search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களத்திர தோஷம்"

    பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.
    ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணமாகும் காலம் பற்றி பார்க்கலாம்.

    1. ஒருவருக்கு ஏழாம் அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருந்து, கோச்சாரத்தில் குரு ஏழாம் இடத்தை, ஏழாம் அதிபதியை பார்க்கும் பொழுது திருமணமாகும்.
     
    2. இரண்டாம் அதிபதியின் தசாபுத்திகள் நடைபெறும் காலத்தில், களத்திர ஸ்தானத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும்.

    3. எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசா, புத்திகளில் திருமணமாகும். சாத்தியக் கூறுகள் மிகுதி.

    4.ஏழாம் அதிபதி ராகு ,கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால், ராகு, கேதுக்களின் தசா புத்திகள் திருமணத்தை நடத்தித் தரும்.
     
    5. ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் இருந்தால், தான் நின்ற களத்திர ஸ்தானத்து பலன்களை ராகு ,கேதுவே எடுத்துச் செய்யும்.

    6. விரைவில் குழந்தை பெற்று குடும்பம் அமையக்கூடிய, நட்சத்திர சாரத்தை, ராகு கேது பெற்றிருந்தாலும், அந்த காலகட்டங்களிலும் சிலருக்கு திருமணம் நடக்கும்.
     
    7. களத்திர ஸ்தானாதிபதியின், நட்சத்திர சாரம் வாங்கிய கிரகத்தின் தசா,புத்திகளும் திருமணத்தை நடத்தி தரும்.

    8. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியின் தசா புத்திகளும் சிலருக்கு திருமணம் நடத்தும்.

    - இந்த விதிகளின்படி பெரிய பாதிப்பு இல்லாத களத்திர தோஷத்திற்கு திருமணம் நடக்கும்.திருமண வாழ்க்கை பாதிப்பைத் தராது. பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.

    பாரிகாரங்கள்

    பொதுவாக எந்த தோஷமாக இருந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் பாதிப்பை தராது. தோஷத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் மட்டுமே பாதிப்பைத் தரும். வீரியம் கடுமையாக இருந்தால் திருமணம் நிச்சயமான நாள் முதல் சிறு சிறு பிரச்சினை தோன்றி முடிவில் எதிர்பாராத பின் விளைவுகளைத் தரும். எனவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், அந்தக் களத்திர தோஷம் எந்த காலகட்டங்களில் செயல்படும், என்பதை அறிந்து, அதற்கேற்ற தசா புத்தி அமைப்புள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

    அதாவது திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தது 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சாதகமான தசா புத்திகள் நடக்க வேண்டும். மேலும் திருமணத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகார முறைகளை மேற்கொள்வது நல்லது.

    களத்திர தோஷமுடைய ஜாதகத்திற்கு அதே அமைப்புடைய ஜாதகத்தை பொருத்துவதே நிரந்தர தீர்வு. அத்துடன் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதே மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.

    ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் நெருங்கிய குடும்பத்து உறவாக இருப்பார்கள்.தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் மேல் அன்பும் அதிக அக்கறையும் இருக்கும்.கணவன், மனைவி இருவருக்குமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள். திருமணம் முடிந்தவுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள்.
     
    ஏழாம் அதிபதி குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். பாவகிரகங்கள் சம்பந்தம் இருந்தால் போராட்டமான வாழ்க்கை, அவமானம், பிரிவு அல்லது இழப்பு ஏற்படும்.
     
    ஏழாம் அதிபதி சகாய ஸ்தானமான மூன்றில் நின்றால் வாழ்க்கைத் துணை வீட்டின் அருகில் இருப்பார். தெய்வ பக்தியும், ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பார். வாலிப வயதில் சீக்கிரமே திருமணம் நடக்கின்றது. சிலர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றவர்களை எதிர்த்து சுய விருப்ப விவாகம் புரிகின்றனர்.
     
