என் மலர்
கார்
- ஹோண்டா எலிவேட் கார் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- ஹோண்டா எலிவேட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது எலிவேட் எஸ்யுவி மாடலின் உற்பத்தியை துவங்கி விட்டது. விரைவில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஹோன்டா எலிவேட் எஸ்யுவி மாடல் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.
புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் அழகிய டிசைன் கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் பிரீமியம் தோற்றம், ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆறு ஏர்பேக், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ADAS போன்ற அம்சங்கள் உள்ளது.
ஹோண்டா எலிவேட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தற்போது இதன் பெட்ரோல் வெர்ஷன் அறிமுகமாகும் நிலையில், ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஹோண்டா எலிவேட் கார் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை மற்றும் வினியோகம் உள்ளிட்ட விவரங்கள் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
- புதிய ரெவல்டோ மாடல் இந்தியாவிலும் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய லம்போர்கினி ரெவல்டோ விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
புதிய லம்போர்கினி ரெவல்டோ மாடல் 2026 வரை அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்தது. லம்போர்கினி ஸ்டீபன் வின்கில்மேன் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர்கார் மாடல் இது ஆகும். லம்போர்கினி ரெவல்டோ மாடலில் புதிய ஹைப்ரிட் V12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் முந்தைய வெர்ஷனை விட 17 கிலோ வரை எடை குறைவு ஆகும். என்ஜின் மட்டுமே 825 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணையும் போது செயல்திறன் 1015 ஹெச்பி ஆக அதிகரிக்கிறது. இந்த சூப்பர்காரில் 3.8 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை கொண்டு காரை எலெக்ட்ரிக் மோடில் 9.5 கிலோமீட்டர்கள் வரை ஓட்ட முடியும்.

புதிய ரெவல்டோ மாடல் இந்தியாவிலும் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் நவம்பர் மாத வாக்கில் வினியோகம் செய்யப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லம்போர்கினி ரெவல்டோ விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், உள்ளூர் வரிகள் சேர்க்கும் போது சற்று அதிக விலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லம்போர்கின் ரெவல்டோ மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 10 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். அந்த வகையில், இது லம்போர்கினியின் விலை உயர்ந்த சூப்பர் கார் என்ற பெருமையை பெறும் என்று தெரிகிறது.
- இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் விலை ரூ. 20 லட்சம் ஆகும்.
- புதிய எம்பிவி மாடலின் என்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் NA 4 சிலின்டர் யூனிட் வழங்கப்படலாம்.
டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பல்வேறு வாகனங்களை ரிபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் விட்டாரா பிரெஸ்ஸா - அர்பன் குரூயிசர், பலேனோ - கிளான்சா, கிரான்ட் விட்டாரா - அர்பன் குரூயிசர் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் - இன்விக்டோ போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் டொயோட்டா விற்பனை செய்து வரும் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் விலை ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் துவங்குகின்றன. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ருமியன் மாடலின் விலை ரூ. 8.8 லட்சத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் ருமியன் பெயரை பயன்படுத்துவதற்காக டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே காப்புரிமை பெற்றுவிட்டது.
தென் ஆப்பிரிக்கா மாடலில் உள்ளதை போன்றே புதிய ருமியன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் ஒரே மாதிரியே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இதன் முன்புற தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படலாம். என்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் NA 4 சிலின்டர் யூனிட் வழங்கப்படலாம். இது 103 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிதாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் மாருதி சுசுகி எர்டிகா மாடலை போன்றே இதுவும் 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- ஹோன்டா எலிவேட் எஸ்யுவி மாடல் ஹோன்டா சிட்டி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ஹோன்டா எலிவேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோன்டா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யுவி மாடல் ஜூன் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் எலிவேட் மாடல் ஹோன்டா நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். புதிய ஹோன்டா எலிவேட் மாடல் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வெளியீட்டை தொடர்ந்து ஹோன்டா எலிவேட் இந்திய வினியோகமும் துவங்கிவிடும் என்று தெரிகிறது. இந்த காரின் வெளியீட்டுக்கு முன், அதன் மைலேஜ் பற்றிய விவரங்களை ஹோன்டா அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ARAI சான்றின் படி ஹோன்டா எலிவேட் லிட்டருக்கு எவ்வளவு கிலிோமீட்டர்கள் செல்லும் என்று தெரியவந்துள்ளது.

