என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 இந்திய விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.700 அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    அதன்படி மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 விலை ரூ. 11.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.09 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 ஒன்பது வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    விற்பனை மையங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எக்ஸ்.யு.வி.700 கிடைக்கும். புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 7 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் அக்டோபர் 10-இல் துவங்குகிறது.

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. 

    டொயோட்டா நிறுவன கார்களின் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை அக்டோபர் முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு ஈடு செய்ய முடியும்.

    இம்முறை எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விலை ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான புதிய விலை பட்டியல் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

     டொயோட்டா கார்

    கடந்த மாதம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யாரிஸ் செடான் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக டொயோட்டா அறிவித்தது. 
    டொயோட்டா நிறுவனத்தின் எதிர்கால திட்டத்தின் அங்கமாக புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் யாரிஸ் செடான் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. யாரிஸ் மாடலுக்கு மாற்றாக மாருதி சுசுகி சியாஸ் மாடலை தழுவி உருவாகும் புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது. 

    யாரிஸ் மாடலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டொயோட்டா அதிகாரப்பூர்வ சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு கிடைக்கும். 

     டொயோட்டா யாரிஸ்

    "செப்டம்பர் 27, 2021 முதல் யாரிஸ் மாடல் இந்திய விற்பனையை நிறுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா நிறுவன திட்டத்தின் அங்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்," என டொயோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்.யு.வி.700 அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.

    தற்போது டேஸ்லிங் சில்வர் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிற எக்ஸ்.யு.வி.700 மாடல்கள் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை சி வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லைட்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் அந்நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதே தொழில்நுட்பம் கொண்ட நெக்சான் இ.வி. 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டிகோர் இ.வி. பேஸ்லிப்ட் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. டிகோர் இ.வி.  மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் டி எலெக்ட்ரிக் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. 

     டாடா எலெக்ட்ரிக் வாகனம்

    'சாலையில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எனும் மைல்கல் எங்களின் புதுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க நினைத்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.'

    'எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை நீட்டிக்க உத்வேகம் அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து மேலும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவர்,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார். 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் சிட்ரோயன் சி3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய பன்ச் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரலாம். டாடா பன்ச் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     டாடா பன்ச்

    புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா நிறுவனம் தனது ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கிறது. இதன் வடிவமைப்பு இமேக்ட் 2.0 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மல்டி-பன்ஷன் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்படும் என தெரிகிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்.யு.வி. மட்டும் இந்திய விற்பனையில் குறிப்பிட்ட யூனிட்களை பதிவு செய்தது.

    லம்போர்கினி நிறுவனம் இந்திய விற்பனையில் 300 யூனிட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் லம்போர்கினி தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது லம்போர்கினி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

    லம்போர்கினி தின கொண்டாட்டங்கள் வார இறுதி நாட்களில் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிக வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு லம்போர்கினி கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இத்துடன் பூனே, ஹம்பி மற்றும் டெல்லியில் பிரத்யேக விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டது.

     லம்போர்கினி கார்

    இத்தாலி நாட்டு சூப்பர் கார் உற்பத்தியாளரான லம்போர்கினி உருஸ் கேப்சியூல், ஹரிகேன் எஸ்.டி.ஒ., ஹரிகேன் இவோ ஆர்.டபிள்யூ.டி. ஸ்பைடர் மற்றும் உருஸ் கிராபைட் கேப்சியூல் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. விற்பனையான 300 யூனிட்களில் 100 யூனிட்கள் உருஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அல்ட்ரோஸ் சி.என்.ஜி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களின் சி.என்.ஜி. வேரியண்ட் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் அல்ட்ரோஸ் சி.என்.ஜி. மாடல் சோதனை செ்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     டாடா கார்

    இதில் சி.என்.ஜி. கிட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் சி.என்.ஜி. கிட் வழங்கப்படாது என தெரிகிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ, ஸ்கார்பியோ மற்றும் மராசோ மாடல்கள் விலையை மாற்றியது.


    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை இம்மாதமே அமலாகிறது. 2021 ஆண்டில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை நான்காவது முறையாக உயர்த்தி இருக்கிறது.

    விலை உயர்வின் படி மஹிந்திரா மராசோ எம்.பி.வி. மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 12 ஆயிரமும், எம் பிளஸ் வேரியண்ட் ரூ. 13 ஆயிரமும், டாப் எண்ட் மாடலான எம்ஜி பிளஸ் வேரியண்ட் ரூ. 14 ஆயிரமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா பொலிரோ நியோ

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொலிரோ நியோ மாடலின் என்10 மற்றும் என்10 ஒ வேரியண்ட்கள் விலை ரூ. 30 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 18 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இம்மாதம் கார்களுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் புதிய ரெனால்ட் கார் வாங்குவோருக்கு வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகைகளுடன் ஆறு மாதங்களுக்கு மாத தவணை விடுமுறை வசதியும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரெனால்ட் ரீலிவ் (R.E.Li.V.E) ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை ரெனால்ட் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஸ்கிராப் செய்து அதற்கு சிறந்த மதிப்பீட்டை பெற முடியும். இதை புதிய கார் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் மாடல்களுக்கு பொருந்தும்.

    ரெனால்ட் க்விட்

    தள்ளுபடி ரூ. 10 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம்
    கார்ப்பரேட் போனஸ் ரூ. 10 ஆயிரம்

    ரெனால்ட் டிரைபர் 2020 & 2021

    2020 மாடல் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம்
    எக்சேன்ஜ் பலன் ரூ. 25 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 10 ஆயிரம்

    2021 மாடல் தள்ளுபடி ரூ. 15 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 10 ஆயிரம்

    ரெனால்ட் டஸ்டர்

    ரெனால்ட் டஸ்டர் 

    தள்ளுபடி ரூ. 20 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 30 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 30 ஆயிரம்

    ரெனால்ட் கைகர் லாயல்டி பலன் ரூ. 90 ஆயிரம்
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் விரைவில் இந்த என்ஜினுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 130 பி.ஹெச்.பி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் வடிவில் ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், இந்த என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 130 பி.ஹெச்.பி. திறன், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    தற்போதைய எக்ஸ்.யு.வி.300 மாடல் - டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 ஒ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 130 பி.ஹெச்.பி. என்ஜின் டாப் எண்ட் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் 2021 கார்னிவல் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2021 கார்னிவல் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கார்னிவல் மாடலின் துவக்க விலை ரூ. 24.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த எம்.பி.வி. மாடல் முந்தைய வேரியண்டை விட பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    2021 கியா கார்னிவல் விலை விவரம்

    பிரீமியம் 7 சீட்டர் ரூ. 24.95 லட்சம்
    பிரீமியம் 8 சீட்டர் ரூ. 25.15 லட்சம்
    பிரெஸ்டிஜ் 7 சீட்டர் ரூ. 29.49 லட்சம்
    பிரெஸ்டிஜ் 8 சீட்டர் ரூ. 29.95 லட்சம்
    லிமோசின் 7 சீட்டர் ரூ. 31.99 லட்சம்
    லிமோசின் பிளஸ் 7 சீட்டர் ரூ. 33.99 லட்சம்

     2021 கியா கார்னிவல்

    புதிய கார்னிவல் மாடலில் கியா இந்தியா புது கார்ப்பரேட் லோகோ கொண்டிருக்கிறது. கார்னிவல் லிமோசின் மாடலில் லெதர் இருக்கைகள், 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் , ஓ.டி.ஏ. மேப் அப்டேட்கள், யு.வி.ஓ. சப்போர்ட், இ.சி.எம். மிரர், 10.1 இன்ச் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன.

    2021 கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×