என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சிலருக்கு திருமணத்தை நடத்தி தராமல் தோஷத்தை உமிழும் இந்த கருணையற்ற களத்திர தோஷம் பலருக்கு திருமணம் நடந்த பிறகு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
    திருமணம் தொடர்பான பாவகங்களான 1 ,2,7,8 ஆகிய ஸ்தானங்களில் அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது அமர்வது அல்லது ஏழாம் இடத்தில் நீசம், அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் அமர்வதாகும்.

    இந்த தோஷ அமைப்பை பெற்றவர்களுக்கு தாமதத் திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை இருக்கும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாதவருடன் வாழ்வது.

    அல்லது சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் சதா சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதியை இழப்பது அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது அல்லது விவாகரத்து பெறுவது அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடுவது போன்ற ஏதாவது இடரைத் தந்து கொண்டே இருக்கும்.

    உளவியல் ரீதியாக ஆயிரம் ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொண்டால் 900 ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கவே செய்யும். பலருக்கு களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7மிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும்.

    களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்ரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.
    அதேபோல் களத்திர தோஷம் உள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம். இந்த சூட்சமத்தை பின்பற்றாமல் 7-ம் இடத்தில் நிற்கும் அசுப கிரகங்களை மையப்படுத்தி களத்திர தோஷம் என பலரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது நியாயமா? ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம்.

    மேலும் களத்திர தோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார்.
    கடலூர் மாவட்டம் திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதா் என்ற திருக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், 33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு மூலவராக சிவபெருமான் இருந்தாலும், பொள்ளாப் பிள்ளையார் தான் பிரசித்திப் பெற்ற தெய்வமாக இருக்கிறார்.

    இவா் பல அற்புதங்களைச் செய்தவா் ஆவார். இந்த ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தவா் அனந்தேசா். இவா் ஒரு முறை வெளியூர் செல்ல நோ்ந்ததால், தனது சிறுவயது மகனை அழைத்து, விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்யும்படி கூறிச் சென்றார். அந்தச் சிறுவனின் பெயா் நம்பியாண்டார் நம்பி. அவனுக்கு உண்மையிலேயே நைவேத்தியத்தை விநாயகா் சாப்பிடுவார் என்ற எண்ணம் இருந்தது. அதனால் பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு, நைவேத்தியத்தை சாப்பிடும்படி விநாயகரிடம் கூறினான்.

    தந்தை பூஜை செய்தால்தான் சாப்பிடுவாரா விநாயகா், நான் நைவேத்தியம் வைத்து பூஜித்தால் ஏற்றக்கொள்ளமாட்டாரா என்று மனம் வருந்திய அந்தச் சிறுவன், விநாயகரின் கல்சிலை மீது தன் தலையை மோதிக்கொண்டான். அறியாமை என்றாலும் அவன் கொண்ட பக்திக்கு இரங்கிய விநாயகா், அவன் முன்பாகத் தோன்றி, அவன் படைத்த நைவேத்தியத்தை உண்டு, நம்பியாண்டார் நம்பிக்கு ஞானத்தையும் வழங்கினார். இந்தச் செய்தி நாடெங்கும் பரவி, நம்பியாண்டார் நம்பியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது.

    சில காலம் கழித்து, சோழா்களில் சிறந்தவனான ராஜராஜசோழனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தேவாரப்பாடல்களும், திருத்தொண்டா்கள் வரலாறும் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை பிற்கால சந்ததியா் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தேவாரப்பாடல்கள் எங்கிருக்கிறது என்பது தொியவில்லை. அப்போது நம்பியாண்டார் நம்பியைப் பற்றி அறிந்த ராஜராஜ சோழன், அவரிடம் வந்து தேவாரப்பாடல்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதையடுத்து நம்பியாண்டார் நம்பி, தான் எப்போதும் வணங்கும் பொள்ளாப் பிள்ளையாரிடம் இதுபற்றி கேட்டார்.

    அவை அனைத்தும் தில்லையில் ஒரு அறையில், மூவா் கை முத்திரையுடன் வைக்கப்பட்டிருப்பதை, நம்பியாண்டார் நம்பிக்கு, விநாயகா் கூறியருளினார். அதன்பிறகு தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் சென்று, அங்கிருந்த தேவாரப் பாடல்கள், திருத்தொண்டா்கள் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடிகளை ராஜராஜசோழனும், நம்பியாண்டார் நம்பியும் மீட்டனா்.

    பின்னா் அந்த பாடல்களை, நம்பியாண்டார் நம்பி ‘திருமுறைகள்’ என்ற பெயரில் தொகுத்தார்.

    திருமுறைகள் 12 இருக்கிறது, அதில் 11 திருமுறைகளை தொகுத்தவா், நம்பியாண்டார் நம்பி. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார்.

    திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களில், நம்பியாண்டார் நம்பி பாடிய பிரபந்தங்களும் அடங்கியிருக்கிறது.
    சிவபெருமானின் எட்டு மூர்த்தங்களில் ஒருவராகவும், ஈசனின் வலது கண்ணாகவும் இருப்பதால் 'சிவசூரியன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
    பகவத் கீதையில், 'ஆதித்யானாம் அஹம் விஷ்ணு' என்கிறார் கிருஷ்ணர். இதற்கு 'நானே சூரியனாக இருக்கிறேன்' என்று பொருள். மகாவிஷ்ணு போல் சங்கும், சக்கரமும் ஏந்தியிருப்பதால், சூரியனுக்கு 'சூரிய நாராயணன்' என்ற பெயரும் உண்டு. சிவபெருமானின் எட்டு மூர்த்தங்களில் ஒருவராகவும், ஈசனின் வலது கண்ணாகவும் இருப்பதால் 'சிவசூரியன்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    சூரியன் இந்த உலகை வலம் வரும் தேர், ஒரு ரத சப்தமி நாளில் மகாவிஷ்ணுவால் வழங்கப்பட்டது. 'காலம்' என்னும் ஒற்றை சக்கரம் கொண்டது இந்தத் தேர். அதில் 7 குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்ற பெயர்களைக் கொண்ட, சூரியனின் தேரில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளும், வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கின்றன.

    சூரியனின் காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயத்தை தினமும் படித்து வந்தால், சூரியனின் அருளால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். சூரியனை மட்டும் வழிபடும் வழக்கம் உள்ளவர்களை 'சவுமாரம்' என்ற சமயத்தவராக குறிப்பிடுகின்றனர். இந்த சமயத்தினர் முன்காலத்தில் சூரியனுக்கு ரத்தத்தை கைகளில் அள்ளி சமர்ப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். ஆதிசங்கரர் இந்தப் பழக்கத்தை தடுத்து நிறுத்தினார்.
    இறைவனுக்கு, அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, காஞ்சி மகா பெரியவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..
    ஆலய கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு, அலங்காரம் முடியும் வரை திரையிடப்படும். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு, தீபாராதனை காட்டுவார்கள். இப்படி மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..

    "வழிபாட்டின் போது நம்மனம் பக்தியில் நிலைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கவனத்தை எங்கோ சிதறவிட்டு விட்டு, இறைவனை வணங்குவதால் எந்த பலனும் இல்லை. மந்திரம் ஜெபிக்கும் போதும், தியானம் செய்யும் போதும் மனம் மந்திரத்திலேயே கருத்தூன்றி இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ , இறை தரிசனத்தின்போதும் மனஒருமைப்பாடு அந்த அளவுக்கு முக்கியமானது.

    கோவிலில் வழிபடும் போது, இறைவனைத் தவிரவேறு எந்த எண்ணமும் மனதில் நிழலாடக் கூடாது. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், உடல் அனைத்தும், நம்மனதை திசை திரும்பும் சக்தி படைத்தவை. அவற்றை இறைவனை நோக்கி திருப்புவதுதான் வழிபாட்டின் நோக்கம் ஆகும். அலங்காரம் முடித்து மூலவர் சன்னிதி முன்புள்ள திரையை விலக்கும்போது, கடவுளின் திருமேனி அழகில் கண்கள் ஈடுபடுகின்றன.

    கோவிலில் பிற சப்தங்கள் நம் கவனத்தை ஈர்க்காத வகையில், அந்த சப்தங்களை அடக்குவதற்காகவே மணியோசை ஒலிக்கப்படுகிறது. திரை விலகி, இறை தரிசனத்தைக் கண்டவுடன், நம்முடையவாய் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பூ மாலை, கற்பூர ஆரத்தி, தீபம், தூபம் போன்றவற்றால் வெளிப்படும் தெய்வீக நறுமணம், மற்ற எந்த வாசைனையையும் நுகர விடாமல் மூக்கை தடுக்கிறது.

    கரங்கள் இரண்டும் குவிந்து இறைவனை வணங்கும்போது, உடல் பணிவுடன் இறைவனின் அருளை வேண்டுகிறது. இப்படி ஐம்புலன்களும் வழிபாட்டில் ஈடுபட்டால்தான் ஒருவரின் மனம் ஒருமுகப்படும். அந்த நிலையில் பக்தனின் உள்ளமும் கூட கோவிலாக மாறும். அதுதான் வழிபாட்டின் தத்துவம்" என்று பதிலளித்தார் காஞ்சி சங்கராச்சாரியார்.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.
    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.

    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். “நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:-

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.

    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!

    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!

    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!

    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!

    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே!

    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை

    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
    அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.
    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும்.

    அதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.

    அதேபோல் சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மாலை பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
    இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வரவேண்டும்.
    இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் ராகு காலத்தில் செய்ய வேண்டும்.

