என் மலர்
இது புதுசு
மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி100 NXT பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் பிஎஸ்6 கேயுவி100 மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மஹிந்திரா கேயுவி100 NXT பிஎஸ்6 மாடலின் துவக்க விலை ரூ. 5.54 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேயுவி100 NXT பிஎஸ்6 மாடல் கே2, கே4, கே6 மற்றும் கே8 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் ஒற்றை பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. கேயுவி100 NXT டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேயுவி100 NXT பிஎஸ் 6 கே4 மற்றும் கே6 மாடல்களின் விலை முறையே ரூ. 6.02 லட்சம் மற்றும் ரூ. 6.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா கேயுவி100 NXT பிஎஸ்6 மாடலில் ஆறு பேர் பயணிக்க முடியும்.
மஹிந்திரா கேயுவி100 NXT பிஎஸ்6 மாடலில் 1.2 லிட்டர் எம்ஃபால்கன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
மேம்பட்ட புதிய என்ஜினுடன் ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் இந்தியாவில் காம்பஸ் பிஎஸ்6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 16.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 89 ஆயிரம் அதிகம் ஆகும்.
பிஎஸ்6 அப்கிரேடுகள் மட்டுமின்றி புதிய காம்பஸ் மாடலில் சில மாற்றங்களை ஜீப் நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. மேலும் ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் வேரியண்ட் நிறுத்தப்பட்டு, தற்சமயம் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்களில் தற்சமயம் அலாய் வீல்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் விண்டோ வாஷர், வைப்பர் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்ப்டடுள்ளன.
காரின் உள்புறம் 8.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், எட்டு வழிகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, டூயல் பேன் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.
ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்- 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 160 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 170 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் சத்தமில்லால் சான்ட்ரோ பிஎஸ்6 கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய சானட்ரோ பிஎஸ்6 கார் விலை ரூ. 4.57 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் சான்ட்ரோ கார் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் 2018 ஆண்டு இறுதியில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் துவக்க விலை ரூ. 3.89 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின் சான்ட்ரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. தற்சமயம் பிஎஸ்6 விதிகள் அமலாகி இருப்பதால், புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சான்ட்ரோ காரின் வடிவமைப்பு டால்-பாய் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்புறம் கேஸ்கேடிங் கிரில், குரோம் சரவுண்ட்கள், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. முன்புற கிரில், ஃபாக் லேம்ப் மற்றும் புதிய பம்ப்பர் பகுதிகளை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்படுகிறது.
இத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க், பின்புற ஏ.சி. வென்ட்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், யு.எஸ்.பி. போர்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி., பின்புற இருக்கைகளை மடிக்கும் வசதி, பவர் விண்டோக்கள், பின்புறம் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஸ்கோடா நிறவனத்தின் புதிய ஆக்டேவியா காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க அதிகப்படியான வியாபாரங்கள் முடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது.
உலகளாவிய நெருக்கடி காரணமாக பெரும்பாலான வாகனங்கள் வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசையில் ஸ்கோடா தனது புதிய ஆக்டேவியா மாடலின் வெளியீட்டை தள்ளிவைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்கோடாவின் புதிய ஆக்டேவியா மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் சேக் ஹொலிஸ், கொரோனா பாதிப்பு காரணமாக எங்களது திட்டங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டேவியா மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.

இந்திய சந்தைக்கான ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படலாம். இது 148 பிஹெச்பி, 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும்.
புதிய ஆக்டேவியா மாடலின் உள்புறம் முற்றிலும் புதிய கேபின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் இரண்டு ஸ்போக் கொண்ட அலாய் வீல், புதிய கண்ட்ரோல் பட்டன், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்டிரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐ10 கிராண்ட் நியாஸ் சிஎன்ஜி வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.63 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சின்ஜி வெர்ஷன் நடுத்தர மாடலான மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளது. விலையை பொருத்தவரை புதிய சிஎன்ஜி சார்ந்த கிராண்ட் ஐ10 நியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியாஸ் மாடல் சிஎன்ஜி வேரியண்ட்களில் பெட்ரோல், டீசல் மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டீரிங் மவுன்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் பிஎஸ்6 ரக கப்பா என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 66 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சிஎன்ஜி என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எக்ஸ்யுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பின் 2019 ஆண்டு இறுதியில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டது. அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியை பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் அப்டேட் செய்துள்ளது.
புதிய பிஎஸ்6 டீசல் மாடல்களின் விலை பிஎஸ்4 மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் என்ஜின் தவிர தோற்றத்தில் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை.

