என் மலர்tooltip icon

    கார்

    • மாருதி சுசுகி வேகன் ஆர் ஹேச்பேக் ரகத்தை சேர்ந்தது.
    • மூன்றாவது நிதியாண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.

    இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் வேகன்ஆர் இணைந்துள்ளது.

    மாருதி நிறுவனம் அதன் சமீபத்திய வேகன்ஆர் மாடலை ஜனவரி 23, 2019 அன்று அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் பிரபல டால்-பாய் ஹேச்பேக் மாடலாக இருக்கும் வேகன்ஆர் விற்பனைில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை கடந்துள்ளது.

    மாருதி சுசுகி வேகன் ஆர் ஹேச்பேக் ரகத்தை சேர்ந்தது. மாருதி சுசுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விற்பனை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    2024 நிதியாண்டில், வேகன் ஆர் மாடல் 2,00,177 யூனிட்கள் விற்பனையானது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.


    இது மாருதி சுசுகியின் மொத்த பயணிகள் வாகன விற்பனையான 17.5 லட்சம் யூனிட்களில் 11 சதவீதமாக இருந்தது. தற்போதைய மாடலின் ஒட்டுமொத்த விற்பனை 10,06,413 யூனிட்டுகளாகக் கொண்டு, மில்லியன் (10 லட்சம்) எனும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 2019-இல் அறிமுகமான நிலையில், புது வேகன்ஆர் மாடல் 5.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் வேகன் ஆர். ஒட்டுமொத்தத்தில் இந்த கார் இதுவரை சுமார் 32.1 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஹேட்ச்பேக் இந்த ஆண்டு தனது 25 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே 2023 மாதம் வேகன்ஆர் மாடல் 30 லட்சம் விற்பனையைத் தாண்டியது.

    • மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
    • இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி சந்தையில் தனது மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் சமயத்தில் XUV700 காரின் விலையை தற்காலிகமாக குறைத்துள்ளது. மஹிந்திரா XUV700 AX7 விலை இப்போது ரூ.19.49 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.24.99 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது. இந்த சிறப்பு விலைகள் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    AX7 டீசல்-AT 7-சீட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.20 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. AX7 L டீசல்-MT 7-சீட்டர் விலை ரூ.1.50 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு XUV700 விற்பனையை மேலும் அதிகப்படுத்த உதவிகரமாக இருக்கும்.

    AX7 மற்றும் AX7 L டிரிம்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. உதாரணமாக, AX7 பதிப்புகளில் பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 1 ஆண்டு இலவச Adrenox சந்தா, TPMS, முழு-எல்இடி விளக்குகள், 18-இன்ச் அலாய் வீல், ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.


    சோனியின் 3டி ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட்-வியூ மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரியர் எல்இடி சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களை AX7 L கொண்டுள்ளது.

    மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அதாவது 200hp பவர் கொண்ட 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் அல்லது 185hp வழங்கும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின்களில் XUV700-ஐ வாங்கலாம்.

    இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டீசல் எஞ்சின் AT கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனைப் பெறுகிறது. மஹிந்திரா சமீபத்தில் XUV700 இன் 2,00,000 யூனிட் உற்பத்தி மைல்கல்லைக் கொண்டாடியது.

    • இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
    • வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்தது.

    இந்தியாவில் தனது முதல் மின்சார கார் ஆன ஸியோமி SU7 காரை இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இந்த கார் அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டார்க் திறன் 838 ஆகும்.

    இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரால் மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதுதவிர, வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    இந்த கார் சிறப்பான பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் பிரேக் பிடித்தால் வெறும் 33.3 மீட்டர் தூரத்திலேயே நின்று விடும்.

