என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.
    முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
    முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
    பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
    பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

    காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
    காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
    கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
    காத்தருள்வாயே கற்பக கணபதியே

    அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
    ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
    இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
    ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
    உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
    ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
    எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
    ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
    ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
    ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
    ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
    ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

    அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
    அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
    கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
    கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
    காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
    கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
    பாரதிபாடிய பரமகல்யாணியே
    வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
    வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
    பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
    பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
    மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
    சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
    சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
    எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
    எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
    குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
    சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
    சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
    வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
    கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
    விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
    நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
    பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
    மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
    நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
    நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
    தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
    வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
    கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

    பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
    காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
    ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
    தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
    வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
    நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
    பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
    கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
    காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
    கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
    அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
    நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
    இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
    போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
    போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
    போற்றி போற்றி அங்கயற்கண்ணியே  போற்றி
    போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி

    ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
    நற்பவி நற்பவி நற்பவி ஓம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்.
    அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
    அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
    தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
    தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
    கோதா ஸ்துதி

    பொதுப்பொருள்:

    ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள்  திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.
    ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். இதனால் காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். மனபயம் இருப்பின் அகலும்.
    ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்' என்று தொடங்கி `போற்றி' என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:-

    ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி
    ஓம் ஆஞ்சநேயனே எங்கள் இதய தெய்வமே போற்றி
    ஓம் இன்னலைத் தீர்க்க வந்த இறைவா போற்றி
    ஓம் ஈடு இணையில்லாத வீரதீர இளமையே போற்றி
    ஓம் உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி

    ஓம் ஊறிலா வண்ணம் காக்கும் உத்தமா போற்றி
    ஓம் எண்ணரும் கலைகள் வல்லாய் எளிமையே போற்றி
    ஓம் ஏற்றமே அருளும் செல்வ மாருதி போற்றி
    ஓம் ஐந்தெனும் புலனை வென்ற ஆண்டவா போற்றி
    ஓம் ஒண்ணதி வழங்க வல்ல உயர்குணமே போற்றி

    ஓம் ஓங்காரம் செய்து துள்ளும் உரிமையே போற்றி
    ஓம் ஓளடதம் தேடிச் சேர்ந்த அதிசயம் போற்றி
    ஓம் கண்ணுதல் கருதும் செல்வ கண்மணி போற்றி
    ஓம் காற்றிகை அருளால் வந்த கடமையே போற்றி
    ஓம் கிண்கிணி தண்டை கொண்ட கிளர்ச்சியே போற்றி

    ஓம் கீசகன் பகையின் அண்ணன் அனுமனே போற்றி
    ஓம் குரக்கினத் தலைமைகொள் துணைவா போற்றி
    ஓம் கூரிய சொல்லின் செல்வ சுந்தர போற்றி
    ஓம் கெடுதியை களையும் எங்கள் இறைவனே போற்றி
    ஓம் கேடுகள் நீக்கும் ஆஞ்சநேயனே போற்றி

    ஓம் கைவரு ராம பக்த அனுமனே போற்றி
    ஓம் கொடுமையை நீக்க வந்த குமுதமே போற்றி
    ஓம் கோடி சூரியப்பிரபை கொண்ட இறைவா போற்றி
    ஓம் கௌவையைக்களையும் செல்வ மாருதி போற்றி
    ஓம் சங்கடம் நீக்க எண்ணும் சத்தியம் போற்றி

    ஓம் சாத்திரம் எல்லாம் கற்ற சற்குணா போற்றி
    ஓம் சிந்தனை சிறந்த செல்வ அனுமனே போற்றி
    ஓம் சீரிய ஞானதீப மாருதி போற்றி
    ஓம் சுந்தரமுகம் கொள்ஞான சூக்குமம் போற்றி
    ஓம் சூரியன் மணியான சுடரொளி போற்றி

    ஓம் செந்தமிழ் கம்பன் போற்றும் கீர்த்தியே போற்றி
    ஓம் சேய்மையில் அண்மையாம் துணைவரே போற்றி
    ஓம் சைலமே உறையும் எங்கள் சற்குணா போற்றி
    ஓம் சொர்ணமே மேனியான சுந்தரா போற்றி
    ஓம் சோகமே தீர்ப்பாய் எங்கள் அனுமனே போற்றி

