என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இளம் வயதிலேயே தொழில் செய்யும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு, பகுதி நேரமாக சில தொழில்களை அறிமுகப்படுத்தலாம். அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
    இந்தக் கால குழந்தைகளுக்கு அசாதாரண திறமைகள் உண்டு. அவற்றை கண்டறிந்து, அவர்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும். இதன் மூலம் அவர்களை வல்லுனர்களாகவும், மேதைகளாகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்ற முடியும். இளம் வயதிலேயே தொழில் செய்யும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு, பகுதி நேரமாக சில தொழில்களை அறிமுகப்படுத்தலாம். அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

    யூடியூபர்:

    நமது திறமையை உலகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை சமூக வலைத்தளங்கள். அதில் ஒன்றுதான் யூடியூப் தளம். இதில் நாம் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவுக்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் வருமானமும் கிடைக்கும். திறமையை எளிதாக அனைவருக்கும் வெளிப்படுத்தவும் முடியும். இளம் வயதினரின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

    முதியவர்களின் பராமரிப்பாளர்:

    இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேலையாகக்கூட இருக்கலாம். வீட்டில் அல்லது அருகில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்யலாம். காய்கறிகள், மருந்துகள் உட்பட தேவையான சிறு வேலைகளைச் செய்யலாம். பல இடங்களில், இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில், குழந்தைகள் இதை ஒரு தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

    கைவினைப் பொருட்கள் தயாரிப்பு:

    குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் திறமையில் ஒன்று கைவினைப் பொருட்கள் தயாரிப்பு. இதை ஊக்குவிக்கும்போது, எதிர்காலத்தில் கற்பனைத் திறன் அதிகரிப்பதுடன் சிறந்த தொழிலதிபராகவும் மாற முடியும்.  

    சமையல் கலை நிபுணர்:

    காய்கறிகளை வெட்டுவதற்கு பழக்கலாம். கேக், குக்கீஸ் போன்ற உணவு வகைகளை தயாரிப்பதற்கு கற்றுத் தரலாம். குழந்தைகள் தயாரிக்கும் இந்தப் பொருட்களைச் சந்தையில் விற்பதன் மூலம் பணம் ஈட்ட முடியும்.

    கிப்ட் பேக்கிங்:

    குழந்தைகளிடம், அவர்களின் கற்பனைத் திறனுக்கேற்ப அழகாய் பேக்கிங் செய்யும் திறன் இருக்கும். அதைக் கூடுதலாக அழகுபடுத்துவதற்கு கற்றுத்தரலாம். பூங்கொத்துகள் தயார் செய்வதற்கு பயிற்சி தரலாம். இது குழந்தைகளுக்குப் பணம் ஈட்ட ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.

    செல்லப் பிராணிகள் பராமரிப்பு:

    குழந்தைகள் விரும்பிச் செய்யும் வேலையில் இதுவும் ஒன்று. செல்லப் பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, சுத்தம் செய்வது, உணவு வழங்குவது என சில எளிய பராமரிப்புப் பணிகளை வழங்கலாம். அதேபோல், செல்லப் பிராணிகளைத் திறம்பட செயல்பட வைக்கவும் சில எளிய பயிற்சிகளை வழங்கலாம். இவற்றைக் குழந்தைகளால், எளிதாகப் பழக்க முடியும்.

    எழுத்தாளர்:

    வளரும்போதே கவிதை, கட்டுரை, சிறுகதை என எழுதும் திறமை குழந்தைகளுக்கு உண்டு. இவற்றைச் சரியான பாதையில் வழிநடத்திச் சென்று, கற்பனைத் திறனை ஊக்குவிக்கும்போது எழுத்தாளராகும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.

    இவற்றையெல்லாம் குழந்தைகளின் கல்வியை பாதிக்காமல் செயல்படுத்த முடியும். சிறு வயதிலேயே நிர்வாகத்திறனை மேம்படுத்தவும் முடியும்.
    சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
    பெண் குழந்தைகள்தான் குடும்பத்தின் அச்சாணியாக விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தின் மொத்த உணர்ச்சிக் கலவையும் பெண் குழந்தையை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுகிறது. பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பாராட்டத்தக்கது. எனினும், இன்றும் பெண் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை  சில இடங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

    சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும்.

