என் மலர்tooltip icon

    கார்

    • 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மாறும்.

    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ எம்பிவி மாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ மாடலின் விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த எம்பிவி மாடல் 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறுப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனம் இறுதியாக உற்பத்தி செய்த செடான் கார் மாடலாக வெரிட்டோ இருந்தது. தற்போது மராசோ விற்பனை நிறுத்தப்பட்டால், மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மட்டும் மாறும்.

    இந்திய பயணிகள் வாகன சந்தையில் எம்பிவி மாடல்கள் மட்டும் 16 சதவீதமாக உள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிலையில், கியா மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் விற்பனையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வரிசையில் மஹிந்திராவின் மராசோ மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 44,793 மராசோ யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 640 யூனிட்களாகவே இருக்கிறது. மராசோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் மாருதி 14,495 எர்டிகா யூனிட்களையும், கியா நிறுவனம் 4.412 கரென்ஸ் யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.

    • காரின் மிகமுக்கிய அம்சமாக இதன் மேம்பட்ட சேஸ் அமைப்பு இருக்கிறது.
    • 2510 கிலோ எடையுள்ள புது எஸ்யூவி 0-96 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் கடக்கும்.

    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபென்டர் ஆக்டா அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் "குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீட்" நிகழ்ச்சியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய டிஃபென்டர் மிகவும் சக்திவாய்ந்த 4*4 ரக மாடல் ஆகும். மேலும் இதன் வடிவமைப்பு டிஃபென்டர் 110 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் டிஃபென்டர் ஆக்டாவின் விலை ரூ.2.65 கோடியில், எக்ஸ்-ஷோரூம் இருந்து தொடங்கும் என லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது. இதே காரின் எடிஷன் ஒன், உற்பத்தியின் முதல் வருடத்தின் நிறைவில் கிடைக்கும். இதன் விலை ரூ. 2.85 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படும்.

    டிஃபென்டர் ஆக்டா:

    இயந்திரம், செயல்திறன் சிறப்பு பதிப்பு டிஃபென்டர்களுக்கான புதிய ஆக்டா துணை பிராண்டின் முதல் மாடல் ரேஞ்ச் ரோவர் மாடலில் உள்ளதை போன்றே 4.4-லிட்டர் BMW V8 மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இதன் செயல்திறன் Mercedes-AMG G63க்கு போட்டியாக 635hp மற்றும் 750Nm வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    2510 கிலோ எடையுள்ள புது எஸ்யூவி 0-96 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் கடக்கும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும். இது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SV மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவரின் பழைய சூப்பர்சார்ஜ்டு யூனிட்டைப் பயன்படுத்தும் டிஃபென்டர் V8 எஞ்சினுக்கு நெருக்காமன செய்லதிறன் வழங்குகிறது.

    சேஸ் அமைப்பு:

    அற்புதமான ஆன்-ரோடு செயல்திறன் இருந்தபோதிலும், ஆக்டாவிற்கான கவனம் இன்றுவரை எந்த லேண்ட் ரோவரை விட அதிக அளவிலான ஆஃப்-ரோடு திறனை வழங்குவதில் செலுத்துகிறது. அதன் ஆயுள் மற்றும் இரட்டைத்தன்மையை நிரூபிக்க, பொறியாளர்கள் ஆக்டாவை 13,960 முறை சோதனை செய்து 10 லட்சம் கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர். துபாயில் மணல் திட்டுகள், ஸ்வீடனில் உள்ள பனி மற்றும் பனி சுற்றுகள், நர்பர்கிங்கில் பாதையில் மற்றும் பிரான்சின் தெற்கில் உள்ள மைதானம் ஆகியவை இதில் அடங்கும்.

    காரின் மிகமுக்கிய அம்சமாக இதன் மேம்பட்ட சேஸ் அமைப்பு இருக்கிறது. இந்த மாடலில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வியில் இருந்து 6டி டைனமிக்ஸ் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஃபிசிக்கல் ஆண்டி-ரோல் பார் தேவையில்லாமல் கேபினை முடிந்தவரை நிலையானதாக வைத்திருக்க, பம்பர்களை முன்பக்கமாக பின்புறமாகவும், பக்கவாட்டாகவும் ஹைட்ராலிக் மூலம் இணைக்கிறது.

