என் மலர்tooltip icon

    கார்

    • புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் எட்டுவிதமான நிறங்கள் மற்றும் ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்வெர்டெட் எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், ரிவொர்க் செய்யப்பட்ட பம்ப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய கிரில் மற்றும் பொனெட்டில் 3D ஹூண்டாய் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    காரின் உள்புறத்தில் கிரே மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் போஸ் 7-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், செமி லெதர் இருக்கைகள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கைகள், டோர் ஆர்ம்ரெஸ்ட்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., இ.எஸ்.சி., ஹெச்.வி.ஏ.சி., வி.எஸ்.எம்., ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின், ISG வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் மொத்தத்தில் ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.

    வால்வோ இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. C40 ரிசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் விலை ரூ. 61 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.

    வால்வோ C40 ரிசார்ஜ் மாடல்- ஆனிக்ஸ் பிளாக், க்ரிஸ்டன் வைட், ஃபியுஷன் ரெட், கிளவுட் புளூ, ஜோர்ட் புளூ மற்றும் சேஜ் கிரீன் என்று ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இரட்டை மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் உள்ள இரட்டை மோட்டார்கள் ஒவ்வொரு ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரு மோட்டார்கள் இணைந்து 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 9- இன்ச் அளவில் கூகுள் சார்ந்த டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    • புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு செப்டம்பர் 4-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லேம்ப், சீக்வன்ஷூவல் இண்டிகேட்டர்கள் பொனெட்டின் இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள், முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான் கிரவுண்ட் கிளியரன்ஸ் 208mm ஆக இருக்கிறது. காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

     

    இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், பியூர், கிரியேடிவ், கிரியேடிவ் பிளஸ் மற்றும் ஃபியர்லெஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை முழுமையாக கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் இருக்கைகள் (ஓட்டுனர் மற்றும் அவரின் அருகில் இருப்பவைக்கு மட்டும்) வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இகோ, சிட்டி, ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோட்களை கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, கியா சொனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிவப்பு நிற ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிவப்பு நிற ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    காரின் வெளிப்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர்கள் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், மெல்லிய டி.ஆர்.எல்.-கள், புதிய அலாய் வீல்கள், நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரிவைஸ்டு எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டிங் லைட் பார் உள்ளது.

     

    முந்தைய ஸ்பை படங்களில் நெக்சான் மாடல் இண்டிகோ நிறம் கொண்டிருப்பது தெரியவந்து இருந்தது. இந்த முறை இந்த எஸ்.யு.வி. மாடல் பிரைட் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. இது தற்போதைய வெர்ஷனில் உள்ள ஃபிளேம் ரெட் வேரியண்ட் ஆகவே இருக்கும் என்று தெரிகிறது.

    காரின் உள்புறம் அளவில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய யு.ஐ., டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டச் கண்ட்ரோல் வசதி கொண்ட HVAC கண்ட்ரோல்கள், டுவின்-ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது.

    நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியண்டில் DCT கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    இந்திய சந்தையில் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கியா சொனெட், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Photo Source: Upbeat Umang via Carwale

    • டொயோட்டா ருமியன் மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா ருமியன் விலை ரூ. 10 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி எர்டிகா மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ருமியன் மாடல் ஐந்து வித நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ருமியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் போதிலும், ருமியன் மாடலின் ஸ்டைலிங் காரணமாக சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கிறது.

     

    அந்த வகையில் ருமியன் மாடலின் முன்புறம் வித்தியாசமான முன்புற கிரில், மெஷ் பேட்டன், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ரிடிசைன் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றங்கள் தவிர, ருமியன் மாடல்- ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் பிரவுன் மற்றும் ஐகானிக் கிரே என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ருமியன் மாடலின் உள்புறம் ஏழு பேர் அமரும் வகையிலான இருக்கை அமைப்புகள், டூயல் டோன் பெய்க் மற்றும் பிளாக் தீம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியன்ட் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • புதிய 2 சீரிஸ் கிரான் கூப் எம் பெர்ஃபார்மன்ஸ் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • புதிய பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது.

