search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapati mantra"

    இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. இவரது மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் கடன்கள் படிப்படியாக குறையும்.
    நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.

    இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,

    “ஓம் கணேசாய ருணம்
    சிந்தி வரேண்யம்
    ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

    என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

    “ஓம் க்லௌம் க்ரோம்
    கணேசாய ருணம் சிந்தி
    வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

    என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும். சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும். மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

    அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
    இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

    ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம்
    ஹ்ரீம் க்லீம் க்லௌம்
    கம் கணபதயே
    வர வரத ஐம் ப்ளூம்
    சர்வ வித்யாம்
    தேஹி ஸ்வாஹா
    ×