என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மைசூரு டவுனில் ஆலனஹள்ளியை சேர்ந்த பிரம்மாகுமாரிஸ் ஆசிரமத்தில் சுமார் 8 ஆயிரம் தேங்காய்களால் 21 அடி உயரமும், 12 அடி அகலத்திற்கு சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
மகாசிவராத்திரி விழா இந்தியா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மைசூரு டவுனில் ஆலனஹள்ளியை சேர்ந்த பிரம்மாகுமாரிஸ் ஆசிரமத்தில் தேங்காய்களால் 21 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் தேங்காய்களால் 21 அடி உயரமும், 12 அடி அகலத்திற்கு இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
சிவராத்திரியையொட்டி இந்த சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் இலவசமாக வந்து சிவலிங்கத்தை தரிசிக்கலாம் என்றும், போலீசார் அனுமதி கொடுத்தால் பக்தர்கள் தரிசிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று பிரம்மகுமாரிஸ் ஆசிரமத்தினர் தெரிவித்தனர். இந்த சிவலிங்கத்தை வடிவமைக்க ரூ.4 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சிவலிங்கத்தை தரிசிக்க மைசூரு மாவட்ட மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் 21 அடி உயர சிவலிங்கம் முன்பு புகைப்படம் எடுத்து பக்தர்கள் மகிழ்ந்து வருகிறார்கள்.
சிவராத்திரியையொட்டி இந்த சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் இலவசமாக வந்து சிவலிங்கத்தை தரிசிக்கலாம் என்றும், போலீசார் அனுமதி கொடுத்தால் பக்தர்கள் தரிசிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று பிரம்மகுமாரிஸ் ஆசிரமத்தினர் தெரிவித்தனர். இந்த சிவலிங்கத்தை வடிவமைக்க ரூ.4 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சிவலிங்கத்தை தரிசிக்க மைசூரு மாவட்ட மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் 21 அடி உயர சிவலிங்கம் முன்பு புகைப்படம் எடுத்து பக்தர்கள் மகிழ்ந்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு முதல் கால பூஜையும்,. 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன்பின் சிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் உள்ள பூஜைகள் நடக்கிறது.
இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன்பின் சிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் உள்ள பூஜைகள் நடக்கிறது.
தவிர்க்க முடியாத காரணங்களால் கோவில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம்.
நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள்களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே வழிபட்டுப் பெறலாம். ஒவ்வொரு காலத்துக்குமான பூஜை விவரங்கள் இங்கே உங்களுக்காக...
மகா சிவராத்திரி!
முதல் கால பூஜை : (இரவு 10 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
பதிகம்: சிவமகாபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...
மகா சிவராத்திரி!
இரண்டாம் கால பூஜை : (இரவு 12 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
பதிகம் : கீர்த்தி திருஅகவல்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.
மகா சிவராத்திரி!
மூன்றாம் கால பூஜை : ( நள்ளிரவு 2 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்
பதிகம் : திருவண்டப்பகுதி
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரிய அதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க
நான்காம் கால பூஜை : (அதிகாலை 4 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - ரிஷபாரூடர்
பதிகம் : போற்றித் திருஅகவல்
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மகா சிவராத்திரி!
மகாசிவராத்திரி... உள்ளத்தை உருக்கும்சிவப்பாடல்...
மகா சிவராத்திரி!
முதல் கால பூஜை : (இரவு 10 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
பதிகம்: சிவமகாபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...
மகா சிவராத்திரி!
இரண்டாம் கால பூஜை : (இரவு 12 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
பதிகம் : கீர்த்தி திருஅகவல்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.
மகா சிவராத்திரி!
மூன்றாம் கால பூஜை : ( நள்ளிரவு 2 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்
பதிகம் : திருவண்டப்பகுதி
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரிய அதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க
நான்காம் கால பூஜை : (அதிகாலை 4 மணி)
வழிபட வேண்டிய மூர்த்தம் - ரிஷபாரூடர்
பதிகம் : போற்றித் திருஅகவல்
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மகா சிவராத்திரி!
மகாசிவராத்திரி... உள்ளத்தை உருக்கும்சிவப்பாடல்...
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம்.
