என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.
கருவூராக இருந்ததே காலப்போக்கில் கரூராக மருவியது. தமிழகத்தின் தற்போதைய தொழில் நகரங்களில் ஒன்றாக திகழும் கரூர் ஆன்மீகத்திலும் தழைத்தோங்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை இன்றளவும் தனது பேரருளால் இவ்வுலகிற்கு நிரூபித்து அருள் பாலித்து வருகிறாள் கரூர் மாரியம்மன்.
கரூர் நகரின் மையப்பகுதியில் கோவில் கொண்டுள்ளார் மாரியம்மன். மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.
தல சிறப்பு
அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற் போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.
இக்கோவிலில் விசேஷ அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.
தல பெருமை
மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற் றில். எப்படித் தோன்றுகி றோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.
மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.
வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
கரூர் நகரின் மையப்பகுதியில் கோவில் கொண்டுள்ளார் மாரியம்மன். மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.
தல சிறப்பு
அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற் போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.
இக்கோவிலில் விசேஷ அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.
தல பெருமை
மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற் றில். எப்படித் தோன்றுகி றோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.
மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.
வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்பத்தை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
தோஷம் பரம்பரையாக தொடர்ந்து வரும். ஜாதகருக்கு பழி வாங்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி தப்பித்து விடுவார்கள். குற்ற உணர்வு குறைவுபடும். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பியவர்களை சார்ந்தே வாழ்வார்கள்.
மன குழப்பம் அல்லது பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தானும் குழம்பி மற்ற வர்களையும் குழப்புவார்கள். ஜீரணக் கோளாறு மிகுதியாக இருக்கும். எந்த முடிவையும் உடனடியாக எடுக்க மாட்டார்கள் அல்லது முடிவு எடுக்கும் திறன் குறைவாக இருக்கும் கூண்டுக்கிளியாக வீட்டில் அடைபட்டு இருப்பதை விரும்புவார்கள்.
ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
தோஷம் பரம்பரையாக தொடர்ந்து வரும். ஜாதகருக்கு பழி வாங்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி தப்பித்து விடுவார்கள். குற்ற உணர்வு குறைவுபடும். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பியவர்களை சார்ந்தே வாழ்வார்கள்.
மன குழப்பம் அல்லது பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தானும் குழம்பி மற்ற வர்களையும் குழப்புவார்கள். ஜீரணக் கோளாறு மிகுதியாக இருக்கும். எந்த முடிவையும் உடனடியாக எடுக்க மாட்டார்கள் அல்லது முடிவு எடுக்கும் திறன் குறைவாக இருக்கும் கூண்டுக்கிளியாக வீட்டில் அடைபட்டு இருப்பதை விரும்புவார்கள்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ப்பதியில் வைகாசி திரு விழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை,ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த வருட வைகாசி திருவிழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதி காலை 4 மணிக்கு முத்திரிப தமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கி ன்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும்,
4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவா கனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.
வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 8-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாச லில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதா னமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது.
அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
இந்த வருட வைகாசி திருவிழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதி காலை 4 மணிக்கு முத்திரிப தமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கி ன்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும்,
4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவா கனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.
வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 8-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாச லில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதா னமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது.
அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.
சக்தியின் வடிவமாக திகழும் அம்மன் பக்தர்களின் குறைபோக்கும் அவதாரமாக போற்றப்படுகிறார். ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்றதாகினும் எப்போதும் பக்தர்களின் தீராத வினைகளை தீர்த்து வைக்கும் அம்சமாக திகழ்கிறாள்.
அம்மனின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு அவதாரம் எடுத்துள்ள அம்மன்களில் தமிழகத்தில் மாரியம்மன் பெரிதும் வணங்கப்படுகிறாள்.
அந்த வகையில் சக்தி தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நகரமாம் கரூரில் அவதரித்து வரும் இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கும். அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்ப மரத்தின் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைப்பார்கள்.
பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைப்பார்கள். இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபடுவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியின் போது, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபடுவார்கள்.
அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்வார்கள். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காட்டப்படும். பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள். பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நிற்பார்கள்.
மாலை நேரத்தில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வருவார். அப்போது விண்ணதிர மேளதாளங்கள் முழங்கும். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலமாக புறப்படும்.
இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடையும். மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே அருளாளி செல்ல அதனை பின் தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் செல்லும். அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்குவார்கள்.
பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடிப்பார்கள்.
அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்படும். மேலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு செல்வார்கள். சில பக்தர்கள் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து செல்வார்கள். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்ட பக்தர்களும் கடல் அலை போல் திரண்டு வருவார்கள்.
அம்மனின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு அவதாரம் எடுத்துள்ள அம்மன்களில் தமிழகத்தில் மாரியம்மன் பெரிதும் வணங்கப்படுகிறாள்.
அந்த வகையில் சக்தி தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நகரமாம் கரூரில் அவதரித்து வரும் இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கும். அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்ப மரத்தின் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைப்பார்கள்.
பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைப்பார்கள். இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபடுவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியின் போது, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபடுவார்கள்.
அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்வார்கள். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காட்டப்படும். பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள். பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நிற்பார்கள்.
மாலை நேரத்தில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வருவார். அப்போது விண்ணதிர மேளதாளங்கள் முழங்கும். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலமாக புறப்படும்.
இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடையும். மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே அருளாளி செல்ல அதனை பின் தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் செல்லும். அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்குவார்கள்.
பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடிப்பார்கள்.
அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்படும். மேலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு செல்வார்கள். சில பக்தர்கள் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து செல்வார்கள். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்ட பக்தர்களும் கடல் அலை போல் திரண்டு வருவார்கள்.
பொருளாதாரம், வியாபாரத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
"ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''
- என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.
அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.
ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
- என்றோ அல்லது அழகு தமிழில்
ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
அழகன் அண்ணா கணேஸ்வரா!
ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
என்றும் மங்களம் கணேஸ்வரா!
பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.
- என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.
அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.
ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
- என்றோ அல்லது அழகு தமிழில்
ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
அழகன் அண்ணா கணேஸ்வரா!
ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
என்றும் மங்களம் கணேஸ்வரா!
பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவ திருப்பதி தலங்களில் முதல் திருப்பதி தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் கும்பாபிஷேக தினத்தில் வருஷாபிஷேக விழாவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், 10 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிகழ்வில் நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன் ஆகி யோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், 10 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிகழ்வில் நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன் ஆகி யோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, கணபதி, நவகிரகம், மகாலட்சுமி, காலபைரவ ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன.
பின்னர் காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி’. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.
கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.
பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.
நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.
பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.
நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டி புதூரில் பழமையான புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 137-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஊர்வலமும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
21-ந்தேதி புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் புதுநன்மை திருப்பலி மறவபட்டி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரத பவனி நடைபெற்றது.
இதையடுத்து நேற்று நடந்த பகல் திருவிழாவில் புனித சலேத் மாதாவின் பெரிய சப்பர பவனி நடைபெற்றது. முடிவில் ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
21-ந்தேதி புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் புதுநன்மை திருப்பலி மறவபட்டி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரத பவனி நடைபெற்றது.
இதையடுத்து நேற்று நடந்த பகல் திருவிழாவில் புனித சலேத் மாதாவின் பெரிய சப்பர பவனி நடைபெற்றது. முடிவில் ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாமக்கல் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8-ந் தேதி பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ந் தேதி மறுகாப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நாமக்கல் சந்தை பேட்டை புதூர், ஆர்.பி.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி, வீதியாக தூக்கி சென்றனர்.
பொதுமக்கள் ஆங்காங்கே கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி வருகிற ஜூலை மாதம் வரை காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8-ந் தேதி பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ந் தேதி மறுகாப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நாமக்கல் சந்தை பேட்டை புதூர், ஆர்.பி.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி, வீதியாக தூக்கி சென்றனர்.
பொதுமக்கள் ஆங்காங்கே கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி வருகிற ஜூலை மாதம் வரை காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் ராணி சேதுபதி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் சினேக வல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் பாண்டியநாட்டு 14 ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாடானை சினேகவல்லி அம்மன் வைகாசி விசாக திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.12-ந்தேதி 10-ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்சவமும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், தேவஸ்தான அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.12-ந்தேதி 10-ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்சவமும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், தேவஸ்தான அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மே மாதம் 24-ம் தேதியில் இருந்து மே மாதம் 30-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
24-ம் தேதி செவ்வாய் கிழமை :
* தேய்பிறை நவமி
* சுவாமிமலை முருகபெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* சென்னை சென்னகேசவ பெருமாள் விடாயாற்று உற்சவம்
* சந்திராஷ்டமம்: ஆயில்யம்
25-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* தத்தாத்திரய ஜெயந்தி
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
* திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம்: மகம்
26-ம் தேதி வியாழக்கிழமை:
* சர்வ ஏகாதசி
* சுபமுகூர்த்தம்
* தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
* திருமொகூர் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு
* சந்திராஷ்டமம்: பூரம்
27-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* பிரதோஷம்
* ராமேஸ்வரம் அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு
* திருவிடை மருதூர் ஸ்ரீஅம்பிகை புறப்பாடு
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம்: உத்திரம்
29-ம் தேதி சனிக்கிழமை:
* திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
* மாத சிவராத்திரி
* அக்னி நட்சத்திரம் முடிவு
* சந்திராஷ்டமம்: ஹஸ்தம்
29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* கார்த்திகை விரதம்
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை
* பழனி ஆண்டவர், செந்தூர் முருகன் தலங்களில் புறப்பாடு
* சந்திராஷ்டமம்: சித்திரை
30-ம் தேதி திங்கட்கிழமை:
* சர்வ அமாவாசை
* கரிநாள்
* சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்
* மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி புறப்பாடு
* சந்திராஷ்டமம்: சுவாதி






