என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.
    உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.

    ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.

    பொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வலி, கால், கைகளில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டி விடும். இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது.

    இருப்பினும் அந்த பயம் பாதித்தவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. முறையான மருந்தும், குறிப்பிட்ட காலந்தவறாத மருத்துவ செக்-அப்களும் இருந்தால் இயல்பான வாழ்க்கை என்பது நிச்சயம் சாத்தியமே.

    * ஆனால் வருமுன் காப்பது மிக மிக நல்லது அல்லவா. ஆகவே உங்கள் கொலஸ்டிரால் அளவினை நன்கு கண்காணித்துக் கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது.

    * உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

    * கண்டிப்பாய் புகை பிடிப்பதனை நிறுத்துங்கள். இது உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும்.

    * ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் இவை வேண்டாமே. பொதுவில் உப்பின் அளவினைக் குறையுங்கள்.

    * நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும் வரை செய்யுங்கள்.

    * மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.
    உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது.
    உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது.

    * உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. முறையற்ற பயிற்சிகளால் எலும்புகளில் உட்காயம் எற்படலாம். முறையாக செய்யும் பயிற்சிகள் உயரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. உயரத்தை நிர்ணயிப்பது உங்கள் மரபணுக்கள்தான்.

    * பெண்கள், அனைத்து வகையான பயிற்சிகளையும் செய்தால் ஆண்களைப்போல தசை வளர்ச்சி பெறுவார்கள் என்பது தவறு. இன்னும் சொல்லப்போனால், முறையான பயிற்சியாளர் இருந்தால் பெண்கள் கருவுற்ற நிலையிலும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

    *  உடற்பயிற்சி செய்தால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். ஆணுறுப்பும் ஒரு தசைதான். முறையான உடற்பயிற்சிகளால் ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுப்பெறுமே தவிர, பிரச்சனைகள் வர வாய்ப்பே இல்லை. மருத்துவரின் அனுமதி இன்றி வரம்புமீறி ஹார்மோன் மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

    *  எந்த சிறப்பு உணவைப் பயன்படுத்துவதற்கு முன்பும் அது உங்கள் உடலுக்கு ஏற்றதா, இலக்கை அடைய சரியான தேர்வா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். உடற்பயிற்சிகள் செய்தால் முடி உதிரும் என்பதும் தவறான கருத்து.

    *  பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என சிலர் நினைப்பார்கள். அது தவறு. பயிற்சிகள் செய்யும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

    *  ‘வியர்த்தால்தான் கொழுப்பு குறையும், ஃபேன், ஏ.சி எல்லாம் வேணாம்ப்பா’ என சிலர் வியர்க்க வியர்க்கப் பயிற்சிகளைச் செய்வார்கள். அது தவறு. பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது.
    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சதவீதத்தினரிலும் பெண்களே மதுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

    மேற்கத்திய நாடுகளிலும், மது அருந்துபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகம். ஆனால் அங்கு பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    அதிலும், 1991 முதல் 2000 ஆண்டு வரை பிறந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் மேலை நாடுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் மது அருந்துபவர்களாகக் கூட மாறிவிடுவார்களாம்.

    பொதுவாக மது அருந்துவதால் பெண்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவில் 2000-2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் 57 சதவீதமாக இருந்தது.

    இது ஆண்களில் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. 25 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பெண்களில் சிரோசிஸ் இறப்பு விகிதம் 21 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில், ஆண்களில் இது 10 சதவீதமாகக் குறைந்திருந்தது.

    மது அதிகம் அருந்தி மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக, ஆபத்தான அளவுக்கு மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக இந்தப் போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது. ஆனால் அதிகளவில் பெண்கள் மது அருந்துவது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. மதுவானது ஆண்களின் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை ஒப்பிடும்போது பெண்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுவிதமாக உள்ளது.

    மது அருந்தும் பெண்களின் உடலில் குறைந்த அளவில் ஏடிஎச் என்ற நொதிப்பொருள் உற்பத்தி ஆகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் இத்திரவம், மதுவின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள கொழுப்புச்சத்து, மதுவை தக்கவைத்துக் கொள்கையில் நீர் அதைக் கரைக்க முற்படுகிறது.



    பெண்கள் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் இயல்பாகவே அவர்களின் உடலில் மதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

    இந்த அம்சம்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மதுவால் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார், டான் ஷுகர்மேன். இவர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கத் துறை பேராசிரியராக உள்ளார்.

