என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன். அவளுக்கு உகந்த மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ காளி தியானம்

    வாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்
    கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்
    திக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
    விஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம்

    பொருள்: இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன்.

    மூல மந்திரம்

    க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே
    க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

    காயத்ரீ மந்திரம்

    ஓம் மஹாகாள்யை வித்மஹே
    ச்மசான வாஸின்யை தீமஹி
    தந்நோ கோர ப்ரசோதயாத்
    ஸ்ரீ காளி அஷ்டோத்திர சத நாமாவளி
    ஓம் காள்யை நம
    ஓம் கபாலின்யை நம
    ஓம் காந்தாயை நம
    ஓம் காமதாயை நம
    ஓம் சுந்தர்யை நம
    ஓம் காளராத்ர்யை நம
    ஓம் காளிகாயை நம
    ஓம் காலபைரவ பூஜிதாயை நம
    ஓம் குருகுல்லாயை நம
    ஓம் காமின்யை நம
    ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
    ஓம் குலீனாயை நம
    ஓம் குலகர்த்ர்யை நம
    ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
    ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
    ஓம் காம்யாயை நம
    ஓம் காம ஸ்வரூபிண்யை நம
    ஓம் ககாரவர்ண நிலயாயை நம
    ஓம் காமதேனவே நம
    ஓம் கராளிகாயை நம
    ஓம் குலகாந்தாயை நம
    ஓம் கராளாஸ்யாயை நம
    ஓம் காமார்த்தாயை நம
    ஓம் கலாவத்யை நம
    ஓம் க்ருசோதர்யை நம
    ஓம் காமாக்யாயை நம
    ஓம் கௌமார்யை நம
    ஓம் குலஜாயை நம
    ஓம் குலமான்யாயை நம
    ஓம் கீர்த்திவர்தின்யை நம
    ஓம் கமஹாயை நம
    ஓம் குலபூஜிதாயை நம
    ஓம் காமேச்வர்யை நம
    ஓம் காமகாந்தாயை நம
    ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
    ஓம் காமதாத்ர்யை நம
    ஓம் காமஹர்த்ர்யை நம
    ஓம் க்ருஷ்ணாயை நம
    ஓம் கபர்தின்யை நம
    ஓம் குமுதாயை நம
    ஓம் கிருஷ்ண தேஹாயை நம
    ஓம் காளிந்த்யை நம
    ஓம் குலபூஜிதாயை நம
    ஓம் காச்யப்யை நம
    ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
    ஓம் குலிசாங்க்யை நம
    ஓம் கலாயை நம
    ஓம் க்ரீம் ரூபாயை நம
    ஓம் குலகம்யாயை நம
    ஓம் கமலாயை நம
    ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
    ஓம் க்ருசாங்க்யை நம
    ஓம் கின்னர்யை நம
    ஓம் கர்த்ர்யை நம
    ஓம் கலகண்ட்யை நம
    ஓம் கார்த்க்யை நம
    ஓம் கம்புகண்ட்யை நம
    ஓம் கௌலின்யை நம
    ஓம் கௌமுத்யை நம
    ஓம் காம ஜீவன்யை நம
    ஓம் குலஸ்த்ரியை நம
    ஓம் கீர்த்திதாயை நம
    ஓம் க்ருத்யாயை நம
    ஓம் கீர்த்தயே நம
    ஓம் குலபாலிகாயை நம
    ஓம் காமதேவகலாயை நம
    ஓம் கல்பலதாயை நம
    ஓம் காமாங்க வர்த்தின்யை நம
    ஓம் குந்தாயை நம
    ஓம் குமுதப்ரியாயை நம
    ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
    ஓம் காதம்பின்யை போற்றி
    ஓம் கமலின்யை நம
    ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
    ஓம் குமாரீ பூஜனரதாயை நம
    ஓம் குமாரீ கண சோபிதாயை நம
    ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
    ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
    ஓம் கங்காளாயை நம
    ஓம் கமனீயாயை நம
    ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
    ஓம் கபாலகட்வாங்க தராயை நம
    ஓம் காலபைரவ ரூபிண்யை நம
    ஓம் கோடர்யை நம
    ஓம் கோடராக்ஷ்யை நம
    ஓம் காச்யை நம
    ஓம் கைலாச வாஸின்யை நம
    ஓம் காத்யாயன்யை நம
    ஓம் கார்யகர்யை நம
    ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம
    ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
    ஓம் காமபீட நிவாஸின்யை நம
    ஓம் கங்கின்யை நம
    ஓம் காகின்யை நம
    ஓம் க்ரீடாயை நம
    ஓம் குத்ஸிதாயை நம
    ஓம் கலஹப்ரியாயை நம
    ஓம் குண்டகோலோலோத்பவ நம
    ஓம் ப்ராணாயை நம
    ஓம் கௌசிக்யை நம
    ஓம் கும்ரஸ்தன்யை நம
    ஓம் கலாக்ஷயை நம
    ஓம் காவ்யாயை நம
    ஓம் கோகநதப்ரியாயை நம
    ஓம் காந்தாரவாஸின்யை நம
    ஓம் காந்த்யை நம
    ஓம் கடினாயை நம
    ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
    ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம

    மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும்.
    ஸ்ரீரங்கம், ரெங்கநாதரை போற்றும் அற்புதமான ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ரெங்கநாதரை வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் வசந்தம் வரும்.
    காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
    ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
    விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
    ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
    அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!
    ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||

    இது அரங்கத்தையும் அரங்கனின் புகழையும் பாடும் துதி.
    பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.
    லலிதாம்பிகை மந்திரம்
    ஓம் லலிதாம்பிகாய் நமஹ.

    பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி திதிகளில் அருகில் இருக்கும் அம்பிகை கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை 108 அல்லது 1008 உரு ஜெபிப்பதால் உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் படிப்படியாக நீங்கும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.
    சத்யவானின் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.
    ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
    வேதமாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
    பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
    அவைதவ்யம் ஸௌபாக்யம்
    தேஹித்வம் மம ஸுவ்ருதே
    புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
    ஸௌமங்கல்யம் ச தேஹிமே

    பொதுப்பொருள்:

    தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புத்தகம் இவைகளை தரித்துக்கொண்டு இருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரி எனும் சாவித்ரி தேவியே உனக்கு நமஸ்காரம். கணவன் என்னிடத்தில் அன்பு குறையாது இருத்தல் வேண்டும். தீர்க்க சுமங்கலி வரத்தை தாயே எனக்கு அருள வேண்டும். பக்தர்களை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன தேவியே! நான் சௌபாக்யத்துடன் வாழ தாங்கள் அருள வேண்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமி மந்திரங்களை தினமும் ஒரு முறை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.
    குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.

    "ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
    ஸர்வ துர்க்க ஹரே தேவி
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

    நான் மகாலட்சுமிக்கு தேவிக்கு வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் அனைத்து வலி மற்றும் துயரங்களையும் அகற்றிடுவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

    "ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

    தாயே, நீங்கள் மிகப்பெரிய சக்தியாக உள்ளீர்கள், நீங்கள் மகிழ்ச்சிக்கும் செல்வத்துக்கும் பொறுப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக பெரிய பாவங்களையும் அழித்துவிடவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

    "மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக
    ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா"

    இத்தகைய புனிதமான ஸ்தோத்திரத்தை முழு பக்தியுடனும் எப்போதும் எல்லா வகையான திறன்களையும் எல்லா வகையான ஞானத்தையும் தருகிறாய். மேலும், இதை துதிப்பவர்கள் அனைத்து ஆடம்பரமாக பொருட்களையும் சொந்தமாகக் கொண்டிருப்பார் மற்றும் உலக ஆசைகளை நிறைவேற்றுவார்.

    சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது. தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும்.
    ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே
    ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ

    மகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம் மாலை என உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது நல்லது. திங்கள்கிழமைகள், மாத சிவராத்திரி பிரதோஷ தினங்களில் வீட்டில் நமது கைவிரல் அளவிற்கும் குறைந்த அளவில் உள்ள சிவலிங்கத்திற்கு தும்பை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து இம்மந்திரத்தை 27முறை துதித்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து மனக்கவலைகள் மற்றும் துன்பங்களும் சிவனின் அருளால் நீங்கும்.

    கயிலாய மலையில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவபெருமான் தனது ஆற்றலால் உலகில் அனைத்திற்கும் காரகனாக இருக்கிறார். வழிபடும் பக்தர்களின் பக்திக்கு எளிதில் வரமளிக்கும் கருணாமூர்த்தியாக இருப்பவர் சிவன். அவரை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது. தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும். அந்த சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துக்கங்களும், மனக்கவலைகளும் முற்றிலும் நீங்கும்.
    இன்று சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.

    சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம். 
    சீரடி சாய் பாபாவிற்கு உகந்த இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:

    ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:

    ஓம் சேஷ சாயினே நம:

    ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:

    ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:

    ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

    ஓம் பூதாவாஸாய நம:

    ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:

    ஓம் காலாதீதாய நம:

    ஓம் காலாய நம:

    ஓம் காலகாலாய நம:

    ஓம் காலதர்பதமனாய நம:

    ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

    ஓம் அமர்த்யாய நம:

    ஓம் மர்த்யாபயப்ரதாய நம:

    ஓம் ஜீவாதாராய நம:

    ஓம் ஸர்வாதாராய நம:

    ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:

    ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

    ஓம் அன்னவஸ்த்ரதாய நம:

    ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:

    ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:

    ஓம் ருத்திஸித்திதாய நம:

    ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:

    ஓம் யோக÷க்ஷமவஹாய நம:

    ஓம் ஆபத்பாந்தவாய நம:

    ஓம் மார்க்பந்தவே நம:

    ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:

    ஓம் ப்ரியாய நம:

    ஓம் ப்ரீதிவர்தனாய நம:

    ஓம் அந்தர்யாமினே நம:

    ஓம் ஸச்சிதாத்மனே நம:

    ஓம் ஆனந்தாய நம:

    ஓம் ஆனந்ததாய நம:

    ஓம் பரமேச்வராய நம:

    ஓம் பரப்ரம்ஹணே நம:

    ஓம் பரமாத்மனே நம:

    ஓம் ஞானஸ்வரூபிணே நம:

    ஓம் ஜகத பித்ரே நம:

    ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:

    ஓம் பக்தாபயப்ரதாய நம:

    ஓம் பக்த பாராதீனாய நம:

    ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:

    ஓம் சரணாகதவத்ஸலாய நம:

    ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:

    ஓம் ஞான வைராக்யதாய நம:

    ஓம் ப்ரேமப்ரதாய நம:


    ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

    ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

    ஓம் கர்மத்வம்சினே நம:

    ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:

    ஓம் குணாதீத குணாத்மனே நம:

    ஓம் அனந்த கல்யாண குணாய நம:

    ஓம் அமித பராக்ரமாய நம:

    ஓம் ஜயினே நம:

    ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:

    ஓம் அபராஜிதாய நம:

    ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:

    ஓம் அசக்யராஹிதாய நம:

    ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:

    ஓம் ஸுருபஸுந்தராய நம:

    ஓம் ஸுலோசனாய நம:

    ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:

    ஓம் அரூபாவ்யக்தாய நம:

    ஓம் அசிந்த்யாய நம:

    ஓம் ஸூக்ஷ்மாய நம:

    ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:

    ஓம் மனோவாக தீதாய நம:

    ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

    ஓம் ஸுலபதுர்லபாய நம:

    ஓம் அஸஹாய ஸஹாயாய நம:

    ஓம் அநாதநாத தீனபந்தவே நம:

    ஓம் ஸர்வ பாரப்ருதே நம:

    ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:

    ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:

    ஓம் தீர்த்தாய நம:

    ஓம் வாஸுதேவாய நம:


    ஓம் ஸதாம் கதயே நம:

    ஓம் ஸத்பராயணாய நம:

    ஓம் லோகநாதாய நம:

    ஓம் பாவனானகாய நம:

    ஓம் அம்ருதாம்சவே நம:

    ஓம் பாஸ்கரப்ரபாய நம:

    ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:

    ஓம் சத்ய தர்ம பராயணாய நம:

    ஓம் ஸித்தேச்வராய நம:

    ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:

    ஓம் யோகேச்வராய நம:

    ஓம் பகவதே நம:

    ஓம் பக்தவத்ஸலாய நம:

    ஓம் ஸத்புருஷாய நம:

    ஓம் புரு÷ஷாத்தமாய நம:

    ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:

    ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

    ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:

    ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:

    ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:

    ஓம் வேங்கடேசரமணாய நம:

    ஓம் அத்புதானந்தசர்யாய நம:

    ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:

    ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:

    ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:

    ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:

    ஓம் ஸர்வமங்களகராய நம:

    ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:

    ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:

    ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

    மங்களம் மங்களம் மங்களம்.
    இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.
    மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை சொல்லலாம்.