    தற்போதையச் சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது சந்தேகமே. அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற்றத்தை உண்டாக்கும்.
    தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர்.
    தமிழ் மொழிக் கல்வியில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை பற்றி தெளிவாக விளக்குகிறார், சீனு.செந்தாமரை. கடலூரை சேர்ந்தவரான இவர், தமிழ் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ் மொழியில் பல கவிதை படைப்புகளையும், புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் தமிழ் துறையின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் விளக்குகிறார்.

    ‘‘தமிழில் இளங்கலை (பி.ஏ.) பட்டப்படிப்பு முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை படிக்க முடியும். அத்துடன் ஆசிரியர் கல்வியியல் பயிற்சியும், பட்டப்படிப்பும் படிப்போருக்கு ஆசிரியர், பேராசிரியர் பணிவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் துறை மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் இந்த மொழி சார்ந்த பணியிடங்களைப் பெற முடியும்.

    பி.ஏ. பி.எட்., எம்.ஏ. எம்.எட். படிப்பவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர் பணிகள் எளிதாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிப்பவர்கள் குறைவாக உள்ளதால், ஏராளமான கல்வி நிலையங்களில் தமிழ் ஆசிரியர் தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதே போன்று கலை அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தமிழில் எம்.பில்., பிஎச்.டி. படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்’’ என்பதோடு, தமிழ் மொழியினை கொண்டு அரசு வேலைவாய்ப்பும் பெற முடியும் என்கிறார்.

    ‘‘தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள், தமிழ்த் துறையில் பட்டம் பெற்றவர்கள் பல்வேறு துறைகளிலும் கோலோச்சுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, அரசின் பல்வேறு துறைகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. அதே போன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதில் தேர்வு எழுத முடியும் என்பதுடன், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்றவர், ஊடகத்துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை விளக்குகிறார்.

    ‘‘தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் ஆசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அதில் மாற்றம் செய்யப்பட்டு, பல நிலைகளில் சிறப்பான பணிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    ஊடகத் துறையில் மொழி படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எழுத்து, பேச்சு ஆகிய இரு நிலைகளிலும் சிறந்த ஆற்றல் கொண்டிருந்தால் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். குறிப்பாக, பத்திரிகைகள், பதிப்பகங்கள், அச்சகங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் என இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று தொலைக்காட்சி, வானொலி பண்பலை போன்றவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நிகழ்ச்சி தொகுப்பு, செய்தி வாசிப்பு ஆகிய பணிகளில் தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

    புகழ் பெற்ற பி.பி.சி. சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றவர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. இது தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன’’ என்கிறார்.

    ‘‘தமிழோடு பிறமொழி அறிவு இருப்பின், மொழிபெயர்ப்புத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வருகின்றனர். அங்கு தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கின்றனர். அங்கும் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை தமிழ்த் துறையில் வளர்த்துக்கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு’’ என்று நம்பிக்கை யுடன் தெரிவிக்கிறார்.

    சீனு.செந்தாமரை
    புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
    குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த உதவும் 7 வழிகள் இதோ....

    நேரம் ஒதுக்குங்கள்

    நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்!

    புத்தகம் வைத்திருங்கள்

    கையோடு ஒட்டிபிறந்த ரெட்டை பிறவியாய் இருக்கும் மொபைல் போன்களுடன் ஒரு புத்தகத்தையும் வைத்திருங்கள். எப்போதும் கையில் புத்தகம் இருப்பது காத்திருப்பு நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க பயன்படும். படிக்க நேரம், இடம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.

    பட்டியல் போடுங்கள்

    என்னென்ன புத்தங்கங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பது நல்லது. அதில் எந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளன என குறித்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன் அதனை பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள், அல்லது படித்து முடித்ததற்கு ஏதாவது அடையாளம் வைத்துக்கொள்ளுங்கள். பட்டியலில் புத்தகங்கள் படித்து முடித்து எண்ணிக்கை குறைய குறைய புதிய புத்தகங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இடத்தை தேடுங்கள்

    நாம் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறோம் என்பதை போலவே எந்த இடத்தில் இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம்! உங்களை சுற்றி எந்த இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் இரைச்சல் மிகுந்த இடத்தில் அமர்ந்து படிப்பது வீண். அதனால் அமைதியான இடமாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

    கதை சொல்லுங்கள்

    வீட்டில் சிறுவர்-சிறுமியர் இருந்தால் இரவு நேரங்களில், அவர்கள் தூங்கப் போகும்முன் ஏதாவது ஒரு சிறுவர் புத்தகத்தை படித்து காட்ட பழக்குங்கள். இதனால் சிறு வயதிலேயே வாசிப்பின் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு வரும், நமக்கும் படித்தது போல் இருக்கும்.