    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இந்த நிகழ்வு டெலஸ்கோப்பிங் எனப்படுகிறது.

    ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மதுப்பழக்கம் தாமதமாகவே ஏற்படுகிறது. அதேநேரம், ஆண்களை விட பெண்கள் விரைவாகவே மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான கோளாறுகள் சீக்கிரமே ஏற்பட்டுவிடுகின்றன. இதயங்களும் நரம்புகளும் விரைந்து பழுதடைகின்றன.

    ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மது ஏற்படுத்தும் பல பாதிப்புகள் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படவில்லை.

    அதிலும், மது தொடர்பான மருத்துவ ரீதியான சோதனைகள் அனைத்தும் 1990கள் வரை ஆண்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மது என்பது ஆண்கள் தொடர்பான பிரச்சினை என நம்பப்பட்டதுதான் அதற்குக் காரணம்.

    மருத்துவ சோதனைகள் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான அமெரிக்க தேசிய நிறுவனம் உத்தரவிட்டது. இதன் பின்பே நிலைமை மாறத் தொடங்கியது.

    அதன் விளைவாகத்தான் தற்போதைய உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. 
    பெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...
    தற்போது ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்தபடி ‘ஆர்டர்’ கொடுக்கும் வசதி, பில் தொகையை முன்கூட்டியோ அல்லது பொருளைப் பெறும்போதோ அளிக்கும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களை வசீகரிக்கின்றன.

    எங்கே வசதி இருக்கிறதோ, அங்கே சங்கடமும் ஏற்படத்தானே செய்யும்?

    ‘லாஜிக்கல் சர்வே’ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், 38 சதவீதம் பேர் தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போலியான பொருட்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

    அந்தப் போலியான பொருட்களின் பட்டியலில் வாசனைத் திரவியங்கள், காலணிகள் மற்றும் நாகரிகப் பொருட்களே முன்னிலை வகிக்கின்றன.

    இதுபோன்ற நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...

    பொருட்களை வாங்கும்போது அனைவரும் செய்யும் பொதுவான விஷயம், அந்தப் பொருட்களுக்கான மதிப்பீடுகளை (ரிவியூ) பார்ப்பது. ஆனால் அதனுடன் விற்பனையாளர் மீதான மதிப்பீடுகளையும் பார்க்கவேண்டும். இன்று இணைய வர்த்தக நிறுவனங்கள், பொருட்களை வாங்குபவர்களிடம் தங்கள் அனுபவத்தை மதிப்பிட ரிவியூ செய்யுமாறு கூறுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன.

    இந்த ரிவியூக்கள் மூலம் அந்தப் பொருட்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களை மதிப்பிட முடியும். மேலும் இவ்வாறு உங்கள் அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் குறைகளை அந்த இணைய நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் மீது அதிக எதிர்மறையான விமர்சனங்கள் எழும்போது, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    பொருட்களை விற்பனை செய்யும் திரையில் பொருட்களுக்கு அருகில் ‘Fulfilled by Amazon’ அல்லது ‘Flipkart Assured’ என இருந்தால் அது நம்பகமான பொருள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. அந்த மூன்றாம் தரப்பு விற்பனையாளர், இணைய நிறுவனத்தின் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவையைப் பயன்படுத்துவதால் பொருட்களுக்குத் தரும் உத்தரவாதம்தான் இது. எனவே இதைப் பொருட்களின் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது.



    ஒரு பிரபலமான நிறுவனத்தின் பொருட்களை வாங்க நினைக்கும்போது, அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று அதன் மாடல் எண், அம்சங்கள் மற்றும் பிற விஷயங்களைத் தெரிந்துகொண்டு அந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுடன் ஒப்பிட வேண்டும். ஆனால் அந்தப் பொருட்களுக்குத் தற்போது தேவை அதிகம் இல்லையெனில், அதிகத் தள்ளுபடி வழங்குவதும் வழக்கமானதுதான்.

    நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பது போன்ற நுணுக்கமான விஷயங்களைச் சரிபார்க்கலாம். அப்பொருள் செல்போனாக இருக்கும்பட்சத்தில், ஐ.எம்.இ.ஐ. எண்ணைச் சரிபார்க்கலாம். பொருட்களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனே அதைத் திருப்பி அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால் இது, உங்களால் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்குப் பொருந்தாது.

