என் மலர்
கார்
- ஹோண்டா எலிவேட் மாடல் நான்கு வேரிண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த மிட் சைஸ் எஸ்யுவி பிரிவில் ஹோண்டா எலிவேட் நிலை நிறுத்தப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மிட்சைஸ் எஸ்யுவி மாடலின் முன்பதிவுகளை ஜூலை 3-ம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலிவேட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியிலோ, செப்டம்பர் மாத துவக்கத்திலோ ஹோண்டா எலிவேட் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஹோண்டா எலிவேட் மாடல் நான்கு வேரிண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து வேரியன்ட்களிலும் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஹோண்டா எலிவேட் மாடலில் 121 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் வெளியீட்டுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.
அந்த வகையில், இந்தியவில் வெளியாகும் போது புதிய ஹோண்டா எலிவேட் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- புதிய டாடா சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்களை காட்சிப்படுத்தியது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எஸ்யுவி டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடல் இடம்பெற்று இருக்கிறது. புதிய சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலுக்கான டெஸ்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், புதிய டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் புதிய காரின் விவரங்கள் வெளியாகி உள்ளது. டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்-இல் டூயல் டோன் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

இதன் வெளிப்புற பம்ப்பரில் மவுன்ட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், மெல்லிய கிரில் வழங்கப்படுகிறது. இதன் ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள் காருக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தெரிகிறது. முன்னதாக சஃபாரி மாடல் ஏராளமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS வழங்கப்படுகிறது.
புதிய டாடா சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்களை காட்சிப்படுத்தி இருந்தது. இவை 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எஸ்யுவி-க்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: carwale
- மஹிந்திரா ஸ்கார்பியோ N முதலாம் ஆண்டு நிறைவு சமீபத்தில் கடந்தது.
- ஸ்கார்பியோ சீரிசின் 1.17 லட்சம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளன.
மஹந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 2002-ம் ஆண்டு தனது ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 11 ஆண்டுகளில் ஸ்கார்பியோ நிறுவனம் உற்பத்தியில் 9 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஸ்கார்பியோ சீரிசில் தற்போது ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் மேம்பட்ட பழைய தலைமுறை எஸ்யுவி ஆகும். இதன் விலை ரூ. 13 லட்சம் என்று துவங்குகிறது. ஸ்கார்பியோ N முற்றிலும் புதிய மாடல் ஆகும். இதன் விலை ரூ. 13 லட்சத்து 05 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N மாடல்களின் 1 லட்சத்து 17 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு, வினியோகத்துக்கு காத்திருக்கின்றன. இரு மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 65 வாரங்களில் இருந்து சமீபத்தில் தான் 55 வாரங்களாக சரிந்தது.
மேலும் இந்தியாவில் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N அறிமுகமாகி முதலாம் ஆண்டு விழாவை மஹிந்திரா கடந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
- நெக்சான் EV பிரைம் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் நெக்சான் EV மாடல் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நெக்சான் EV சீரிஸ் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நெக்சான் EV பிரைம் மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த வேரியன்ட் முழு சார்ஜ் செய்தால் 453 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.
இரண்டு வெர்ஷன்களிலும் IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. நெக்சான் EV பிரைம் மாடலை டிசி ஃபாஸ்ட் சார்ஜ் மூலம் 60 நிமிடங்களில் 10-இல் இருந்து 60 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். EV மேக்ஸ் மாடலை 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 56 நிமிடங்களில் 86 சதவீதம் வரை சார்ஜ் செய்திடலாம்.
டாடா நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்கள் முறையே 129 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 143 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. நெக்சான் EV பிரைம் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும். EV மேக்ஸ் மாடல் இதே வேகத்தை ஒன்பது நொடிகளில் எட்டிவிடும்.
- இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
- கியா நிறுவனம் தனது வாகனங்களில் உள்ள பாகங்களை சீரான இடைவெளியில் ஆய்வு செய்து வருகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடலின் 30 ஆயிரத்து 297 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. காரின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஏற்பட்டு இருக்கும் பிழையை சரி செய்வதற்காக இந்த ரிகால் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்-ஐ திடீரென ஆஃப் ஆனதை போன்று மாற்றிவிடும் பிரச்சினை கியா கரென்ஸ் எம்பிவி மாடலில் ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி ரிகால் செய்யப்படும் கரென்ஸ் மாடல்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சரிபார்க்கப்படுகிறது.
கோளாறை சரி செய்வதற்கான மென்பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரச்சினையில் 2022 செப்டம்ர் முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