    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

    • மெர்சிடிஸ் EQB-ஐ எலெக்ட்ரிக் ஆர்ட் லைன் மற்றும் ஏஎம்ஜி லைன் என இரண்டு வகைகளில் தேர்வு செய்யலாம்.
    • ஏஎம்ஜி லைன் ஐந்து இருக்கைகள் கொண்ட வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் கார் அனைவரையும் ஈர்க்கும் டிசைன் கொண்டது. இந்த நிறுவனத்தின் மாடலை பயன்படுத்த பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வர். அந்த வகையில், கார் பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQA மற்றும் EQB ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் அதன் மிகவும் மலிவு மின்சார SUV EQA ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). GLA இன் மின்மயமாக்கப்பட்ட பதிப்பு, இந்த மாடல் EQA 250+ எனப்படும் Fully Loaded வேரியண்டில் வழங்கப்படுகிறது. பெரிய EQB இப்போது 2024 புதுப்பித்தலுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 70.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    வடிவமைப்பில், புதிய EQA ஆனது முன் மற்றும் பின்புறத்தில் LED லைட் பார்கள், மூன்று புள்ளிகள் கொண்ட நட்சத்திர வடிவத்துடன் கூடிய புதிய கிரில், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களைப் பெறுகிறது. இந்த கார் போலார் ஒயிட் ஹைடெக் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மவுண்டன் கிரே, ஸ்பெக்ட்ரல் ப்ளூ, படகோனியா ரெட் மற்றும் மவுண்டன் கிரே மேக்னோ என ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களைப் பொறுத்தவரை 360-டிகிரி கேமரா, HUD, சைகைக் கட்டுப்பாடு, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், மின்முறையில் இயக்கக்கூடிய டெயில்கேட், நான்கு டிரைவ் மோட்கள், பனோரமிக் சன்ரூஃப், இரண்டு 10.25-இன்ச் திரைகள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


     2024 EQA ஆனது 70.5kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒருமுறை முழு சார்ஜில் 560 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த காரின் ஆற்றல் வெளியீடு 188bhp மற்றும் 385Nm ஆகும்.

    11kW AC சார்ஜிங் மூலம் EQA காரை ஏழு மணி 15 நிமிடங்களில் 0-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் 100kW DC சார்ஜர் மூலம் 10-80 சதவிகிதம் வெறும் 35 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில், பிஎம்டபிள்யூ iX1 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு எதிராக EQA போட்டியிடும்.

    மெர்சிடிஸ் EQB-ஐ எலெக்ட்ரிக் ஆர்ட் லைன் மற்றும் ஏஎம்ஜி லைன் என இரண்டு வகைகளில் தேர்வு செய்யலாம். ஏழு இருக்கைகள் கொண்ட அமைப்பில் கிடைக்கும். இதன் ஏஎம்ஜி லைன் ஐந்து இருக்கைகள் கொண்ட வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை ரூ.77.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB இன் ஏஎம்ஜி மாடலில் ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், நினைவக செயல்பாடுகளுடன் இயங்கும் முன் வரிசை இருக்கைகள் மற்றும் கதவு பேனல்களில் ஒளிரும் நட்சத்திர வடிவங்களைக் கொண்ட கருப்பு நிற இன்டீரியர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    • ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது.
    • அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் மற்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில், இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 8 புதிய கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

    இந்திய வாகனத் துறையின் முக்கிய நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகியவை புத்தம் புதிய கார்களை, பெரும்பாலும் SUVக்களைக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளன.

    1. மஹிந்திரா தார் அர்மடா & XUV.e8:

    மஹிந்திரா தார் ஆர்மடா ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய மாடல் மூன்று-கதவு மாடலை விட பெரியதாக இருக்கும். பெரிய தொடுதிரை, ADAS, டூயல்-பேன் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் கன்சோல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மிகவும் ஆடம்பரமான இன்டியர் வேலைபாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, XUV.e8 மின்சார SUV இந்த வருட இறுதியில் அல்லது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2. டாடா கர்வ் EV & ICE, Nexon iCNG:

    டாடா கர்வின் எலெக்ட்ரிக் மாடல், 500 கி.மீ.க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படும் ரேஞ்சில் வரும் மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து ICE பதிப்பு அறிமுகப்படுத்தப்படும். இது புதிய 1.2 லிட்டர் நேரடி-இன்ஜெக்ஷன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் Nexon இலிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும். கூடுதலாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Nexon iCNG, 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    3. ஹூண்டாய் க்ரெட்டா EV & Alcazar Facelift:

    ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கோனா எலெக்ட்ரிக் உடன் மின்சார மோட்டாரைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் ICE இணையான க்ரெட்டாவிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறும். இந்த நடுத்தர அளவிலான மின்சார SUV 450 கிமீ ரேஞ்சை வழங்கும் மற்றும் வழக்கமான க்ரெட்டாவைப் போன்ற உபகரணங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்காசர் இந்த பண்டிகைக் காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளேயும் வெளியேயும் பல சீரமைப்புகளைக் கொண்டிருக்கும்.