    மின்னணுப் பொருட்கள் போன்ற சிலவற்றுக்கு மட்டும் பொதுவாக திரும்பப்பெறும் காலவரம்பு 10 முதல் 15 நாட்கள் எனக் குறுகியதாக இருக்கும். இதில் 15 நாட்கள் என்பது நீங்கள் பொருளை பதிவு செய்த நாளிலேயே துவங்கி விடும், அது உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பொருள் உங்களிடம் வந்து சேர 5 நாட்கள் ஆகி, நீங்கள் 10 நாட்கள் பயன்படுத்தி 15-வது நாளில் செயல்படாமல் போகிறது என்றால், அந்தப் பொருளுக்கு ஓராண்டு உத்தரவாதம் இருந்தாலும் இணைய வர்த்தக நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்காது. நீங்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை நேரிடையாகத் தொடர்புகொண்டு மாற்றித்தரக் கோரவேண்டும். அது போலியான பொருளாக இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனமும் உங்களுக்கு உதவாது.

    சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிகத் தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அது போலியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். உதாரணமாக, ‘ஸ்போர்ட்ஸ் ஷூ’ போன்றவற்றில், அச்சுஅசலாக உண்மையானதைப் போலவே காட்சியளிக்கும் போலிகளை, சிறப்புத் தள்ளுபடியில் பாதி விலைக்குத் தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம்.

    ஏற்கனவே கூறியபடி, ஒரு மாடல் காலாவதியாகி விட்டால் அதை விற்றுத்தீர்க்க தள்ளுபடி அளிக்கப்படலாம். ஆனால் அது அரிதானதுதான்.

    ஆக, ‘ஆன்லைன் ஷாப்பிங்’கில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டும்.

    ‘அதிரடி தள்ளுபடி’ என்றாலே உஷாராகிவிடுங்கள்! 
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
    மிளகாய் தூள் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
     
    வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
     
    வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
     
    சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.
     
    20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
     
    வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
     
    மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும். வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
     
    ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
     
    வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
     
    100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
     
    200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.
     
    தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.
     
    வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
     
    வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.
    குழந்தைகளுக்கு 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றி கொடுப்பது நல்லது.
    உங்கள் குழந்தை வளர்ந்து சமூகத்துக்குப் பயன்படுகிறவர்களாக இருக்க, ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள். ஐந்து வயதுக்குப் பிறகு, அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

    அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.

    வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.

    அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.

    தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.

    மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.
    தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு - 2 தேக்கரண்டி
    பனி வரகு - 2 தேக்கரண்டி
    தினை - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி
    முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

    வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்கள் மத்தியில் உண்டாகும் சுழற்சி முறையிலான செயற்பாடு. இது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றும் கூறலாம். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இதில், பெண்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாத ஆறு மாதவிடாய் கோளாறுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தீவிர பிடிப்பு காரணமாக தாங்கமுடியாத வலி உண்டாகும். இதற்கு “endometriosis” எனப்படும் இடமகல் கருப்பை அகப்படலம் பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம். Endometriosis என்பது கருப்பையில் வளரும் செல்கள், கருப்பை வெளிப்புற சுவரில் வளர துவங்குவது ஆகும். இதனால் அதிக வலி உண்டாகும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான வலி உண்டாவது இதற்கான அறிகுறியாக இருக்கிறது.
     
    மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு நாட்கள் அதிக இரத்த போக்கு உண்டாகும். கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் போதிலும் கூட அதிக இரத்த போக்கு உண்டாகலாம். ஆனால், நீங்கள் இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் அல்லது புற்றுநோய் செல் வளர்ச்சியின் ஆரம்பம் கூட அதிக இரத்தப்போக்கு ஏற்பட காரணியாக இருக்கலாம்.

    மாதவிடாய் நாட்கள் பத்து நாட்கள் வரை நீடிப்பதும், அல்லது அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பூச்சி / நச்சு அதிகரித்து வளர்தல் போன்ற மருத்துவ நிலையின் காரணமாக இருக்கலாம். இதனால் இரத்த சோகை ஏற்படும். எனவே, இது போன்ற நிலையில் நீங்கள் உடனே பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.
     
    சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் முன்னரே மனோநிலை சமநிலையின்மை உண்டாகும். அசாதாரணமான பசி, அதிகளவில் பதட்டம், மூட் ஸ்விங்ஸ், மன அழுத்தம், மனநிலை கட்டுப்பாடு இழத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன. இது ஓரிரு வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். இதனால் நீங்கள் அசௌகர்யத்திற்கு ஆளாவீர்கள்.
     
