என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • மீந்து போன சப்பாத்தியை மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள்.
    • சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    பெரும்பாலானோர் வீட்டில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அப்படி சப்பாத்தி செய்யும் போது பல நேரங்களில் சப்பாத்தி மீந்து போயிடும். அப்படி மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கு பிடிக்காது. அப்படி போன சப்பாத்தியை வைத்து நூடுல்ஸ் செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி

    முட்டை-4

    பெரிய வெங்காயம்-3

    தக்காளி-3

    இஞ்சி- சிறிது

    பூண்டு- சிறிது

    மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    கடாயை சூடுசெய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தணலில் மூடிவைக்கவும். பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு இட்டு, கிளறி எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

    • நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.
    • வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்.

    நாக்கு புற்றுநோய் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவால் ஏற்படுகிறது. ஸ்குவாமஸ் செல்கள் என்பது தோல் மற்றும் நாக்கின் மேற்பரப்பில் இருக்கும் மெல்லிய, தட்டையான செல்கள் ஆகும்.

    புற்றுநோய் உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். அதன் சில அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தோன்றினாலும், அவை பெரும்பாலும் சாதாரணமானவை என்று புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, அதன் அறிகுறிகள் இறுதிக் கட்டத்தை அடையும் வரை தோன்றாமல் போகலாம். குறிப்பாக நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.

    நாக்கில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம். இந்த புற்றுநோய் நாக்கில் தொடங்கலாம் அல்லது தொண்டையில் தோன்றி பின்னர் வளரலாம். எனவே, அவை இரண்டையும் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


    நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள்:

    இந்த வகை புற்றுநோய் வாய் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இதை எளிதாக கண்டறியலாம். ஏனெனில், அதன் அறிகுறிகள் நாக்கில் எளிதில் தெரியும்.

    அது ஓரோபார்னீஜியல் நாக்கு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. அதன் அறிகுறிகள் சிறிது தாமதத்துடன் தோன்றும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இது நிணநீர் முனைகளுக்கு பரவியுள்ளது. இது நாக்கின் பின்புறத்தில் காணப்பட்டால், முதலில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.


    அறிகுறிகள்:

    * வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்

    * தொடர்ந்து தொண்டை வலி

    * தொண்டையில் சிக்கிக்கொள்வது போன்ற உணர்வு.

    * தொனியில் மாற்றம்

    * தாடையில் வீக்கம்

    * வாய் அல்லது நாக்கில் உணர்வின்மை


    காரணங்கள்:

    நாக்கில் உள்ள ஆரோக்கியமான திசுக்களின் டி.என்.ஏ. மாறத் தொடங்கும் போது புற்றுநோய் தொடங்குகிறது. திசுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் திசுக்களின் டி.என்.ஏ.வில் உள்ளன.

    ஆனால் இதில் உள்ள மாற்றம் என்னவென்றால், திசுக்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையான செயல்முறைகள் மூலம் அவை இறக்கும் நேரம் வந்தாலும் அவை இறக்காது.

    கூடுதல் திசுக்கள் வளர்ந்து கட்டிகளை உருவாவதற்கு காரணமாகிறது. இந்த நிலையில், திசுக்கள் உடைந்து மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். சில நேரங்களில் புற்றுநோய் HPV வைரசாலும் ஏற்படலாம்.

    புகையிலை பயன்பாடு மிகவும் ஆபத்தானது. நீங்கள் எந்த வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் உங்களுக்கு வாய்வழி புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.


    மது அருந்துவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    HPV வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது வாய்வழி புற்றுநோயை ஏற்படுத்தும்.

    சிகிச்சை முறைகள்:

    மருத்துவர் நாக்கின் நிலையை பரிசோதித்து அதற்கு சிகிச்சை அளிப்பார். கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் சில நேரங்களில் நாக்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படுகிறது. அது தொண்டை வரை பரவினால், நிணநீர் முடிச்சு அறுவை சிகிச்சை அவசியம்.

    • பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம்.
    • மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.

    ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா அல்லது அதிக உதிரபோக்கை வெளியேற்றுகிறதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30 முதல் 40 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை இழக்கிறார்கள்.

    உதிரபோக்கை சந்திக்கும் பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இந்த நிலை பெண்ணுக்கு அதிக கனமான ரத்த போக்கை உண்டாக்குகிறது. இந்த அதிக உதிரபோக்கு இருக்கும் பெண்கள் இதை சமாளிக்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கூட நாப்கின், டேம்பன் மாற்றுகிறார்கள். சிலர் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 நாப்கின்கள் வரை மாற்றுகிறார்கள்.

    அதிக ரத்தப்போக்கிற்கான அறிகுறிகள்:

    * ஒரு பெண் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக நாப்கின் பயன்படுத்துவது. அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாப்கீனை பயன்படுத்துவது.

    * மாதவிடாய் நாட்கள் வழக்கத்தை விட அதிக நாட்கள் நீண்டு இருப்பது.

    * மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.

    * அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வழக்கத்தை விட அதிக உடல் சோர்வு.


    அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்கள்:

    இளம் வயதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஈஸ்ட்ரோஜெனுக்கும், புரோஸ்ட்ரோஜென்னுக்கும் இடையில் உண்டாகும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

    இளம் பருவத்தில் கருப்பை செயலிழப்பு, ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் அதிக உதிரப்போக்கை உண்டாக்குகிறது.

    கருப்பை நோய் இருந்தாலும் அல்லது அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

    மேலும் ஹைப்போதைராய்டிசம் தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும் உதிரபோக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

    • தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
    • புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும்.

    வேர்க்கடலை வெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை காலை உணவு முறையில் சேர்ப்பதால், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். இதனால், தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.

    வேர்க்கடலை வெண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திட உதவக்கூடும். இதில் நார்ச்சத்து உள்ளடக்கம் அதிகமாகவே உள்ளது. அவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி குடல் இயக்கத்தையும் மேம்படுத்தக்கூடும். இதனால், மலச்சிக்கல் அபாயம் முற்றிலும் குறையக்கூடும். புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும். இதனால், பிற பணிகளில் எவ்வித சோர்வும் இன்றி கவனத்தை செலுத்த முடியும்

    இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பீனட் பட்டரை (வேர்க்கடலை வெண்ணெய்) 2 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம். வாங்க பார்க்கலாம்...



    தேவையான பொருட்கள்

    வறுத்த வேர்க்கடலை- 1 கப்

    சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

    ஒரு சிட்டிகை உப்பு

    2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை (உங்கள் சுவை விருப்பத்திற்கு ஏற்ப)

    முதலில் மிக்சியில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மென்மையான, கிரீமி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். கட்டியாக இருந்தால் எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் அரைத்தால் பீனட் பட்டர் ரெடி. இதனை ஒரு ஜாரில் போட்டு வைத்து பயன்படுத்தவும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
    • பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஒவ்வொரு நாளும் கலப்படம் செய்யப்பட்ட மளிகைப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவது பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். பருப்பு வகைகள் முதல் மசாலாப் பொருட்கள் வரை எதுவும் பாதுகாப்பானது அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

    அதேபோல தான் பனீர். இந்திய உணவு வகைகளில் பிரதானமான பனீர் அதன் மென்மையான மற்றும் கிரீமி சுவைக்காக விரும்பப்படுகிறது. இருப்பினும், உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

    நீங்கள் அடிக்கடி பேக் செய்யப்பட்ட அல்லது கடையில் விற்கப்படும் பனீர் வாங்குபவராக இருந்தால், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க சில எளிய டிபஸ் இதோ...