ஹோன்டா எலிவேட் மாடல் ஹோன்டா சிட்டி காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எஸ்யுவி மாடல் ஆகும். இதன் டிசைன் மற்றும் என்ஜினியரிங் பணிகள் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மேனுவல் வேரியன்ட் லிட்டருக்கு 15.31 கிலோமீட்டர்களும், ஆட்டோமேடிக் வேரியன்ட் லிட்டருக்கு 16.92 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது. ஹோன்டா சிட்டி போன்று, இந்த காரில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படவில்லை.
அம்சங்களை பொருத்தவரை ஹோன்டா எலிவேட் மாடலில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொன்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரூயிஸ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஸ்டீரிங்கில் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஹோன்டா சென்சிங் ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய ஹோன்டா எலிவேட் மாடல் ஹூன்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களின் காத்திருப்பு காலம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- நான்கு மாருதி கார்களுக்கு காத்திருப்பு காலம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு குறைந்த பட்சம் மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனினும், இந்த நிலை அந்நிறுவன கார் மாடல்கள் அனைத்திற்கும் பொருந்தாது.
மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களுக்கு ஜூலை 2023 மாதத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் இந்த மாடல்கள் அனைத்தும் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த மாடல்கள் வினியோகம், விரைவில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. செலரியோ, வேகன்ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களில் 1.0- லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல், AMT கியர்பாக்ஸ், CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
வேகன்ஆர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.
- இந்திய சந்தையில் சுமார் 87 ஆயிரம் கார்களை ரிகால் செய்ய மாருதி சுசுகி முடிவு செய்துள்ளது.
- இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகி. கடந்த 2021 ஜூலை 5 முதல் 2023 பிப்ரவரி 15-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் மாருதி சுசுகி தயாரித்த 87 ஆயிரத்து 599 கார்களை திரும் பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
இதில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஸ்டியரிங் டை ராடு-இல் பிரச்சினை இருப்பதே, கார்களை திரும் பெறுவதற்கான காரணம் ஆகும். இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான தகவல் வழங்கப்படும். பிறகு பாதிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்து, ஸ்டியரிங் டை ராடை இலவசமாக மாற்றிக் கொடுக்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கார்களை திரும்பப்பெறும் இந்த நடவடிக்கை நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளது என்று மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபகாலத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மேற்கொண்ட மிகப் பெரிய திரும்பப்பெறும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.
- டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
- டாடா நிறுவன கார்களில், CNG கிட் பெறும் நான்காவது மாடல் இது ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்கள் வரிசையில் CNG கிட் பெறும் நான்காவது கார் மாடலாக பன்ச் மாடல் இடம்பெற்று இருக்கிறது.
அல்ட்ரோஸ் CNG மாடலில் உள்ளதை போன்றே புதிய பன்ச் CNG மாடலிலும் டூயல் சிலின்டர் செட்டப் வழங்கப்படுகிறது. இது காரின் பூட் பகுதியை அதிகளவில் ஆக்கிரமிக்காது. புதிய பன்ச் CNG மாடலிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பன்ச் CNG வேரியன்டை நேரடியாக CNG மோடிலும் ஸ்டார்ட் செய்ய முடியும். பல்வேறு CNG கார்களிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காரின் வெளிப்புறம் i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றும் மேற்கொள்ளப்படலில்லை.
புதிய பன்ச் CNG மாடலின் உள்புறம் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 16 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- எம்ஜி நிறுவனத்தின் புதிய EV மாடல் ரக்கட் ப்ரோபைல் கொண்டிருக்கிறது.
- இந்த காரில் 28.1 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த கொமெட் EV மாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மைக்ரோ EV மாடல்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாத விற்பனையின் படி எம்ஜி கொமெட் EV மாடல் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் இரண்டாவது மாடலாக உருவெடுத்தது. இந்த பிரிவில் எம்ஜி கொமெட் நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால், இதே பிரிவில் பயனர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அளவில் சிறிய EV மாடலுக்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருக்கிறது. இந்த மாடல் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் போஜூன் யெப் எலெக்ட்ரிக் மினி எஸ்யுவி மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
எம்ஜி கொமெட் EV மாடலுடன் ஒப்பிடும் போது, புதிதாக உருவாகி வரும் சிறிய EV மாடல் ரக்கட் ப்ரோபைல் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை போஜூன் யெப் மாடல் 3381mm நீளம், 1685mm அகலம், 1721mm உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2110mm அளவில் உள்ளது.