    சில மருத்துவ நிலைகள் மாதவிடாயை பாதிக்கும். ஆஸ்துமா இருந்தால் மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்னரே நீங்கள் மோசமாக உணர்வீர்கள். நீரிழிவும், மன அழுத்தம், கீழ் வாதம், மூட்டு வீக்கம் போன்ற பல மருத்துவ நிலைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
     
    கருத்தரிக்காமல் மாதவிடாய் தள்ளிப்போக தைராயிடு, ஹார்மோன் சமநிலையின்மை, டயட்டில் கோளாறு, அதிகளவிலான உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
     
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன.
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். அதிக விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன. பாரம்பரிய திருமண நகைகளின் வகையில் இந்த பெரிய வளையல்கள் பழங்கால வடிவமைப்பு மற்றும் தற்கால வடிவமைப்பு என்றவாறு கூடுதல் மெருகுடன் வடிவமைக்கப்படுகின்றன.

    இந்த பெரிய வளையல்கள் அனைவரின் கவனத்தை தன் வண்ணம் ஈர்க்கும் வகையில் இருப்பதுடன், அணிபவரின் கையின் கவுரவத்தையும், அழகையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து வயதுள்ள பெண்களும் இதனை விரும்பி அணியலாம். குறிப்பாக இளம்வயதினர் மற்றும் மத்திய வயதுள்ள பெண்களே விரும்பி வாங்கி அணிகின்றனர்.

    ஆசிய நாடுகள் பலவற்றிலும் புதிய நவநாகரீக அணிகலனான இந்த பெரிய ஒற்றை தங்க வளையல்கள் அதிகமாக பிரபலமாகி வருகின்றது. இந்த பெரிய வளையல்கள் அனைத்தும் பெரும்பாலும் அணிபவரின் கையில் நுழைந்து சென்று விடாது. காரணம் கையில் கச்சிதமாக அமர்வதற்கு ஏற்ப பிரித்து மாட்டி கொள்ளும் கொக்கியுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வளையல்கள் எவ்வளவு பெரியதாகவும், மெல்லிய மற்றும் தகடு அமைப்பில் இருப்பினும் அணியும் போது வளைவோ, சேதமோ ஏற்படாது. அதிக வேலைப்பாடு மற்றும் எனாமல், கற்கள் பதித்த வளையல்கள் என்பதால் விழாகளுக்கு அணிந்து சென்று உடனே கழற்றி பாதுகாத்திடுவது நலம்.

    தங்கமணி குஞ்சரங்கள் தொங்கும் பிலிகிரி வளையல் :

    அற்புதமான தங்க நகை வேலைப்பாடு நிறைந்த இந்த வளையல் பெண்களின் கரங்களில் ஓர் நடன சாம்ராஜ்யத்தையே நிகழ்த்திடும். ஆம் அந்த அளவிற்கு வளையலின் இரு ஓரப்பகுதிகளிலும் தங்க மணி குஞ்சரங்கள் தொங்குகின்றன. அதில் பட்டையிலான வளைபின்னல் வேலைப்பாட்டின் இடையஇடையே மூன்று தங்க மணிகள் ஊஞ்சலாடுகின்றன. பட்டையான அமைப்பில் வளைவுகளாய் தங்க முத்துக்கள் மேலெழும்பியவாறு இடையில் சல்லடை அமைப்பும் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.



    எனாமல் பட்டாம்பூச்சி பறக்கும் வலை பின்னல் வளையல் :

    பெரிய அகலமான வளைபின்னல் அதிக செதுக்கல்களுடன் இருக்க அதன் மேல் அழகிய வண்ண பட்டாம்பூச்சிகள் மற்றும் பூக்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளாக பிரித்து அணியும் வகை என்பதால் இருபக்கமும் இதே வடிவமைப்பு பிரம்மாண்ட வளையல் அமைப்பை தருகிறது. நேர்த்தியான வளைவுகளுடன் பிலிகிரி வேலைபாட்டுடன் இவ்வளையல் உள்ளது.