இந்திய சந்தையில் மஹிந்திரா பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களின் துவக்க விலை ரூ. 8.69 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யுவி 300 பிஎஸ்6 டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 114.5 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 117 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
எக்ஸ்யுவி300 பிஎஸ்6 டீசல் மாடலில் சன்ரூஃப், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் பிஎஸ்6 மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்றன. ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தனது டஸ்டர், க்விட் மற்றும் டிரைபர் உள்ளிட்ட மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துவிட்டது.
கடந்த ஆண்டு ரெனால்ட் நிறுவனத்தின் பிஎஸ்6 ரக கேப்டூர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியானது. ஸ்பை படங்களில் புதிய கேப்டூர் மாடலில் புகை வெளியீட்டை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருந்தது தெளிவாக தெரிந்தது.

புதிய மேம்பட்ட கேப்டூர் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி ரெனால்ட் கேப்டூர் மாடலில் அலாய் வீல்கள், கிரில் மற்றும் பம்ப்பர் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் மேம்பட்ட பி0+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.
புதிய கேப்டூர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெனால்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜினை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்க பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.
பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, மோபெட்களும் மோட்டாரைஸ்டு சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய வாகனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பவர்டு டு வீலர் சிட்டம் பைரெர் மொபிலிட்டி குழுமம் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் துவங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.

பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்களிடையேயான கூட்டணி 2007 ஆம் ஆண்டு துவங்கியது. அன்று முதல் இதுவரை இரு நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு வாகனங்கள் மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியின் கீழ் வெளியான முதல் வாகனம் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் ஆகும். இதில் கேடிஎம் டியூக் 200 என்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியின் அங்கமாக கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து ஹஸ்குவர்னா மாட்களின் உற்பத்தி பணிகளும் பூனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் மாடலை ஐரோப்பிய சந்தைக்கு கேடிஎம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஃபிளாக்ஷிப் செடான் மாடலின் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டு, மேம்பட்ட பவர்டிரெயின் மற்றும் புதிய விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இதன் மேம்பட்ட மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற கிரில், புதிய பம்ப்பர்கள், குரோம் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம், எல்இடி ஃபாக் லேம்ப்கள், புதிய அலாய் வீல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன.
காரின் உள்புறம் 2020 ஸ்கோடா சூப்பர்ப் மாடலில் மேம்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லெதர் இருக்கைகள், சன்ரூஃப், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.
ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய சேவையை துவங்கி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் புதிதாக க்ளிக் டு பை (Click to Buy) எனும் ஆன்லைன் சேவையை துவங்கி இருக்கிறது. இந்த சேவையிலேயே வாடிக்கையாளர்களின் கேள்வி, சந்தேகங்களுக்கு பதில் அளிக்க இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவன வாகனங்களை ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி பகுதியில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.

புதிய ஆன்லைன் சேவை மூலம் எதிர்கால வாகனங்கள் விற்பனையை டிஜிட்டல் முறையில் மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. ஆல்லைன் விற்பனை தளம் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனை மையங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கிட முடியும். ஹூண்டாய் கார்களை வாங்குவோருக்கு புதிய தளம் மிக எளிமையாக இருப்பதோடு, பாதுகாப்பான ஒன்றாகவும் இருக்கிறது. ஆன்லைன் தளத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் புதிய கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களும் அடங்கும்.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் காரின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிஎஸ்6 ரக எக்ஸ்யுவி500 மாடல் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் சிறிதளவு மாற்றங்களுடன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் புதிய பிஎஸ்6 மாடலை விட வித்தியாசமானது ஆகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருந்தது. எனினும், இதன் பெட்ரோல் ஹைப்ரிட் பவர் யூனிட் உடன் மேனுவல் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம்.
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் மேனுவல் கியர்பாக்ஸ்: LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற ட்ரிம்களில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.
தற்சமயம் மாருதி நிறுவனம் புதிதாக ஜிம்னி மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் மாருதி ஜிம்னி ஐந்து கதவுகள் கொண்ட மாடலாக வெளியாகும் என்றும் இது நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.






