப்படுகின்றன. இவை சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், உணவு பரிந்துரைகள், வாழ்க்கைமுறை, யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுவான ஆயுர்வேத சிகிச்சைகளாக விளங்குகின்றன.

    நோய் கண்டறிதல்: பித்தம், வாதம், கபம் ஆகியவற்றின் சமநிலையை மதிப்பிடுவதோடு கூடுதலாக நாக்கு, நாடித் துடிப்பு, சிறுநீர் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன அமைப்பை பரிசோதிப்பதும் அடங்கும்.

     யுனானி:

    தோற்றம்: யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற்றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது.

    அடிப்படை: ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கும் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது யுனானி மருத்துவத்தின் அடிப்படை தத்துவமாக விளங்குகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆகியவை யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் அடங்கும். உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

    நோய் கண்டறிதல்: யுனானி மருத்துவத்தில் நாடித்துடிப்பு, சிறுநீர், மலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நோயின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.

    • இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.
    • பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்திற்கும், தூக்கத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய உணவுகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.

    1. தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.

    2. இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.

    3. கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதனை இரவில் உட்கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.

    4. இரவு தூங்குவதற்கு முன்பு பாலாடைக்கட்டி உட்கொள்வது தூக்கத்திற்கு தடையாக அமையும். அதிக நேரம் விழிப்பு நிலையில் இருக்க வைத்துவிடும்.

    5. துரித உணவுகளுடன் உட்கொள்ள வழங்கப்படும் கெட்ச்சப்பை இரவில் தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.

    6. இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.

    7. ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.

    8. இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    9. காபியில் இருக்கும் காபினின் வீரியம் எட்டு முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். எனவே இரவில் காபியை தவிர்ப்பதன் மூலம் காலையில் தூங்கி எழுவது வரை காபினின் ஆற்றல்மிக்க செயல்திறனை கட்டுப்படுத்திவிடலாம்.

    10. இனிப்பு அதிகம் கலந்து தயாரிக்கப்படும் தானிய வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம். அல்லது சர்க்கரையின் அளவை வீழ்ச்சியடைய வைக்கலாம். அதன் தாக்கம் தூக்கத்திலும் எதிரொலிக்கும். தூக்கமின்மையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

    11. இரவில் பீர் அருந்துவதும் தூக்கத்தை பாதிக்கும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும்.

    12. இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.

    13. இரவு உணவிற்கு பிறகு இனிப்புகளை சாப்பிட விரும்பினால் டார்க் சாக்லேட்டை அறவே தவிர்க்க வேண்டும். இதில் காபின் இருப்பது தூக்கத்தை தடுக்கும்.

    14. புரதம் அதிகம் உள்ள உணவுகளில் டிரிப்டோபான் குறைவாக இருக்கும். அதன் காரணமாக செரோடோனின் அளவும் குறையும். இரவில் அத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் தூக்கம் தடைபடும்.

    15. இரவில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுவலி மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.

    16. பீட்சாவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டியில் உள்ள கொழுப்பு மற்றும் தக்காளி சாஸில் கலந்திருக்கும் அமிலங்கள் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இரவில் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    17. பகலில் நிறைய தண்ணீர் பருகலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

    18. புதினா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இரவில் புதினா வகை உணவுகள், புதினா மிட்டாய் சாப்பிடுவது தூக்கத்திற்கு நல்லதல்ல.

    19. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு அதிகமாக உணவு உட்கொள்வதும் தவறானது. அது ஜீரணமாவதற்கு இரவு முழுவதும் உடல் போராட வேண்டி இருக்கும். அதன் காரணமாக தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். காலையில் சோர்வாகவும், மோசமான மனநிலையிலும் எழுந்திருப்பீர்கள்.

    20. வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.

    • சமையலில் மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது அத்திப்பழம்.
    • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய சமையலில் மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது அத்திப்பழம். உலர்ந்த அத்திப்பழத்தை பயன்படுத்தி இந்த குளிர்காலத்தில் பல சுவையான பதார்த்தங்களை செய்யலாம். மேலும் இந்த அத்திப்பழம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும் ஏன் இதை குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதனையும் பார்ப்போம்.

     அத்திப்பழம் சேர்த்த நட்ஸ் சட்னி:

    உலர்ந்த அல்லது பிரெஷான அத்திப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி, அதோடு கொஞ்சம் பாதாம் அல்லது வால்நட் சேர்த்து, கடைசியாக கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சீரக தூள் சேர்க்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்து எடுங்கள். இந்த சட்னியை தோசை, இட்லி தொட்டு சாப்பிடலாம்.

