என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சளித்தொல்லை குணமாகாததற்கான காரணங்கள்
    X

    சளித்தொல்லை குணமாகாததற்கான காரணங்கள்

    சளி பிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர். இதற்கான காரணத்தை அறந்து கொள்ளலாம்.
    சளித்தொல்லை: இந்த சீசனில் அநேகர் சிந்திய மூக்கும், லொக், லொக்கென்ற இருமல் சத்தத்துடனும் இருக்கின்றனர். சளிபிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர்.

    இதற்கான சில காரணங்கள்: சளி முழுமையாய் விடவில்லை என்பதுதான். மேலும் வீட்டில் உள்ள சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், உடன் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவரின் காபி கப், டம்ளர், டி.வி. ரிமோட், குழாய் பிடிகள், துண்டுகள், ஒரே கப்பில் வைக்கும் டூத் பிரஷ்கள் இவை சளி, ஜலதோஷம் இவற்றினை பரப்பலாம். அல்லது மேலும் தூண்டி விடலாம். கவனம் தேவை.

    • நூற்றுக்கணக்கான வைரஸ்கள் ஜலதோஷத்தினை உருவாக்க வல்லவை. ஆக ஒன்றை அடுத்து பாதிப்பாக ஜலதோஷம் தொடரலாம்.

    • அலர்ஜி இருக்கக்கூடும். அலர்ஜியின் காரணத்தினை கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.

    • கிருமிகள் பாதிப்பு இருக்கலாம்.

    • ஆஸ்துமா மற்றும் சுவாச குழாய் பாதிப்புகள் இருக்கின்றதா என மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    • நிமோனியா போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்.

    • அசிடிடி பிரச்சினை, வயிற்று பிரட்டல், அடிக்கடி ஏப்பம் போன்ற பிரச்சினைக்கு கவனம் செலுத்துங்கள்.

    • தொடர் இருமல் இருந்தால் டி.பி. பாதிப்பு உள்ளதா என்பதனையும் அறிய வேண்டும்.

    • நோய் எதிர்ப்பு குறைபாடு இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
    Next Story
    ×