    முதல்வாரம் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி இரண்டு பாகங்களாக்கி சாறை வெளியேற்றி இரண்டு மூடியிலும் எண்ணெய் ஊற்றி துர்க்கை அம்மன் சந்நிதியில் விளக்கேற்ற வேண்டும். இரண்டாவது வாரம் இரண்டு எலுமிச்சை பழத்தை நறுக்கி நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

    மூன்றாவது வாரம் ஆறு என்று ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டே 9-வது வாரம் 18 விளக்குகள் ஏற்றி பூஜையை முடிக்க வேண்டும். கடைசி வாரம் பூஜை செய்யும் நாளில் எலுமிச்சை மாலை துர்க்கை அம்மனுக்கு சூட்டி, எலுமிச்சை சாதம், சுண்டல், உளுந்த வடை, தேன், பானகரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் படைத்து அர்ச்சனை செய்து நீல வண்ண மலர்களால் பூஜிக்க வேண்டும்.

    1. தேங்காயை துருவி அதனுடன் நாட்டுச் சர்க்கரை, காய்ந்த திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பாதாம் பருப்பு, விஸ்தாப்பருப்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவற்றை கலந்து தேனை அதன்மீது ஊற்றி நிவேத்யத்திற்கு இதை வைக்க வேண்டும். ராகுதோஷ பரிகாரத்திற்கு இது மிகச் சிறந்ததாகும்.

    2. உளுந்தவடை, தயிர்சாதம், புளியோதரை, உளுத் தம்பருப்பு சாதம் இவற்றை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கலாம்.

    3. பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி ராகு காலத்தில் பூஜை செய்து வரலாம்.

    4. கருமாரி அம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

    5. சிவன் கோவிலுக்குச் சென்று சிவன், பார்வதியை வழிபட்டு அங்குள்ள நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு கருப்பு வண்ணம் கலந்த பட்டாடை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து உளுந்து தானம் செய்து வரவும். நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.

    6. நாகதோஷம் உள்ளவர்கள் புதியதாக நாகர் செய்து சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யலாம்.

    7. ராகு ஜாதகத்தில் எந்த கிரகத்தினுடைய வீட்டில் உள் ளதோ அந்த கிரகத்திற்குரிய கிழமையை பார்த்து அந்த நாளில் இரவில் படுத்து உறங்கும்போது தலையணைக்கடியில் கருப்பு பேப்பரில் சிறிதளவு உளுந்து மடித்து வைத்து வரவும். காலையில் அதை எடுத்து சாமிபடம் முன் வைத்து விடவும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரவேண்டும்.

    பத்தாவது வாரம் அதைப் பிரித்து புதிய கருப்பு துணியில் கட்டி கிழக்கு முகமாக அமர்ந்து தலையை மூன்று முறைச் சுற்றி கடலிலோ ஆற்றிலோ எறிந்து விட வேண்டும். கிணற்றில் போடக்கூடாது. அதன்பிறகு சிவன் கோவில் அல்லது நாகத்தை தலைகவசமாக அணிந்த அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.

    8. திருநாகேஸ்வரம் சென்று ராகுபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

    9. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜருக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

    10. சரபேஸ்வரரை ராகு காலத்தில் விரத வழிபட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

    11. கோமேதகத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம். ஜோதிடரின் ஆலோசனைப்படி ஜாதகத்தை காண்பித்து அணியலாமா? என்று கேட்டு எப்போது, எப்படி, எந்த நாளில் அணியலாம் என்று கேட்டு அணியவும்.
    திருநாங்கூர் அஞ்சனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் பன்னிரு சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு 12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் தொடங்கியது.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மதங்காஸ்ரமம் என்னும் திருநாங்கூர் அஞ்சனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் 5-ம் ஆண்டு பன்னிரு சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு 12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் நேற்று தொடங்கியது. நாளை 31-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், விநாயகர் அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு செல்லியம்மன் கோவிலில் இருந்து புஷ்பங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மகா காளி அம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.

    விழாவில் இன்று காலை அனைத்து கோவில் உற்சவபேர முகூர்த்த ங்களும் மதங்கீஸ்வரர் சாமி கோவில் எழுந்தருளல் நடைபெற்றது. இதையடுத்து பஞ்சாட்சர ஜெப ஹோமத்துடன் அபிஷேக ஆராதனையும், பூர்ணாஹுதி தீபாராத னைகள் செய்து பிரசா தங்கள் வழங்க ப்பட்டது.

    இரவு 7 மணிக்கு பன்னிரு சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ மதங்க மகரிஷிக்கு பன்னிரு ரிஷாபாரூடராய் திருக் காட்சி அளித்தல் அதனை தொடர்ந்து திருவீதி உலா காட்சி நடைபெற உள்ளது.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு அனைத்து பன்னிரு முகூர்த்தங்களும் கோவில் வந்தடைந்து சமகாலத்தில் தீபாராதனைகள் நடைபெறும்.