     அத்திப்பழம் மற்றும் பனீர் டிக்கா:

    யோகர்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், வத்தல் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்த கலவையில் அத்திப்பழ துண்டுகள் மற்றும் பன்னீரை மேரினேட் செய்யுங்கள். பின்னர் அதை க்ரில் அடுப்பில் வைத்து லேசாக கருகும் வரை சமைத்து எடுங்கள். இந்த அத்திப்பழ பன்னீர் டிக்கா குளிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்னாக்ஸாக இருக்கும்.

     காரமான அத்திப்பழ அரிசி சாதம்:

    அத்திப்பழ துண்டுகள், வெங்காயம், முந்திரி ஆகியவற்றை நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் இதில் பாஸ்மதி அரிசியை சேர்த்து சில நிமிடங்களுக்கு கிளறுங்கள். அரிசியோடு இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை அல்லது சிக்கன் ப்ராத் சேர்த்து சமைக்கவும். அவ்வளவு தான் அத்திப்பழ சாதம் தயார்.

     அத்திப்பழ பாதாம் அல்வா:

    உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை நெய்யில் சமைக்கவும். பின்னர் இதோடு பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து அல்வா பதம் வரும் வரை கிண்டுங்கள். கடைசியான சூடான அல்வா மேல் சில நட்ஸ்களை தூவி சாப்பிடுங்கள்.

     அத்திப்பழ சிக்கன் குழம்பு:

    நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சியை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இதோடு சீரகம், மல்லி, மஞ்சள், வத்தல் தூள் சேர்க்கவும். அடுத்து இந்த கலவையில் நறுக்கிய தக்காளி, சிக்கன், அத்திப்பழம் சேர்த்து சமைக்கவும். இந்த அத்திப்பழ சிக்கன் குழம்பு தனித்துவமான சுவையை கொடுக்கும்

    • உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
    • நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

    அத்திப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. இந்த பழம் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதோடு நமது செரிமான செயல்பாடு ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடல் எடையை பராமரிக்க உதவக்கூடிய நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வைட்டமின் ஏ, ரத்தம் உறைவதற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும் வைட்டமின் கே மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் பி6 போன்றவை அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது.

    இதுதவிர நமது இதய ஆரோக்கியம், தசை செயல்பாடு, எலும்பு அடர்த்தி அகியவற்றுக்கு உதவும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவையும் அத்திப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

    குளிர்காலத்தில் ஏன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்?

    அத்திப்பழத்தை அப்படியே பிரெஷாகவும் சாப்பிடலாம் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். இதிலிருக்கும் இனிப்புச் சுவையை ரசித்து உண்ணும் போது நமக்கு எந்த குற்றவுணர்ச்சியும் ஏற்படுவதில்லை. மேலும் அத்திப்பழத்தில் உடலை சூடுபடுத்தும் தன்மை உள்ளது.

    இதன் காரணமாக குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பை கொடுத்து தேவையற்ற உடல்நலக் கோளாறுகளில் இருந்து நம்மை காக்கிறது. நமது தினசரி டயட்டில் அத்திப்பழத்தை பயன்படுத்தி வரலாம்.

    • ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது.
    • பச்சை முட்டையில் புரோட்டின் அதிகம் இருக்கிறது.

    முட்டையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் தினமும் முட்டையை சாப்பிடுகிறோம். அதே முட்டையை அவித்து சாப்பிடுவார்கள், பொறித்து சாப்பிடுவார்கள், வறுத்து சாப்பிடுவார்கள் இன்னும் சில நபர்கள் பச்சையாக குடிப்பார்கள். அதிலும் பூப்படைந்த பெண்கள் பச்சையாக முட்டை குடித்தால் நல்லது என்று நம் முன்னோர்கள் 16 நாட்கள் குடிக்கச் சொல்வார்கள், உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டையை குடிப்பார்கள். இப்படி பச்சை முட்டை குடிப்பது நல்லதா..! கெட்டதா..! என்று தெரிந்து கொள்வோம் வாங்க...

    முட்டையில் உள்ள சத்துக்கள்:

    ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி12, ஏ, இ, கே, பி6 போன்ற சத்துகள் இருக்கிறது.

    நம் முன்னோர்கள் முட்டையை வேக வைக்காமல் பச்சையாக குடிப்பது நல்லது என்று இன்று வரையும் நம்பப்படுகிறது. இதனால் தான் பூப்படைந்த பெண்கள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றவர்கள் காலையில் தினமும் பச்சை முட்டையை குடித்து வந்தார்கள்.

