என் மலர்tooltip icon

    இது புதுசு

    கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 890 டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    கே.டி.எம். நிறுவனத்தின் 890 டியூக் ஆர் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடல் 790 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடல் பார்க்க 790 டியூக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடலில் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லைட், டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

    கே.டி.எம். 890 டியூக் ஆர்

    புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடலில் 890 சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 790 டியூக் மாடலை விட 15 பி.ஹெச்.பி. மற்றும் 14 என்.எம். டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.

    சர்வதேச சந்தையில் கே.டி.எம். 890 டியூக் மாடல் விற்பனை வரும் வாரங்களில் துவங்குகிறது. தற்சமயம் இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது. கே.டி.எம். நிறுவனம் சமீபத்தில் 790 டியூக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக கே.டி.எம். 790 டியூக் வெறும் 100 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக இருந்தது. இந்தியாவில் இந்த மாடல் இந்திய பைக் வாரத்தின் போது வெளியிடப்பட இருக்கிறது.
    எம்.ஜி. மோட்டார் இந்தியா இசட்.எஸ். இ.வி. காரின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. மாடல் டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகனம் 2020 முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகனத்திற்கான டீசர்களை எம்.ஜி. மோட்டார் சில காலமாக வெளியிட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் ஹூன்டாய் கோனா மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. மாடலின் இந்திய வெர்ஷன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது ஐரோப்பிய மாடலில் உள்ளதை போன்ற பேட்டரி திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். பிரிட்டனில் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 141 பி.ஹெச்.பி. பவர், 353 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் கொண்டுள்ளது.

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.

    இதில் உள்ள 44.5 கிலோவாட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும். லித்தியம் அயன் பேட்டரியை 50 கிலோவாட் டி.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 80 சதவிகிதத்திற்கு சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே போதுமானது. 7 கிலோவாட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது ஏழு மணி நேரத்தில் சார்ஜ் செய்திட முடியும்.

    இந்தியாவில் எம்.ஜி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல், ஒ-டி-ஏ சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய காருக்கென ஃபோர்டு நிறுவனம் மஹந்திராவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. 

    புதிய எம்.பி.வி. கார் மஹிந்திரா மராசோ மாடலை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய ஃபோர்டு எம்.பி.வி. இந்திய சந்தைக்கென பிரத்யேக மாடலாக உருவாகி வருகிறது. முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து மூன்று புதிய எஸ்.யு.வி.க்கள் விற்பனையை ஊக்குவிக்கும் என அறிவித்துள்ளது.

    புதிய எம்.பி.வி. கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு, பிரத்யேக அம்சங்களுடன் மராசோ மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் மற்ற நிறுவனங்களை போன்று ஃபோர்டு-மஹிந்திரா ரி-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி.

    புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். டீசல் யூனிட் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் யூனிட் தவிர புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் மஹிந்திராவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    இந்தியாவில் எம்.பி.வி. வாகன விற்பனை அதிகரித்து வருவதால் ஃபோர்டு நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த புதிய எம்.பி.வி. வழி செய்யும் என எதிர்பார்க்கிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் நான்கு புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    நடுத்தர ரக செடான் கார்களில் ஹோண்டா சிட்டி காருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த கார் தற்போது பி.எஸ்.6 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப் பொலிவோடு அறிமுகமாகிறது. புதிய மாடலில் 4 வேரியன்ட்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

    பி.எஸ்.6 புகை விதி சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த மாடல் கார் அதை பூர்த்தி செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் புகை விதி 6 சோதனையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள கார் ரகத்தில் ஹோண்டா சிட்டி முதலாவதாகத் திகழ்கிறது. 

    ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கார்கள் பிரிவில் ஹோண்டா சிட்டி முதலாவதாக வந்துள்ளது. நான்கு சிலிண்டரைக் கொண்ட இந்த காரின் என்ஜின் 119 ஹெச்.பி. திறன் கொண்டதாகும். முதல் கட்டமாக இந்த மாடலில் மேனுவல் கியர் டிரான்ஸ்மிஷன் கார்களே தயாரிக்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா சிட்டி

    தற்போது எஸ்.வி., வி, வி.எக்ஸ்., இசட்.எக்ஸ். என நான்கு வேரியன்ட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.வி. மாடல் 2 ஏர் பேக்குகளைக் கொண்டுள்ளது. இது ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார், எல்.இ.டி., டி.ஆர்.எல்., 15 அங்குல அலாய் சக்கரத்துடன் வந்துள்ளது. 

    இத்துடன் ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், புளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது. வி மாடலில் 7 இன்ச் தொடு திரை, கீலெஸ் மற்றும் பின்புற கேமரா ஆகியன கூடுதலாக இடம்பெற்றுள்ளது. வி.எக்ஸ். மாடலில் சன்ரூப் வசதி உள்ளது.