    ஓம் சௌகரியம் சேர்ப்பாய் எங்கள் சஞ்சீவி போற்றி
    ஓம் கடாயெனும் பெயர் கொண்ட கண்மணி போற்றி
    ஓம் காட்டினில் மலையில் வாழும் கற்பகம் போற்றி
    ஓம் கிளிபயில் சோலை எல்லாம் திரிகுவை போற்றி
    ஓம் கீண்டினை அசுரர் மாளக் கீர்த்தியே போற்றி

    ஓம் குறைவறு கல்வி ஞானம் படைத்தனை போற்றி
    ஓம் கூறு சொல் தன்னின் செல்வன் சுந்தரன் போற்றி
    ஓம் கெடுதியைச் சாய்த்து நீக்கும் அனுமன் போற்றி
    ஓம் கேடறியாத தூத இறைவனே போற்றி
    ஓம் கைநகம் வஜ்ரமான கண்மணி போற்றி

    ஓம் கொள்கையில் உறுதி வாய்ந்த மாருதி போற்றி
    ஓம் கோட்டையைத் தாண்டும் செல்வ மாருதி போற்றி
    ஓம் கௌபீன் இறைவன் போற்றும் கனகமே போற்றி
    ஓம் தண்ணிழல் ஆன எங்கள் புண்ணியா போற்றி
    ஓம் தாங்கரும் துயரும் தீர்க்கும் தருநிழல் போற்றி

    ஓம் திண்ணிய உரம்கொள் தேகா மாருதி போற்றி
    ஓம் தீமையை நீக்கும் செல்வ அனுமனே போற்றி
    ஓம் துணிவினில் சிறந்த எங்கள் அனுமனே போற்றி
    ஓம் தூய்மை வாய்மை வாய்ந்த மெய்ம்மையே போற்றி
    ஓம் தெளிவுறு கேள்வி ஞானம் கிளர்த்துவை போற்றி

    ஓம் தேடியே சஞ்சீவி நல்கும் கீர்த்தியே போற்றி
    ஓம் தையலாம் சீதை போற்றும் தூதனே போற்றி
    ஓம் தொழில் நலம் வலிமை நல்கும் தூயவா போற்றி
    ஓம் தோள்வலி மிக்க ராம தூதனே போற்றி
    ஓம் தௌமியன் போற்றும் ஞான அனுமனே போற்றி

    ஓம் நற்குண சீலரே மாருதி வீர போற்றி
    ஓம் நாடிய தரவே வல்லாய் நாயக போற்றி
    ஓம் நிச்சயம் பிரம்மச்சரியம் காத்தனை போற்றி
    ஓம் நீடிய பகையை நீக்கும் நிறைகுணம் போற்றி
    ஓம் நுண்மைகொள் அறிவு கொண்ட மாருதி போற்றி

    ஓம் நாலறி புலவ ஞான பானுவே போற்றி
    ஓம் நெற்றியில் நாமம் காட்டும் நெறியதே போற்றி
    ஓம் நேர்ந்தனை ராம நாமம் தூதனே போற்றி
    ஓம் நைந்திடும் நிலைமை நீக்கும் நாயகா போற்றி
    ஓம் நொந்திட வண்ணம் காக்கும் நோக்கமே போற்றி

    ஓம் நோயினை அண்டா வண்ணம் காக்க நீ போற்றி
    ஓம் நௌவிபின் சென்ற இராம தூதரே போற்றி
    ஓம் பலநலம் கொண்ட எங்கள் பரமனே போற்றி
    ஓம் பாலக வஜ்ர தேகா அனுமனே போற்றி
    ஓம் பிலமதில் சென்று வெற்றி சேர்த்தனை போற்றி

    ஓம் பிழைகள் நீக்கும் செல்வ மாருதி போற்றி
    ஓம் புன்மைகள் தன்னை நீக்கும் புனிதமே போற்றி
    ஓம் பூவுடைக் கானம் வாழும் பூரண போற்றி
    ஓம் பெருமைக்கொள் உரமே பெற்ற பரமனே போற்றி
    ஓம் பேசரு வியாகரணம் பிறவெலாம் கற்றாய் போற்றி

    ஓம் பைம்பொழில் திரியும் அன்பே அனைத்தும் போற்றி
    ஓம் பொறுமை கொள் அறத்தின் தூத புண்ணியா போற்றி
    ஓம் போயினை வென்றாய் நன்றாய் பூரண போற்றி
    ஓம் பௌவமே தாவிப் பாயும் பரமனே போற்றி
    ஓம் எக்குலத் தாரும் போற்றும் இறைவனே போற்றி

