என் மலர்
இது புதுசு
2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் 2020 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலை ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஸ்விப்ட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் புதிய கிரில் ஹனிகொம்ப் மெஷ் பேட்டன், புதிய வடிவமைப்பில் ஹெட்லைட், அதிரடி தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல், டூயல் டோன் பெயின்ட், பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறம் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, புதிய சீட் ஃபேப்ரிக்குகள், ஹெட்லைனர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பேடில் ஷிஃப்டர்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 90 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் என்ஜினும் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் என்ஜினுடன் 3.0 பிஹெச்பி பவர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய 2020 கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நிசான் இந்தியா நிறுவனம் 2020 கிக்ஸ் எஸ்யுவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் கிக்ஸ் 2020 எஸ்யுவி மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிசான் மிட்-சைஸ் எஸ்யுவி பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 9.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 நிசான் கிக்ஸ் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.15 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்ஜினை பொருத்தவரை புதிய கிக்ஸ் எஸ்யுவி என்ட்ரி லெவல் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. டர்போ பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பிரீமியம் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.

புதிய கிக்ஸ் பிஎஸ்6 மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் டூயல் டோன் இன்டீரியர் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அங்கீகார வசதி மற்றும் நிசான் கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் இந்தியாவில் மே 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கிறது. சிறு மாற்றங்கள் தவிர 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி புதிய காரில் பேன்-அமெரிக்கா கிரில், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கேபினில் விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 577 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 317 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் இந்திய சந்தையில் திட்டமிட்டப்படி அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் இந்தியாவில் திட்டமிட்டப்படி அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் வெளியீடு ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை ஐ20 மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ20 மாடலில் மேமபட்ட என்ஜின் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கேஸ்கேடிங் கிரில், மேம்பட்ட மற்றும் மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

காரின் பின்புறம் பூட்லிட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்களுடன் இணையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்புடன் புதிய தலைமுறை ஐ20 அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது.
புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னல் யூனிட் என்ஜின்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்த என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எஸ் கிளாஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எஸ் கிளாஸ் மாடலின் புகைப்படத்தை தனது சமீபத்திய வீடியோவில் இணைத்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஆலைகளில் உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்குவதை தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது.
புதிய எஸ் கிளாஸ் மாடல் தலைசிறந்த வடிவமைப்பு, பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகி வருகிறது. எஸ் கிளாஸ் சீரிஸ் கொண்டு அந்நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

அதன்படி புதிய எஸ் கிளாஸ் மாடலின் உள்புறம் இரண்டு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மற்றொன்று வாட்டர்ஃபால் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புறம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை முன்பை விட கூர்மையாகவும் பிரத்யேக டீடெயிலிங் கொண்டிருக்கிறது. இதில் ஸ்போர்ட் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட்கள் டெயில் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜெ, ஆடி ஏ8, போர்ஷ் பனமெரா மற்றும் மசரெட்டி குவாட்ரோபோர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் முற்றிலும் புது பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சுசுகி நிறுவனத்தின் பிரபல மாடலான வேகன் ஆர் இப்போது புதிய பொலிவுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முகப்பு பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகன் ஆர் ஸ்மைல் என்ற கருத்து அடிப்படையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
முகப்பு விளக்கு மற்றும் கிரில் அமைப்பு ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது மனிதர்கள் சிரிப்பதைப் போன்று (ஸ்மைல்) இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கருப்பு பின்னணியில் இதன் பேனல்கள், கிரில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன் வெளிப்புறம் பகலில் எரியும் (டிஆர்எல்) எல்இடி விளக்குகள் உள்ளன. மேலும் ஆரஞ்சு நிறத்திலான இன்டிகேட்டர் விளக்கு, சுசுகி நிறுவன லோகோ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தோற்றம் மனிதர்கள் சிரிப்பதைப் போன்று காட்சியளிக்கிறது.