    ‘ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாம

    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்

    தஸ்ய ஸ்மரந மாத்ரேன ஹூதம்

    நஷ்டஞ்சலப்யதே’

    இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    பிள்ளையாரை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம், நம்மால் அதிகப்படியான பலனை பெற முடியும்.
    பொதுவாகவே எல்லா வகையான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும், முழுமுதற் கடவுள் என்றால், அது விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். சுலபமான முறையில் எல்லோராலும் வணங்கப்படும் தெய்வம் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எல்லோருக்கும் மிகுந்த பிடித்தமான கடவுள் என்றாலும், அந்த வரிசையில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பிள்ளையாரை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம், நம்மால் அதிகப்படியான பலனை பெற முடியும். உங்களுக்கான மந்திரம் இதோ

    ஓம் கற்பகநாதா அருள்புரிவாய்!

    இந்த மந்திரத்தை காலை வேளையில் உச்சரிக்கலாம். இன்று உங்களுடைய காலை நேர பூஜை முடித்து இருந்தால், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 308 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிக சிறப்பான பலனை தரும். உங்களுடைய பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு உங்களால் முடிந்த நைய்வேத்தியம் வைத்து, தீப ஆராதனை காட்டி முடித்து, அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களுடைய சதுர்த்தி விரதத்தை முடிப்பது மிகவும் உகந்தது.
    தினம் தோறும் நாம் வீட்டில் இருந்தே நம்முடைய குருவுக்கு நன்றி தெரிவிக்க என்ன மந்திரத்தை உச்சரிக்கலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    பொதுவாக எந்த பெரியவர்களை பார்த்தாலும் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது மிகவும் நல்ல ஒரு விஷயம்தான். vetrilai-pakku-pazham ஜாதகத்தில் இருக்கும் குரு தோஷத்தை கூட, குருவின் ஆசீர்வாதத்தால் போக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பல மகத்துவங்களைக் கொண்ட உங்களுடைய, குருவிற்கு நீங்கள் தினந்தோறும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால், இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். உங்களுக்கான குரு மந்திரம் இதோ..

    ஓம் நமோ வந்தே குரு பரம்பராம்!

    தினம்தோறும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நெய்தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய குருவை மனதார நினைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்து, குருவிற்கு நன்றி தெரிவித்து, அந்த நாள் பொழுதை தொடங்கிப் பாருங்கள்! குருவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து, அந்த நாள் முழுவதும் சிறப்பாக செல்வதை உணர முடியும்.
    கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப் பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்.


    கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
    முஷிக வாகனனே மூலப் பொருளோனே
    ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
    திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
    சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)

    சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
    கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
    அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

            செய்யுள்

    ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
    சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)

    குருகுகா சரணம் குருபரா சரணம்
    சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
    தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
    ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
    தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)

    அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
    அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
    அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
    தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
    ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)

    காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
    போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
    போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
    போற்றி போற்றி முருகா போற்றி
    அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)

    தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
    ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
    சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
    அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
    திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)

    ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
    அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
    அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
    வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
    வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)

    தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
    திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
    பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
    திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
    செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)

    அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
    அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
    திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
    திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
    எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)

    பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
    எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
    எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
    என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
    திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)

    அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
    திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
    ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
    செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
    சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)

    குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
    குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
    பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
    பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
    விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)

    வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
    வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
    கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
    காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
    மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)

    கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
    குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
    வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
    வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
    ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)

    ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
    அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
    அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
    பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
    பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)

    அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
    படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
    உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
    உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
    அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... (80)

    அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
    அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
    சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
    வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
    யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)

    யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
    உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
    சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
    அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
    நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)

    பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
    உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
    யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
    முக்திக்கு வித்தான முருகா கந்தா
    சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... (95)

    ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
    ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
    தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
    சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
    பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)

    ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
    அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
    உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
    தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
    வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)

    காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
    வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
    மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
    அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
    அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... (110)

    உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
    அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
    வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
    உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
    அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... (115)

    அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
    சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
    சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
    அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
    அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... (120)

    அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
    ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
    தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
    நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
    பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... (125)

    அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
    அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
    சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
    சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
    சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... (130)

    சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
    சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
    ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
    தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
    திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... (135)

    சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
    கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
    தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
    தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
    தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... (140)

    மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
    வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
    வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
    வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
    பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)

    என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
    நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
    புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
    கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
    நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... (150)

    செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
    கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
    உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
    நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
    பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)

    கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்
    தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
    கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
    மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
    மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... (160)

    ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
    உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
    நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
    இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
    புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... (165)

    உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
    தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
    அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
    என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
    முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... (170)

    பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
    க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
    ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
    ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... (175)

    ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
    முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
    மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
    முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
    முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... (180)

    ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
    இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
    முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
    காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
    சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... (185)

    தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
    ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
    முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
    அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
    எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... (190)

    முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
    பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
    கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
    கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
    ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... (195)

    வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
    வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
    சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
    அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
    அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)

    சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
    நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
    மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
    வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
    பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)

    பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
    பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ
    பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
    பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
    திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)

    பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
    ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
    குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
    கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
    ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)

    பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
    பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
    தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
    எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
    ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... (220)

    சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
    சரவண பவனே சரவண பவனே
    உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
    உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
    என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)

    சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
    இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
    இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
    மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
    ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)

    சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
    காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
    சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
    நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
    திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... (235)

    திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
    திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
    நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
    நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
    அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... (240)

    ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
    ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
    மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
    வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
    தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... (245)

    துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
    பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
    இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
    ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
    அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... (250)

    மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
    கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
    ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
    இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
    என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)

    அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
    வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
    அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
    சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
    ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)

    ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்
    அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
    அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
    அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
    அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)

    உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
    உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
    எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
    அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
    அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)

    அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
    அன்பே தேவரும் அன்பே மனிதரும்
    அன்பே நீயும் அன்பே நானும்
    அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
    அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... (275)

    அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
    அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
    அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
    எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
    அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)

    ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
    முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
    ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
    ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
    இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... (285)

    எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
    முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
    நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
    உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
    நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... (290)

    விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
    நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
    ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
    சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
    சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... (295)

    ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
    மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
    கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
    கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
    கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)

    கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
    மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
    சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
    சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
    பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் ...... (305)

    புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
    கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... (310)

    ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
    நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
    பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
    கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
    சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... (315)

    கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
    ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
    அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ
    அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
    சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... (320)

    பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
    பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
    மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
    சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
    ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... (325)

    சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
    பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
    திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
    குமரா முருகா குருகுகா வேலவனே
    அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... (330)

    கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
    ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
    ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
    போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
    தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... (335)

    ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
    தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
    ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
    கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
    ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... (340)

    உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
    கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
    கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
    புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
    திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... (345)

    புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
    நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
    நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
    முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
    உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... (350)

    அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
    முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
    அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
    அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
    ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... (355)

    முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
    ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
    சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
    சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
    வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... (360)

    சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
    சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
    சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
    சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
    ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... (365)

    சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
    சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
    அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
    திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
    ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... (370)

    பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
    பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
    இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
    முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
    அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... (375)

    சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
    கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
    பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
    கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
    கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... (380)

    கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
    சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
    ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
    அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
    ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... (385)

    வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
    பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
    சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
    ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல்
    கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... (390)

    முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
    அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
    ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
    கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
    சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... (395)

    பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
    கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன்
    பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
    திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
    காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... (400)

    ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
    கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
    உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
    இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
    துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் ...... (405)

    இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
    பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
    காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
    கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
    இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... (410)

    தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
    போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
    ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
    அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
    ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... (415)

    உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
    தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
    எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
    ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
    தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... (420)

    கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
    கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
    கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
    பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
    ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... (425)

    ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
    இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
    முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
    நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர்
    ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று ...... (430)

    ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
    ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
    எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும்
    ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
    பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே ...... (435)

    கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
    கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
    முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
    நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
    கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... (440)

    கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
    உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
    சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
    கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
    கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... (445)

    கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
    பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... (447)
    ×