சிவராத்திரியையொட்டி காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள்.
முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகியவை அந்த 12 சிவாலயங்கள் ஆகும்
12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முன்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் மகாசிவராத்திரி இன்று நடைபெறுவதையொட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.
நேற்று மாலை முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் சிவ பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். பின்னர் அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் விசிறி உடன் புறப்பட்டனர்.
இன்று இரவு முழுவதும் தொடர்ந்து 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் கால்நடையாக நடந்தும், ஓடியும் தரிசனம் செய்கின்றனர். ஓட்டத்தின் போது கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு கோவிலாக சென்று 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தில் தங்களது நேர்த்திக் கடனை நிறைவு செய்கிறார்கள்.
சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
சிவாலய ஓட்டம் நேற்று மாலை தொடங்கியதை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் முதல் சிவாலயமான முன்சிறை மகாதேவர் கோவிலில் குவிந்தனர்.
சிவராத்திரியையொட்டி காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள்.
முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகியவை அந்த 12 சிவாலயங்கள் ஆகும்
12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முன்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் மகாசிவராத்திரி இன்று நடைபெறுவதையொட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.
நேற்று மாலை முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் சிவ பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். பின்னர் அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் விசிறி உடன் புறப்பட்டனர்.
இன்று இரவு முழுவதும் தொடர்ந்து 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் கால்நடையாக நடந்தும், ஓடியும் தரிசனம் செய்கின்றனர். ஓட்டத்தின் போது கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு கோவிலாக சென்று 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தில் தங்களது நேர்த்திக் கடனை நிறைவு செய்கிறார்கள்.
சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
சிவாலய ஓட்டம் நேற்று மாலை தொடங்கியதை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் முதல் சிவாலயமான முன்சிறை மகாதேவர் கோவிலில் குவிந்தனர்.
கன்னியாகுமரி பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 4 கால பூஜைகள் நடக்கிறது.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு அபிஷேகம், 7.30மணிக்கு தீபாராதனை, 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜை, 10.30 மணிக்கு 2-ம் கால பூஜை, 12.30 மணிக்கு 3-ம் கால பூஜை, 3.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழாயொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு பக்தி மெல்லிசை கச்சேரி, 6.15 மணிக்கு முதல் கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, 9.15 மணிக்கு 2-ம் கால அபிஷேகம், 10 மணிக்கு தீபாராதனை, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, நள்ளிரவு 12.15 மணிக்கு 3-ம் கால அபிஷேகம், 1 மணிக்கு சமய சொற்பொழிவு, 3.15 மணிக்கு 4-ம் கால அபிஷேகம், அதிகாலை 4 மணிக்கு புஷ்பாபிஷேகம், 4.45 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.
கன்னியாகுமரி அடுத்த மகாதனபுரம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழாயொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அன்னதானம், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு ஸ்ரீருத்ர ஜெபம், 8.30 மணிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதேபோல வடக்கு தாமரைகுளத்தில் பெரிய பாண்டீஸ்வரர் உடைய நயினார் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவிலுள்ள காசி விஸ்வநாதர் கோவில், கீழ ரத வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம், பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்றில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில், தேரூரில் உள்ள எடுத்தாயுதமுடைய நாயனார் கோவில், தேரிவிளை சிவன் கோவில் உள்பட 12 சிவாலயங்களில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 4 கால பூஜைகள் நடக்கிறது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழாயொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு பக்தி மெல்லிசை கச்சேரி, 6.15 மணிக்கு முதல் கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, 9.15 மணிக்கு 2-ம் கால அபிஷேகம், 10 மணிக்கு தீபாராதனை, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, நள்ளிரவு 12.15 மணிக்கு 3-ம் கால அபிஷேகம், 1 மணிக்கு சமய சொற்பொழிவு, 3.15 மணிக்கு 4-ம் கால அபிஷேகம், அதிகாலை 4 மணிக்கு புஷ்பாபிஷேகம், 4.45 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.