    1. பாலை திரைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை பன்னீர் உறுதியான அமைப்பையும், பால் வாசனையையும் கொண்டிருக்கும். ஒரு பனீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    2. பேக் செய்யப்பட்ட பனீர்களுக்கு, லேபிள் அதன் நம்பகத்தன்மைக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கலாம். FSSAI குறி போன்ற தரச் சான்றிதழ்களை எப்போதும் சரிபார்க்கவும். தயாரிப்பு தூய பாலில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்றால் உற்பத்தியாளர்கள் காட்ட வேண்டிய "சாயல்" (imitation) அல்லது "அனலாக்" (analogue) போன்ற குறிப்பிட்ட சொற்களை இருக்கிறதா என்பதை பாருங்கள்.

    3. ஒரு சிறிய துண்டு பனீர் உலர்ந்த பாத்திரத்தில் சூடாக்கவும். உண்மையான பனீர் சிறிது பழுப்பு நிறமாகி, பாத்திரத்தில் நொறுங்கலாம், அதே நேரத்தில் போலி பனீர் சீரற்ற முறையில் உருகலாம், அதிகப்படியான தண்ணீரை வெளியிடலாம் அல்லது எண்ணெயாகவும் தோன்றலாம். இந்த எளிய சோதனை பனீரின் தரத்தை உறுதிப்படுத்த உதவும்.



    4. பனீரின் நம்பகத்தன்மையை சோதிக்க மற்றொரு வழி, அதில் ஸ்டார்ச் உள்ளதா இல்லையா என்பதை அறிய அயோடின் சோதனையைச் செய்வதாகும். ஒரு துண்டு பனீரை வேகவைத்து, அதை ஆறவிடுங்கள், பின்னர் தண்ணீரில் சில துளிகள் அயோடின் டிஞ்சரைச் சேர்க்கவும். கரைசல் நீல நிறமாக மாறுவதை நீங்கள் கண்டால், அது உங்கள் கடையில் வாங்கிய பனீரில் ஸ்டார்ச் இருப்பதைக் காட்டுகிறது.

    5. இந்த சோதனைக்கு, பனீரை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, பின்னர் சிறிது துவரம் பருப்பு பொடியை பனீரின் மீது தெளிக்க வேண்டும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பனீரின் நிறம் வெளிர் சிவப்பாக மாறினால், அது பெரும்பாலும் சோப்பு அல்லது யூரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.

    • ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
    • ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இந்த ஜெல்லை பயன்படுத்து முறைகள் குறித்து பார்க்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி வறட்சி, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


    இயற்கையான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதற்கு ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது

    ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உதவுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.


    ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்

    ஆளி விதை ஜெல் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.

    இதற்கு ஆளிவிதை ஜெல்லை முடிக்கு பயன்படுத்தும் முன்னும், பின்னும் முடி வளர்ச்சியைக் கண்காணித்து வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.

    உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க

    ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை அழற்சி உறுப்பு மாற்றத்தைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் பயன்படுத்துவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.


    சுருள் முடிக்கு ஆளிவிதை ஜெல்

    ஆளிவிதைகளில் உள்ள வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆக்ஸிஜனேற்ற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துச் செயல்பட்டு சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. எனவே இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். சுருள் முடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.

    நரைமுடியை தடுக்கிறது

    ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்தல், முடி முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. 

    • வாசனை திரவியத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
    • பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.

    தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.

    வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள். வெளிநாட்டு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.

    உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.


    ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.


    வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது மனநிலையை மேம்படுத்தும் அதே வேளையில், அது ஆபத்தையும் உருவாக்கும்.

    கூடுதலாக, உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.


    நம்முடை சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது.
    • வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.

    தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது.

    சராசரியாக ஒரு நாளின் முதல் தாம்பத்தியத்தின் போது 5 முதல் 7 நிமிட நேரம் என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் நீடித்தவை, 'மிக நீளமான நேரம்' என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    மேலும் இதில் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு நேரத்தில் உச்சத்தை அடைவதால் இந்த கால அளவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. மேற்குறிப்பிட்ட நேரம் தாம்பத்தியத்தின் முன் உள்ள, பேச்சு கொஞ்சுதல், முத்தம், இவைகளை தவிர்த்தது ஆகும்.