புதிய போஜூன் யெப் மாடலில் பாக்சி டிசைன், செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள், ரக்கட் பம்ப்பர் மற்றும் பிலாட் பொனெட் வழங்கப்படுகிறது.
புதிய எம்ஜி EV மாடலில் 28.1 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 67 ஹெச்பி பவர், 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 303 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.
- இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- புதிய அலட்ரோஸ் வேரியன்டில் கூடுதல் அம்சங்கள், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்ட்ரோஸ் மாடலின் XM மற்றும் XM(S) வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய வேரியன்ட்கள் XE மற்றும் XM+ வேரியன்ட்களின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய வேரியன்ட்களின் விலை ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய அல்ட்ரோஸ் XM வேரியன்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கக்கூடிய ORVMகள், 16 இன்ச் வீல் மற்றும் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ரோஸ் XM (S) வேரியன்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர டாடா அல்ட்ரோஸ் XE, XM+, XM+ (S), XT போன்ற வேரியன்ட்களில் புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. டாடா அல்ட்ரோஸ் XE மாடலில் ரியர் பவர் வின்டோ, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு உள்ளது.
அல்ட்ரோஸ் XM+ மற்றும் XM+ (S) வேரியன்ட்களில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா, குரூயிஸ் கன்ட்ரோல், 16 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. டாடா அல்ட்ரோஸ் XT வேரியன்டில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டாடா அல்ட்ரோஸ் XM மற்றும் XM (S) வேரியன்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் i20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் XM (S) வேரியன்டின் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மஹந்திரா XUV500 மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
- ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV500 மாடலை 2011 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மஹிந்திரா உருவாக்கிய முதல் மோனோக் எஸ்யுவி மாடல் இது ஆகும். இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு மாற்றாக மஹிந்திரா XUV700 மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் XUV500 பிரான்டிங் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும், இதன் அடுத்த தலைமுறை மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

அதிக பிரபலமாக இருந்த காரணத்தால், XUV500 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் இணையத்தில் வெளியானது. S301 குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த காரின் ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. டாடா நிறுவனமும் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக புதிய கர்வ் மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.
இதனிடையே புதிய மஹிந்திரா XUV500 கூப் எஸ்யுவி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் புதிய கார் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதே போன்ற டிசைன் XUV ஏரோ கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இதன் டிசைன் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Photo Courtesy: DANGER B via Gaadiwaadi
- அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதாக தகவல் வெளியானது.
- பிஸ்கர் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி- ஓஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். மெல்லிய எலெக்ட்ரிக் கார்கள், இருசக்கர வாகனங்கள் என இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவல்களில், அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டன. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை விரைவில் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. டெஸ்லா நிறுவனம் டாப் என்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகன துறையில் அதிநவீன தொழில்நுட்பம், நீண்ட தூரம் பயணம் செய்யும் திறன், அதிவேக சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தானியங்கி வாகன முறை என பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் டெஸ்லா பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிஸ்கர் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் பிஸ்கர் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி-யான ஓஷன் மாடல், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் அமெரிக்க சந்தையில் டெஸ்லா மாடல் Y-க்கு போட்டியாக அமைகிறது.
பிஸ்கர் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. பிஸ்கர் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
- மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ், ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வேரியன்ட்களில் புதிய அம்சம் வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களில் "அகௌஸ்டிக் வெஹிகில் அலெர்டிங் சிஸ்டம்" எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது.
புதிய அம்சம் சாலையில் வாகனம் செல்வது பற்றிய தகவலை ஓட்டுனர் மற்றும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும். இதற்கு இந்த சிஸ்டம் பாதசாரிகளுக்கு சவுன்ட் அலெர்ட் கொடுக்கும். இது வாகனத்தில் இருந்து அதிகபட்சம் ஐந்து அடி தூரம் வரை கேட்கும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், அனைத்து ஹைப்ரிட் வேரியன்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்கள் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.