கன்னியாகுமரி அடுத்த மகாதனபுரம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழாயொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அன்னதானம், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு ஸ்ரீருத்ர ஜெபம், 8.30 மணிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதேபோல வடக்கு தாமரைகுளத்தில் பெரிய பாண்டீஸ்வரர் உடைய நயினார் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவிலுள்ள காசி விஸ்வநாதர் கோவில், கீழ ரத வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம், பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்றில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில், தேரூரில் உள்ள எடுத்தாயுதமுடைய நாயனார் கோவில், தேரிவிளை சிவன் கோவில் உள்பட 12 சிவாலயங்களில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 4 கால பூஜைகள் நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ‘சிவாலய ஓட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. அங்குள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும். இந்த ஓட்டமானது சுமார் 118 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. சிவராத்திரி அன்று காலையில் காவி வேட்டியும், காவித்துண்டும் தரித்து, ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை அடியவர்கள் தொடங்குவார்கள்.
முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோவிலில் தொடங்கும் இந்த ஓட்டமானது, திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில், திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் திருக்கோவில், திருபன்னிபாகம் சிவன் திருக்கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி திருக்கோவில், மேலாங்கோடு சிவன் திருக்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் திருக்கோவில், திருவிதாங்கோடு சிவன் திருக்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் திருக்கோவில்களைக் கடந்து, திருநட்டாலம் சங்கர நாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் முடிவடையும்.
பாண்டவர்களில் ஒருவரான தருமர், ஒருமுறை ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்த கண்ணபிரான், பீமனிடம் புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டுவிட்டு `கோபாலா கோவிந்தா' எனச்சொல்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
பீமன், புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகா சிவராத்திரி நன்னாள். அங்கே புருஷாமிருகம் சிவபூஜையில் இருந்தது. பீமன், அதன் அருகேச் சென்று “கோபாலா.. கோவிந்தா” என்று கூறி சிவபூஜைக்கு இடையூறு செய்தான். பீமனின் நாம உச்சரிப்பைக் கேட்டு, புருஷா மிருகம் கோபம் அடைந்து பீமனை விரட்டியது. உடனே பீமன் ஒரு ருத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். ருத்ராட்சத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷா மிருகம், சிவபூஜை செய்யத் தொடங்கியது.
சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் “கோவிந்தா, கோபாலா” என்ற நாமத்தை உச்சரித்தான். மீண்டும் கோபம் கொண்ட புருஷாமிருகம் அவனை துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன், ஓரிடத்தில் மற்றொரு ருத்ராட்சத்தைப் போட்டான். அங்கும் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதைப் பார்த்ததும் புருஷா மிருகம் கோபம் தணிந்து மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தது. இப்படியே பீமனுக்கும், புருஷா மிருகத்துக்கும் இடையே நடைபெற்ற ஓட்டத்தில் 12 சிவலிங்கங்கள், 12 இடங்களில் தோன்றின. 12-வது சிவலிங்கம் தோன்றிய இடமான திருநட்டாலத்தில் சிவபெருமானும், கண்ணனும் சேர்ந்து, ‘சங்கரநாராயணராக, புருஷாமிருகத்துக்கு காட்சி கொடுத்தனர்.
இதையடுத்து சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்ந்த புருஷா மிருகம், மகிழ்ச்சி அடைந்து, பீமனுக்கு தன்னுடைய பாலை கொடுத்தது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில்தான், இன்றளவும் மகா சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோவிலில் தொடங்கும் இந்த ஓட்டமானது, திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில், திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் திருக்கோவில், திருபன்னிபாகம் சிவன் திருக்கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி திருக்கோவில், மேலாங்கோடு சிவன் திருக்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் திருக்கோவில், திருவிதாங்கோடு சிவன் திருக்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் திருக்கோவில்களைக் கடந்து, திருநட்டாலம் சங்கர நாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் முடிவடையும்.
பாண்டவர்களில் ஒருவரான தருமர், ஒருமுறை ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்த கண்ணபிரான், பீமனிடம் புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டுவிட்டு `கோபாலா கோவிந்தா' எனச்சொல்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
பீமன், புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகா சிவராத்திரி நன்னாள். அங்கே புருஷாமிருகம் சிவபூஜையில் இருந்தது. பீமன், அதன் அருகேச் சென்று “கோபாலா.. கோவிந்தா” என்று கூறி சிவபூஜைக்கு இடையூறு செய்தான். பீமனின் நாம உச்சரிப்பைக் கேட்டு, புருஷா மிருகம் கோபம் அடைந்து பீமனை விரட்டியது. உடனே பீமன் ஒரு ருத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். ருத்ராட்சத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷா மிருகம், சிவபூஜை செய்யத் தொடங்கியது.
சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் “கோவிந்தா, கோபாலா” என்ற நாமத்தை உச்சரித்தான். மீண்டும் கோபம் கொண்ட புருஷாமிருகம் அவனை துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன், ஓரிடத்தில் மற்றொரு ருத்ராட்சத்தைப் போட்டான். அங்கும் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதைப் பார்த்ததும் புருஷா மிருகம் கோபம் தணிந்து மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தது. இப்படியே பீமனுக்கும், புருஷா மிருகத்துக்கும் இடையே நடைபெற்ற ஓட்டத்தில் 12 சிவலிங்கங்கள், 12 இடங்களில் தோன்றின. 12-வது சிவலிங்கம் தோன்றிய இடமான திருநட்டாலத்தில் சிவபெருமானும், கண்ணனும் சேர்ந்து, ‘சங்கரநாராயணராக, புருஷாமிருகத்துக்கு காட்சி கொடுத்தனர்.
இதையடுத்து சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்ந்த புருஷா மிருகம், மகிழ்ச்சி அடைந்து, பீமனுக்கு தன்னுடைய பாலை கொடுத்தது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில்தான், இன்றளவும் மகா சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணம் சேத்திர காண்டம் 66-வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவியின் தவத்தினால் மகிழ்ந்த கைலாசநாதபெருமாள், தேவியை நோக்கி உன்னுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நீ இத்தலத்திலேயே வீற்றிருந்து உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலித்து வருவாயாக. உனது அருளால் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என திருவாய் மலர்ந்தருளினார்.
தனக்கு அருள் புரிந்த கைலாச நாதரை பார்வதி அம்மையுடன் தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சிவபெருமான் ஆணைப்படி இத்திருக்கோவிலில் குடிகொண்டு அருளினாள் துர்க்கா பரமேஸ்வரி. தேவி, தவம் புரிந்தமையால் தபோவனம் என்றும், இவ்வூரில் குடிகொண்டு அருளியதால் அம்மன்குடி என்றும் புகழ் பெற்று இவ்வூர் விளங்குகிறது. சிவன் கோவிலில் துர்க்கா தேவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்கு வெளியில் 3 சுவர்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
இவ்வாலய விமானங்கள் திருமதிற் சுவர்கள் திருமடைப்பள்ளி நுழைவு வாயில் முதலிய அனைத்தும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. மீண்டும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது.
முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். இங்கு கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. இவ்வூர் சோழமன்னர் காலத்தில் அம்மன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள்
சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஊர் உய்யக்கொண்டான் வளநாட்டில் காவிரிக்கும், அரசலாற்றிற்கும் இடைப்பட்ட பிரதேசம் வேநாடு என்ற பிரிவின் கீழ் இருந்ததாக குறிக்கப்படுகிறது. வேநாடு என்பது பல புண்ணிய ஷேத்திரங்கள் உள்ள பிரதேசம் என்பது காஞ்சி பரமாச்சாரியாரின் விளக்கம். இந்த கோவிலுக்கு பலரும் மானியங்கள் கொடுத்து உள்ளார்கள். இ்ந்த கோவிலில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மூன்று சிவயோகியாருக்கு உணவு அளிக்க மானியம். தினசரி பானை கொடுக்கும் குயவருக்கு மானியம், ஓதுவார், நாட்டியக்காரர், மாலை கட்டுபவர், வாத்தியம் வாசிப்பவர்களுக்கு மானியம், இதுபோன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பல கல்வெட்டுகள் சிதைந்து போய் விட்டதால் விவரங்கள் கண்டுகொள்ள முடியவில்லை.
