என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
செடான் மாடல் விற்பனையை நிறுத்திய டொயோட்டா
Byமாலை மலர்28 Sep 2021 7:37 AM GMT (Updated: 28 Sep 2021 7:37 AM GMT)
டொயோட்டா நிறுவனத்தின் எதிர்கால திட்டத்தின் அங்கமாக புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் யாரிஸ் செடான் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. யாரிஸ் மாடலுக்கு மாற்றாக மாருதி சுசுகி சியாஸ் மாடலை தழுவி உருவாகும் புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.
யாரிஸ் மாடலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டொயோட்டா அதிகாரப்பூர்வ சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
"செப்டம்பர் 27, 2021 முதல் யாரிஸ் மாடல் இந்திய விற்பனையை நிறுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா நிறுவன திட்டத்தின் அங்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்," என டொயோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X