    டெலஸ்கோப்பிக் ஸ்டீரிங் சக்கரம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், 16 இன்ச் அலாய் சக்கரம் ஆகியவற்றோடு பக்கவாட்டு ஏர் பேக்குகளை கூடுதலாகக் கொண்டுள்ளது. தானாக எரியும் முகப்பு விளக்கு, மழைத்துளி பட்டவுடன் செயல்படும் வைப்பர், சொகுசான இருக்கைகள் ஆகியன கூடுதலாக இசட்.எக்ஸ். மாடலில் உள்ளன. 

    தற்போது ஹோன்டா சிட்டி கார் ரூ.9.81 லட்சம் முதல் ரூ.14.16 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வேரியன்ட்களின் விலை இதைவிட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    ஆடி நிறுவனம் 2019 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார் விலை ரூ. 41.49 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 45.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டீசல் வேரியண்ட் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆடி ஏ4 மாடலின் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஹெக்சாகோனல் ஃபாக் லேம்ப், ஃபாக்ஸ் சில்வர் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கிரில் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இம்முறை இதில் டார்க் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட்

    காரின் உள்புறத்தில் அதிகளவு மேம்படுத்தப்படவில்லை. எனினும், இதில் டூயல்-டோன்  இன்டீரியர் பிளாக் மற்றும் அட்லஸ் பெய்க், பிளாக் மற்றும் நௌக்கட் பிரவுன் நிறங்களை கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலில் புதிய டெக்ஸ்ச்சர் கொண்ட க்ரோம் இன்சர்ட் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஏ4 மாடலிலும் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் TFSI மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடி ஏ4 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்.இ. போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    ஹூன்டாய் நிறுவனத்தின் 2019 ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    ஹூன்டாய் மோட்டார் இந்தியா தனது ஐ20 ஆக்டிவ் மாடலை அப்டேட் செய்துள்ளது. அதன்படி 2019 ஐ20 ஆக்டிவ் மாடல் விலை ரூ. 7.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் அந்நிறுவன வலைத்தளத்தில் மூன்று வேரியண்ட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ20 ஆக்டிவ் எஸ். எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ். டூயல்-டோன் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரவைர் மற்றும் பாசஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடிவமைப்பில் புதிய 2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் முந்தைய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்

    இதன் முன்புறம் ப்ரோஜெக்டர் லென்ஸ் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் கார்னெரிங் லேம்ப், ஃபாக் லேம்ப், எல்.இ.டி. டெயில்லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா போன்றவை வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. 

    இதில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் ஸ்டார்ட்-ஸ்பாட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏ.சி. வென்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    மினி இந்தியா நிறுவனம் கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.



    மினி இந்தியா நிறுவனம் தனது கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை ரூ. 42.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மினி கன்ட்ரிமேன் லிமிட்டெட் எடிஷன் வெறும் 24 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய லிமிட்டெட் எடிஷன் கார் கூப்பர் எஸ் ஜான் கூப்பர் வொர்க்ஸ் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்டான்டர்டு மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் புதிய பிளாக் கிரில், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.

    மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன்

    இத்துடன் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்களில் பியானோ பிளாக் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொனெட்டில் கருப்பு நிற ஸ்டிரைப் செய்யப்பட்டுள்ளது. இதில் 18 இன்ச் JCW அலாய் வீல்கள் மற்றும் ஃபிலாட் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    காரின் உள்புறம் ஹெட்-அப் டிஸ்ப்ளே, மினி வையர்டு பேக்கேஜ், எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் சீட், பானரோமிக் கிலாஸ் ரூஃப், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் உள்புறத்தில் முற்றிலும் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.

    மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 189 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    ஆஸ்டன் மார்டின் நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆஸ்டன் மார்டின் நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த சுப்பீரியர் நிறுவனத்துடன் இணைந்து லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்க இருக்கிறது. இருநிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    ஆடம்பர வாகனங்களை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இணைந்து தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்மிக்க மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் நிச்சயம் லிமிட்டெட் எடிஷன் மாடலாக இருக்கும் என ஆஸ்டன் மார்டின் தெரிவித்துள்ளது.

    EICMA 2019 நிகழ்வில் முதல்முறையாக ஆஸ்டன் மார்டின் பிராண்டிங் மற்றும் லோகோ உள்ளிட்டவை மோட்டார்சைக்கிளில் இடம்பெற இருக்கிறது. EICMA 2019  விழா நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த விழா இத்தாலியில் நடைபெற இருக்கிறது.