    4. புதிய மாருதி சுசுகி டிசையர்:

    அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு டிசைன்களைப் பெறுகிறது. இருப்பினும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இந்த வரிசையில் புதிய 1.2L Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    • 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மாறும்.

    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ எம்பிவி மாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ மாடலின் விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த எம்பிவி மாடல் 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறுப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனம் இறுதியாக உற்பத்தி செய்த செடான் கார் மாடலாக வெரிட்டோ இருந்தது. தற்போது மராசோ விற்பனை நிறுத்தப்பட்டால், மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மட்டும் மாறும்.

    இந்திய பயணிகள் வாகன சந்தையில் எம்பிவி மாடல்கள் மட்டும் 16 சதவீதமாக உள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிலையில், கியா மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் விற்பனையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வரிசையில் மஹிந்திராவின் மராசோ மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 44,793 மராசோ யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 640 யூனிட்களாகவே இருக்கிறது. மராசோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் மாருதி 14,495 எர்டிகா யூனிட்களையும், கியா நிறுவனம் 4.412 கரென்ஸ் யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.

    • காரின் மிகமுக்கிய அம்சமாக இதன் மேம்பட்ட சேஸ் அமைப்பு இருக்கிறது.
    • 2510 கிலோ எடையுள்ள புது எஸ்யூவி 0-96 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் கடக்கும்.

    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபென்டர் ஆக்டா அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் "குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீட்" நிகழ்ச்சியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய டிஃபென்டர் மிகவும் சக்திவாய்ந்த 4*4 ரக மாடல் ஆகும். மேலும் இதன் வடிவமைப்பு டிஃபென்டர் 110 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் டிஃபென்டர் ஆக்டாவின் விலை ரூ.2.65 கோடியில், எக்ஸ்-ஷோரூம் இருந்து தொடங்கும் என லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது. இதே காரின் எடிஷன் ஒன், உற்பத்தியின் முதல் வருடத்தின் நிறைவில் கிடைக்கும். இதன் விலை ரூ. 2.85 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படும்.

    டிஃபென்டர் ஆக்டா:

    இயந்திரம், செயல்திறன் சிறப்பு பதிப்பு டிஃபென்டர்களுக்கான புதிய ஆக்டா துணை பிராண்டின் முதல் மாடல் ரேஞ்ச் ரோவர் மாடலில் உள்ளதை போன்றே 4.4-லிட்டர் BMW V8 மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இதன் செயல்திறன் Mercedes-AMG G63க்கு போட்டியாக 635hp மற்றும் 750Nm வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    2510 கிலோ எடையுள்ள புது எஸ்யூவி 0-96 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் கடக்கும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும். இது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SV மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவரின் பழைய சூப்பர்சார்ஜ்டு யூனிட்டைப் பயன்படுத்தும் டிஃபென்டர் V8 எஞ்சினுக்கு நெருக்காமன செய்லதிறன் வழங்குகிறது.

    சேஸ் அமைப்பு:

    அற்புதமான ஆன்-ரோடு செயல்திறன் இருந்தபோதிலும், ஆக்டாவிற்கான கவனம் இன்றுவரை எந்த லேண்ட் ரோவரை விட அதிக அளவிலான ஆஃப்-ரோடு திறனை வழங்குவதில் செலுத்துகிறது. அதன் ஆயுள் மற்றும் இரட்டைத்தன்மையை நிரூபிக்க, பொறியாளர்கள் ஆக்டாவை 13,960 முறை சோதனை செய்து 10 லட்சம் கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர். துபாயில் மணல் திட்டுகள், ஸ்வீடனில் உள்ள பனி மற்றும் பனி சுற்றுகள், நர்பர்கிங்கில் பாதையில் மற்றும் பிரான்சின் தெற்கில் உள்ள மைதானம் ஆகியவை இதில் அடங்கும்.

    காரின் மிகமுக்கிய அம்சமாக இதன் மேம்பட்ட சேஸ் அமைப்பு இருக்கிறது. இந்த மாடலில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வியில் இருந்து 6டி டைனமிக்ஸ் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஃபிசிக்கல் ஆண்டி-ரோல் பார் தேவையில்லாமல் கேபினை முடிந்தவரை நிலையானதாக வைத்திருக்க, பம்பர்களை முன்பக்கமாக பின்புறமாகவும், பக்கவாட்டாகவும் ஹைட்ராலிக் மூலம் இணைக்கிறது.

