என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கரை வென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

     

    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா சார்பில் ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "வாழ்த்துக்கள் கீரவாணி மற்றும் சந்திர போஸ் ஏற்கனவே கணிக்கப்பட்ட மற்றும் தகுதியானது. உங்கள் இருவருக்கும் மற்றும் ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் ஜெய்ஹோ!! என்று பதிவிட்டுள்ளார்.


    இந்திய சார்பில் ஆஸ்கர் வென்றவர்கள்
    இந்திய சார்பில் ஆஸ்கர் வென்றவர்கள்

    மேலும் மற்றொரு பதிவில், வாழ்த்துக்கள், இந்திய இயக்குனர்களுக்கு நீங்கள் ஒரு மடையை திறந்து ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதை (சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல்) வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

     

    தசரா

    தசரா


    இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'தசரா' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


    தசரா

    தசரா

    இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரைலர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3.33 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், விடுதலை திரைப்படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
    • இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.


    ஆஸ்கர் மேடையில் சந்திரபோஸ் -எம்.எம்.கீரவாணி

    இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
    • இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

    மேலும், யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படமும் ஆஸ்கர் விருதை வென்றது. இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி என்ற மரகதமணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

    முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
    • இதில், நடிகை தீபிகா படுகோனே தொகுப்பாளராக இருந்தார்.

    அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக நடிகை தீபிகாபடுகோனே பங்கேற்றார். சிவப்பு கம்பளம் போர்த்திய விழா மேடையில் தீபிகா படுகோனே கருப்பு கவுன் அணிந்து பங்கேற்றார்.


    37 வயதான அவர் தனது விருப்ப உடையான லூயிஸ் உய்ட்டன் ஆப் தி ஷோல்டர் மெர்மெய்ட் பிளாக் கவுனில் அழகு தேவதையாக ஜொலித்தார். அவர் கழுத்தில் 82oE என்ற பச்சை (டாட்டூ) குத்தியிருந்தார். தீபிகாவின் மேக்கிங் அவரை ஹாலிவுட் நடிகை போல கிளாமராக காட்டியது. அவர் அணிந்திருந்த பிரைஸ்லெட்டுடன் கூடிய நெக்லஸ் அனைவரின் பார்வையையும் அவரது பக்கம் திருப்பியது.


    பின்னர் ஆஸ்கர் மேடை ஏறிய அவர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தையும், அதில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார். முக்கியமாக பாடலின் நடன அசைவுகள், பாடலுக்கு யூ டியூப்பில் வந்த வியூவ்ஸ், ரீல்சில் ரசிகர்கள் ஆடிப்பாடியது என வரிசையாக அடுக்கினார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அவர் பேச்சு முழுவதும் இடை இடையே சிரித்தார்.


    தீபிகாபடுகோனே ஆர்.ஆர்.ஆர். படம் பற்றி பேசிய போது ரசிகர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அவரை பேசவிடாமல் திக்குமுக்காட செய்தனர். அதன் பிறகு நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது. தீபிகாபடுகோனேக்கு முன்பு மாடல் நடிகை பெர்சிஸ் கம்பட்டா மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஆஸ்கரில் பங்கேற்றுள்ளனர். தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்கர் விழாவில் தான் அணிந்திருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.
    • இந்த ஆவணப்படம் இன்று நடைபெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியில் விருது வென்றுள்ளது.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

    இந்த திரைப்படம் உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இன்று அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சர்வதேச குறு ஆவணப்படத்திற்கான விருதினை முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியை கொண்டு உருவாக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம் பெற்றுள்ளது.

    தி எலிபெண்ட் விஸ்பரரஸ் படம் எடுக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் யானைகளை பராமரிக்கும் பகுதியாகும். இங்கு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை பிடித்து கும்கியாகவும், காட்டுக்குள் தாயை பிரிந்து இருக்கும் குட்டிகளை அழைத்து பராமரிப்பது வழக்கம்.

    அப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்த 5 மாத அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானையும் வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டு வந்தனர்.

