என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனுக்கு உகந்த காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமுல் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீரபத்ரர் அருளை பெறலாம்.
    சிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனும் அன்னையால் உருவான பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை அழித்த விதம் புராணங்களில் இலக்கியங்களில் உள்ளன. வீரபத்திரன் ஆலயங்கள் அநேகமாக வடக்கு நோக்கியே உள்ளன. மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும் இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் தலையின் முன் உச்சியில் சிவலிங்கம் காணப்படுகிறது.

    ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரீ

    ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
    பக்தரக்ஷாய தீமஹி
    தந்நோ வீரபத்திரஹ் ப்ரசோதயாத்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறினால் கிருஷ்ணர் அருள் பூரணமாகக்கிடைக்கும். மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"
    "ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே"

    எனும் மந்திரத்தை தினமும் 108 முறை கூறினால் கிருஷ்ணர் அருள் பூரணமாகக்கிடைக்கும். மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை மன்+திரம் என பிரித்து பொருள் காணவேண்டும்.

    மன் என்றால் மனம்,
    திரம் என்றால் விடுவிப்பது,

    அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால் ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு மகா மந்திரம் என்று பெயர். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஜெபிக்கத் தொடங்குங்கள் அந்த சின்னக் கண்ணன் நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.
    அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.
    அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

    வடஇந்தியாவில் இதனை அதிகம் பேர் ஜபித்துப் பலன் அடைந்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை அன்று இதைத் துவங்கவும்.

    மந்திரம் :

    நமக்காக ஜெபிக்கும் போது

    ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா||

    பிறருக்காக ஜெபிக்கும் போது

    ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா||

    ( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர் )
    யந்திரம் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.
    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன்.
    ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். தினமும் `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.

    `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
    வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
    ஹனுமன் ப்ரசோதயாத்'

    என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். 
    உங்கள் செல்ல மகள் அல்லது மகனின் திருமணம் எந்த தடையும் இன்றி நிறைவேற இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் நிச்சயம்.
    உங்கள் செல்ல மகள் அல்லது மகனின் திருமணம் எந்த தடையும் இன்றி நிறைவேற இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் விரைவில் உங்கள் துயர் நீங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மந்திரம் காலை, மாலை என இரு வேளையிலும் திருமணம் நடக்க வேண்டிய ஆண் மகன் பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். எந்த அளவிற்கு பக்தி சிரத்தையுடன் அவர்கள் உச்சரித்து வருகிறார்களோ அந்த ஆளவிற்கு பலனும் விரைவில் கிடைக்கும்.

    விதேஹி தேவி கல்யாணம்
    விதேஹி விபுலாம் ச்ரியம்
    ரூபம் தேஹி ஜயம் தேஹி
    யசோ தேஹி த்விஷா ஜஹி!!
    பத்னீம் மனோரமாம் தேஹி
    மானோவ்ருத்தனு ஸாரீனீம்
    தாரினீம் துர்கஸம்ஸார
    ஸாகரஸய குலோத்பவாம்!!
    விதேஹி தேவி கல்யாணம்
    விதேஹி விபுலாம் ச்ரியம் ரூபம்
    தேஹி ஜயம் தேஹி
    யசோதேஹி த்விஷா ஜஹி!! 
    பைரவருக்கு உகந்த இந்த அஷ்டோத்திர சத நாமாவளி தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.
    01. ஓம் பைரவாய நமஹ
    02. ஓம் பூத நாதாய நமஹ
    03. ஓம் பூதாத்மனே நமஹ
    04. ஓம் பூதபாவநாய நமஹ
    05. ஓம் க் சேத்ர தாய நமஹ

    06. ஓம் க்சேத்ரக்ஞாய நமஹ
    07. ஓம் க்சேத்ர பாலாய நமஹ
    08. ஓம் சத்ரியாய நமஹ
    09. ஓம் விராஜே நமஹ
    10. ஓம் மாசான வாசினே நமஹ

    11. ஓம் மாம்சாசினே நமஹ
    12. ஓம் ஸர்ப்பராஜயே நமஹ
    13. ஓம் ஸ்மார்ந்தக்ருதே நமஹ
    14. ஓம் ரக்தபாய நமஹ
    15. ஓம் பானபாய நமஹ

    16. ஓம் சித்தாய நமஹ
    17. ஓம் சித்திதாய நமஹ
    18. ஓம் சித்த சேவிதாய நமஹ
    19. ஓம் கங்காளாய நமஹ
    20. ஓம் காலசமானாய நமஹ

    21. ஓம் கலாய நமஹ
    22. ஓம் காஷ்டாய நமஹ
    23. ஓம் தநவே நமஹ
    24. ஓம் தவயே நமஹ
    25. ஓம் த்ரிநேத்ரே நமஹ