    • சியாஸ் நடுத்தர அளவிலான செடான் ஜூன் 2024 இல் 572 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
    • கிராண்ட் விட்டாராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் மற்றும் eVX கான்செப்ட் அடிப்படையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்களின் விலை பெரும்பாலும் குறைவாக இருப்பதாலேயே நடுத்தர மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனாலேயே ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி அதன் விற்பனையை 1.8 லட்சத்தை எட்டியுள்ளது. SUV மாடல்களும் தொடர்ந்து அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஜூன் 2024-ல் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL ) ஒட்டுமொத்த விற்பனை 228,79 ஆகப் பதிவு செய்துள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1,39,918 யூனிட்கள், டொயோட்டாவிற்கு 8,277 யூனிட்கள் வழங்கப்பட்டன. 31,033 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி பிரிவில், MSIL 9,395 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது ஜூன் 2023 இல் விற்கப்பட்ட 14,054 யூனிட்களில் இருந்து சரிவை காட்டுகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 33.15 சதவீதம் குறைந்ததைக் குறிப்பிட்டுள்ளது.

    பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் போன்ற மாடல்களை உள்ளடக்கிய மாருதி சுசுகி ஜூன் 2024 இல் 64,049 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 0.65 சதவீதம் குறைவு ஆகும்.

    சியாஸ் நடுத்தர அளவிலான செடான் ஜூன் 2024 இல் 572 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,744 யூனிட்களாக இருந்தது. இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு 67.20 சதவீதம் சரிவு ஏற்பட்டது.


    காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மாடல்களில் எண்ணிக்கை குறைந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, யுடிலிட்டி வாகனப் பிரிவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் XL6 ஆகியவற்றின் மொத்த விற்பனை ஜூன் 2024 இல் 52,373 யூனிட்டுகளாக இருந்தது.

    இதுவே கடந்த ஜூன் 2023 இல் 43,404 யூனிட்களாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 20.66 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் சமீபத்திய மாடல்கள் விற்பனையில் அதிக அளவில் உள்ளதால், இப்போது புதிய தலைமுறை டிசைரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    கிராண்ட் விட்டாராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் மற்றும் eVX கான்செப்ட் அடிப்படையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வரவிருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி, கான்செப்ட் போலவே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் ஓட்டும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிக விலை காரணமாக இந்திய சந்தையில் வோகஸ்வேகன் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.
    • சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை.

    ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வோகஸ்வேகன் தனது பங்கை விற்க ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கார் விற்பனையில் முன்னணியில் உள்ள மஹிந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்த போதிலும், ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் வெற்றி பெறவில்லை. அதிக விலை காரணமாக இந்திய சந்தையில் வோகஸ்வேகன் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.

    ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ஜெல்மர் கூறுகையில், "நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயணித்து வருகிறோம். சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஒரு புதிய பாதையில் முயற்சிக்கவும். சரியான பங்குதாரரை நாம் கண்டுபிடித்தால், ஒருவரையொருவர் கற்றுக்கொண்டு பயனடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்…" என்றார்.

    மேலும், ஐரோப்பிய கார்கள் பெரும்பாலும் அதிக இன்ஜினியரிங் செய்யப்படுகின்றன, அவை இந்தியாவில் தேவைப்படாது. அதிக இன்ஜினியரிங் காரணமாக கார்களின் விலை உயருகிறது. இந்த தயாரிப்புகள் இந்திய சந்தையில் வரும்போது போட்டித்தன்மையை குறைக்கிறது. கலப்பினங்கள் மீதான வரி விகிதங்களை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
    • பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் 2022-ம் ஆண்டு தனது ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 2 ஆண்டுகளில் ஸ்கார்பியோ N விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்கார்பியோ சீரிஸ் மாடல்கள் உற்பத்தியில் 10 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

    முன்னதாக, ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து 11 ஆண்டுகளில் 9 லட்சம் கடந்துள்ளதாக அறிவித்து இருந்தது. ஸ்கார்பியோ N அதையும் தாண்டி விற்பனையாகி உள்ளது.

    கிளாசிக் மற்றும் N என்று இரண்டு மாடல்களை கொண்டுள்ள ஸ்கார்பியோ பிராண்ட் 2024 நிதியாண்டில் 4,59,877 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதன் காரணமாக 12-மாத காலத்தில் மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல்லை எட்ட ஸ்கார்பியோ மாடல்கள் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.


