என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமர்சியல் வெற்றி கிடைப்பது இல்லை என்று நடிகை வசுந்தரா, ஞானச்செருக்கு பட விழாவில் பேசியுள்ளார்.
    பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ‘விரைவில் வெளியாக உள்ளது. 

    இந்தநிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வசுந்தரா

    நடிகை வசுந்தரா பேசும்போது, “இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு இயக்குனர் தரணி ராஜேந்திரன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை கேள்விப்பட்டேன். எந்த ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுக்கும்போதும் ஏதோ ஒரு வகையில் தடங்கல்கள் வந்து கொண்டேதான் இருக்கும். 

    இதுபோன்ற படங்களை வெறும் விருது படமாகவே நாம் பார்க்கிறோமே தவிர, அதற்கான கமர்சியல் வெற்றி என்பது கிடைப்பது இல்லை. வீர சந்தானம் போன்ற ஒரு மகா கலைஞனை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தின் நிகழ்வில் கலந்து கொண்டது எனக்கு பெருமை” என கூறினார்.
    உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் ஆகியோரை வைத்து சைக்கோ படத்தை இயக்கி இருக்கும் மிஷ்கின் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. உதயநிதியின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை குவித்து வருகிறது என்கிறார்கள். 

    இதில் உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் நடித்திருந்தார்கள். டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்து இருந்தார். மிஷ்கின் உதவியாளர் ராஜ், சைக்கோவாக நடித்திருந்தார். இந்த படம் பற்றி கடுமையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. 

    உதயநிதி

    இதுகுறித்து மிஷ்கின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சைக்கோ படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்தவர்கள் என்னை கட்டிப்பிடித்து பாராட்டுகிறார்கள். ஆனால் கடுமையான விமர்சனங்களும் வருகிறது. இவ்வளவு ரத்தம் தேவையா? வன்முறை தேவையான என்கிறார்கள். இது அப்படிப்பட்ட படம் தான் என்பதை முன்பே சொல்லிவிட்டேன். தணிக்கையில் ஏ சான்றிதழ் கேட்டு வாங்கினேன். குழந்தைகள், கர்ப்பிணிகள், இளகிய மனம் படைத்தவர்கள் படம் பார்க்க வராதீர்கள் என்று சொன்னேன். அடுத்து 24 கொலை செய்த சைக்கோவை மன்னிக்கலாமா என்று கேட்கிறார்கள். 

    அவன் சைக்கோவாக மாறியதற்கு மதக் கோட்பாடுகளும், பள்ளி கட்டுப்பாடுகளும் தான் காரணம். அவனை மிருகமாக்கியது இவைகள் தான். அவன் ஏன் இப்படி ஆனான் என்பதை அதிதிராவ் உணர்கிறார். அதனால் அவரது பார்வையில் அவன் குழந்தையாக தெரிகிறான், மன்னிக்கிறார். இது எப்படி தவறாகும். இது மாதிரி படங்கள் சிவப்பு ரோஜாக்கள் காலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கிறது. நான் எனது பாணியில் இந்த படத்தை தந்திருக்கிறேன். இவ்வாறு மிஷ்கின் கூறினார்.

    ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இன்று முதல் தொடங்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவரை பலாத்காரம் செய்த காட்சியை அந்த கும்பல் செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

    மேலும் ரவுடி பல்சர் சுனில் உள்பட 12 பேரும் கைதானார்கள். இந்த வழக்கில் நடிகர் திலீப் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று திலீப் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும்என்று உத்தர விட்டனர். 

    மேலும் கேரள ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடந்தது. அப்போது நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு இன்று முதல் வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதை தொடர்ந்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. இன்று வழக்கின் முதல் சாட்சி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். இதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
    தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்துக்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக பாடகி சின்மயி போட்டியிடுகிறார்.
    தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சுமார் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்துவருகிறார். 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் ஆனார். சங்க நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவதால் வரும் 15ந்தேதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் களம் இறங்குகிறார். 