    சமைத்த முட்டையை விட பச்சை முட்டையில் புரோட்டின் அதிகம் இருக்கிறது,. ஆனால் சமைத்த முட்டையை உட்கொள்ளும் போது புரோட்டீன் 90 சதவீதம் உடலுக்கு சேரும். அதுவே பச்சை முட்டையை உட்கொள்ளும் போது 50% மட்டும் தான் உடலுக்கு சேரும் என்று ஆய்வின் முடிவில் கூறியுள்ளார்கள்.

    குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் பச்சை முட்டையை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    முட்டையை 74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்து சாப்பிடும் போழுது சால்மோனெல்லா பாக்ட்ரியா அழிந்து விடும். சமைத்த முட்டையை சாப்பிட்டாலும், பச்சை முட்டையை குடித்தாலும் சத்துக்கள் ஒன்று தான். ஆனால் பச்சை முட்டையை குடிக்கும் பொழுது மேல் கூறப்பட்டுள்ள உடல் பிரச்சினைகள் ஏற்படும்.

    • அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.
    • செல்கள் கிளர்வூட்டப்பட்டு தோல் கருமை ஏற்படுகிறது.

    உங்கள் உடம்பு கருத்து போவதற்கு காரணம் அகாந்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' எனப்படும் நோயாகும். இந்நோயில், ஒரு சில நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, முழங்கை, இடுப்பு, அக்குள், உடல் மடிப்புகள், முட்டி போன்ற இடங்களில் கருமையான தடிமனான தன்மையுடையதாக தோல் மாறும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    இது ஏற்படக் காரணம் ஒரு சில நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் இன்சுலின் எதிர்மறை நிலையால், இன்சுலின் அளவு மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் அதிகரிப்பதால், கெரட்டினோசைட் மற்றும் பைபிரோபிலாஸ்ட் போன்ற செல்கள் கிளர்வூட்டப்பட்டு இது போன்ற தோல் கருமை ஏற்படுகிறது.

     சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் கருமையாவதற்கு மற்றொரு காரணம் 'டயாபட்டிக் டெர்மோபதி ஆகும். இது பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் குறைந்த குருதியோட்டத்தால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தோல் நோய் மருத்துவரை கலந்தாலோசித்து தோலில் கருமை நிறம் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட வேண்டும்.

    ஏனெனில் ஹைப்போதைராய்டிசம், அக்ரோமெகாலி, குஷ்ஷிங் சிண்ட்ரோம் போன்ற நோய்களாலும் தோலில் கருமை நிறம் ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள்' மற்றும் மேல் பூச்சு களிம்பு மூலமாக இந்தக் கருமை நிறத்தை நாம் சரி செய்யலாம்.

    • 'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்’ என்பது வாத நோய்களில் ஒன்று.
    • முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு இடையே மூட்டுகளில் வீக்கம்.

    'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்' என்பது வாத நோய்களில் ஒன்றாகும். சித்தமருத்துவத்தில் 85 வகை வாத நோய்களை சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நோயில் முதுகில் உள்ள முதுகெலும்புகள் இடைவெளியின்றி ஒன்றாக இணைகின்றன. இதனால் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சிலநேரங்களில் விலா எலும்புகளும் பாதிக்கப்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.

     அறிகுறிகள்:

    நோயின் முக்கிய அறிகுறி முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு (சாக்ரோலியாக் மூட்டுகள்) இடையே உள்ள மூட்டுகளில் வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் முதுகெலும்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இதனால் முதுகு அல்லது பிட்டத்தில் கடுமையான வலி காணப்படும். காலை நேரங்களில் வலி அதிகமாவது அல்லது வலியினால் இரவில் தூக்கம் வராமல் வேதனைப்படுவது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்

    குதிகாலின் பின்புறம் தசைநார்கள் இணைக்கும் இடங்களில் வலி, நடப்தில் சிரமம் போன்ற பாதிப்புகளும் இருக்கலாம். இந்தநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் HLA-B27 மரபணு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மரபணு இல்லாதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

    சித்த மருத்துவம்:

    இந்த நோய்க்கு சிறந்த சித்த மருந்துகள் உள்னை. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.

    1. சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கிட குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளுடன் அமுக்கரா' சூரணம் 1 கிராம் சேர்த்து காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2 கந்தி மெழுகு 500 மி.கி.கலை. இரவு இருவேளை சாப்பிட வேண்டும். வலியுள்ள இடங்களில் விடமுட்டி தைவம் உளுந்து தைலம், கற்பூராதி தைலம் சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    3. உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சில மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து விட்டு மீண்டும் உட்கார வேண்டும். முதுகெலும்பு வளையாமல் நேர்பட உட்காருவது நல்லது.

    ×