    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது 220i எம் பெர்ஃபார்மன்ஸ் எடிஷன் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் இந்தியாவில் செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் பிளாக் சஃபையர் மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது.

    இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது.

     

    புதிய 2 சீரிஸ் கிரான் கூப் எம் பெர்ஃபார்மன்ஸ் மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் வழங்கப்படும் மோட்டார் 173 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொருத்தவரை இதன் வெளிப்புறம் எம் மாடல்களில் வழக்கமாக வழங்கப்படும் விசேஷ டிசைன் கொண்ட முன்புற கிரில், அல்கான்ட்ரா லெதர் கவர் கொண்ட கியர் செலக்டர் மற்றும் எம் பெர்ஃபார்மன்ஸ் பாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    • ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் மிட்-சைஸ் எஸ்.யு.வி. விரைவில் இந்தியா வருகிறது.
    • ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் எலிவேட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் செப்டம்பர் 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எலிவேட் மாடல் இந்திய சந்தையில், கிரெட்டா மற்றும் செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலை நிறுத்தப்படும் ஹோண்டா எலிவேட் மாடல் அந்நிறுவனத்தின் சிட்டி மற்றும் அமேஸ் போன்ற செடான் மாடல்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் SV, V, VX மற்றும் ZX வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    இந்த எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 119 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT யூனிட் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா எலிவேட் மேனுவல் வேரியன்ட்கள் லிட்டருக்கு 15.31 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் CVT வேரியன்ட்கள் லிட்டருக்கு 16.92 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்குகிறது. 

    • இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • வென்யூ நைட் எடிஷன் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ நைட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வென்யூ நைட் எடிஷன் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் S(O) மற்றும் SX(O) வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய வென்யூ நைட் எடிஷன் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை வென்யூ ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிளாக் நிற முன்புற கிரில் உள்ளது. இத்துடன் ஹூண்டாய் லோகோ இடம்பெற்று இருக்கிறது. கருப்பு நிறத்தால் ஆன ரூஃப் ரெயில்கள், பிராஸ் இன்சர்ட்கள், பிளாக் அலாய் வீல்கள், பாடி நிறத்தால் ஆன டோர் ஹேன்டில்கள், நைட் பேட்ஜ் உள்ளது.

     

    காரின் உள்புறம் பிளாக் இன்டீரியர், பிராஸ் இன்சர்ட்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், ஸ்போர்ட் மெட்டல் பேட்கள், 3D ஃபுளோர் மேட்கள், பிளாக் நிறத்தால் ஆன இருக்கை மேற்கவர்கள் மற்றும் பிராஸ் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடல் மோனோடோன் மற்றும் டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மோனோடோன் ஆப்ஷன் அபிஸ் பிளாக், அட்லஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே மற்றும் ஃபியெரி ரெட் நிறங்களிலும், டூயல் டோன் ஆப்ஷனில் ஃபியெரி ரெட் மற்றும் அபிஸ் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    • ஆடி Q8 இ டிரான் சீரிஸ் ஒன்பது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கின்றன.
    • ஆடி Q8 இ டிரான் சீரிஸ் மாடல்கள் இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

    ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Q8 இ-டிரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ டிரான் மாடல்களுக்கான முன்பதிவை கடந்த வாரம் துவங்கியது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ஐந்து லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், இரு மாடல்களும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    புதிய ஆடி Q8 இ டிரான் சீரிஸ் விலை ரூ. 1 கோடியே 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட்பேக் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கின்றன. இத்துடன் ஒன்பது வித்தியாசமான வெளிப்புற நிறங்கள், மூன்று இன்டீரியர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

     

    அதன்படி மெடைரா பிரவுன், க்ரோனோஸ் கிரே, கிளேசியர் வைட், மிதோஸ் பிளாக், பிளாஸ்மா புளூ, சொனெரியா ரெட், மேக்னெட் கிரே, ஸ்லாம் பெய்க் மற்றும் மேன்ஹேட்டன் கிரே நிறங்களிலும், இன்டீரியரை பொருத்தவரை ஒகாபி பிரவுன், பியல் பெய்க் மற்றும் பிளாக் நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.

