என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 5.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா கார் அந்நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய ஹூண்டாய் ஆரா காரில் கேஸ்கேடிங் கிரில், ட்வின் பூமராங் வடிவமைப்பில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் ப்ரோஜெக்டர் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் ராப் அரவுண்ட் டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் டோன் டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா

    புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    பாதுகாப்பிற்கு ஹூண்டாய் ஆரா காரில் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், பின்புற பார்க்கிங் சென்சார்கள், கேமராக்கள், கீலெஸ் என்ட்ரி, ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ISOFIX சைல்டு சீட் ஆன்க்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது.



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2020 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜனவரி 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    டி.வி.எஸ். நிறுவன சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய மோட்டார்சைக்கிளில் புத்தம் புதிய எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன்

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய 2020 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    2020 டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் முன்புறம்  டெலிஸ்கோபிக் ஆயில் டேம்ப் செய்யப்பட்ட சஸ்பென்ஷனும், பின்புறம் ஐந்து நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படலாம். இது மோட்டார்சைக்கிளை நீண்டதூர பயணங்களுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

    புதிய ஸ்டார் சிட்டி மாடலில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். செயல்திறனும், 8.7 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பி.எஸ்.6 ரக ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள், நிறங்கள் மற்றும் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

    பி.எஸ்.6 ஹிமாலயன் மாடல்: கிராவெல் கிரீன், லேக் புளூ மற்றும் ராக் ரெட் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. மூன்று புதிய நிறங்கள் தவிர கிரானைட் பிளாக், ஸ்லீட் கிரே மற்றும் ஸ்னோ வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. 

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

    புதிய நிறங்களுடன், பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். - ஏ.பி.எஸ். வசதியை ஆக்டிவேட் மற்றும் டி-ஆக்டிவேட் செய்யும் வசதி. இத்துடன் ஹசார்டு டாகிள் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் 411சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் பற்றி ராயல் என்ஃபீல்டு இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ்.4 மாடலில் உள்ள என்ஜின் 24 பி.ஹெச்.பி. பவர், 32 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இவற்றுக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதிய டாடா அல்ட்ரோஸ் காருடன் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், டியாகோ மற்றும் டிகோர் போன்ற கார்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மூன்று கார்களுக்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஃபேஸ்லிஃப்ட் கார்களும் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவில் உருவாக்கப்படுகின்றன. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் நெக்சான் இ.வி. மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    டியாகோ ஃபேஸ்லிஃப்ட்

    டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வடிவமைப்பு டாடாவின் அல்ட்ரோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் காரில் குரோம் லைன் கிரில் மற்றும் உயர்த்தப்பட்ட பொனெட் வழங்கப்படலாம். இரண்டு மாடல்களிலும் ஸ்போர்ட் ரீடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், புதிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என டாடா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனினும், வாகனங்களின் விவரங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

    டாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை ஓரளவு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் வெர்ஷன் விலை ரூ. 60,000 துவங்கி ரூ. 90,000 வரையிலும், நெக்சான் டீசல் வேரியண்ட் விலையில் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.
    ஆடி நிறுவனத்தின் புதிய கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ8 எல் ஃபிளாக்‌ஷிப் செடான் கார் இந்தியாவில் பிப்ரவரி 3-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நான்காம் தலைமுறை ஏ8 எல் கார் ஃவோகஸ்வோகன் குழுமத்தின் MLB இவோ பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. 

    இதனால் புதிய கார் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கும். புதிய ஏ8 எல் காரின் முன்புறம் பிரம்மாண்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய ஏ8 மாடலில் சிறிய ஹெட்லேம்ப் மற்றும் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய காரில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்  மற்றும் பெரிய கிரில் வழங்கப்படலாம். 

    ஆடி ஏ8 எல்

    புதிய ஏ8 எல் காரில் மேம்பட்ட பம்ப்பர்கள் காரின் இருபுறங்களிலும் வழங்கப்படலாம் என்றும் இத்துடன் புதிய டெயில் லைட்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. காரின் உள்புறத்தில் புதிய இன்டீரியர் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றில் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம், ஹீட்டெட் சீட்கள், மசாஜிங் சீட்கள், ட்வின் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பேங் மற்றும் அலுஃப்சென் சரவுண்ட் மியூசிக் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், இருக்கை மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை லெதர் மூலம் உருவாக்கப்படுகின்றன.

    ஆடி ஏ8 எல் கார் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பாதுகாப்பிற்கு பல்வேறு ஏர்பேக், டிரைவிங் மோட்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
    ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. காரை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.



    ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் கியூ8 ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி கியூ8 விலை ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஆடி கியூ8 காரின் முன்புற கிரில் இருபுறங்களிலும் மெல்லியதாக இருக்கும் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்களும், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், பெரிய வீல் ஆர்ச்கள், 21 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. 

    காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒட்டுமொத்தமாக காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. அளவில் புதிய ஆடி கியூ8 மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். மாடல்களை விட சிறியதாக இருக்கின்றன.

    ஆடி கியூ8

    உள்புறம் மூன்று டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள்: 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 இன்ச் கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், கனெக்ட்டெட் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்டிரானிக்கலி ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங், 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

    ஆடி கியூ8 மாடலில் பி.எஸ்.6 ரக 3.0 லிட்டர் TFSI யூனிட் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 340 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க், எட்டு ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்கானதாகும்.