    ஓம் எங்ஙணும் நீயே உள்ளாய் இறைவனே போற்றி
    ஓம் அச்சரத்தால் வாலி அழிந்திடச் செய்தாய் போற்றி
    ஓம் அஞ்சனை செல்வ அரிய செம்மணியே போற்றி
    ஓம் திட்டமாய் செயல் செய்யும் தினகரன் தூத போற்றி
    ஓம் திண்ணமாய் வெற்றி தரும் ஆஞ்சநேயனே போற்றி

    ஓம் எத்திறம் தனிலும் வல்ல இனிய மாருதியே போற்றி
    ஓம் எந்தையர் சிந்தை வாழும் இறைவ மாருதியே போற்றி
    ஓம் எம்மருங்கினிலும் வாழும் இறைவா போற்றி
    ஓம் எப்பரம் பொருளும் வாழ்த்தும் இனியவா போற்றி
    ஓம் எவ்வனம் செலினும் உய்வன சொல்வாய் போற்றி

    ஓம் எய்திடும் இனிமை எல்லாம் இயற்றுவை போற்றி
    ஓம் இல்லற ராம தூதன் எங்கள் மாருதியே போற்றி
    ஓம் நள்ளிரா தன்னில் காக்கும் காலசஞ்சீவி போற்றி
    ஓம் ஆழ்கடல் கடந்த வஜ்ர தேகனே இறைவா போற்றி
    ஓம் பாற்கடல் பிறந்த மாது பரிவுறும் கடமை போற்றி

    ஓம் மார்பினை பிளந்து மாயன் மகத்துவம் அளித்தாய் போற்றி
    ஓம் பன்னலம் சேர்க்கும் எங்கள் பத்ம தேகனே போற்றி
    ஓம் நன்னயம் சேர்க்கும் எங்கள் இராம தூதனே போற்றி
    ஓம் பொன்னவிர் அஞ்சனை தந்த புதுமையே போற்றி

    ஓம் நூற்கடல் கடந்த எங்கள் நுண்மையே போற்றி
    ஓம் நாற்பயன் விளைக்கும் எங்கள் நாயகா போற்றி
    ஓம் பாற்படு பொருளில் எல்லாம் படர்ந்தனை போற்றி
    ஓம் போற்றியே அனும போற்றி
    பூரணா போற்றி போற்றி.
    இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.
    நம்மில் பலருக்குக் கண்பார்வையில் சில குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாக நேரும். கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.

    அந்த ஸ்லோகம் இதுதான்.

    லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:
    மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா:
    ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:
    உன்மீலனேன தவ தேவி நிமீலனேன

    இந்த ஸ்லோகத்தின் சாரம் இதுதான்.

    தேவீ, பக்தர்கள் கேட்கும் வரங்களை நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள் ஆகின்றனர். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். உன்னைப் போலவே மீன்களும் கண் சிமிட்டாமல் இருக்கிறது. காதுவரை நீண்டிருக்கும் உனது அழகிய திருநயனங்கள, உன் கண்களைப் போலவே எப்போதும் கண் சிமிட்டாமல் இருக்கும் மீன்களைப் பற்றி கோள் சொல்வதுபோல் இருக்கிறது.

    இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யமுடியாதவர்கள், காஞ்சிபுரத்தில் அருளும் அருள்மிகு ஏகாம்பரநாதர்பேரில் பதிகம் பாடி ஒரு கண்ணின் பார்வையைப் பெற்ற சுந்தரரின் பதிகத்தை பாராயணம் செய்யலாம்.
    கெட்ட விளைவுகளை முறியடிக்க இந்த புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள். உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    இந்த மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர் பெறச் செய்யும் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாகவோம். ஆனால் பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற்கெட்டாத காலத்திலிருந்தும் நமது உணர்வானது மாசடைந்துள்ளது.

    நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயை உடனேயே நிறுத்த முடியும். கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும். இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது. ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும். ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது. இது பேச்சு வ-ழக்கில் ஹரே என்று மாறி உள்ளது. இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

    ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும். மந்திர உச்சாடனமானது கட்டுண்ட அத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும். தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது இந்த மந்திர உச்சாடனம். ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்னர் என்று அழிக்கப்படும் உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.

    ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    என்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த மந்திரம் ஒன்றுமில்லை. தற்போதைய கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 6 நாமங்களே, பிறரிப் பெருங்கடலைக் கடக்க இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள். உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.
    இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. இவரது மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் கடன்கள் படிப்படியாக குறையும்.
    நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.

    இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,

    “ஓம் கணேசாய ருணம்
    சிந்தி வரேண்யம்
    ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

    என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

    “ஓம் க்லௌம் க்ரோம்
    கணேசாய ருணம் சிந்தி
    வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

    என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும். சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும். மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

    அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதியை பார்க்கலாம்.
    ஓம் சுமுகாய நம
    ஓம் ஏகதந்தாய நம
    ஓம் கபிலாய நம
    ஓம் கஜகர்ணகாய நம
    ஓம் லம்போதராய நம
    ஓம் விநாயகாய நம
    ஓம் விக்னராஜாய நம
    ஓம் கணாத்பதியே நம
    ஓம் தூமகேதுவே நம
    ஓம் கணாத்ய க்ஷசாய நம
    ஓம் பாலசந்திராய நம
    ஓம் கஜானனாய நம
    ஓம் வக்ரதுண்டாய நம
    ஓம் சூர்ப்ப கன்னாய நம
    ஓம் ஏரம்பாய நம
    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம 
    சிவபெருமானுக்கு உகந்த இந்த சிவபுராணத்தை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
    தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி
    நேயத்தே நின்ற நிமல னடி போற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்
    சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்

    கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

    ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறத்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன் பாகிக் கசிந்து ள்ளுருகும்
    நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா வமுதே அளவிளாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே யுள்ளானே

    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங்காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக் காய் நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

    அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து!!!

    திருச்சிற்றம்பலம்
    விநாயகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும். தடைகள் அகலும்.
    சிந்தித் தவர்க்கருள்
    கணபதி ஜெய ஜெய!
    சீரிய வானைக்
    கன்றே ஜெய ஜெய!

    அன்புடை யமரரைக்
    காப்பாய் ஜெய ஜெய!
    ஆவித் துணையே
    கணபதி ஜெய ஜெய!

    இண்டைச் சடைமுடி
    யிறைவா ஜெய ஜெய!
    ஈசன் தந்தருள்
    மகனே ஜெய ஜெய!

    உன்னிய கருமம்
    முடிப்பாய் ஜெய ஜெய!
    ஊர்நவ சக்தி
    யுகந்தாய் ஜெய ஜெய!

    எம்பெரு மானே
    யிறைவா ஜெய ஜெய!
    ஏழுல குந்தொழ
    நின்றாய் ஜெய ஜெய!

    ஐயா கணபதி
    நம்பியே ஜெய ஜெய!
    ஒற்றை மருப்புடை
    வித்தகா ஜெய ஜெய!

    ஓங்கிய வானைக்
    கன்றே ஜெய ஜெய!
    ஔவிய மில்லா
    அருளே ஜெய ஜெய!

    அஃகர வஸ்து
    வானவா ஜெய ஜெய!
    கணபதி யென் வினை
    களைவாய் ஜெய ஜெய!

    ஙப்போர் மழுவொன்
    றேந்தியே ஜெய ஜெய!
    சங்கரன் மகனே
    சதுரா ஜெய ஜெய!

    ஞயநம் பினர்பா
    லாடிய ஜெய ஜெய!
    இடம்படு விக்கின
    விநாயகா ஜெய ஜெய!

    இணங்கிய பிள்ளைகள்
    தலைவா ஜெய ஜெய!
    தத்துவ மறைதெரி
    வித்தகா ஜெய ஜெய!

    நன்னெறி விக்கின
    விநாயகா ஜெய ஜெய!
    பள்ளியி லுறைதரும்
    பிள்ளாய் ஜெய ஜெய!

    மன்று ளாடும்
    மணியே ஜெய ஜெய!
    இயங்கிய ஞானக்
    குன்றே ஜெய ஜெய!

    அரவக் கிண்கிணி
    யார்ப்பாய் ஜெய ஜெய!
    இலகக் கொம்பொன்
    றேந்தியே ஜெய ஜெய!

    வஞ்சனை பலவுந்
    தீர்ப்பாய் ஜெய ஜெய!
    அழகிய வானைக்
    கன்றே ஜெய ஜெய!