    26. ஓம் பகுநேத்ரே நமஹ
    27. ஓம் பிங்களலோசனாய நமஹ
    28. ஓம் சூலபாணயே நமஹ
    29. ஓம் கட்க பாணயே நமஹ
    30. ஓம் கங்காளிநே நமஹ

    31. ஓம் தூம்ரலோசனாய நமஹ
    32. ஓம் அபீரவவே நமஹ
    33. ஓம் பைரவாய நமஹ
    34. ஓம் நாதாய நமஹ
    35. ஓம் பூதபாய நமஹ

    36. ஓம் யோகினி பதயே நமஹ
    37. ஓம் தநதாய நமஹ
    38. ஓம் தனஹாரிணே நமஹ
    39. ஓம் தனவதே நமஹ
    40. ஓம் ப்ரீதி பாவனாய நமஹ

    41. ஓம் நாகஹாராய நமஹ
    42. ஓம் நாக பாசாய நமஹ
    43. ஓம் வ்யோமகேசாய நமஹ
    44. ஓம் கபால ப்ருதே நமஹ
    45. ஓம் காலாய நமஹ

    46. ஓம் கபால மாலிநே நமஹ
    47. ஓம் கமநீயாய நமஹ
    48. ஓம் கலாநிதியே நமஹ
    49. ஓம் த்ரிலோசனாய நமஹ
    50. ஓம் ஜ்வாலந் நேத்ராய நமஹ

    51. ஓம் த்ரிசிகிநே நமஹ
    52. ஓம் த்ரிலோக பாய நமஹ
    53. ஓம் த்ரிநேத்ர தனதாய நமஹ
    54. ஓம் டிம்பாய நமஹ
    55. ஓம் சாந்தாய நமஹ

    56. ஓம் சாந்த ஜனப்ரியாய நமஹ
    57. ஓம் வடுகாய நமஹ
    58. ஓம் வடுவேஸாய நமஹ
    59. ஓம் கட்வாங்க வரதாரகாய நமஹ
    60. ஓம் பூதாத்யக்ஷ்சாய நமஹ

    61. ஓம் பசுபதயே நமஹ
    62. ஓம் பிக்ஷுதாய நமஹ
    63. ஓம் பரிசாரகாய நமஹ
    64. ஓம் தூர்தாய நமஹ
    65. ஓம் திகம்பராய நமஹ

    66. ஓம் சூராய நமஹ
    67. ஓம் ஹரிணாய நமஹ
    68. ஓம் பாண்டுலோசனாய நமஹ
    69. ஓம் ப்ரசாந்தாய நமஹ
    70. ஓம் சாந்திதாய நமஹ

    71. ஓம் சித்தாய நமஹ
    72. ஓம் சங்கராய நமஹ
    73. ஓம் ப்ரியபாந்தவாய நமஹ
    74. ஓம் அஷ்டமூர்த்தியே நமஹ
    75. ஓம் நிதீசாய நமஹ

    76. ஓம் ஞான கடாட்சே நமஹ
    77. ஓம் தபோமயாய நமஹ
    78. ஓம் அஷ்டாதாராய நமஹ
    79. ஓம் சடாதாராய நமஹ
    80. ஓம் ஸர்ப்ப யுக்தாய நமஹ

    81. ஓம் சிகீஸகாய நமஹ
    82. ஓம் பூதராய நமஹ
    83. ஓம் பூதராதீசாய நமஹ
    84. ஓம் பூபதயே நமஹ
    85. ஓம் பூதராத்மஜாய நமஹ

    86. ஓம் கங்கால தாரிணே நமஹ
    87. ஓம் முண்டிநே நமஹ
    88. ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ
    89. ஓம் ஜ்ரும்பணோ மோஹன ஸ்தம்பீ மாரண க்ஷோபனாய நமஹ
    90. ஓம் சுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நமஹ

    91. ஓம் தைத்யக்நே நமஹ
    92. ஓம் முண்டபூஷிதாய நமஹ
    93. ஓம் பலிபுஜே நமஹ
    94. ஓம் பலிபுங் நாதாய நமஹ
    95. ஓம் பாலாய நமஹ

    96. ஓம் அபால விக்ரமாய நமஹ
    97. ஓம் ஸர்வ ஆபத்தோரணாய நமஹ
    98. ஓம் துர்க்காய நமஹ
    99. ஓம் துஷ்டபூத நிவேசிதாய நமஹ
    100. ஓம் காமிநே நமஹ

    101. ஓம் கலாநிதையே நமஹ
    102. ஓம் காந்தாய நமஹ
    103. ஓம் காமினி வசக்ருதே நமஹ
    104. ஓம் வசினே நமஹ

    105. ஓம் சர்வசித்தி பிரதாய நமஹ
    106. ஓம் வைத்யாய நமஹ
    107. ஓம் பிரபவே நமஹ
    108. ஓம் விஷ்ணவே நமஹ

    சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
    சங்கரா சதாசிவா சபாபதே மனோஹரா
    சந்த்ரசேகர ஈஸ்வரா உமா மஹேஸ்வரா. (ச).