    புதிய இ.கியூ. பிராண்டை தவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இ.கியூ.சி எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி.

    மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. எஸ்.யு.வி. கார் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. தோற்றத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இ.கியூ.சி. கார் பார்க்க சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய இ.கியூ.சி. எஸ்.யு.வி. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பி.ஹெச்.பி. பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் நெக்சான் கார் இந்திய வெளியீட்டு விவரங்களௌ தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் இம்மாதம் 22-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து டாடா நிறுவனம் நெக்சான் இ.வி. காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் விலை ஜனவரி 28-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    நெக்சான் இ.வி. கார்: XM, XZ+ மற்றும் XZ+ LUX என மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இரண்டு டிரைவ் மோட்கள், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    டாடா நெக்சான் இ.வி.

    டாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும். 

    டாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.

    இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு சார்ஜ் செய்யும் போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். வீட்டில் உள்ள சார்ஜர் பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. காரின் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய ஜி.எல்.இ. எஸ்.யு.வி. கார் இந்தியாவில் ஜனவரி 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. புதிய ஜி.எல்.இ. காரில் பல்வேறு அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார் அளவில் பெரியதாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதனால் காரின் கேபின் அளவு அதிகமாகிறது. இத்துடன் கார் முழுக்க எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெட்லேம்ப், டெயில் லைட், டி.ஆர்.எல். உள்ளிட்டவைகளில் எல்.இ.டி. பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஜி.எல்.இ. காரில் இரண்டு 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸட்ரூமென்ட் கன்சோலாக இருக்கிறது. இத்துடன் நான்கு சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பார்க்கிங், பவர்டு டெயில்கேட், 360 டிகிரி கேமரா, இருக்கைகளை மின்சக்தியால் இயக்கும் வசதி, அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார்: ஜி.எல்.இ. 300டி, ஜி.எல்.இ. 400டி மற்றும் ஜி.எல்.இ. 450 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 256 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் பெரிய 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 330 பி.ஹெச்.பி. பவர், 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் மூன்றாவது வேரியண்ட் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இது 367 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெட்ரோல் யூனிட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் என கூறப்படுகிறது.
    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எவோக் எஸ்.யு.வி. மாடல் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எவோக் எஸ்.யு.வி. காரை இந்திய சந்தையில் ஜனவரி 30-ம் தேதி முதல் விற்பனை செய்ய துவங்குகிறது.

    இந்திய சந்தையில் முதல் தலைமுறை எவோக் மாடல் கார் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமான இரண்டாம் தலைமுறை மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது, புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முன்புறம் மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு, உள்புறங்களில் ஆடம்பரமான கேபின் வழங்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் வெலார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    2020 ரேன்ஜ் ரோவர் எவோக்

    புதிய எவோக் மாடலின் ஸ்டீரிங் வீல் தொடுதிரை வசதி கொண்ட கண்ட்ரோல்களும், பிஸ்டல் க்ரிப் கியர் லீவர், முன்புற இருக்கைகளை மின்சாரத்தால் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

    2020 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜெனியம் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது புதிய எஸ்.யு.வி. மாடலின் கான்செப்ட் வெர்ஷன் டீசரை வெளியிட்டுள்ளது. ஸ்கோடா விஷன் ஐ.என். என அழைக்கப்படும் புதிய கார் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    முதற்கட்ட டீசர்களில் புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அசத்தல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த கார் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த கார் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்கோடா காரின் வடிவமைப்பு அதிக ரக்கட் தோற்றத்தில், முன்புற கிரில் பெரிதாகவும், முன்புற பம்ப்பர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன்புற கிரில் ஸ்கோடாவின் பாரம்பரிய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் பெரிய ஏர் இன்டேக்குகள், ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் டீசர்

    காரின் பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில்லைட்கள், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய ஸ்கோடா கார் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    எனினும் புதிய காரில் ஸ்கோடா கமிக் மாடலில் உள்ள அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறத்தில் பெரிய மிதக்கும் வகையிலான தொடுதிரை டிஸ்ப்ளே, ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது. 

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, உற்பத்தி பணிகள் பின்னர் துவங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இதன் விற்பனை 2021 ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கிரெட்டா காரினை பிப்ரவரி 6-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரினை பாலிவுட் பிரபலம் ஷாருக் கான் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய காரின் வெளிப்புற வடிவமைப்பு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, உள்புறங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா காரையும் இதேபோன்று அறிமுகம் செய்திருக்கிறது. காரின் முழு விவரங்கள் வெளியீட்டின் போது அறிவிக்கும் நோக்கில், இவ்வாறு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா

    இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் ஹூண்டாயின் ஐ.எக்ஸ்.25 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் தனது ஐ.எக்ஸ்.25 மாடலை சீன சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவில் 2020 கிரெட்டா கார் முற்றிலும் புதிய வடிவமைப்பினை பெறவில்லை. 

    எனினும், இந்த காரில் புதிய அலாய் வீல்கள், முன்புற கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா காரில் கியா செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள ஜி.டி. லைனின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த எஸ்.யு.வி.-யின் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட் வடிவமைப்புகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வீல் ஆர்ச்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
    ×