    பழைய புத்தகங்களை நாடுங்கள்!

    புது புத்தகங்கள் தான் படிக்க வேண்டும் என்பது இல்லை. நமக்காகவே உள்ளன பழைய புத்தக நிலையங்கள். அருகிலுள்ள நூலகங்களை பயன்படுத்துவது இன்னும் நலம். புத்தகங்களை குறிப் பிட்ட காலத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியத்தால் நிச்சயம் படித்து விடுவீர்கள்.

    உறுதிமொழி எடுங்கள்

    புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உறுதிமொழியை பாதியில் விட்டுவிடாமல் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.
    தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவ-மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு படிப்பே மறந்து போகும் நிலை இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா பரவலையடுத்து பள்ளிகள் மூடப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

    இதற்கிடையே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னர் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு பெரிய வகுப்பு மாணவர்களுக்கு 2 மாதங்கள் வரையிலும் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் வரையிலுமே மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவ-மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு படிப்பே மறந்து போகும் நிலை இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    நேரடி வகுப்புகளின் போதே பல மாணவர்கள் பாடங்களை சரியாக கவனிக்க மாட்டார்கள். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் படிப்பு பல மடங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

    பள்ளி கல்வியை பொறுத்தவரையில் ஆரம்ப கல்வி மிகவும் முக்கியமானதாகும் அடிப்படை சரியாக இருந்தால் மட்டுமே மாணவர்களால் அடுத்தடுத்த வகுப்புகளில் சரியாக படிக்க முடியும்.

    ஆனால் தற்போது பல மாணவர்கள் ஆங்கில எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள் தெரியாமலேயே தேர்ச்சி பெற்று விடும் நிலையே உள்ளது. இது எதிர்காலத்தில் அவர்களது கல்வி திறனை பாதிக்கும் என்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் பல மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சரியான புரிதலை ஏற்படுத்துவது இல்லை.

    அதே நேரத்தில் சிறிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்தபடியே வீடுகளில் நடக்கும் மற்ற வி‌ஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். பலர் ஆன்லைன் வகுப்பில் இருந்தபடியே விளையாடவும் செய்கிறார்கள்.

    இப்படி ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பழகிவிட்ட 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு செல்வதற்கு தயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நேரத்தில் பல இடங்களில் பள்ளிகளுக்கு செல்ல மாட்டேன் என்று மாணவர்கள் அடம் பிடித்ததே இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

    ஆன்லைன் வகுப்புகளால் மற்ற பாடங்களை விட ஆங்கிலம், கணித பாடங்களை கற்பதில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கணித பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை நேரடி வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்களால் ஆசிரியர்களிடம் கேட்டு எளிதாக நிவர்த்தி செய்ய முடியும்.

    ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் அதுபோன்று உடனுக்குடன் சந்தேகங்களை மாணவர்களால் தெளிவுபடுத்த முடியாத நிலையே உள்ளது.

    ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களுடன் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று நடைபெறும் ஆன்லைன் தேர்வுகளில் ஒருசில மாணவர்களை தவிர பெரும்பாலான மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதி உள்ளனர். இது அவர்கள் வாங்கிய அதிக மதிப்பெண் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதே பாணியை பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு நடைபெற்ற நேரடி தேர்வுகளின்போது சில மாணவர்கள் கடைபிடித்து உள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலையும் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    எனவே சுழற்சி முறையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தினால் மட்டுமே அவர்களது கல்வி கற்றல் திறன் பாதிக்காமல் இருக்கும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கூறும்போது, தனியார் பள்ளிகளில் செல்போன் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பாடங்களை அவர்கள் கவனிப்பது போன்று புகைப்படங்களை எடுத்து அனுப்ப அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

    18 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தோம். அதற்குள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

    மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்பை இல்லம் தேடி கல்வி திட்டம் நிச்சயம் சரி செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    குழந்தை பருவ உடல் பருமன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், எதிர்காலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது நல்லது.
    இன்றளவில் குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.

    குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம். வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்.

    துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம். குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

    குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும். சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
    சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகி விட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.  

    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

    பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும் அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
     
    இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரித்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.
     
    குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும்.

    பெரியவர்களுக்கு ஏற்ற சுவையில் சமைத்து விட்டு, அதை சாப்பிடும்படி குழந்தைகளை மிரட்டாதீர். உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டு சமைத்தால், அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது.
     
    அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால், அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

    பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
     
    குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டு விடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக் கொள்வார்கள் என்றார்.
    தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...
    நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போய்விட்டது. அந்த காலங்களில் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...

    1. பல்லாங்குழி

    வட்டமாக குழி உள்ள பலகையில் புளியங்கொட்டை அல்லது முத்துகளை கொண்டு விளையாடும் பல்லாங்குழி மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாகும். குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதால் விரலுக்கு பயிற்சியும், கணக்கு பயிற்சியும் பெறமுடியும். முத்துக்களை நகர்த்தும் வேலையால் இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து, இல்லாத இடத்திற்கு கொடுக்கும் குணம் வளரும்.

    2. தாயம்

    இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயக்கட்டை மற்றும் காய்களை கொண்டு விளையாடும் விளையாட்டு தாயம் எனப்படுகிறது. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் யார், சதுரங்க பலகையைச் சுற்றி மற்றவரின் காய்களை வெட்டி அவர்களிடம் இருந்து தப்பித்து, தனது கட்டத்தின் உச்சிக்கொம்பு ஏறி, கனி பெறுவார் என்பதே சுவாரஸ்யம் கூட்டும் அம்சமாகும். மகாபாரத காலத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதாக வரலாறு உண்டு. காய்களை வெட்டி வீழ்த்தும்போது மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் எழும், கணிதத் திறன் வலுப்பெறும். சாதுர்யம், மன ஆற்றல் மேம்படும்.

    3. கண்ணாமூச்சி

    குழு உணர்வையும், நட்பையும் வளர்க்கும் விதமாகக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் மிகச் சிறந்தது கண்ணாமூச்சி.

    ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்றவர்கள் அருகில் ஒளிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதே கண்ணாமூச்சி விளையாட்டாகும். ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதன் மூலம் பொறுமையும், நிதானத்தையும் பெறலாம். சாதுர்யத் திறனும் வளரும்.

    சகிப்புத்தன்மை

    இவை மட்டுமல்லாமல் கபடி, உறியடி, கோலி, நொண்டி, சில்லுக்குச்சி போன்ற ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வற்றை இன்றைய குழந்தைகள் விளையாடுவதில்லை. இவை அழியாமல் இருக்க நாம் நமது வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். சத்துணவு, உடற்பயிற்சி, விளையாட்டுகளினால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். விளையாட்டுகளால் ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத் தன்மை, நட்புணர்வு, உற்சாகம் போன்ற நற்பண்புகள் வளரும், பாரம்பரிய விளை யாட்டுகளை விளையாடுவோம், நற்பண்புகளையும் நற்பலன்களையும் பெறுவோம்.

    குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் முற்றிலும் ஒழிக்கமுடியாத நிலை நிலவுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு சமீபத்தில் மந்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (18) வயதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும் குழந்தை திருமணங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.

    குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள். துரிதமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டையும் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளுள் ஒருவர், டி.பூபாலன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மாவட்ட பஞ்சாயத்துக்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு, வறுமை போன்ற காரணங்களால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குழந்தை திருமணம் நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. கொரோனா தொற்றுக்கு முன்பு ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்திருந்தாலும் ஊரடங்கு சமயத்தில் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கிராம மக்களுடன் ஒரு மாத காலம் செலவிட்டார்.

    குழந்தை திருமணம் என்பது ஊட்டச்சத்து குறைபாடு, பள்ளி இடைநிற்றல், ரத்த சோகை மற்றும் பிரசவத்தில் தாய் இறப்பு போன்ற பிரச்சினைகளுடன் நெருக்கமான தொடர்பை கொண்டது என்பதை அவர் புரிந்து கொண்டார். குழந்தைத் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பல அணுகுமுறைகளை வகுத்தார்.

    கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்தார். அந்த குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டு 170-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினார். சில பெற்றோர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானித்தார்.

    இதற்காக உள்ளூர் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட அரசு அதிகாரிகள் குழுக்களை அமைத்தார். மேலும் கிராமசபை அளவில் குழுக்களையும் அமைத்தார். அந்த குழுவினர் குழந்தைத் திருமணத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து கிராம மக் களிடம் எடுத்துரைத்தார்கள். குழந்தை திருமணம் நடப்பது குறித்து புகார் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உத்திரவாதம் அளித்தார்கள்.

    தங்கள் விருப்பமின்றி திருமணம் நடப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தால், பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் அல்லது பழிவாங்கிவிடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அந்த பயத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். 1098 ஹெல்ப்லைனை அழைக்கலாம் அல்லது உள்ளூர் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தினார். தனது மொபைல் எண்ணையும் வழங்கினார்.

    குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்-ஆண் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். சிலர் குழந்தைகள் நல இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இளம் பெண்களுக்கு மாடு, கோழி வளர்ப்பு, தையல், எம்பிராய்டரி மற்றும் கணினி அறிவியல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வம் இருக்கும் பெண்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. வீட்டிற்கு அனுப்பப்படும் குழந்தையின் நிலையை கண்காணிக்கும் பொறுப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மொகடா தாலுகாவிலுள்ள ஷிவாலி என்னும் கிராமத்தில் பெண்கள் 15 வயதை அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. அரோஹான் என்னும் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இப்போது ஷிவாலி கிராமத்தைச் சேர்ந்த 175 குடும்பங்கள் மனம் மாறியுள்ளன. அங்கு குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் முற்றிலும் ஒழிக்கமுடியாத நிலை நிலவுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

    20-24 வயதுடையவர்களில் நான்கில் ஒரு பெண் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டப்பூர்வ (18) வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார் என்று ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை அதிகரிப்பது, கடந்த காலத்தை விட அதிகமான குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு வழிவகுத்து விடக்கூடாது என்பது குழந்தை திருமணத்திற்கு எதிராக போராடுபவர்களின் கருத்தாக இருக்கிறது.

    குறைந்தபட்ச வயதை உயர்த்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது, பெண் குழந்தைகளுக்கு கல்வியில் முன்னுரிமை கொடுப்பது, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களுக்கு அதிகாரமளிப்பது போன்ற விஷயங்களை ஊக்குவிப்பது இளவயது திருமண நிகழ்வைக் குறைப்பதற்கான சிறந்த அணுகுமுறையாகும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

    ஆழமாக வேரூன்றிய பாலின சமத்துவமின்மை, நிதி பாதுகாப்பின்மை, பிற்போக்குத்தனமான எண்ணங்கள், தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாமை போன்ற பல காரணிகள் குழந்தை திருமணங்கள் மற்றும் கட்டாய திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதும் அவர்களின் வாதமாகவும் இருக்கிறது.

    பூபாலன்
    குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.
    குழந்தை பருவத்தில் உடல் பருமன் பிரச் சினையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதனை கவனத்தில் கொள்ளாதபோது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

    * இரவில் காலதாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகளை பொறுத்தவரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். பதின்ம வயதினர் பலர் மொபைல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதையும், இரவில் தாமதமாக தூங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவில் தூங்கும்போது கூட வளர்சிதை மாற்றம் நடைபெற வேண்டும். இரவு 7.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இரவில் தூங்கும் நேரமும், காலையில் எழும் நேரமும் தினமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    * குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்வது முக்கிய அம்சமாகும். குழந்தைகள் அறையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர், உலர் பழங்கள் வைத்திருக்க வேண்டும். அது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பகல் பொழுதில் ஆரோக்கியமான பானம் பருகுவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது ஐஸ் டீ, ஐஸ் காபி, எலுமிச்சை ஜூஸ், கிரீன் டீ, பால் பருக வைக்கலாம். இவை உடல் எடையைப் பராமரிப்பதிலும், குழந்தை பருவ உடல் பருமனை தடுப் பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

    * வானவில் உணவு என்பது, உணவில் பல வண்ண பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதாகும். உடல் எடையை நிர்வகிக்க இந்த உணவு உதவியாக இருக்கும். தினமும் பச்சை இலை காய்கறிகளுடன் கிவி, மாம்பழம், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பல வண்ண பழங்களை சாப்பிடலாம். அவற்றில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை எடையைப் பராமரிக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவும். ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதும் சிறந்தது.

    * துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய உணவு பழக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமானது. குழந்தை பருவத்தில் சத்தான உணவுகளை உண்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அவற்றை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏதாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோரே குழந்தைகளை நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்திவிடுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. வீட்டில் அதிக கலோரிகள் கொண்ட திண்பண்டங்களை வாங்கி சேமித்துவைக்கக்கூடாது. ஒவ்வொரு முறையும் குழந்தை ஏதாவது சாப்பிட விரும்பினால் அவற்றை வெளியே சென்று வாங்கி வர பழக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வது, விரும்பியபோதெல்லாம் சாப்பிடும் எண்ணத்தையும் உடல் பருமன் பிரச்சினையையும் கட்டுப் படுத்தலாம்.

    * நொறுக்குத்தீனிகளை போல ரொம்பவும் பிடித்தமான, ருசியான உணவுகளை ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதையும், அடிக்கடி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் விசேஷ தினங்களில் அந்த உணவுகளை தயார் செய்து கொடுக்கலாம். சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டு களின் அளவும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * குழந்தைகள் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதற்கு அனு மதிக்கக்கூடாது. உடல் இயக்க செயல்பாடு சீராக நடந்தாக வேண்டும். வெளி இடங்களிலோ, வீட்டுக்குள்ளோ ஓடி விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். பெற்றோரும் குழந்தை களுடன் சேர்ந்து உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.

    * சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு மூலம் தயார் செய்யப்படும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடல் பருமனுக்கு முக்கிய பங்கு வகிப்பவை. திண்பண்டங்களுக்கு மாற்றாக பழ சாலட்டை தேர்ந்தெடுக் கலாம். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கு மாற்றாக பாலுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது கோகோ பவுடர் கலந்து கொடுக்கலாம்.

    குழந்தை பருவ உடல் பருமன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், எதிர்காலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது நல்லது.
    தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன.
    வாழ்வில் பெரும் மகிழ்ச்சியையும், அழகிய நினைவுகளையும் தருவது குழந்தைப்பருவம். குறுகியதாக இருந்தாலும், அதன் நினைவுகள் பசுமையானதாக என்றும் மாறாமல் இருக்கும். அதனை இரட்டிப்பாக்கும் விதத்தில் பண்டிகை நாட்கள் அமைகின்றன. குழந்தைகள் வாழ்வில் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனால் ஏற்படும் தாக்கம் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.

    கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் அறிதல்

    இன்று பலர், பணியின் நிமித்தமாக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு கூட்டுக் குடும்பமாக வாழும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அந்த வாய்ப்பை பண்டிகைகள் பெற்றுத் தருகின்றன. பண்டிகையை கூட்டுக் குடும்பமாக கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்கின்றனர். உறவினர்களிடம் பழகும் வாய்ப்பும், பகிர்ந்துண்ணும் பழக்கமும் இதன் மூலம் ஏற்படுகிறது.

    பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ளுதல்

    குழந்தைகள் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் பண்டிகைகள் மூலமாக அறிந்துகொள்கின்றனர். உதாரணமாக தைத்திருநாளில் உழவர்களின் முக்கியத்துவத்தையும், தேவையையும் அறிந்துகொள்கின்றனர். பாரம்பரிய உடைகள், விளையாட்டுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும், பலகாரங்களையும் பற்றி அறிந்து கொள்கின்றனர்.

    கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல்

    தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. இது குழந்தைகளை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறது. மேலும், குழந்தைகள் தாங்கள் பெற்ற அனுபவத்தை, எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்வதால் கலாசாரமும், பண்பாடும் மறையாமல் இருக்கும்.