    பிப்ரவரி 1, 2024 அன்று, ஸ்கார்பியோ N அறிமுகப்படுத்தப்பட்டு 19 மாதங்கள் 5 நாட்களில் 1,00,000வது விற்பனை மைல்கல்லைக் கொண்டாடியது. பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.

    ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது ஜூன் 2002 இல் தொடங்கப்பட்ட ஸ்கார்பியோ பிராண்டின் ஒட்டுமொத்த விற்பனையை 10,42,403 ஆக உயர்த்தியுள்ளது.

    ஜூலை 1, 2022 அன்று ஸ்கார்பியோ N-க்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் 1,00,000 யூனிட்கள் புக்கிங் ஆனது. அப்போது, முன்பதிவுக்கான தொகையின் மதிப்பு சுமார் ரூ.18,000 கோடி, எக்ஸ்ஷோரூம் என மஹிந்திரா நிறுவனம் கூறியிருந்தது.

    நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவை இணைந்து 28,524 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 2023 ஜூனில் 1. 59 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 12.4% விற்பனை அதிகரித்துள்ளது
    • மாருதி சுசுகியின் மினி-செக்மென்ட் கார்களின் விற்பனை குறைந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகிஇந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 1.79 லட்சம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

    2023 ஜூனில் 1.59 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 12.4% விற்பனை அதிகரித்துள்ளது

    அதே போல் இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 1.37 லட்சம் உள்நாட்டு பயணிகள் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

    2023 ஜூனில் 1.33 லட்சம் உள்நாட்டு பயணிகள் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 3% விற்பனை அதிகரித்துள்ளது.

    ஆனால், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி-செக்மென்ட் கார்களின் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 14,054 யூனிட்களில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் 9,395 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

    பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 64,471 யூனிட்களில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் 64,049 யூனிட்டுகளாக சற்று குறைந்துள்ளது.

    • டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும்.
    • பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், டாடா நெக்சான், மஹிந்திரா XUV400, எம்ஜி ZS வரவிருக்கும் மாருதி eVX மற்றும் டாடா கர்வ் போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தற்போது உள்நாட்டு சந்தையில் அதன் வெகுசன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.

    இந்நிலையில், வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் வாகனத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ...

    1. வெளிப்புற தோற்றம்


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்ற ICE க்ரெட்டாவை போன்றே புகிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில் குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கும். அதாவது, பிளான்க்டு-ஆஃப் முன்பக்க கிரில், ஏரோ திறனுள்ள சக்கரங்கள் மற்றும் பாடி பேனல்களில் எலெக்ட்ரிக் பேட்ஜிங் போன்றவை இருக்கும்.

    2. உட்புற தோற்றம்,

    வெளிப்புற தோற்றம் போல ICE க்ரெட்டாவை போன்றே உட்புற தோற்றும் இருக்கும். டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும். இருப்பினும், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் செலக்டர் ஆகியவை பிராண்டின் ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்று ஸ்டீயரிங் வீல்களைச் சுற்றி அமைந்திருக்கும்.

    3. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெய்ன்

    பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடலில் முன் சக்கரங்களில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 45kWh பேட்டரி பேக்கை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    சமீபத்தில் நிறுத்தப்பட்ட கோனா EV-யிலிருந்து சரியான மோட்டார் விவரக்குறிப்பை ஹூண்டாய் பயன்படுத்தும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால், 138 பிஎச்பி மற்றும் 255 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    4. ரேஞ்ச் மற்றும் சார்ஜர்

    இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும். அதிகரித்த செயல்திறனுடன், இந்த எலெக்ட்ரிக் கார் 500 கிலோமீட்டர் வரை செல்லும். க்ரெட்டா EV ஆனது 50 kWh வரை DC ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் கிடைக்கும். இது குறைவான சார்ஜிங் நேரத்தை உறுதி செய்யும். 100 kWh அல்லது அதற்கும் அதிகமான DC ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    5. வெளியீடு மற்றும் விலை விபரம்

    தற்போதைய தகவல்களின் படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் க்ரெட்டா EV இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV 400 EV, டாடா நெக்சான் EV மற்றும் வரவிருக்கும் மாருதி சுசுகி eVX மற்றும் Tata கர்வ் EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    எலெக்ட்ரிக் கார்களின் விலை பொதுவாக அவற்றின் ICE மாடல்களை விட அதிகம் என்பதால், க்ரெட்டா EV ஆரம்ப விலை ரூ. 15 முதல் 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம்.

    ×