இது 0.66 லிட்டர் என்ஜின் கொண்டது. 49 பிஎஸ் வேகத்தை 6,500 ஆர்பிஎம் சுழற்சியிலும், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5 ஆயிரம் ஆர்பிஎம் சுழற்சியிலும் வெளிப்படுத்தும் வகையில் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறிய அளவிலான ஹைப்ரிட் மோட்டாரும் உள்ளது. இது 2.6 பிஎஸ் மற்றும் 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்தும். இதற்காக 3 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.5.33 லட்சத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 கேம்ரி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக டொயோட்டா கேம்ரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 37.88 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 93 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 ரக டொயோட்டா கேம்ரி மாடலில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜெபிஎல் ஆடியோ சிஸ்டம், முன்புற இருக்கை மற்றும் ஓட்டுனர் இருக்கைகள் வென்டிலேட் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குரூயிஸ் கண்ட்ரோல், பவர் அட்ஜஸ்ட் ஸ்டீரிங் காலம், பின்புற சன் பிளைன்ட்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஒன்பது ஏர்பேக்குகள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
பிஎஸ்6 கேம்ரி மாடலில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 176 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார் 118 பிஹெச்பி பவர், 202 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஃபோக்ஸ்வேகன் கார்ஸ் இந்தியா நிறுவனம் டிஎஸ்ஐ எடிஷன் போலோ மற்றும் வென்டோ மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரு லிமிட்டெட் எடிஷன் மாடல்களும் ஹைலைன் பிளஸ் வேரியண்ட்டை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போலோ டிஎஸ்ஐ விலை ரூ. 7.89 லட்சம் என்றும் வென்டோ டிஎஸ்ஐ விலை ரூ. 10.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு ஃபோக்ஸ்வேகன் போலோ டிஎஸ்ஐ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ மாடல்களும் லிமிட்டெட் எடிஷன் என்பதால், இவற்றில் காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

காஸ்மெடிக் மாற்றங்களின் படி ஃபோக்ஸ்வேகன் போலோ டிஎஸ்ஐ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் ஸ்போர்ட் வடிவமைப்பில் பாடி கிராஃபிக்ஸ், பிளாக்டு-அவுட் ORVMகள், கிளாஸி பிளாக் ரூஃப் மற்றும் ஸ்பாயிலர்கள், ஹனிகொம்ப் கிரில் மற்றும் டிஎஸ்ஐ பேட்ஜ் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களிலும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய எஸ் கிராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடலை நாட்டில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாருதி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இதுதவிர மாருதி நிறுவனம் புதிய எஸ் கிராஸ் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் அம்பலமானது.

அதன்படி புதிய எஸ் கிராஸ் மாடலில் சுசுகியின் 1.5 லிட்டர் SHVS மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் எர்டிகா, சியாஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 13.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய பிஎஸ்6 மாடலில் மாருதி நிறுவனம் ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜினில் ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பிரேக் எனர்ஜி ரீ-ஜெனரேஷன் சிஸ்டம், டார்க் அசிஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் முந்தைய மாடல்களை விட புதிய மாடலில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் மைலேஜ் கிடைக்கிறது. புதிய பிஎஸ்6 ரக என்ஜின் தவிர காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மாடலின் புதிய வேரியண்ட் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் எஸ்யுவி மாடலை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமானது முதல் இந்த எஸ்யுவி அதிக பிரபலம் அடைந்து வருகிறது. தற்சமயம் இந்த எஸ்யுவி ஐந்து பேர் பயணிக்கக்கூடிய வகையில் கிடைக்கிறது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் காம்பஸ் எஸ்யுவி மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் 4 மீட்டர் அளவுக்குள் எஸ்யுவி மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை போன்று காட்சியளிக்கும் என தெரிகிறது.
புதிய காரில் மேம்பட்ட கிரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப் காம்பஸ் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஹூண்டாய் டக்சன், ஸ்கோடா கோடியாக் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 8 சீரிஸ் கிரான் கூப் மற்றும் எம்8 கூப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப்- 840ஐ கிரான் கூப் மற்றும் 840ஐ கிரான் கூப் எம் ஸ்போர்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பிஎம்டபிள்யூ 840ஐ கிரான் கூப் விலை ரூ. 1.30 கோடி என்றும் 840ஐ கிரான் கூப் எம் ஸ்போர்ட் எடிஷன் விலை ரூ. 1.55 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் டாப் எண்ட் எம்8 கூப் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 2.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப் மற்றும் எம்8 கூப் மாடல்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 8 சீரிஸ் பிஎம்டபிள்யூ நிறுவனததின் அதிநவீன ஃபிளாக்ஷிப் கூப் மாடல் ஆகும்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் 5 மீட்டர் நீளமாகவும், 2 மீட்டர் அகலமாகவும் இருக்கிறது. இரு புதிய மால்களிலும் கம்பீர ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்துடன் அதிக அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகளும் இரு கார்களில் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ 840ஐ கிரான் கூப் மற்றும் 840ஐ எம் ஸ்போர்ட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 340 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ எம்8 கூப் மாடலில் 4.4 லிட்டர் வி8 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 600 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோண்டா நிறுவனம் 4 மீட்டர் அளவுக்குள் புதிய எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் இசட்ஆர் வி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்திய சந்தையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் புதிய ஹோண்டா இசட்ஆர் வி மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் வெளியீடு தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹோண்டா இசட்ஆர் வி மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. என்ஜினை பொருத்தவரை புதிய ஹோண்டா இசட்ஆர் வி மாடலில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படலாம்.
இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இத்துடன் இந்த கார் 1.2 லிட்டர் iVTEC மற்றும் 1.5 லிட்டர் iVTEC பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் iVTEC டீசல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