    ஏழாம் அதிபதி சுக ஸ்தானமான நான்கில் இருந்தால் தாய் வழி உறவில் திருமண வாய்ப்பு அதிகம். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள். கணவனால் மனைவிக்கு மனைவியால் கணவனுக்கு ஆதாயம் உண்டு. குறிப்பாக குடும்ப சொத்து வெளியில் சென்று விடக் கூடாது என்பதற்காக நடக்கும் திருமணமாகும். உபய லக்னமாக இருந்தால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு உண்டு. எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக்குடையவன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.

    5, 7-ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும்.
     
    ஏழாம் அதிபதி ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணைக்கு நோய் பாதிப்பு உண்டாகும் அல்லது கடனால் அவஸ்தை உண்டாகும். வாழ்க்கைத்துணை ஊதாரியாக வாழ்வார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மிகுதியான கருத்து வேறுபாடு உண்டு. விவாகரத்தில் முடியும் வாய்ப்பு அதிகம்.

    ஏழாம் அதிபதி ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் பலருடைய கணிப்பு. ஆனால் ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையின் கை ஒங்கும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். அதனால் மிகுதியான ஈகோவால் தம்பதிகள் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன.

    ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். பலருக்கு முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து, கோர்ட், கேஸ் என அழைந்து மன நோயாளியாகுவார்கள். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும் ஏழாம் அதிபதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்றால் பூர்வ ஜென்ம பாக்கிய பலத்தால் ஆதர்ஷன தம்பதியாக வாழ்வார்கள். வாழ்க்கை துணை தைரியமானவர். அவரின் சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

    ஏழாம் அதிபதி பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணை சுய தொழில் செய்பவராக இருப்பார் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். சுய கவுரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில் உத்தியோகம் உண்டு.

    சொத்து ககம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. ஏழாம் அதிபதி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு.7 ம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்திவிடும்.

    ஏழாம் அதிபதி பனிரென்டாம் இடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் வாழ்க்கைத் துணையால் நிறைய விரயங்களை சந்திப்பார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள்.

    கடுமையான திருமணத் தடையை தருகிறது. பலருக்கு திருமணம் நடப்பதில்லை. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக வாழ்க்கைத் துணையை நம்பியே பிழைக்கிறார்கள்.
    களத்திர தோஷமும் திருமண காலமும்

    குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. குருபலம் வந்தால் மட்டுமே திருமணம் ஆகாது என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
     
    ஒருவருக்கு இரண்டு வருடத்திற்கு, ஒருமுறை குருபலம் வரும். குரு பலம் இருந்தால் திருமணம் நடந்து விடும் என்றால் தசா புக்திக்கு வேலையே கிடையாது. அத்துடன் குரு பலம் மட்டுமே திருமணத்தை நடத்தி வைத்தால் 40 வயதை கடந்தும் திருமண வாழ்க்கையை சுவைக்காத முதிர்கன்னிகள், காளையர்களுக்கு ஏன் திருமணம் நடைபெறவில்லை. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.
    சிலருக்கு திருமணத்தை நடத்தி தராமல் தோஷத்தை உமிழும் இந்த கருணையற்ற களத்திர தோஷம் பலருக்கு திருமணம் நடந்த பிறகு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
    திருமணம் தொடர்பான பாவகங்களான 1 ,2,7,8 ஆகிய ஸ்தானங்களில் அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது அமர்வது அல்லது ஏழாம் இடத்தில் நீசம், அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் அமர்வதாகும்.

    இந்த தோஷ அமைப்பை பெற்றவர்களுக்கு தாமதத் திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை இருக்கும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாதவருடன் வாழ்வது.

    அல்லது சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் சதா சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதியை இழப்பது அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது அல்லது விவாகரத்து பெறுவது அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடுவது போன்ற ஏதாவது இடரைத் தந்து கொண்டே இருக்கும்.

    உளவியல் ரீதியாக ஆயிரம் ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொண்டால் 900 ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கவே செய்யும். பலருக்கு களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7மிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும்.

    களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்ரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.
    அதேபோல் களத்திர தோஷம் உள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம். இந்த சூட்சமத்தை பின்பற்றாமல் 7-ம் இடத்தில் நிற்கும் அசுப கிரகங்களை மையப்படுத்தி களத்திர தோஷம் என பலரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது நியாயமா? ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம்.

    மேலும் களத்திர தோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    ×