என் மலர்
இது புதுசு
ஜாகுவார் நிறுவனத்தின் 2020 எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 எஃப் டைப் மாடல் கூப் மற்றும் கன்வெர்டிபில் மாடல்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 95.12 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாப் எண்ட் மாடலான எஃப் டைப் கன்வெர்டிபில் ஆர் பி575 மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2.42 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2020 ஜாகுவார் எஃப் டைப் மாடலின் முன்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு மேம்பட்ட இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் கார் தற்போதைய மாடலை விட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. எனினும், இதன் அளவீடுகளில் எந்த மாற்றமும் இன்றி ஒரே அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய தலைமுறை ஸ்போர்ட்ஸ் காரில் தற்சமயம் ஜெ வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள், மேம்பமட்ட கிரில் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறமும் புதிய எல்இடி டெயில் லைட்கள் முன்பை விட மெல்லியதாக வழங்கப்பட்டுள்ளது.
2020 ஜாகுவார் எஃப் டைப் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 3 சீரிஸ் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்றும் இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரி லெவல் செடான் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வெளியானதும், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் துவக்க விலை ரூ. 33 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அந்நிறுவனத்தின் சர்வதேச மாடல்கள் பிரிவில் புதுவரவாகும். சர்வதேச சந்தையில் இந்த கார் 2019 நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மாட்யூலர் FAAR பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது பிஎம்டபிள்யூ குழுமத்தின் அங்கமான மினி பிராண்டில் இருந்து உருவானதாகும். இந்த பிளாட்ஃபார்ம் வாகனத்தில் அதிக இடவசதியை வழங்குவதோடு, உற்பத்தி செலவையும் வெகுவாக குறைக்கும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் - 220ஐ மற்றும் 220டி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் முறையே 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 192 பிஹெச்பி மற்றும் 190 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐ20 காரில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் அடுத்த தலைமுறை ஐ20 மாடலில் புதிய கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க், புதிய ஐ20 காரில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிநவீன புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தற்சமயம் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களில் ஹூண்டாய் புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, வெர்னா, கிரெட்டா மற்றும் எலாண்ட்ரா என நான்கு மாடல்களில் புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை தொடர்ந்து புதிய டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் புளூலின்க் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் பெறும் ஆறாவது வாகனமாக இருக்கும்.
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் எஸ்யுவி மாடலின் நிறங்கள் மற்றும் வேரியண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கரோக் எஸ்யுவி மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுகம் செய்யும் முன் புதிய கரோக் எஸ்யுவி மாடலின் நிறங்கள் மற்றும் வேரியண்ட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஒற்றை வேரியண்ட்டில் ஆறு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. புதிய கரோக் எஸ்யுவி மேஜிக் பிளாக், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர், கேண்டி வைட், மேக்னடிக் பிரவுன் மற்றும் குவாட்ஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இதுதவிர ஸ்கோடா கரோக் எஸ்யுவி மாடலின் முன்பதிவு ஆன்லைனில் துவங்கியுள்ளது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவிக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவி மற்றும் இதர மாடல்களின் முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் ஸ்கோடா வலைதளத்தில் மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஸ்கோடா சூப்பர்ப் கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது 2020 சூப்பர்ப் செடான் மாடல் காருக்கான முன்பதிவுகளை சத்தமில்லாமல் ஆன்லைனில் துவங்கி இருக்கிறது. 2020 ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் ஸ்கோடா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய காரை வாங்க முன்பதிவு செய்ய முடியும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 ஸ்கோடா சூப்பர்ப் கார் ஆசம்பர செடான் மாடல் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க காஸ்மெடிக் மாற்றுங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிஎஸ்6 ரக என்ஜினும் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சூப்பர்ப் மாடலில் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. புதிய என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய செடான் மாடலில் பெட்ரோல் என்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 மாடல்களில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டேட்சன் நிறுவனத்தின் புதிய 2020 ரெடி கோ ஹேட்ச்பேக் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
டேட்சன் நிறுவனம் தனது புதிய 2020 ரெடி கோ மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. புதிய 2020 டேட்சன் ரெடி கோ மாடல் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
2020 டேட்சன் ரெடி கோ மாடலின் வெளிப்புறம் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதில் புதிய ஹெட்லேம்ப்கள் முன்பை விட அதிக கூர்மையாக இருக்கிறது. இத்துடன் முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர L வடிம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், முற்றிலும் புதிய பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
காரின் பக்கவாட்டில் 2020 டேட்சன் ரெடி கோ மாடலில் புதிய வீல்கள், பக்கவாட்டு இன்டிகேட்டர்களின் மேல் டேட்சன் பேட்ஜ் காணப்படுகிறது. தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் காரின் பின்புற தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. எனினும், பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

2020 ரெடி கோ மாடலின் உள்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இவற்றில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இருக்கைகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய ரெடி கோ மாடல் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறையும் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. அந்த வகையில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலெர்ட் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் புதிய அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் துவக்க விலை ரூ. 28.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான அல்டுராஸ் ஜி4 - 2WD மற்றும் 4WD என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் 4WD வேரியண்ட் விலை ரூ. 31.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பிஎஸ்6 விலை ரூ. 1 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய காருக்கான முன்பதிவுகளையும் மஹிந்திரா நிறுவனம் ஆன்லைனில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய எஸ்யுவி மாடலின் விநியோகம் துவங்கும் என தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் விவரங்களை வெளியிட்டு விட்டது. மேலும் இந்த காருக்கான டீசரையும் வெளியிட்டது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 180 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்6 ரக என்ஜின் தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மேம்பட்ட அல்டுராஸ் மாடலில் முந்தைய மாடலில் உள்ளதை போன்ற ஆடம்பர மற்றும் சவுகரிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னணி சூப்பர்கார் உற்பத்தியாளரான ஃபெராரி நிறுவனம் சர்வதேச சந்தையில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபெராரி சர்வதேச சந்தையில் இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வரும் முன் புதிய கார் வெளியீட்டு விவரங்களை ஃபெராரி வெளிப்படுத்தி இருந்ததாக தெரிகிறது.