    சுப்பீரியர்

    இங்கிலாந்தை சேர்ந்த புரோ சுப்பீரியர் 1919 முதல் 1940 வரை மோட்டார்சைக்கிள், சைடுகார் மற்றும் கார்களை தயாரித்து வந்தது. இந்நிறுவனம் தயாரித்த வாகனங்கள் மோட்டார்சைக்கிள் பிரிவில் ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டுக்கு இணையான அளவு பிரபலமாக பார்க்கப்பட்டன. இந்நிறுவனம் மொத்தம் 3048 மோட்டார்சைக்கிள்களை தயாரித்தது.

    புரோ சுப்பீரியர் பெயரை ஜெர்சி ரெஜிஸ்டர் கார்ப்பரேஷன் கைப்பற்றி பாக்ஸ் வடிவமைப்பு கொண்ட எஸ்.எஸ்.100 மாடலை உருவாக்கியது. இந்த மோட்டார்சைக்கிளில் 88 டிகிரி 990சிசி என்ஜின் கொண்டிருந்தது. இந்த மாடல் EICMA 2013 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் டி ராக் எஸ்.யு.வி. கார் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    2020 ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வரிசையில் டி ராக் முதல் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் டி ராக்

    இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ், எம்.ஜி. ஹெக்டார் மற்றும் ஹூன்டாய் கிரெட்டா மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டி ராக் கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    வெளிநாடுகளில் இருந்து 2500 கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இந்திய சந்தையில் டி ராக் மாடல் அதிகளவு மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் டி ராக் மாடல் ஜூன் 2020 வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஆனிக்ஸ் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ‘ஆனிக்ஸ்’ என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.19.99 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ.21.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கேன்டி ஒயிட், கோரிடா ரெட் மற்றும் புதிய ரேஸ் புளூ வண்ணத்தில் வந்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. பெட்ரோல் மாடல் 1.8 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் கொண்டது. 180 ஹெச்.பி. திறன் 250 என்.எம். டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டு உள்ளது. டீசல் மாடல் 2 லிட்டர் டி.டி.ஐ. என்ஜினைக் கொண்டது.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆனிக்ஸ்

    இது 143 ஹெச்.பி. திறன், 320 என்.எம். டார்க் இழுவிசையைக் கொண்டது. டீசல் மாடல் 6 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஆக்டேவியா ஸ்டைல் வேரியன்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியோடு மிரர் லிங்க் இணைப்பு வசதி கொண்டது.

    டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, டிரைவர் இருக்கையை தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, இதேபோல பயணிகள் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்வது கூடுதல் சிறப்பாகும். ஆட்டோமேடிக் வைபர் வசதியோடு 6 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட் வசதிகளை உள்ளடக்கியதாக இது வந்து உள்ளது. 

    இத்துடன் கூடுதலாக டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகியவையும் இதில் உள்ளன. புதிய செடான் மாடல் கார் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹூண்டாய் எலன்ட்ரா, டொயோட்டா கொரோலா ஆல்டிஸ், ஹோண்டா சிவிக் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    ஆடி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஆடி நிறுவனம் இந்தியாவில் 2019 ஏ6 செடான் காரை அறிமுகம் செய்தது. புதிய 2019 ஆடி ஏ6 மாடலின் துவக்க விலை ரூ. 54.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2019 மாடலில் மேம்பட்ட அம்சங்கள், உள்புற மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஆடி ஏ6 மாடல் பார்க்க கூர்மையாகவும் முன்பை விட அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. அதன்படி காரின் முன்புறம் புதிய கிரில், மேம்பட்ட எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், புதிய பொனெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகிறது.

    2019 ஆடி ஏ6 மாடலில் டூயல்-டோன் அலாய் வீல்கள், நீண்ட வீல்பேஸ், பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. ஏ6 காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் ஒற்றை க்ரோம் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முற்றிலும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது.

    ஆடி ஏ6

    அதன்படி இரட்டை தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், புதிய MMI இன்ஃபோடெயின்மென்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    என்ஜினை பொருத்தவரை 2019 ஆடி ஏ6 காரில் ஒற்றை பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் TFSI யூனிட் ஆகும். இது 240 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ். 6 ரக என்ஜின் ஆகும். 

    புதிய 2019 ஆடி ஏ6 கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடிகளில் எட்டிவிடும்.
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஜாஸ் ஹேட்ச்பேக் கார் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஹோன்டா ஜாஸ் மாடல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புத்தம் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் வெளியாகி இருக்கிறது.

    அதன்படி புதிய ஜாஸ் மாடலின் முன்புறம் மெல்லிய கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புற பம்ப்பர், சென்ட்ரல் ஏர் இன்டேக், ஃபாக் லேம்ப்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெயில் லைட்கள் எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    2020 ஹோன்டா ஜாஸ்

    காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அதிநவீன கனெக்டிவிட்டி தொழில்நுட்பம், புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்படலாம். 

    புதிய 2020 ஹோன்டா ஜாஸ் கார் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் சில சர்வதேச சந்தைகளில் வெளியாகலாம்.
    ×