    இதைத் தவிர விழா நாட்களில் சைவ சமய ஆன்றோர்களின் சமய சொற்பொழிவுகள் திருமுறை பாராயணங்கள் கலை நிகழ்ச்சிகள் நாதஸ்வர இன்னிசைகள் நடைபெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன், ஆய்வாளர் மதியழகன், செயல் அலுவலர் முருகன்  மற்றும் திருநாங்கூர் லார்ட் சிவா டிரஸ்ட், பன்னிரு ரிஷப சேவை விழாக்குழு, திருநாங்கூர் அனைத்து சிவாலய கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
    புதன்கிழமைகளிலும் நம்முடைய நட்சத்திர நாளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கல்வி அறிவில் ஜொலிக்கலாம்.
    திருவெண்காடு திருத்தலத்தில் புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.

    புதன்கிழமைகளிலும் நம்முடைய நட்சத்திர நாளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கல்வி அறிவில் ஜொலிக்கலாம். பேச்சு வன்மை பலப்படும். ஜோதிடத்தில் வல்லுநராகலாம். நடனம், நாட்டியம், இசை வாத்தியக்கருவிகள், பாடுதல் முதலான கலைகளில் சிறந்து விளங்கலாம். எந்த வித்தையைக் கற்றுக் கொண்டாலும் அதில் தேர்ந்தவர் எனப் பேரெடுக்கலாம் என்கிறார்கள் ஆச்சாரயப் பெருமக்கள்.

    இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்தத் தலத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடி வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    சீர்காழிக்கு அருகில் 19 கி.மீ. தொலைவில் உள்ள திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்துக்கு வந்து சிவனாரையும் புதன் பகவானையும் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார் ஸ்வேதாரண்யேஸ்வரரும் புதன் பகவானும்!
    மே மாதம் 31-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 6-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    31-ம்தேதி செவ்வாய் கிழமை :

    * கரிநாள்
    * புணணாக கௌரி விரதம்
    * சிவகாசி விஸ்வநாதர் உற்சவாரம்பம்
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை
    * சந்திராஷ்டமம்: விசாகம்

    1-ம் தேதி புதன் கிழமை :

    * சந்திர தரிசனம் நன்று
    * சுபமுகூர்த்த நாள்
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
    * சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

    2-ம் தேதி வியாழக்கிழமை:

    * மாதவி விரதம்
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்ககவசம் வைரவேல் தரிசனம்
    * சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

    3-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * சதுர்த்தி விரதம்
    * சுபமுகூர்த்தநாள்
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
    * பெரிய நகசு
    * சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

    4-ம் தேதி சனிக்கிழமை:

    * வளர்பிறை பஞ்சமி
    * வாஸ்துநாள் (காலை 9.58 மணிக்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று)
    * நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

    5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:

    * சஷ்டி விரதம்
    * அரண்ய கௌரி விரதம்
    * மதுரை கூடலழகர் பெருமாள் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

    6-ம் தேதி திங்கட்கிழமை:

    * சோழவந்தான் மாரியம்மன் உற்சவாரம்பம்
    * காளையார் கோவில் அம்பாள் கதிர் குளித்தல் தபசு காட்சி
    * திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள் ஹனுமார் வாகனத்தில் பவனி
    * சந்திராஷ்டமம்:  உத்திராடம், திருவோணம்
    உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முருகனின் அறுபடை வீடுகளை நினைவுபடுத்தும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
    உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் அலங்கார வழிபாடு நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களில் ஒரு சில பொருட்களை நினைவுபடுத்தினர். நவ தானியங்களால் முருகன் உருவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புல் கராவைக்கொண்டு கொடைக்கானலில் புகழ்பெற்ற நட்சத்திர ஏரி வடிவமைக்கப்பட்டிருந்தது.

    முருகனின் அறுபடை வீடுகளை நினைவுபடுத்தும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர். கொடைக்கானல் கொடை இன்டர்நேஷனல் உரிமையாளர் பாண்டுரங்கன் நிகழ்வில் கலந்து கொண்டு மலர் வழிபாடுஏற்பாடுகளை செய்திருந்தார்.

    வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கொடை இன்டர்நேஷனல் ஹோட்டல் உரிமையாளர் பாண்டுரங்கன் சார்பாக மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடை இன்டர்நேஷனல் மேலாளர் ருத்ரமூர்த்தி, பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி,  தண்டாயுதபாணி கோவில் அறங்காவல் துறை கண்காணிப்பாளர் முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 6-ந்தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
    சிவகாசியில் உள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா வந்தார். இன்று (31-ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    7-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து 8-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

    அன்று இரவு 8 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந்தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    ×