என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, என் பொண்டாட்டிக்காக செய்வேன் என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் இவர் சிம்புவின் நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர். இந்நிலையில் ஊரடங்குக்கு முன்னர் இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார். அப்போது, வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்க, என்னை கல்யாணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்கா வராங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைச்சீங்களா, அதெல்லாம் உங்க காலம் என்று பதில் கூறுகிறார்.

மேலும் சிம்பு பேசும் போது, பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவிக்காக சமையல் செய்வேன். எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார். அப்போது, வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்க, என்னை கல்யாணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்கா வராங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைச்சீங்களா, அதெல்லாம் உங்க காலம் என்று பதில் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது. படம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது.
இந்நிலையில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பின்னணி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் ஆகியோருடன் இணைந்து ‘மாஸ்டர்’ கதையை எழுதிய பொன் பார்த்திபன், தனது சமீபத்திய பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவலை கூறியிருக்கிறார். அதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் ஒரு நபரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது. படம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது.
இந்நிலையில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பின்னணி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் ஆகியோருடன் இணைந்து ‘மாஸ்டர்’ கதையை எழுதிய பொன் பார்த்திபன், தனது சமீபத்திய பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவலை கூறியிருக்கிறார். அதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் ஒரு நபரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
தந்தை நினைவு நாளை முன்னிட்டு நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ஐசரி கணேஷ் பணம் செலுத்தி இருக்கிறார்.
தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.
இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ்.
சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.
இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ்.
சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகமுள் திரைப்படம் மூலம் அறிமுகமான அபிஷேக் சங்கர், தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் படைப்பான ‘மோகமுள்’ திரைப்பட வடிவம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதில் அறிமுகமான அபிஷேக் சங்கருக்கும் திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது.
‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைக்கு நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர், சுமார் 25 –க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10000 -க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி எபிசோடுகள், மராத்தியிலும் இந்தியிலும் என 60 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்கத்திலும் தீராத ஆர்வம் கொண்ட அபிஷேக், ஒரு திரைப்படம், 15 கார்ப்பரேட் பிலிம்ஸ், 20 குறும்படங்கள் என இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
மேலும் 650-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் தனது திறமைகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள், இந்திரா காந்தி தாமரை விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, 4 மைலாப்பூர் அகாடமி விருதுகள், சிறந்த ஆல் ரவுண்ட் ரோலிங் கோப்பை ஆகியன குறிப்படத்தக்கவை.
இன்றும் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், அடங்காதே, க/பெ ரணசிங்கம், கபடதாரி, என் 4, மிருகா போன்ற படங்களில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.
‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைக்கு நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர், சுமார் 25 –க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10000 -க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி எபிசோடுகள், மராத்தியிலும் இந்தியிலும் என 60 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்கத்திலும் தீராத ஆர்வம் கொண்ட அபிஷேக், ஒரு திரைப்படம், 15 கார்ப்பரேட் பிலிம்ஸ், 20 குறும்படங்கள் என இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
மேலும் 650-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் தனது திறமைகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள், இந்திரா காந்தி தாமரை விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, 4 மைலாப்பூர் அகாடமி விருதுகள், சிறந்த ஆல் ரவுண்ட் ரோலிங் கோப்பை ஆகியன குறிப்படத்தக்கவை.
இன்றும் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், அடங்காதே, க/பெ ரணசிங்கம், கபடதாரி, என் 4, மிருகா போன்ற படங்களில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.
குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 10-ம் தேதி சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்குக் குடும்பத்துடன் சென்றார் ராதாரவி.
அனுமதி பெற்று வந்திருந்தாலும் கொரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்திருப்பதால் நகராட்சி சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலின்படி வீட்டில் 14 நாள்களுக்கு ராதாரவியும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான அடையாள அட்டையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது பங்களாவின் சுவரில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராதாரவியின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் ராதாரவி. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். நான் நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனுமதி பெற்று வந்திருந்தாலும் கொரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்திருப்பதால் நகராட்சி சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலின்படி வீட்டில் 14 நாள்களுக்கு ராதாரவியும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான அடையாள அட்டையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது பங்களாவின் சுவரில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராதாரவியின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் ராதாரவி. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். நான் நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதுரை மேலமடை சலூன் கடை மோகன் தம்பதி, மகள் நேத்ராவின் சேவைகளைப் பாராட்டிய நடிகர் பார்த்திபன் அவரின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனாவால் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார். தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக சேர்த்து, சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.

இந்த செய்தி பற்றி அறிந்த பார்த்திபன் நேத்ராவை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
இந்த செய்தி என்னை பெரிதாக பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்துக் கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் அவர்களுக்கு நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி எனது பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.
மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி என்னை பெரிதாக பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்துக் கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் அவர்களுக்கு நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி எனது பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.
மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருவதால், ஆஸ்கார் விருது விழா தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் ஹாலிவுட் முதல் அனைத்து திரையுலகமும் முடங்கி கிடக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர். ஆஸ்கார் விருதுக்கு ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு முன்பு திரையரங்குகளில் குறைந்தபட்சம் ஒருவாரம் திரையிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு தகுதி பெற்றன. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஜூன் அல்லது ஜூலையில் விழாவை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 93 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது விழா இதுவரை தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சுறுத்தலால் பல ஹாலிவுட் படங்களின் ரிலீசை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர். இதன்காரணமாகவே ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
சுந்தர்பாலு இயக்கத்தில் திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கர்ஜனை படத்தின் முன்னோட்டம்.
திரிஷா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுகூனம் சார்பில் ஜோன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
திரிஷா சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்லும்போது ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பது நாயகியின் பாத்திரம். இதில் அதிரடியான சண்டை காட்சிகளிலும் திரிஷா துணிச்சலாக நடித்திருக்கிறார். ஒரு கரடி சண்டையும் இடம் பெறுகிறது. ஒரே நாள் இரவில் சம்பவங்கள் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘கர்ஜனை’ தயாராகி இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடிய திரிஷா, இந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் யார் என்பதை கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இது ரிலீசாக உள்ளது. இதுதவிர ரசிகர்களுடனும் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

அந்தவகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர், உங்கள் பார்வையில் இந்திய அளவில் சிறந்த 3 நடிகர்கள் யார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திரிஷா, கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரன், தற்போது வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டானது. ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ வைரலானது.
இந்நிலையில், நடிகை சிம்ரன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே வைரலான பாடலை மேலும் வைரலாக்க உங்களால் மட்டும் தான் முடியும் என பதிவிட்டுள்ளனர்.
Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe#WeWillGetThroughThisTogether#slimfitsimran#dancewithmepic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மூலம் உதவியுள்ளார்.
சென்னையை சேர்ந்த தேவிகா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயத்துக்குட்பட்டவர்களாம்.
கையில் இருந்த பணம் சில நாட்களில் செலவான நிலையில், பின்னர் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து, அப்பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்மூலம் இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜய் உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, அந்த 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையாக அனுமதி பெற்று, அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு உணவு, கையுறைகள், முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், போலீசாருக்கு உணவு, கையுறைகள், முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு 200 பேருக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.