ஃபெராரி நிறுவனம் விரைவில் மரநெல்லோ ஆலையின் பணிகளை துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இரு புதிய மாடல்களை வெளியிடுவது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு மாடல்களும் ஃபெராரி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்குள் ஃபெராரி நிறுவனம் மொத்தம் 15 புதிய மாடல்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டத்தை ஃபெராரி நிறுவனம் கடந்த ஆண்டு வாக்கில் உருவாக்கியதாக தெரிகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ஃபெராரி எஃப்8 டிரிபுடோ, எஸ்எஃப்90 ஸ்டிரான்டேல் மற்றும் ரோமா என மூன்று புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய கார் மாடல்கள் பற்றிய விவரங்களை ஃபெராரி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. இரு புதிய மாடல்களை ஃபெராரி நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் எந்தளவு சீராகிறது என்பதை பொருத்தே புதிய மாடல்கள் அறிமுகமாவது பற்றிய முடிவு எட்டப்படும்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் விரைவில் புதிய இருக்கை அமைப்புடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முற்றிலும் புதிய கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கார்னிவல் மாடலில் தற்போதைய வேரியண்ட்களில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு நான்கு பேர் பயணிக்கக்கூடிய வகையில் இருக்கைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் புதிய கார் தற்போதைய மாடல்களை விட அதிக இடவசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்க முடியும். மேலும் இதன் இருக்கைகளும் முன்பை விட சவுகரியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இவற்றில் அதிக அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அமைப்பு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிரீமியம் ஆடம்பர செடான் அல்லது எஸ்யுவி மாடல்களில் அதிக பணத்தை செலவிடும் வாடிக்கையாளர்கள் அதிகளவு சவுகரிய வசதியை எதிர்பார்க்கின்றனர். சிலர் வாகனத்தை வாங்கியதும் அவற்றை அவரவர் விருப்பப்படி அதிக சவுகரியம் அளிக்கும் நான்கு பேர் பயணிக்கக்கூடிய வாகனமாக மாற்றிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் கார்னிவல் மாடலின் நான்கு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மூலம் கியா நிறுவனம் பெருமளவு செலவிடாமல், வாகனத்தை வாங்கி அதில் மாற்றங்களை செய்ய விரும்பாமல் அதிக சவுகரியத்தை பெற நினைக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
தற்போதைய கியா கார்னிவல் மாடல்கள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 24.95 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 33.95 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ 350 டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இ 350 டி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடலின் துவக்க விலை ரூ. 75.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய இ 350 டி மாடல் எலைட் வேரியண்ட்டில் கிடைக்கிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடல் இ சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது. இதில் பிஎஸ்6 ரக டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எஸ் 350 டி மற்றும் ஜி 350 டிமாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 282 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பிஎஸ்4 மாடலை போன்றே 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய என்ஜின் 20 பிஹெச்பி மற்றும் 20 என்எம் டார்க் அதிக செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொடிகளில் எட்டிவிடும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டராக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய என்ஜின் தவிர மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடலில் 18 அங்குல அளவில் பெரிய அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 360 டிகிரி கேமரா என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான பெயரை பயன்படுத்த இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் க்ளிக் எனும் பெயரை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறது. புதிய பெயர் எந்த மாடலுக்கு சூட்டப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா க்ளிக் பெயர் அந்நிறுவனத்தின் விஷன் ஐஎன் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு சூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்கோடா விஷன் ஐஎன் மாடல் இந்தியாவுக்கென பிரத்யேகமான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனம் ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்கோடா விஷன் ஐஎன் காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா விஷன் ஐ.என். 4256 எம்.எம். அளவில் நீளம், 2671 எம்.எம். வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட கிரில், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஆடி அ3 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஏ3 ஸ்போர்ட்பேக் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆடி ஏ3 செடான் மாடலின் இரண்டாம் தலைமுறை மாடல் ஆகும்.
புதிய ஆடி ஏ3 மாடல் முந்தைய வெர்ஷனை விட முற்றிலும் வித்தியாசமான ஒன்றாகும். புதிய ஏ3 மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை விட 40எம்எம் நீலம், 10 எம்எம் அகலம் மற்றும் 10 எம்எம் உயரமாக உருவாக்கப்பட்டடுள்ளது.

2021 ஆடி ஏ3 மாடலில் ஒற்றை மெஷ் கொண்ட ஹனிகொம்ப் கிரில் மற்றும் ஆடியின் புதிய ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மெயின் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் 15 எல்இடிக்கள் பொருத்தப்பட்டு இதனுடன் எல்இடி டிஆர்எல்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
காரின் உள்புறம் 10.1 அங்குல எம்எம்ஐ தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் அலெக்சா வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆடி பிரீ-சென்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.






