search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    எல்லா சங்கடங்களும் தீர இந்த ஸ்லோகம் சொல்லுங்க

    பிள்ளையாரை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம், நம்மால் அதிகப்படியான பலனை பெற முடியும்.
    பொதுவாகவே எல்லா வகையான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும், முழுமுதற் கடவுள் என்றால், அது விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். சுலபமான முறையில் எல்லோராலும் வணங்கப்படும் தெய்வம் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எல்லோருக்கும் மிகுந்த பிடித்தமான கடவுள் என்றாலும், அந்த வரிசையில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பிள்ளையாரை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம், நம்மால் அதிகப்படியான பலனை பெற முடியும். உங்களுக்கான மந்திரம் இதோ

    ஓம் கற்பகநாதா அருள்புரிவாய்!

    இந்த மந்திரத்தை காலை வேளையில் உச்சரிக்கலாம். இன்று உங்களுடைய காலை நேர பூஜை முடித்து இருந்தால், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 308 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிக சிறப்பான பலனை தரும். உங்களுடைய பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு உங்களால் முடிந்த நைய்வேத்தியம் வைத்து, தீப ஆராதனை காட்டி முடித்து, அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களுடைய சதுர்த்தி விரதத்தை முடிப்பது மிகவும் உகந்தது.
    Next Story
    ×