    இந்த 2 யானைகளையும் பராமரிக்கும் பொறுப்பானது அங்கு பாகனாக பணியாற்றி வந்த பொம்மனுக்கும், அவரது மனைவி பெள்ளிக்கும் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த யானையை தங்கள் குழந்தையை போலவே பாவித்து வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த பிரபல ஆவணப்படம் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் முதுமலைக்கு வந்தார். அவர், பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து, குட்டி யானைகள் குறித்தும், அவற்றை பராமரித்து வரும் உங்களை வைத்தும் ஒரு ஆவணப்படம் இயக்க உள்ளேன். இதற்காக உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளேன் என கூறினார்.

    2 பேரும் சம்மதிக்கவே இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருக்கிறார். படம் வெளியானதும் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த தம்பதிக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டு, இறுதி பட்டியலுக்கு தேர்வானது. இறுதிப்பட்டியலில் வென்று ஆஸ்கர் விருதையும் இந்த படம் பெற்று விட்டது.

    ஆஸ்கர் விருதினை பெற்றதன் மூலம் இந்த படமும், படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விட்டனர். இந்தியாவை சேர்ந்த ஆவண திரைப்படத்திற்கு, ஆஸ்கர் விருது கிடைத்த தகவல் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரும் இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்த படம் மூலம் காட்டுக்குள் இருக்கும் ஒரு சிறிய கிராமமான தங்கள் கிராமம் சர்வதேச அளவில் புகழ் பெற்று விட்டதாக அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். அவர்கள் பொம்மன் வீட்டு முன்பு குவிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    ஆஸ்கர் விருது வென்றது குறித்து பொம்மன் கூறியதாவது:-

    ஆஸ்கர் விருது பெற்றது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. இது எனக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல. எல்லோருக்குமானது. ஆஸ்கர் விருது பெற்ற தகவல் எனக்கு தெரியாது. மற்றவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்ட பிறகே நாங்கள் நடித்த படம் ஆஸ்கர் விருது பெற்றது தெரியவந்தது. இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    எனக்கு இப்போது 54 வயதாகிறது. நான் 40 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன். தாயிடம் இருந்து பிரிந்த இந்த 2 குட்டி யானைகளையும் நாங்கள் எங்கள் குழந்தைகளை போலவே நானும் எனது மனைவியும் கவனித்து வந்தோம். இரவில் நாங்கள் தூங்கும் நேரத்தில் குட்டி யானைகள் பசியால் சத்தமிடும். அப்படி அது எந்த நேரம் சத்தமிட்டாலும் அதற்கு என்ன தேவை என்பதை நேரம் காலம் பாராமல் வழங்கி வந்தோம். யானை இருக்கும் இடத்தின் அருகேயே பரண் அமைத்து இரவு முழுவதும் யானையை பாதுகாத்து வருவோம்.

    எங்கள் வாழ்க்கை முறை படமாக்கப்பட்டு அது உலகளவில் பரவி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இருந்தாலும் எனக்கு தர்மபுரியில் இன்று பராமரிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பொம்மனின் மனைவி பெள்ளி கூறியதாவது:- ஆஸ்கர் விருது கிடைத்தது எங்கள் ரெண்டு பேருக்கும் சந்தோஷமாக உள்ளது. ரகு, பொம்மியால் மட்டுமே இது சாத்தியமானது. அந்த 2 யானைகளையும் நாங்கள் குழந்தைகளாகவே நினைத்து வளர்த்து வந்தோம். இந்த விருதால் முதுமலைக்கே சந்தோஷம். முதுமலைமட்டுமின்றி தமிழக அரசு, வனத்துறை உள்பட அனைவருக்குமே இது மகிழ்ச்சியாகும். இந்த சந்தோஷத்திற்கு எல்லாம் காரணமே ரகுவும், பொம்மியும் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பொம்மனின் பேத்தி சவுஜனா கூறும்போது, யானை எங்களுடன் எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடும். துதிக்கையை தூக்கி எங்கள் மீது போடுவதும், அதனை கொண்டு எங்களை செல்லமாக தாக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நான் தினமும் தாத்தா பாட்டியுடன் சேர்ந்த இந்த யானைக்கு பால், களி, தேங்காய், உள்ளிட்டவற்றை எடுத்து சென்று கொடுப்பேன். தாத்தா, பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் நானே யானைகளை கவனித்து கொள்வேன். இந்த விருது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    • இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.


    இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.


    அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'சீனிக்காரி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன் ராஜா வரிகளில் சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    ஆர்.ஆர்.ஆர்.