    இளமத யானை
    முகத்தாய் ஜெய ஜெய!
    இரகுபதி விக்கின
    விநாயகா ஜெய ஜெய!
    அனந்தலோ டாதியி
    லடிதொழ வருளே!!!
    இந்த மகாலட்சுமி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான சாபமும் நிவர்த்தியாகும்.
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் முறை ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் சித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
    ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
    ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
    ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
    ஓம் சேஷ சாயினே நம:
    ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
    ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
    ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
    ஓம் பூதாவாஸாய நம:
    ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
    ஓம் காலாதீதாய நம:

    ஓம் காலாய நம:
    ஓம் காலகாலாய நம:
    ஓம் காலதர்பதமனாய நம:
    ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
    ஓம் அமர்த்யாய நம:
    ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
    ஓம் ஜீவாதாராய நம:
    ஓம் ஸர்வாதாராய நம:
    ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
    ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

    ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
    ஓம் ஆரோக்யக்ஷேமதாய நம:
    ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
    ஓம் ருத்திஸித்திதாய நம:
    ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
    ஓம் யோகக்ஷேமவஹாய நம:
    ஓம் ஆபத்பாந்தவாய நம:
    ஓம் மார்க்பந்தவே நம:
    ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
    ஓம் ப்ரியாய நம:

    ஓம் ப்ரீதிவர்தனாய நம:
    ஓம் அந்தர்யாமினே நம:
    ஓம் ஸச்சிதாத்மனே நம:
    ஓம் ஆனந்தாய நம:
    ஓம் ஆனந்ததாய நம:
    ஓம் பரமேச்வராய நம:
    ஓம் பரப்ரம்ஹணே நம:
    ஓம் பரமாத்மனே நம:
    ஓம் ஞானஸ்வரூபிணே நம:
    ஓம் ஜகத பித்ரே நம:

    ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
    ஓம் பக்தாபயப்ரதாய நம:
    ஓம் பக்த பாராதீனாய நம:
    ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
    ஓம் சரணாகதவத்ஸலாய நம:
    ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
    ஓம் ஞான வைராக்யதாய நம:
    ஓம் ப்ரேமப்ரதாய நம:

    ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

    ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

    ஓம் கர்மத்வம்சினே நம:
    ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
    ஓம் குணாதீத குணாத்மனே நம:
    ஓம் அனந்த கல்யாண குணாய நம:
    ஓம் அமித பராக்ரமாய நம:
    ஓம் ஜயினே நம:
    ஓம் துர்தர்ஷாக்ஷப்யாய நம:
    ஓம் அபராஜிதாய நம:
    ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
    ஓம் அசக்யராஹிதாய நம:

    ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
    ஓம் ஸுருபஸுந்தராய நம:
    ஓம் ஸுலோசனாய நம:
    ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
    ஓம் அரூபாவ்யக்தாய நம:
    ஓம் அசிந்த்யாய நம:
    ஓம் ஸூக்ஷ்மாய நம:
    ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
    ஓம் மனோவாக தீதாய நம:
    ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

    ஓம் ஸுலபதுர்லபாய நம:
    ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
    ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
    ஓம் ஸர்வ பாரப்ருதே நம:

    ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
    ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
    ஓம் தீர்த்தாய நம:
    ஓம் வாஸுதேவாய நம:
    ஓம் ஸதாம் கதயே நம:
    ஓம் ஸத்பராயணாய நம:

    ஓம் லோகநாதாய நம:
    ஓம் பாவனானகாய நம:
    ஓம் அம்ருதாம்சவே நம:

    ஓம் பாஸ்கரப்ரபாய நம:
    ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
    ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
    ஓம் ஸித்தேச்வராய நம:
    ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
    ஓம் யோகேச்வராய நம:
    ஓம் பகவதே நம:

    ஓம் பக்தவத்ஸலாய நம:
    ஓம் ஸத்புருஷாய நம:
    ஓம் புருஷாத்தமாய நம:
    ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
    ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

    ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
    ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
    ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
    ஓம் வேங்கடேசரமணாய நம:
    ஓம் அத்புதானந்தசர்யாய நம:

    ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
    ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
    ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
    ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
    ஓம் ஸர்வமங்களகராய நம:
    ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
    ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
    ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

    மங்களம் மங்களம் மங்களம்
    காமதேனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
    ஓம் சுபகாயை வித்மஹே
    காமதாத்ரியை சதீமஹி தந்தோ
    தேனு: ப்ரசோதயாத்.

    பசு காயத்ரி மந்திரம்:-

    ஓம் பசுபதயேச வித்மஹே
    மகா தேவாய தீமஹி
    தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

    பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.

    பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.
    ×