search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cold problem"

    • பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சினைகள் உள்ளன.
    • உள்ளிருந்து சரி செய்யக்கூடிய மருந்து பொருட்கள்.

    குளிர்காலம் என்பதால் பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. வறட்டு இருமலை உள்ளிருந்து சரி செய்யக்கூடிய வைத்தியத்திற்கு, தொண்டையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொருட்களை உட்கொள்வது மிகச்சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    சித்தரத்தை- 50 கிராம்

    அதிமதுரம்- 50 கிராம்

    கடுகு- 50 கிராம்

    வெந்தயம்- 50 கிராம்

     பயன்படுத்தும் முறை

    சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் இந்த 4 பொருட்களையும் வறுத்து அரைத்த பிறகு நன்கு ஆறவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் இரண்டு வேளை அரை ஸ்பூன் எடுத்து இதை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். அல்லது இந்த பொடியை ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி சாப்பிட்ட பின்பு தினமும் இரண்டு வேலை குடித்து வரலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட வர வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து முழு நிவாரணம் தரும்.

    இந்த பொடியுடன் ஓமவல்லி, துளசி, முசுமுசுக்கை, ஆடாதோடை இலை, திருநீற்று பச்சிலை, தும்பை இலை போன்ற இலைகளில் ஏதேனும் ஒன்றை சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து குடித்து வந்தாலும் வறட்டு இருமல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.

    சாப்பிடக்கூடாதவை:

    ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது.

    குளிர்ச்சியான பானங்கள் அருந்த கூடாது.

    குளிர்ச்சியான ஆகாரங்கள் சாப்பிட கூடாது.

    சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

    மூச்சி பயிற்சி செய்ய வேண்டும்.

    சளி பிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர். இதற்கான காரணத்தை அறந்து கொள்ளலாம்.
    சளித்தொல்லை: இந்த சீசனில் அநேகர் சிந்திய மூக்கும், லொக், லொக்கென்ற இருமல் சத்தத்துடனும் இருக்கின்றனர். சளிபிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர்.

    இதற்கான சில காரணங்கள்: சளி முழுமையாய் விடவில்லை என்பதுதான். மேலும் வீட்டில் உள்ள சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், உடன் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவரின் காபி கப், டம்ளர், டி.வி. ரிமோட், குழாய் பிடிகள், துண்டுகள், ஒரே கப்பில் வைக்கும் டூத் பிரஷ்கள் இவை சளி, ஜலதோஷம் இவற்றினை பரப்பலாம். அல்லது மேலும் தூண்டி விடலாம். கவனம் தேவை.

    • நூற்றுக்கணக்கான வைரஸ்கள் ஜலதோஷத்தினை உருவாக்க வல்லவை. ஆக ஒன்றை அடுத்து பாதிப்பாக ஜலதோஷம் தொடரலாம்.

    • அலர்ஜி இருக்கக்கூடும். அலர்ஜியின் காரணத்தினை கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.

    • கிருமிகள் பாதிப்பு இருக்கலாம்.

    • ஆஸ்துமா மற்றும் சுவாச குழாய் பாதிப்புகள் இருக்கின்றதா என மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    • நிமோனியா போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்.

    • அசிடிடி பிரச்சினை, வயிற்று பிரட்டல், அடிக்கடி ஏப்பம் போன்ற பிரச்சினைக்கு கவனம் செலுத்துங்கள்.

    • தொடர் இருமல் இருந்தால் டி.பி. பாதிப்பு உள்ளதா என்பதனையும் அறிய வேண்டும்.

    • நோய் எதிர்ப்பு குறைபாடு இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
    காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் சமையலில் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்கள். பச்சை மிளகாயில் உடல் நலத்தை மேம்படுத்தும் விஷயங்கள் உள்ளன.



    அதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை நோய்களுக்கு எதிராகவும், விரைவாக நோயை குணப்படுத்தவும் துணைபுரியும். சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.

    வெட்டுக்காயத்தால் அவதிப்படுபவர்களும் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சக்தியை அது வழங்கும்.

    மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சைமிளகாய்க்கு இருக்கிறது. வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 
    ×