    அவரது தலைமையில் களம் இறங்கும் அணியை எதிர்த்து ராமராஜ்யம் என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி களம் இறங்குகிறார். இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

    ராதாரவி, சின்மயி

    முன்னதாக ‘மீடூ’ விவகாரத்தில் சின்மயி கூறிய புகார்களை ராதாரவி கடுமையாக விமர்சித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. சின்மயி சந்தா செலுத்தவில்லை என்று கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ராஜா கஜினி இயக்கத்தில் ரோஷன், ஹிரோஷினி கோமலி, பிரியங்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உற்றான்’ படத்தின் முன்னோட்டம்.
    ராஜா கஜினி இயக்கி தயாரிக்கும் திரைப்படம் உற்றான். இப்படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். மேலும் வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியங்கா, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்.ஆர்.ரகுனந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஹோலிக் பிரபு ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    உற்றான் படக்குழு

    1994ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை தான் இது.  காதலால் கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளதாக இயக்குனர் ராஜா கஜினி தெரிவித்துள்ளார்.
    வணங்காமுடி திரைப்படம் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் படம் `வணங்காமுடி'. செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து வணங்காமுடி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    வணங்காமுடி படக்குழு

    இப்படத்தில் அரவிந்த்சாமி ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை அவர் சாதுர்யமாக எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தை தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
    நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.எஸ்.ராகவேந்திரா. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். பின்னர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார். 

    தந்துவிட்டேன் என்னை, சிந்து பைரவி, விக்ரம், சொல்லத்துடிக்குது மனசு, கற்பூர முல்லை, இளையவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1980-இல் வெளிவந்த 'யாக சாலை' என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  
    மலையாள நடிகை நஸ்ரியா, 6 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    தமிழில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. குறிப்பாக மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்கள் நஸ்ரியாவுக்குள் இருந்த குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியது. கிட்டத்தட்ட அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதற்கு முன்பு நடித்த அனைத்து படங்களிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். 

    டிரான்ஸ் பட போஸ்டர்

    இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசில் ஜோடியாக மலையாளத்தில் உருவாகி வரும் டிரான்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரங்கள் போல அல்லாமல் இந்த படத்தில் மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் நஸ்ரியா. இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.
    ராஜாவுக்கு செக் படத்தில் காட்சியின் முக்கியத்துவம் கருதி நிர்வாணமாக நடித்த நடிகையை, இயக்குனர் சேரன் பாராட்டி உள்ளார்.
    சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. 

    சிருஷ்டி டாங்கே

    அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சேரன், சிருஷ்டி டாங்கேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார். ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும். அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. மிக்க நன்றி” என கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், திரைத்துறையில் தனக்கு நிறைய எதிரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    கங்கனா ரணாவத் அளித்த பேட்டி வருமாறு:- திருமண முறையில் எனக்கு வேறு அபிப்பிராயம் இருந்தது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன். இதனால் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்றும் முடிவு செய்தேன். இப்போது அந்த எண்ணம் மாறி இருக்கிறது.

    கங்கனா ரணாவத்

    விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. சமூக வலைத்தள விவாதங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை விட்டு விலகி இருக்கிறேன். எனக்கு கோபம் அதிகம் வரும். அந்த கோபத்துக்கு காரணமும் இருக்கும்.

    எப்போது கோபப்பட்டாலும் அதில் நல்லதுதான் நடந்து உள்ளது. நான் பணத்தை தாராளமாக செலவு செய்வதாக சொல்கிறார்கள். என்னை நேசிக்கிறவர்களுக்காகவும், சமூக சேவை நிகழ்ச்சிகளுக்காகவும் செலவு செய்ய தயங்க மாட்டேன். சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். வேறு யாருக்கும் இந்த அளவுக்கு இல்லை. சினிமாவில் இருந்தால் விரோதிகள் இருக்கத்தான் செய்வார்கள்.

    இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றி உள்ளார்.
    பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    இந்நிலையில், இப்படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ஜி. தனஞ்செயன் கூறியதாவது “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும்  விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக விளங்கும் என்று தோன்றியது. 

    சுரேஷ், ரவீனா

    மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் ஆர்.டி.எம். இயக்கத்தில் எதார்த்தமான பாணியில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஒரு நொடி அசையவிடாமல் கட்டிப்போடும் தன்மையில் அசத்தலாக படத்தை தந்துள்ளார் இயக்குநர். இத்திரைப்படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது புதிய படம் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது.

    அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தை கைவிட்டுவிட்டனர். தற்போது புதிய கதையை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார்.

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் இணைவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    விஜய் சேதுபதி தற்போது ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜனநாதன் இயக்கி உள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
    ×