அம்மனை வழிபட சிறப்பான நாட்கள்
துர்க்கா தேவியானவள், சகல தேவதைகளும் தேஜஸ்களில் இருந்தும் உண்டானபடியால் துர்க்கைக்கு செய்யும் பூஜை அனைத்து தேவைகளுக்கும் செய்யும் பூஜைக்கு சமம் ஆகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்காதேவி விளங்குவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஸ்தல விருட்சம் வில்வம். இத்தலத்தில் வழிபட சிறப்பிற்குரிய நாட்களாக விசேஷமாக 5 பருவங்களை பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். கிருஷ்ண பட்ஷமும், செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சுக்கிலபட்ஷமும், அஷ்டமி திதியும், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இந்த கோவிலில் ராகுதோஷம், சுக்கிரதோஷம் ஆகியவற்றிற்கு சாந்தி செய்தால் விசேஷ பலன் உண்டு. திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவியின் தவத்தினால் மகிழ்ந்த கைலாசநாதபெருமாள், தேவியை நோக்கி உன்னுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நீ இத்தலத்திலேயே வீற்றிருந்து உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலித்து வருவாயாக. உனது அருளால் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என திருவாய் மலர்ந்தருளினார்.
தனக்கு அருள் புரிந்த கைலாச நாதரை பார்வதி அம்மையுடன் தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சிவபெருமான் ஆணைப்படி இத்திருக்கோவிலில் குடிகொண்டு அருளினாள் துர்க்கா பரமேஸ்வரி. தேவி, தவம் புரிந்தமையால் தபோவனம் என்றும், இவ்வூரில் குடிகொண்டு அருளியதால் அம்மன்குடி என்றும் புகழ் பெற்று இவ்வூர் விளங்குகிறது. சிவன் கோவிலில் துர்க்கா தேவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்கு வெளியில் 3 சுவர்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
இவ்வாலய விமானங்கள் திருமதிற் சுவர்கள் திருமடைப்பள்ளி நுழைவு வாயில் முதலிய அனைத்தும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. மீண்டும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது.
முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். இங்கு கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. இவ்வூர் சோழமன்னர் காலத்தில் அம்மன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள்
சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஊர் உய்யக்கொண்டான் வளநாட்டில் காவிரிக்கும், அரசலாற்றிற்கும் இடைப்பட்ட பிரதேசம் வேநாடு என்ற பிரிவின் கீழ் இருந்ததாக குறிக்கப்படுகிறது. வேநாடு என்பது பல புண்ணிய ஷேத்திரங்கள் உள்ள பிரதேசம் என்பது காஞ்சி பரமாச்சாரியாரின் விளக்கம். இந்த கோவிலுக்கு பலரும் மானியங்கள் கொடுத்து உள்ளார்கள். இ்ந்த கோவிலில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மூன்று சிவயோகியாருக்கு உணவு அளிக்க மானியம். தினசரி பானை கொடுக்கும் குயவருக்கு மானியம், ஓதுவார், நாட்டியக்காரர், மாலை கட்டுபவர், வாத்தியம் வாசிப்பவர்களுக்கு மானியம், இதுபோன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பல கல்வெட்டுகள் சிதைந்து போய் விட்டதால் விவரங்கள் கண்டுகொள்ள முடியவில்லை.
அம்மனை வழிபட சிறப்பான நாட்கள்
துர்க்கா தேவியானவள், சகல தேவதைகளும் தேஜஸ்களில் இருந்தும் உண்டானபடியால் துர்க்கைக்கு செய்யும் பூஜை அனைத்து தேவைகளுக்கும் செய்யும் பூஜைக்கு சமம் ஆகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்காதேவி விளங்குவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஸ்தல விருட்சம் வில்வம். இத்தலத்தில் வழிபட சிறப்பிற்குரிய நாட்களாக விசேஷமாக 5 பருவங்களை பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். கிருஷ்ண பட்ஷமும், செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சுக்கிலபட்ஷமும், அஷ்டமி திதியும், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இந்த கோவிலில் ராகுதோஷம், சுக்கிரதோஷம் ஆகியவற்றிற்கு சாந்தி செய்தால் விசேஷ பலன் உண்டு. திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா இன்று (11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோவிலில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.
சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவராத்திரியான இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட வரியில் நின்று சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 12 சிவாலயங்களை, ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓடி வருகின்றனர்.
சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவராத்திரியான இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட வரியில் நின்று சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 12 சிவாலயங்களை, ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓடி வருகின்றனர்.
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.
திருவண்ணாமலையில் அடிமுடி தேடி அலுத்துத் திரும்பிய பிறகு அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான். அப்படிப்பட்ட சிவராத்திரி நாளில் சிவனை மனதில் நினைத்து போற்றி வழிபட்டால் பொன்னான வாழ்வு நமக்குக் கிடைக்கும்.
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.
‘மகா சிவராத்திரி’ என்பது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும். அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்தபிறகு விடியற்காலையில் நீராடி அதன்பிறகு உணவு உண்பது உத்தமமாகும்.
அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும். சிவாலயத்தில் நாம் சிவராத்திரியன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு கைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் வந்து சேரும்.
சிவராத்திரியன்று முழுநாளும் “சிவாயநம” என சிந்தித்திருந்தால் கவலைகள் பறந்தோடும். கனவுகள் நனவாகும். அபாயம் ஒருநாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மகேசன் அருள்புரியும் இந்த இனிய நாள் இவ்வாண்டு மாசிமாதம் 27-ம் நாள் (11.3.2021) வியாழக்கிழமை அன்று வருகின்றது.
சிவராத்திரியன்று மாலை 6 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்றால் நலமுடன் வாழலாம்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.
‘மகா சிவராத்திரி’ என்பது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும். அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்தபிறகு விடியற்காலையில் நீராடி அதன்பிறகு உணவு உண்பது உத்தமமாகும்.
அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும். சிவாலயத்தில் நாம் சிவராத்திரியன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு கைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் வந்து சேரும்.
சிவராத்திரியன்று முழுநாளும் “சிவாயநம” என சிந்தித்திருந்தால் கவலைகள் பறந்தோடும். கனவுகள் நனவாகும். அபாயம் ஒருநாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மகேசன் அருள்புரியும் இந்த இனிய நாள் இவ்வாண்டு மாசிமாதம் 27-ம் நாள் (11.3.2021) வியாழக்கிழமை அன்று வருகின்றது.
சிவராத்திரியன்று மாலை 6 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்றால் நலமுடன் வாழலாம்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்
நாளை மகா சிவாராத்திரி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறுகிறது. இதில் நடராஜருக்கு 4 கால பூஜை நடைபெற உள்ளது.
உலகப் புகழ்பெற்ற பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நாளை(வியாழக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
இதில், சிவ பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் சிவகங்கை குளத்தில் நீராடி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியை வழிபடுவது வழக்கம்.
அதன்படி நாளை மகாசிவராத்திரி தினவிழாவில், காலை 6 மணிக்கு நடராஜர் கோவில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து காலை, மாலை இருவேளையும், கால பூஜைகள் முடிந்தவுடன், இரவு ஏக கால லட்சார்ச்சனை வைபவம் நடைபெறுகிறது.
பின்னர் சிவராத்திரி இரவு 12 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு 2 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடைபெறும் லிங்கோத்பவ காலம் பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கால பூஜையில் பக்தர்கள் சுவாமியை வழிபடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். காலை 4 மணிக்கு 3-ம்கால பூஜையும், 6 மணிக்கு 4-ம்கால பூஜையும் நடைபெறும். தொடர்ந்து நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெறும்.
தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை 12 மணி வரை நடராஜர் கோவில் திறந்திருக்கும். சிவராத்திரி விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நடராஜர் கோவிலில் மகாசிவராத்திரி தினத்தன்று ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெறாது என்று கோவில் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.
இதில், சிவ பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் சிவகங்கை குளத்தில் நீராடி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியை வழிபடுவது வழக்கம்.
அதன்படி நாளை மகாசிவராத்திரி தினவிழாவில், காலை 6 மணிக்கு நடராஜர் கோவில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து காலை, மாலை இருவேளையும், கால பூஜைகள் முடிந்தவுடன், இரவு ஏக கால லட்சார்ச்சனை வைபவம் நடைபெறுகிறது.
