search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    சங்கரா சதாசிவா மனோஹரா பக்தி துதி

    சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
    சங்கரா சதாசிவா சபாபதே மனோஹரா
    சந்த்ரசேகர ஈஸ்வரா உமா மஹேஸ்வரா. (ச).

    சடையா சதகுருநாதா சோமேஸ்வரா
    சஞ்சலம் தீர்க்கும் சொக்கேஸ்வரா
    நம்பியவரைக் காப்பாய் நடனேஸ்வரா
    நன்மைகளின் நாயகனே நாகேஸ்வரா. (ச).

    பரமஞானியே பசுபதீஸ்வரா
    பராக்ரமனே பார்புகழ் ப்ரகதீஸ்வரா
    பூர்ணேஸ்வரா புண்ணிய புவனேஸ்வரா
    பீஜேஸ்வரா ப்ரம்ம ப்ராணேஸ்வரா. (ச).

    ஈஸ்வரா ஆதீஸ்வரா ஓங்காரேஸ்வரா
    பக்தியில் ஆழ்ந்த பட்டீஸ்வரா
    தீரா அருள் தாராய் தியாகேஸ்வரா
    திருவருள் புரிவாய் பரமேஸ்வரா. (ச).
    Next Story
    ×