    ஆடி Q8 இ டிரான் மாடல் 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவை முறையே 340 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 408 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் வழங்கப்படும் 170 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது, காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 31 நிமிடங்களே ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    விலை விவரங்கள்:

    ஆடி Q8 50 இ டிரான் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம்

    ஆடி Q8 50 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம்

    ஆடி Q8 55 இ டிரான் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரம்

    ஆடி Q8 55 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • மஹிந்திராவின் ஐ.சி.இ. பிரான்டுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வடிவம் பெறுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் சுதந்திர தினத்தன்று ஸ்கார்பியோ N சார்ந்த பிக்கப் மாடல் மற்றும் எலெக்ட்ரிக் தார் கான்செப்ட் மாடல்களுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் தார், ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ போன்ற மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்து விட்டது.

    இதுதவிர மஹிந்திரா நிறுவனம் தனது பார்ன்-EV (பிறந்த-EV) எஸ்.யு.வி. மாடல்களுக்கென புதிய லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. மஹிந்தரா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிக்கர், "எங்களின் அனைத்து ஐ.சி. என்ஜின் பிரான்டுகளையும் எலெக்ட்ரிக் வடிவம் கொடுப்போம்," என்று தெரிவித்தார்.

     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ EV மாடல்களில் RWD செட்டப், டுவின் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ.e மாடலில் AWD வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்ற வெர்ஷன்கள் அனைத்தும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. இரண்டு எஸ்.யு.வி.-க்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N மற்றும் பொலிரோ போன்ற மாடல்கள் தொடர்ந்து ஐ.சி. என்ஜின் வடிவிலும் விற்பனை செய்யப்படும். இந்த மாடல்கள் இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டிக்கொடுக்கின்றன.

    • டாடா மோட்டார்ஸ்-இன் எலெக்ட்ரிக் வாகன துவக்க விலை ரூ. 8.69 லட்சம் ஆகும்.
    • பயணிகள் வாகனங்களின் அனைத்து பிரிவுகளிலும் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் தான் அனைத்து வித பாடி ஸ்டைல்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஹேச்பேக் பிரிவில் (டியாகோ EV), செடான் பிரிவில் (டிகோர் EV) மற்றும் எஸ்.யு.வி. பிரிவில் (நெக்சான் EV) போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் எக்ஸ்பிரஸ் டி, டிகோர் EV மாடலின் வாடகை கார் வெர்ஷனும் விற்பனை செய்து வருகிறது.

     

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரும் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2028 ஆண்டு இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் வரை இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதில் 20 சதவீதம் யூனிட்கள் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    • 60 சதவீத விற்பனை எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்க வேண்டும் என ஜாகுவார் லேன்ட் ரோவர் இலக்கு.
    • எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்கள் பிரிட்டனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

    ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு நவம்பர் மாதம் துவங்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த தசாப்தத்தின் இறுதியில் ஜாகுவார் மாடல்களில் இருந்து 100 சதவீதமும், லேன்ட் ரோவரில் இருந்து 60 சதவீத விற்பனை எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்க வேண்டும் என்று ஜாகுவார் லேன்ட் ரோவர் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. ரி-இமாஜின் யுக்தியின் கீழ் ஜாகுவார் நிறுவனம் 2025-ம் வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக முடிவு செய்து இருக்கிறது.

     

    2030-ம் ஆண்டு லேன்ட் ரோவர் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற திட்டமிட்டுள்ளது. லேன்ட் ரோவர் பிரான்டின் முதல் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அனைத்து எலெக்ட்ரிக் லேன்ட் ரோவர் மாடல்களும் புதிதாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.

    வரும் ஆண்டுகளில், இதே பிளாட்ஃபார்ம் மற்ற ஜாகுவார் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளன. அனைத்து எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்களும் பிரிட்டனில் உள்ள வால்வெர்ஹாம்ப்டன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதே ஆலையில் எலெக்ட்ரிக் டிரைவ் யூனிட்கள் மற்றும் பேட்டரி பேக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    அடுத்த ஆண்டு சர்வதேச விற்பனை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இவை முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. அதன் படி இந்திய பயனர்களும், சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்கிட முடியும்.

    ×