    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராம் சரண் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நம் வாழ்விலும் இந்தியன் சினிமாவிலும் சிறந்த திரைப்படமாக எப்போதும் இருக்கும். நான் இப்பொழுதும் கனவில் இருப்பது போல் உணர்கிறேன்.


    ராம் சரண் அறிக்கை

    உங்களின் அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் கீரவாணி இருவரும் இந்திய திரையுலகின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். இந்த சிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்ததற்கு இருவருக்கும் நன்றி. நாட்டு நாட்டு என்பது உலகம் முழுவதும் இருக்கும் ஒரு உணர்வு. இந்த உணர்வை ஒருங்கிணைத்த பாடலாசிரியர் சந்திரபோஸ் , பாடகர்கள் ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு நன்றி.

    என் சக நடிகரான ஜுனியர் என்.டி.ஆருக்கும் நன்றி. அண்ணா உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன் என்று நம்புகிறேன். இனிமையான இணை நடிகராக இருந்ததற்கு நன்றி ஆலியா பட். இந்த விருதான ஒவ்வொரு இந்திய நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட பார்வையாளர்களுக்கு சொந்தமானது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது. இந்த முறை ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழு விவரம் தொடர்ந்து பார்ப்போம்.

    சிறந்த நடிகர் -பிரண்டன் பிரேசர்(BRENDAN FRASER) - தி வேல்

    சிறந்த துணை நடிகர் - கி கு யுவான் (KE HUY QUAN) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த நடிகை - மிஷெல் யோ (MICHELLE YEOH) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த துணை நடிகை - ஜாமி லீ கர்டிஸ் (JAMIE LEE CURTIS) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் - குளேர்மோ டி டிரோஸ் பினோக்கியோ (GUILLERMO DEL TORO'S PINOCCHIO)

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ஜேம்ஸ் பிரண்ட் (James Friend) - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT) 

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ரூத் கார்ட்டர் (Ruth Carter) -பிளாக் பந்தர் : வக்காண்டா ஃபார் எவர் (BLACK PANTHER: WAKANDA FOREVER) 

    சிறந்த இயக்குனர் - டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த ஆவணப்படம் - நவல்னீ (NAVALNY)

    சிறந்த ஆவண குறும்படம் - தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS)

    சிறந்த படத்தொகுப்பு - பால் ரோகர்ஸ் (Paul Rogers) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த சர்வதேச திரைப்படம் - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த ஒப்பனை - ஆட்ரின் மோரட், ஜுடி சின் மற்றும் அனி மேரி பிராட்லீ (Adrien Morot, Judy Chin and Annemarie Bradley) - தி வேல் (THE WHALE)

    சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - வால்கர் பிரட்மேன் (Volker Bertelmann)- ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த ஒரிஜினல் பாடல் - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த படம் - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த புரொடக்ஷன் டிசைன் - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் மற்றும் தி ஹார்ஸ் (THE BOY, THE MOLE, THE FOX AND THE HORSE)

    சிறந்த குறும்படம் - அன் ஐரிஸ் குட் பைய் (AN IRISH GOODBYE) - Tom Berkeley and Ross White

    சிறந்த ஒலி - டாப் கன் : மேவரிக் (TOP GUN: MAVERICK) - Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - அவதார்: தி வே ஆப் வாட்டர் (AVATAR: THE WAY OF WATER) - Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett

    சிறந்த திரைக்கதை - வுமன் டாக்கிங் (WOMEN TALKING) - (சாரா போலே) Sarah Polley

    சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE) - டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert)

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    ஆர்.ஆர்.ஆர்

    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ஆர்.ஆர்.ஆர்

    அதில், " ஆஸ்கர் விருது வென்றமைக்கு  கீரவாணி,  ராஜமௌலி மற்றும் ரீ கார்திகி கொன்சால்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது வணக்கங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.
    • இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இதையடுத்து ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு தெலுங்கு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் இந்த பாடலை பாடவுள்ளதாக சமீபத்தில் ஆஸ்கர் அகடமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    ஆஸ்கர் மேடை

    இதில், நடிகை தீபிகா படுகோனே 'நாட்டு நாட்டு' பாடல் அறிவிப்பை மேடையில் அறிவித்ததையடுத்து ஆஸ்கர் மேடையில் பாடல் ஒலிப்பரப்பட்டு நடனக்குழுவினர் நடனம் ஆடினர். இந்த நடனத்திற்கு ஆஸ்கர் விழா விருந்தினர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×