    டெம்பிள் வளையல்கள்:

    டெம்பிள் ஜிவல்லரி என்ற இறைஉருவம் பொறித்த மற்றும் கோயில் சின்னங்கள் நகை வடிவமைப்பிலும் பெரிய வளையல்கள் வருகின்றன. கையில் இறுக பிடிக்கும் அமைப்பில் மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, பாரம்பரிய பூவேலைப்பாடு, சின்னங்கள் செதுக்கப்பட்ட இவ்வளையல்கள் அணியும் வகையிலும், மாட்டும் வகையிலும் உருவாக்கி தரப்படுகின்றன.

    கல்பதித்த ஒற்றைவளையல்கள் :

    நடுவில் கயிறு போன்ற அமைப்பும், ஓரப்பகுதிகள் இருபுறமும் ஓவல் வடிவில் நடுப்பகுதி மரகத கல்லும் சுற்றி சிறு சிறு மாணிக்க கல்லும் பதியப்பட்ட அமைப்பும், இடைவெளிவிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே சதுர அமைப்பும் அதில் வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. இதன் கீழ் ஓரப்பகுதிகள் சிறு சிறு முத்துக்களால் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அழகிய முத்து, மாணிக்க, மரகத தோரணம் இருபுறமும் உள்ளவாறு அழகுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை கற்கள் மட்டும் பதித்த பட்டை வடிவ பூ வளையல் மற்றும் பிலிகிரி வளையல்கள் அதிஅற்புதமாக உள்ளன. ஒற்றை பெரிய வளையல்கள் பெண்களின் அழகிய கலைசின்னயமாய் வலம் வருகின்றன.
    நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அவர்கள் இந்த வார்ம் அப் பயிற்சியை வேலையில் நடுவில் செய்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
    நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ‘எங்கே நேரம் கிடைக்கிறது?’ என அலுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும்.

    நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது தசைகள் இறுக்கம் அடைந்திருக்கும். அந்தநேரத்தில் பயிற்சி செய்தால், தசைகள் பாதிக்கப்படும். பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், நிமிர்ந்த நிலையில் சேரில் உட்கார்ந்து, புன்னகையுடன் ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். பாதங்களைத் தரையில் பதித்து, உள்ளங்கைகளைத் தொடைகளில் வைத்து, கண்களை மூடி 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து, வெளிவிட வேண்டும்.

    வார்ம் அப் நிலையில், உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து, ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சு விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும்.

    கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக் கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும்.  கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்: மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்லும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும்.
    சமூகவலைத்தளங்களில் உலவும் பெண்கள் தங்கள் பாதுகாப்பே முதன்மையானது என்பதை மறந்துவிடக்கூடாது. உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமே உங்களை பிரச்சினைகளில் சிக்காமல் விழிப்புடன் வைத்திருக்கும்.
    முகநூல் உபயோகிப்பவர்கள் முன்பின் அறிமுகமில்லாதவருடன் வரம்போடு தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும். அவர்களையும் வரம்பு மீற அனுமதித்துவிடக் கூடாது.

    வலைத்தளத்தில் நீங்கள் பதிவிடும் பதிவுகளை வைத்தே உங்களின் மனநிலையை பிறர் கணித்துவிடக்கூடும். எனவே உங்கள் பதிவுகளின் மீது கவனம் செலுத்தி உங்கள் பலவீனம் வெளியாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் சுயவிவரங்களை ஆயிரக்கணக்கான மக்கள் உலவும் வலைத்தளத்தில் தெரிவித்து உங்கள் தனிமைக்குள் அடுத்தவர் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள்.

    சைபர் கிரைம் குற்றங்கள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் தகவல்களின் பாதுகாப்பு என்பது சமூக வலைத்தளங்களினால் கேள்விக்குறியாகி விட்டது என்பதை எப்பொழுதும் கவனத்தில் வைத்திடுங்கள்.

    சில இளம்பெண்கள் ‘லைக்’குகளை குவிப்பதற்காக அரைகுறை ஆடைகளில் வீடியோக்களில் தோன்றுகின்றனர். இது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றதாகும்.

    சமூகவலைத்தளங்களில் உலவும் பெண்கள் தங்கள் பாதுகாப்பே முதன்மையானது என்பதை மறந்துவிடக்கூடாது. உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமே உங்களை பிரச்சினைகளில் சிக்காமல் விழிப்புடன் வைத்திருக்கும்.

    உங்களது பொருளாதார நிலை, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள், உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளத்தில் ஒருபோதும் பதிவிடக்கூடாது.

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் அதில் செலவிடுங்கள். அதிக நேரத்தை செலவிட்டு அதற்கு அடிமையாகிவிடாதீர்கள். 
    ×