    சடையா சதகுருநாதா சோமேஸ்வரா
    சஞ்சலம் தீர்க்கும் சொக்கேஸ்வரா
    நம்பியவரைக் காப்பாய் நடனேஸ்வரா
    நன்மைகளின் நாயகனே நாகேஸ்வரா. (ச).

    பரமஞானியே பசுபதீஸ்வரா
    பராக்ரமனே பார்புகழ் ப்ரகதீஸ்வரா
    பூர்ணேஸ்வரா புண்ணிய புவனேஸ்வரா
    பீஜேஸ்வரா ப்ரம்ம ப்ராணேஸ்வரா. (ச).

    ஈஸ்வரா ஆதீஸ்வரா ஓங்காரேஸ்வரா
    பக்தியில் ஆழ்ந்த பட்டீஸ்வரா
    தீரா அருள் தாராய் தியாகேஸ்வரா
    திருவருள் புரிவாய் பரமேஸ்வரா. (ச).
    நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும் எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.
    இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும். நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும், எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

    மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
    மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
    நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
    நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
    மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
    மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
    காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
    கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண் வைப்பாய் கமலத்தாயே...!

    நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டு
    நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
    கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு
    கொஞ்சிடும் பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!
    ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
    என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
    ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
    அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே...!

    நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்
    நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்
    பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்து மூடி
    பரம்பரைப் பெருமை காப்பார்
    பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே
    அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு
    ஆனந்தம் கொள்வதுண்டு
    இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே
    இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே...!

    மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
    மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
    அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டு
    அண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !
    பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
    பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்
    பிழைப்பன்யான் அருள் செய்வாயே,
    பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே...!

    கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு
    கார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலை
    மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!
    மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!
    செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்
    திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்
    கொய்தெடு விழியை என்மேல் கொண்டு வந்தருள் செய்வாயே
    கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே..!

    போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
    போரின்றிக் குருதியின்றிப் புறங்காணத் துடித்து வந்த
    மாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய்
    மங்கையின் விழிகளன்றோ! மாலவன் தன்னை வென்ற
    தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலே
    திருமலை வேங்கடேசன் திறத்தினை வென்றான் அன்றோ!
    கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்
    கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே...!

    மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
    இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
    இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்
    சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்
    தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும்
    எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!
    இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே...!

    எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி
    இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி
    தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்
    தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும்
    அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்
    அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்
    இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே
    இல்லத்தைச் செல்வமாக்கி இன்னருள் புரிவாய் தாயே...!

    நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்
    நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!
    சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்
    சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்
    வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்
    வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!
    தேர்கொண்டேன் புரவி இல்லை செல்வமாம் புரவியாலே
    திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே..!

    ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி
    அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி
    ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்
    அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்
    தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
    திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்
    வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே
    வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே..!

    வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி
    சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி
    கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி
    ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி
    பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி
    நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி போற்றி
    பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி  போற்றி
    மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி போற்றி...!

    அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி
    அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி
    குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி
    குளிர்ந்தமா மதியினோடும் குடி வந்த உறவே போற்றி
    மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி
    மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி
    என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி
    எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி போற்றி...!

    தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி
    தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி
    தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி
    தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி
    தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்
    தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி
    தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி
    தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி போற்றி..!

    பெண்ணெனப் பிறந்தாயேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி
    பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி
    தண்ணளி வேங்கடத்தான் தழுவிடும் கிளியே போற்றி
    தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி
    சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி
    ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி
    பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி
    பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி போற்றி..!

    கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி
    கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி
    மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி
    மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி
    விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி
    விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி
    எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி போற்றி
    இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி போற்றி...!

    மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி
    வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி
    மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி
    விரித்தமேற் புலனுக்கெல்லாம் விளங்காத பொருளே போற்றி
    கைநிறை செல்வம்யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி
    காக்கையை அரசனாக்கும் கைமலர் உடையாய் போற்றி
    செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி
    சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி போற்றி...!

    மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி
    மூவுலகங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி
    தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி
    தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி
    ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி
    ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி
    தாள்களில் பணிந்தேனம்மா தண்ணருள் தருவாய் போற்றி
    தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி போற்றி...!

    கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி
    காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி
    வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி
    வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி
    பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி
    பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி
    விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி
    வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி...!

    மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
    மங்கைக்கு நன்னீராட்ட கங்கை நீர் குடத்தில் மாந்தி
    தண்டலக் கூந்தல் ஊற சர்வமங்கள நீ ராட்டி
    தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
    மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
    மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
    அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே
    அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்...!

    பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே
    பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ
    ஏவுமோர் உலகத்துள்ளே இன்மையோன் ஒருவனே தான்
    இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்
    தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்
    சநிதிரப் பிறைப் பூங்கண்ணி சற்று நீ திரும்பிப் பார்த்தால்
    மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்
    மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி போற்றி..!

    முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி
    மூவிரண்டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக
    அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
    ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்
    இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும்
    இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்
    நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும் என்றும்
    நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை...!
    சிவபெருமானுக்கு உகந்தது இந்த ஸ்லோகம், இதை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடுசெய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
    அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
    அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய .....
    ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஐயப்பன் நம்மை கவலைகளில் இருந்து படிப்படியாக விடுதலை அளிப்பார்.
    வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்
    வரமருளும் அப்பனே வந்தருள்வாய்
    வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்
    வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்
    உலகாளும் காவலனே வந்தருள்வாய்
    ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்
    எருமேலி வாசனே வந்தருள்வாய்
    எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்
    சதகுரு நாதனே வந்தருள்வாய்
    சகல கலை வல்லோனே வந்தருள்வாய்
    கலியுக வரதனே வந்தருள்வாய்
    கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்
    குகன் சகோதரனே வந்தருள்வாய்
    கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்
    இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்
    இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்
    மணிகண்டப் பொருளே வந்தருள்வாய்
    ஐயன் ஐயப்ப சாமியே ..... வந்தருள்வாய்.
    தினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும்.
    ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

    ஓம் மித்ராய நமஹ...... சிறந்த நண்பன்
    ஓம் ரவயே நமஹ...... போற்றுதலுக்குரியவன்
    ஓம் சூர்யாய நமஹ...... ஊக்கம் அளிப்பவன்
    ஓம் பானவே நமஹ...... அழகூட்டுபவன்
    ஓம் ககாய நமஹ...... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்
    ஓம் பூஷ்ணே நமஹ...... புத்துணர்ச்சி தருபவன்
    ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ...... ஆற்றல் அளிப்பவன்
    ஓம் மரீசயே நமஹ...... நோய்களை அழிப்பவன்
    ஓம் ஆதித்யாய நமஹ...... கவர்ந்திழுப்பவன்
    ஓம் சவித்ரே நமஹ...... சிருஷ்டிப்பவன்
    ஓம் அர்க்காய நமஹ...... வணக்கத்திற்கு உரியவன்
    ஓம் பாஸ்கராய நமஹ...... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

    மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.இத்துணை சக்தி வாய்ந்த நம் கண்முன்தெரியும் கடவுளாகிய சூரியனை தினம் நமஸ்கரித்து நோய்களின்றும் விடுபட்டு நலமுடன் வாழ்வேமே..
    இந்த துதியை தினமும் சொல்லி விஷ்ணுவை வழிபாடு செய்து வந்தால் மனகஷ்டங்கள் படிப்படியாக விலகும். புது நம்பிக்கை பிறக்கும்.
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே கிருஷ்ண தேவாய
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமாய
    ஓம் நமோ பகவதே சீதா ராமாய
    ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயாய
    ஓம் நமோ பகவதே ஹனுமந்தாயா
    ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய
    ஓம் நமோ பகவதே சதகுரு நாதாய
    ஓம் நமோ பகவதே ஆபத்சகாய
    ஓம் நமோ பகவதே தசாவதாராய
    ஓம் நமோ பகவதே கரிவரத ராஜாய
    ஓம் நமோ பகவதே புருஷோத்தமாயா
    ஓம் நமோ பகவதே சங்கு சக்ராய
    ஓம் நமோ பகவதே கஸ்தூரி திலகாய
    ஓம் நமோ பகவதே சாந்தகுண சீலாய
    ஓம் நமோ பகவதே சர்வலோகேசாய
    ஓம் நமோ பகவதே வைகுண்ட வாசாய
    ஓம் நமோ பகவதே ஹரி நமோ நாராயணாய.
    ×