"பொறுப்புள்ள கார்ப்பரேட் என்ற அடிப்படையில், நிறுவனம் சார்பில் சீரான இடைவெளியில் உபகரணங்களை கியா சர்வதேச தரத்துக்கு இணையான முறையில் டெஸ்டிங் செய்து வருகிறது."
"ரிகால் செய்யும் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, தேவைப்படும் பட்சத்தில் இலவசமாக மென்பொருள் அப்டேட் வழஹ்கப்படும். கியா இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த பிரான்டு அனுபவத்தை வழங்குவதை குறிக்கோளாக வைத்து இருக்கிறது," என்று கியா இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
புதிய கோளாறில் பாதிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும். பாதிக்கப்பட்ட யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கியா அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு, காரை சரி செய்வதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- ஹூண்டாய் நிறுவனம் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- அதிக செயல்திறன் வழங்கும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரில் 10 ஸ்பீக்கர் சவுன்ட் சிஸ்டம் உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பெர்ஃபார்மன்ஸ் கார், ஐயோனிக் 5 N இறுதிக்கட்ட டெஸ்டிங்கில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடல் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வு நடைபெறும் ஜூலை 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஐயோனிக் 5 N டெஸ்டிங் ஜெர்மனியில் உள்ள நர்பர்கிரிங் பந்தய களத்தில் நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் பெர்ஃபார்மன்ஸ் மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதன் மூலம் புதிய ஹூண்டாய் கார் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று தெரிகிறது.

"எங்களின் ஒவ்வொரு N மாடலும் நர்பர்கிரிங்கில் தான் N டிகிரி வரை டியூனிங் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தான் எங்களது முதல் ஹை-பெர்ஃபார்மன்ஸ், ஆல் எலெக்ட்ரிக் N மாடல், முதலில் இங்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்," என ஹூண்டாய் N பிரான்டு மற்றும் மோட்டார்ஸ்போர்ட் பிரிவுக்கான துணை தலைவர் டில் வார்டென்பெர்க் தெரிவித்து இருக்கிறார்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடல் இந்த பந்தய களத்தில் ஏற்கனவே 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரையிலான டெஸ்டிங்கை எதிர்கொண்டுவிட்டது. மேலும் இறுதிக்கட்ட சோதனையில் மேலும் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை டெஸ்டிங் செய்யப்பட உள்ளது. ஐயோனிக் 5 N மாடலில் வழங்கப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடல் சற்றே அதிகளவிலான கூலிங் பகுதி கொண்டிருக்கிறது. இத்துடன் N சார்ந்த ரேடியேட்டர் பேக்கேஜிங், மேம்பட்ட மோட்டார் ஆயில் கூலர், பேட்டரி சில்லர் உள்ளிட்டவை மூலம் வெப்பத்தை அதிக சிறப்பாக கட்டுப்படுத்தி காரின் செயல்திறனை மேம்படுத்தப்படுகிறது. இத்துடன் புதிய மென்பொருள் டிசைன் மூலம் பேட்டரி செல்கள் காரினை எப்போதும் பந்தய களத்திற்கு நிகரான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், தயார் நிலையில் வைத்திருக்கிறது.
ஐயோனிக் 5 N மாடல் இரண்டு விதமான டிரைவ் மோட்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதன் முதன்மை பிரேக்கிங் சிஸ்டம், ரிஜெனரேடிவ் பிரேகிங் சிஸ்டம் ஆகும். இத்துடன் 400 மில்லிமீட்டர் டயாமீட்டர் டிஸ்க் கொண்ட ஹைட்ராலிக் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் டிரைவிங் அனுபவத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதற்கு ஆக்டிவ் சவுன்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த சிஸ்டம் காரின் 10 ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இவை ஆம்பியன்ட் நாய்ஸ் அனுபவத்தை வழங்குகின்றன. இதனால், எலெக்ட்ரிக் கார் என்ற வகையிலும், இது பெட்ரோல், டீசல் கார்கள் வெளிப்படுத்தும் சத்தத்தை காரினுள் கேட்க முடியும்.
- புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் எஸ்யுவி தோற்றம் கொண்டிருக்கிறது.
- ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் வழங்கப்பட இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி- எக்ஸ்டர் மாடலின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஜூலை 10-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
புதிய எக்ஸ்டர் உற்பத்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிப்புறம் எஸ்யுவி போன்ற தோற்றம் கொண்டிருக்கும் வகையில் எக்ஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் உயரமாக காட்சியளிக்கிறது. இத்துடன் ரூஃப் ரெயில்கள் மற்றும் சதுரங்க வீல் ஆர்ச்கள் மற்றும் பிளாஸ்டிக் கிலாடிங் காருக்கு ரக்கட் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் உள்ளன. இந்த கார் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது பெட்ரோல் மற்றும் CNG வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
- 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய எவோக் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் எஸ்யுவி மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 2024 எவோக் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிக தொழில்நுட்ப மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2024 ரேன்ஜ் ரோர் எவோக் மாடலில் சிரவக வடிவம் கொண்ட மெஷ் முன்புற கிரில், பிக்சல்-1 எல்இடி ஹெட்லேம்ப்கள், சிக்னேச்சர் எல்இடி டிஆர்எல்கள், புதிய பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோஃபல் பகுதியில் கூப் போன்ற தோற்றம், கேரக்டர் லைன்கள், ஃபிலஷ் டோர் ஹேன்டில்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் முற்றிலும் புதிய அலாய் வீல்கள், அதிகபட்சம் 21 இன்ச் வரையிலான அளவுகளில் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலை அரோய்ஸ் கிரே, டிரைபெகா புளூ மற்றும் கொரிந்தியன் பிரான்ஸ் என மூன்று நிறங்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
2024 எவோக் மாடலின் உள்புறம் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 3டி சரவுன்ட் கேமரா, அமேசான் அலெக்சா, பத்து வாய்ஸ் கமாண்ட்கள், பிவி ப்ரோ 2 யுஐ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற மாடல்களை போன்று இல்லாமல், புதிய மாடலில் சென்டர் கன்சோலில் உள்ள பட்டன்கள் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கியர் லீவர் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட மைல்டு-பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 160 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இதன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் 14.9 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இது 62 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது.
- புதிய வெல்ஃபயர் மாடல் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
- வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெல்ஃபயர் மாடலின் முதற்கட்ட புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன. முன்னதாக இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது இவை வெளியாகி உள்ளன. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் லெக்சஸ் LM350h எம்பிவி மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக ஜப்பானில் விற்பனைக்கு வரும் புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் அதன் பிறகு மற்ற நாடுகளில் வெளியாகும். அடுத்த தலைமுறை வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. புதிய மாடல் பாக்சி ஸ்டைலிங், தற்போதைய மாடலை விட நீளமாக உள்ளது.

புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைல் லெக்சஸ் LM மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- 2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்தது.
- இந்த பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது.
போக்ஸ்வேகன் குழுமம் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள போக்ஸ்வேகன், ஆடி, கப்ரா, ஸ்கோடா மற்றும் போக்ஸ்வேகன் வர்த்தக பிரிவு என ஐந்து பிராண்டுகளின் எட்டு உற்பத்தி ஆலைகளில் இந்த வாகனங்கள் உற்பத்தி நடைபெற்று வந்தது.
2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் அறிமுகம் செய்த மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் ஐடி பேட்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர போக்ஸ்வேகன் குழுமத்தின் இதர எலெக்ட்ரிக் வாகனங்களிலும் இந்த பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்படுகிறது.

ஐடி.3, ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஐடி.5 மற்றும் ஐடி.6 போன்ற மாடல்கள் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதே பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த செடான் மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது இருக்கும் பிளட்ஃபார்ம் தவிர போக்ஸ்வேகன் நிறுவனம் மற்றொரு புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த தலைமுறை MEB+ பிளாட்ஃபார்ம் மேம்பட்ட பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் இவை முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய இன்விக்டோ மாடல் பிரீமியம் எம்பிவி பிரிவில் நிலை நிறுத்தப்படுகிறது.
- மாருதி இன்விக்டோ மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ எம்பிவி மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய எம்பிவி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு மாருதி சுசுகி வலைதளம் மற்றும் நெக்சா விற்பனை மையங்களில் மேற்கொள்ள முடியும். இன்விக்டோ மாடல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் வெளியீடு ஜூலை 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் விலை ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இன்னோவா ஹைகிராசை விட வித்தியாசப்படுத்திக் கொள்ள இன்விக்டோ மாடலில் புதிய கிரில்- இரண்டு க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் பம்ப்பர் ரி-வொர்க் செய்யப்பட்டு, புதிய ஹெட்லைட், டெயில் லைட் இன்சர்ட்கள், பிரத்யேக அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. உள்புறம் புதிய இன்விக்டோ மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. மாருதி இன்விக்டோ மாடலில் ADAS சிஸ்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் டாப் எண்ட் மாடல்களில் 183 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின், e-CVT யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் என்ட்ரி லெவல் மாடலில் 173 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், கியா கார்னிவல் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஒட்டுமொத்த விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.
- டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் ஆகும்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டீசல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடல் மே மாத விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்த டொயோட்டா வாகனங்கள் விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்று அசத்தியுள்ளது.
மே 2023 மாதத்தில் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 4 ஆயிரத்து 786 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் வருடாந்திர விற்பனை 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 2 ஆயிரத்து 737 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்டா பெற்று இருக்கிறது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான கிளான்சா மாடலை விட இன்னோவா க்ரிஸ்டா 393 யூனிட்களே குறைவாக விற்பனையாகி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பழைய மாடல் என்ற வகையிலும் இன்னோவா க்ரிஸ்டா, புதிய எம்பிவி-யான ஹைகிராஸ்-ஐ விற்பனையில் முந்தியுள்ளது.
இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 145 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
இந்த என்ஜின் 184.8 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் மாடலில், eCVT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 29 லடச்த்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