    இனிமையான நினைவுகளை சேகரிக்கும் தருணம்

    குழந்தைப்பருவ நினைவுகளை அவ்வளவு எளிதாக யாரும் மறப்பதில்லை. இப்பருவத்தில் இனிமையான நினைவுகளை மட்டுமே சேகரிப்பது அவசியம். எனவே பெற்றோர்கள் இயன்ற வரை இனிமையான நினைவுகளை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தர முயற்சி செய்ய வேண்டும். முடிந்தவரை பண்டிகை காலங்களில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பது நல்லது. மேலும் அவர்களுக்கு உறவுகளின் முக்கியத்துவத்தையும், பண்டிகைகளின் சிறப்பையும் கற்றுத்தருவது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பாடத்திற்கு, நல்ல தூண்டுகோலாக அமையும்.
    தாத்தா பாட்டியின் நிழலில் வளர்வது குழந்தைகளுக்கு எப்போதும் நன்மையே என்றாலும், குழந்தையின் பெற்றோர் தாத்தா பாட்டியின் வளர்ப்பு முறையை ஏற்றுக் கொள்வதில்லை.
    குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டியின் உதவி எந்த அளவுக்கு தேவைப்படுகிறதோ அதே அளவுக்கு குழந்தைகள் வளர வளர தாத்தா பாட்டியின் செல்லத்தால் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே பெரும்பாலான பெற்றோரின் புகார். இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

    தாத்தா பாட்டிகள், குடும்ப அமைப்பில் குறிப்பாக இந்திய குடும்பங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாத்தா பாட்டியின் நிழலில் வளர்வது குழந்தைகளுக்கு எப்போதும் நன்மையே என்றாலும், குழந்தையின் பெற்றோர் தாத்தா பாட்டியின் வளர்ப்பு முறையை ஏற்றுக் கொள்வதில்லை. செல்லம் கொடுப்பது முதல், உணவை வலுக்கட்டாயமாக கொடுப்பது, வேண்டாத அறிவுரைகள், அளவுக்கதிகமாக பிள்ளைகளை டிவி பார்க்க அனுமதிப்பது, என பல சந்தர்ப்பங்களில் தாத்தா பாட்டி குழந்தைகளை கெடுப்பதாக பெற்றோர் நினைக்கின்றனர்.

    உங்கள் சொந்த பிள்ளைகளை வளர்க்கும்போது உங்களை வளர்த்த பெற்றோரை விட வித்தியாசமான கண்ணோட்டத்தை நீங்கள் கொண்டிருக்கலாம்.

    உண்மையான பிரச்சனைகளும் தொந்தரவுகளும் தாத்தா பாட்டி அநாவசியமாக தலையிடும் போது அல்லது தாத்தா பாட்டியினரின் உணர்வுகளை நீங்கள் கருத்தில் கொள்ளாத போது தான் தோன்றுகிறது. இது இறுதியில் குடும்பங்கள் உடைய காரணமாகிறது.

    பெரும்பாலான குடும்பங்களில் தலைமுறை இடைவெளியால் தான் அதிக கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. இதனால் குழந்தைகள் தாத்தா பாட்டியை பார்க்கும் சந்தர்ப்பங்களை பெற்றோர் குறைத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இங்கே சில குறிப்புகளைத் தருகிறோம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளனரோ அதே அளவுக்கு தாத்தா பாட்டியும் கொண்டுள்ளனர். எனவே முதியவர்களை விலக்கி வைப்பதை விட, அவர்களுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுத்தால், ஒரு இணக்கமான உறவு ஏற்படும்.

    பிரச்சனைகள் வரும்போது அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். இது நீண்ட காலத்திற்கு வலுவான உறவை கட்டமைப்பதோடு உறவுகளிடையே ஆரோக்கியமான அணுகுமுறையை உருவாக்கும்.

    பிரச்சனைகளை கையாளும் போது நேர்மறையான அணுகுமுறையை பயன்படுத்துங்கள். தாத்தா பாட்டியினரின் அணுகுமுறை உங்கள் கருத்துக்களிலிருந்து முரண்படும் போது இதமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    குழந்தை வளர்ப்பில் உதவியாக இருப்பதற்காக உங்கள் பெற்றோருக்கு அடிக்கடி நன்றி சொல்லுங்கள். ஒரு கருத்து வேறுபாடோ சண்டையோ உங்கள் குழந்தைக்கும் தாத்தா பாட்டிக்கும் இடையே நிலவும் ஆரோக்கியமான உறவை பாதிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

    எவ்வளவு கோபம் இருந்தாலும் குழந்தைகளின் முன்னிலையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை சமாதனமாக போய்விடுங்கள்.
    ×