    காரணங்கள்:

    முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு காலத்தில் இது உளவியல் ரீதியானது என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால் இது உளவியல் மற்றும் உடலியல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளை உள்ளடக்கியது என்று சுகாதார வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.

    உளவியல் காரணங்கள்:

    மனச்சோர்வு, பயம், பதற்றம், குற்ற உணர்வுகள், முன்கூட்டியே விந்து வெளியேறி விடுமோ என்று கவலைப்படுதல்.

    உடல் ரீதியான காரணம்:

    ஒழுங்கற்ற ஹார்மோன் அளவுகள், குறிப்பாக குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, டோபமைன், செரட்டோனின் போன்ற மூளை ரசாயனங்களின் குறைந்த அளவுகள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்க்குழாய் வீக்கம் மற்றும் தொற்றுகள், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்கள், மற்றும் உடல் பருமன்.


    உணவுகள், உடற்பயிற்சிகள்:

    இந்த பிரச்சினை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே இதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது. இடுப்பு தசைகளை பலப்படுத்த 'கெகல்' பயிற்சிகளை செய்யலாம். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.

    தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். மாதுளம் பழம், வாழைப்பழம், தர்பூசணி பழம், திராட்சைப் பழம் இவைகளில் ஒன்றை தினசரி சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் நிலவாகைச் சூரணம் 1 கிராம் வீதம் இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பயம், பதற்றம், கவலை, மனச்சோர்வு நீக்குவதற்கு தியானம், பிரார்த்தனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும். இரவு குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


    உணவில் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, முருங்கைக்காய், பசலைக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, முருங்கை விதை, அத்திப்பழம், பேரீட்சை பழம், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், முட்டை, பால், தயிர், மோர், நெய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    • 14 வகை மூக்குகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    • அகத்தின் அழகு முகத்தில் இருக்கிறது.

    ஒருவரின் முகத்தில் அவருடைய மூக்கு எந்த வடிவில், எவ்வாறு அமைந்துள்ளது என்பதை வைத்துத்தான், அவரது முக அழகே முடிவு செய்யப்படுகிறது. கிளி மூக்கு, வளைந்த மூக்கு, அகல மூக்கு, பெரிய மூக்கு, சின்ன மூக்கு, சப்பை மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என்று உலகிலுள்ள மனிதர்களுக்கு சுமார் 14 வகை மூக்குகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.


    வெட்கமோ, கோபமோ, அதிர்ச்சியோ முதலில் சிவந்து போவது மூக்கின் நுனிதான். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் மூக்கினைத்தான் உலகிலுள்ள அநேக பெண்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

    உலகிலேயே கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் சரியான அளவுள்ள சரியான வடிவமுள்ள சரியான அமைப்புள்ள மிக அழகான மூக்கு இருப்பதாக ஒரு பதிவு இருக்கிறது.


    மூக்கு சப்பையாக இருப்பவர்களுக்கு பொதுவாகவே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. ஆனால் அவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அதுவும் ஒரு அழகுதான்.

    மூக்கு தட்டையாக இருப்பதனால், மூக்கின் இரண்டு காற்றுப்பாதைகளும் மிகக் குறுகலாக இருக்கும். இதனால் காற்று எளிதாக உள்ளே போவதும், வெளியே வருவதும் சிரமமாக இருக்கும் என்று நிறையபேர் நினைப்பதுண்டு.

    இதுபோக ஜலதோஷம், புளூ காய்ச்சல், சுவாசப்பாதை தொற்று நோய் சமயங்களில் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போக முடியாமல் ஆகிவிடுகிறது. இம்மாதிரி நேரத்திலெல்லாம் சப்பையாக மூக்கு இருப்பவர்கள் தனக்கு மூக்கு சப்பையாக இருப்பதனால் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது என்று கவலைப்படுவதுண்டு. மேற்கூறிய பிரச்சனைகளுக்கு மூக்கின் வடிவம் ஒரு காரணமல்ல. கவலை வேண்டாம்.