பின்னர் சிவராத்திரி இரவு 12 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு 2 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடைபெறும் லிங்கோத்பவ காலம் பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கால பூஜையில் பக்தர்கள் சுவாமியை வழிபடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். காலை 4 மணிக்கு 3-ம்கால பூஜையும், 6 மணிக்கு 4-ம்கால பூஜையும் நடைபெறும். தொடர்ந்து நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெறும்.
தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை 12 மணி வரை நடராஜர் கோவில் திறந்திருக்கும். சிவராத்திரி விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நடராஜர் கோவிலில் மகாசிவராத்திரி தினத்தன்று ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெறாது என்று கோவில் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.
ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 6 கால சிறப்பு பூஜை நடைபெறுகின்றது.
மகா சிவராத்திரி விழா நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள் அன்றைய தினம் இரவு முழுவதும் திறந்து இருப்பதோடு 6 கால பூஜைகள், தீபராதனை சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரியான நாளை காலை 4.30 மணி அளவில் கோவில் நடைதிறக்கப்படும். பின்னர் வழக்கமாக பகல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.
சிவராத்திரியை முன்னிட்டு பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடைதிறக்கப்பட்டு இருக்கும். அதுபோல் நாளை இரவு 8 மணியிலிருந்து அதிகாலை வரையிலும் மகா சிவராத்திரி 6 கால சிறப்பு பூைஜ நடைபெறும். இந்த அபிஷேகத்தின்போது கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். இதனால் ராமேசுவரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கோவிலிலேயே தங்கி இருந்து பக்தி பாடல்களை பாடியபடி சாமியை தரிசனம் செய்வார்கள்.
திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரி சமேத மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்து இருப்பதோடு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 6 கால பூஜைகள் நடைபெறும். மேலும் பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் சுவாமிக்கு செய்யப்படும். மேலும் அம்மன் சன்னதியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரவு விடிய, விடிய நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர்.
ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெறுவதோடு, அன்றைய தினம் இரவு முழுவதும் கோவில் திறந்திருக்கும்.
திருவாடானை சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 6 கால பூஜைகள் நடைபெறுவதோடு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீப ஆராதனைகள் நடைபெறும். கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
நயினார்கோவிலில் உள்ள சவுந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி கோவிலிலும் 6 கால பூஜைகள் நடைபெறுவதால் கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும். இரவு புராதன நாடக நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சுவாமியை தரிசிக்க பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் இரவு கோவிலில் தங்கி நாடகத்தை பார்த்து விட்டு அதிகாலையில் கோவில் தெப்பத்தில் குளித்து மீண்டும் சாமியை தரிசனம் செய்வார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.
சிவராத்திரியை முன்னிட்டு பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடைதிறக்கப்பட்டு இருக்கும். அதுபோல் நாளை இரவு 8 மணியிலிருந்து அதிகாலை வரையிலும் மகா சிவராத்திரி 6 கால சிறப்பு பூைஜ நடைபெறும். இந்த அபிஷேகத்தின்போது கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். இதனால் ராமேசுவரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கோவிலிலேயே தங்கி இருந்து பக்தி பாடல்களை பாடியபடி சாமியை தரிசனம் செய்வார்கள்.
திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரி சமேத மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்து இருப்பதோடு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 6 கால பூஜைகள் நடைபெறும். மேலும் பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் சுவாமிக்கு செய்யப்படும். மேலும் அம்மன் சன்னதியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரவு விடிய, விடிய நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர்.
ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெறுவதோடு, அன்றைய தினம் இரவு முழுவதும் கோவில் திறந்திருக்கும்.
திருவாடானை சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 6 கால பூஜைகள் நடைபெறுவதோடு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீப ஆராதனைகள் நடைபெறும். கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
நயினார்கோவிலில் உள்ள சவுந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி கோவிலிலும் 6 கால பூஜைகள் நடைபெறுவதால் கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும். இரவு புராதன நாடக நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சுவாமியை தரிசிக்க பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் இரவு கோவிலில் தங்கி நாடகத்தை பார்த்து விட்டு அதிகாலையில் கோவில் தெப்பத்தில் குளித்து மீண்டும் சாமியை தரிசனம் செய்வார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.
வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்கிறார்கள்.
மலையின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.
மலையின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.