    அதிக அளவில் மூக்கு சப்பையாக இருக்கிறது, பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரைச் சந்தித்து தட்டையான மூக்கை எப்படி வேண்டுமோ அப்படி அழகுபடுத்திக் கொள்ளலாம்.


    'சிலிகான்' என்று அழைக்கக்கூடிய ஒருவித செயற்கை பொருளால் செய்யப்பட்ட இந்த மூக்கு வடிவ பொருளை மூக்கின் நடுவில் உள்ளே பொருத்தி விடுவார்கள். இதற்கு 'நேஸல் இம்ப்ளாண்ட்' என்று பெயர்.

    தட்டையான மூக்கை சரிசெய்ய, உயரப்படுத்த, அழகுபடுத்த செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு 'ரைனோப்ளாஸ்டி' என்று பெயர். மூக்கு அழகின் மேல் அதிகம் கவலைப்படுபவர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் மூக்கின் அழகை மேம்படுத்திக் கொள்ள இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்வதுண்டு.

    அகத்தின் அழகு முகத்தில் இருக்கிறது. முகத்தின் அழகு மூக்கில் இருக்கிறது.

    • வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.
    • சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

    ஹியூமன் மெட்டா நியூமோ (HMPV) வைரஸ் புதியது அல்ல. இது முதன்முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. இது சுவாச அமைப்பை முதன்மையாக பாதிக்கும் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும்.

    காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தொண்டை வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.


    இது பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை தான்.

    மேலும் இது சர்க்கரை நோயாளிகள், புற்று நோய் பாதிப்புள்ளவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து உட்கொள்ளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கைக்குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோருக்கு நிமோனியா, மூச்சுக்குழலழற்சி, சுவாச செயலிழப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    இந்நோய் இருமல் அல்லது தும்மலில் வெளிப்படும் வைரஸ் கலந்த சுவாச துளிகள் மூலமாகவும், தொடுவது அல்லது கைகுலுக்குவது போன்ற நெருங்கிய தொடர்புகளாலும், வைரஸ் படிந்த மேற்பரப்புகளை தொட்டு விட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதாலும் பரவுகிறது.


    இத்தொற்று 1 அல்லது 2 வாரங்களில் தானாகவே சரியாக கூடிய ஒரு தன்னியக்க நோயாகும். இது குளிர் காலங்களில் மட்டுமே காணப்படுகிறது. HMPV வைரஸ் நோய் தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இந்நோய் தொற்று வராமல் தடுக்க வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

    HMPV வைரஸ் தொற்றுக்கும், கோவிட் நோய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்நோயின் இறப்பு விகிதமும் கோவிட் நோயுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. ஆகையால் எச்.எம்.பி வைரஸ் தொற்று குறித்து நீங்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்.

    • பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
    • கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

    பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்கு. கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தருகிறது. அதில் பனங்கிழங்கும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பனை உணவாக திகழ்கிறது.

    உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் பனங்கிழங்கு, கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரத்தில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. இது மருத்துவ குணமும் கொண்டது. இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகையை போக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


    இதில் பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரியான செரிமானத்தை உறுதி செய்கிறது.

    நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை பிரச்சினையை குறைக்கிறது.

    பனங்கிழங்கில் கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியைக் குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

    மெக்னீசியம் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது. அத்துடன் நரம்பு பலவீனம், நரம்புகளில் உள்ள அடைப்புகளையும் நீக்குகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கிறது.

    இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள பாதுகாப்பான வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே, பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    பெருங்குடலில் அசுத்தங்கள் சேராமல் தடுக்கிறது. நச்சுக்களை நீக்குகிறது. பனங்கிழங்கில், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்..

    மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது குறையும்.


    தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் கண்டிப்பாக வழங்கப்படும். இதற்காக பெரும்பாலானோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பனை மரத்தில் இருந்து விழும் பனம்பழத்தை தனித்தனியாக பிய்த்து எடுத்து மண்ணில் புதைத்து வைப்பார்கள். ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பனங்கிழங்கை தோண்டி எடுத்து தங்களது பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இடவசதி இல்லாதவர்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பனங்கிழங்குகளை வாங்குவார்கள்.

    நெல்லை, தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் பனங்கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பணகுடி, திசையன்விளை, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சேர்ந்தமரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, எட்டையபுரம் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    தற்போது நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை சமாதானபுரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.120-க்கும், 25 கிழங்குகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.150-க்கும் விற்கப்படுகிறது.

    பனங்கிழங்கு விளைச்சல் அடைந்த பிறகு அதோடு இணைந்த விதையை உடைத்தால் அதற்குள் கெட்டியான கேக் போன்ற உணவுப் பொருள் இருக்கும். அது தவுன் என்று அழைக்கப்படுகிறது. இதையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர்.

    • வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது.
    • இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும்.

    முடி உதிர்வு, வறட்சியான முடி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும், இதில் சில சமயங்களில் ரசாயனங்கள் கலந்திருப்பதால் முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

    தலை முடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. அந்த வகையில், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

    அன்றாடம் நாம் உணவில் சேர்க்கப்படும் உணவுப்பொருளான வெங்காயம் முடி பராமரிப்புக்கு அற்புதமான நன்மைகளையும் வழங்குகிறது. இதில் தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளை பார்க்கலாம்.


    தலைமுடிக்கு வெங்காய ஹேர் மாஸ்க் உதவுமா?

    வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இயற்கையான மூலப்பொருள் முடி இழைகளுக்கு ஊட்டமளித்து, பலப்படுத்துகிறது.

    மேலும் இது ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தலைமுடிக்கு வெங்காயத்தைப் பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது.

    வெங்காயத்தில் வைட்டமின் சி, பி9, பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இதற்கு வெங்காய சாறு அல்லது வெங்காய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

    இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடி இழைகளுக்கு மென்மையான பிரகாசத்தைத் தருகிறது. இதில் வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கான முறைகளைக் காணலாம்.


    வெங்காயச் சாறு, கற்றாழை ஹேர் மாஸ்க்:

    இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 2 தேக்கரண்டி அளவிலான கற்றாழை ஜெல்லை 2 தேக்கரண்டி வெங்காய சாறுடன் சேர்க்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 30-40 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும்.

    இதற்கு வெங்காயம் சேர்க்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.


    வெங்காயச் சாறு, தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:

    தேங்காய் எண்ணெயுடன் வெங்காயச் சாறு சேர்க்கப்பட்ட ஹேர் மாஸ்க் முடியின் இழைகளை நீரேற்றம் செய்ய வேண்டும்.

    இதற்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் 2 தேக்கரண்டி அளவிலான வெங்காயச் சாறு சேர்க்கலாம்.

    இப்போது இந்த கலவையை முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம்.

    பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைக் கொண்டு தலைமுடியை அலசலாம். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.


    வெங்காய சாறு, தேன் ஹேர் மாஸ்க்:

    இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. எனவே இது முடி சேதம் மற்றும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.

    இதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான தேனுடன் அரை கப் புதிய வெங்காய சாற்றை சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம்.

    இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். முடியில் இந்த கலவையை 15 நிமிடங்கள் வைத்து, பிறகு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவ வேண்டும். இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

    இஞ்சி, வெங்காய சாறு ஹேர் மாஸ்க்:

    இந்த ஹேர் மாஸ்க்கானது அழற்சி எதிர்ப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.

    இந்த கலவையைத் தயார் செய்ய இஞ்சி மற்றும் வெங்காயச் சாற்றை சம அளவு எடுத்து நன்கு கலக்கி தலைமுடிக்குத் தடவலாம்.

    பின்னர் இதை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவும் முன், சுமார் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.

    நாள்தோறும் இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு முடியை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் இது போன்ற பல்வேறு வழிகளில் வெங்காய ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

    ×