    • சியாஸ் நடுத்தர அளவிலான செடான் ஜூன் 2024 இல் 572 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
    • கிராண்ட் விட்டாராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் மற்றும் eVX கான்செப்ட் அடிப்படையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்களின் விலை பெரும்பாலும் குறைவாக இருப்பதாலேயே நடுத்தர மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனாலேயே ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி அதன் விற்பனையை 1.8 லட்சத்தை எட்டியுள்ளது. SUV மாடல்களும் தொடர்ந்து அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஜூன் 2024-ல் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL ) ஒட்டுமொத்த விற்பனை 228,79 ஆகப் பதிவு செய்துள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1,39,918 யூனிட்கள், டொயோட்டாவிற்கு 8,277 யூனிட்கள் வழங்கப்பட்டன. 31,033 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி பிரிவில், MSIL 9,395 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது ஜூன் 2023 இல் விற்கப்பட்ட 14,054 யூனிட்களில் இருந்து சரிவை காட்டுகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 33.15 சதவீதம் குறைந்ததைக் குறிப்பிட்டுள்ளது.

    பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் போன்ற மாடல்களை உள்ளடக்கிய மாருதி சுசுகி ஜூன் 2024 இல் 64,049 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 0.65 சதவீதம் குறைவு ஆகும்.

    சியாஸ் நடுத்தர அளவிலான செடான் ஜூன் 2024 இல் 572 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,744 யூனிட்களாக இருந்தது. இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு 67.20 சதவீதம் சரிவு ஏற்பட்டது.


    காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மாடல்களில் எண்ணிக்கை குறைந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, யுடிலிட்டி வாகனப் பிரிவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் XL6 ஆகியவற்றின் மொத்த விற்பனை ஜூன் 2024 இல் 52,373 யூனிட்டுகளாக இருந்தது.

    இதுவே கடந்த ஜூன் 2023 இல் 43,404 யூனிட்களாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 20.66 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் சமீபத்திய மாடல்கள் விற்பனையில் அதிக அளவில் உள்ளதால், இப்போது புதிய தலைமுறை டிசைரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    கிராண்ட் விட்டாராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் மற்றும் eVX கான்செப்ட் அடிப்படையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வரவிருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி, கான்செப்ட் போலவே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் ஓட்டும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிக விலை காரணமாக இந்திய சந்தையில் வோகஸ்வேகன் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.
    • சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை.

    ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வோகஸ்வேகன் தனது பங்கை விற்க ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கார் விற்பனையில் முன்னணியில் உள்ள மஹிந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்த போதிலும், ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் வெற்றி பெறவில்லை. அதிக விலை காரணமாக இந்திய சந்தையில் வோகஸ்வேகன் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.

    ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ஜெல்மர் கூறுகையில், "நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயணித்து வருகிறோம். சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஒரு புதிய பாதையில் முயற்சிக்கவும். சரியான பங்குதாரரை நாம் கண்டுபிடித்தால், ஒருவரையொருவர் கற்றுக்கொண்டு பயனடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்…" என்றார்.

    மேலும், ஐரோப்பிய கார்கள் பெரும்பாலும் அதிக இன்ஜினியரிங் செய்யப்படுகின்றன, அவை இந்தியாவில் தேவைப்படாது. அதிக இன்ஜினியரிங் காரணமாக கார்களின் விலை உயருகிறது. இந்த தயாரிப்புகள் இந்திய சந்தையில் வரும்போது போட்டித்தன்மையை குறைக்கிறது. கலப்பினங்கள் மீதான வரி விகிதங்களை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
    • பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் 2022-ம் ஆண்டு தனது ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 2 ஆண்டுகளில் ஸ்கார்பியோ N விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்கார்பியோ சீரிஸ் மாடல்கள் உற்பத்தியில் 10 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

    முன்னதாக, ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து 11 ஆண்டுகளில் 9 லட்சம் கடந்துள்ளதாக அறிவித்து இருந்தது. ஸ்கார்பியோ N அதையும் தாண்டி விற்பனையாகி உள்ளது.

    கிளாசிக் மற்றும் N என்று இரண்டு மாடல்களை கொண்டுள்ள ஸ்கார்பியோ பிராண்ட் 2024 நிதியாண்டில் 4,59,877 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதன் காரணமாக 12-மாத காலத்தில் மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல்லை எட்ட ஸ்கார்பியோ மாடல்கள் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.


    பிப்ரவரி 1, 2024 அன்று, ஸ்கார்பியோ N அறிமுகப்படுத்தப்பட்டு 19 மாதங்கள் 5 நாட்களில் 1,00,000வது விற்பனை மைல்கல்லைக் கொண்டாடியது. பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.

    ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது ஜூன் 2002 இல் தொடங்கப்பட்ட ஸ்கார்பியோ பிராண்டின் ஒட்டுமொத்த விற்பனையை 10,42,403 ஆக உயர்த்தியுள்ளது.

    ஜூலை 1, 2022 அன்று ஸ்கார்பியோ N-க்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் 1,00,000 யூனிட்கள் புக்கிங் ஆனது. அப்போது, முன்பதிவுக்கான தொகையின் மதிப்பு சுமார் ரூ.18,000 கோடி, எக்ஸ்ஷோரூம் என மஹிந்திரா நிறுவனம் கூறியிருந்தது.

    நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவை இணைந்து 28,524 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 2023 ஜூனில் 1. 59 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 12.4% விற்பனை அதிகரித்துள்ளது
    • மாருதி சுசுகியின் மினி-செக்மென்ட் கார்களின் விற்பனை குறைந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகிஇந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 1.79 லட்சம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

    2023 ஜூனில் 1.59 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 12.4% விற்பனை அதிகரித்துள்ளது

    அதே போல் இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 1.37 லட்சம் உள்நாட்டு பயணிகள் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

    2023 ஜூனில் 1.33 லட்சம் உள்நாட்டு பயணிகள் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 3% விற்பனை அதிகரித்துள்ளது.

    ஆனால், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி-செக்மென்ட் கார்களின் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 14,054 யூனிட்களில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் 9,395 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

    பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 64,471 யூனிட்களில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் 64,049 யூனிட்டுகளாக சற்று குறைந்துள்ளது.

    • டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும்.
    • பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், டாடா நெக்சான், மஹிந்திரா XUV400, எம்ஜி ZS வரவிருக்கும் மாருதி eVX மற்றும் டாடா கர்வ் போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தற்போது உள்நாட்டு சந்தையில் அதன் வெகுசன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.

    இந்நிலையில், வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் வாகனத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ...

    1. வெளிப்புற தோற்றம்


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்ற ICE க்ரெட்டாவை போன்றே புகிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில் குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கும். அதாவது, பிளான்க்டு-ஆஃப் முன்பக்க கிரில், ஏரோ திறனுள்ள சக்கரங்கள் மற்றும் பாடி பேனல்களில் எலெக்ட்ரிக் பேட்ஜிங் போன்றவை இருக்கும்.

    2. உட்புற தோற்றம்,

    வெளிப்புற தோற்றம் போல ICE க்ரெட்டாவை போன்றே உட்புற தோற்றும் இருக்கும். டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும். இருப்பினும், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் செலக்டர் ஆகியவை பிராண்டின் ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்று ஸ்டீயரிங் வீல்களைச் சுற்றி அமைந்திருக்கும்.

    3. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெய்ன்

    பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடலில் முன் சக்கரங்களில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 45kWh பேட்டரி பேக்கை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    சமீபத்தில் நிறுத்தப்பட்ட கோனா EV-யிலிருந்து சரியான மோட்டார் விவரக்குறிப்பை ஹூண்டாய் பயன்படுத்தும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால், 138 பிஎச்பி மற்றும் 255 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    4. ரேஞ்ச் மற்றும் சார்ஜர்

    இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும். அதிகரித்த செயல்திறனுடன், இந்த எலெக்ட்ரிக் கார் 500 கிலோமீட்டர் வரை செல்லும். க்ரெட்டா EV ஆனது 50 kWh வரை DC ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் கிடைக்கும். இது குறைவான சார்ஜிங் நேரத்தை உறுதி செய்யும். 100 kWh அல்லது அதற்கும் அதிகமான DC ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    5. வெளியீடு மற்றும் விலை விபரம்

    தற்போதைய தகவல்களின் படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் க்ரெட்டா EV இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV 400 EV, டாடா நெக்சான் EV மற்றும் வரவிருக்கும் மாருதி சுசுகி eVX மற்றும் Tata கர்வ் EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    எலெக்ட்ரிக் கார்களின் விலை பொதுவாக அவற்றின் ICE மாடல்களை விட அதிகம் என்பதால், க்ரெட்டா EV ஆரம்ப விலை ரூ. 15 முதல் 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம்.

    • ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் புதிய க்யூ 6 இ ட்ரானை அறிமுகப்படுத்துவதற்கு ஆடி திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் அந்த காருக்கான சோதனையை இந்தியாவில் செய்ய துவங்கியது.

    முன்னதாக வெளியான க்யூ 6 இ ட்ரான் தொடர்பான புகைப்படங்களை சோதனைக் காரின் ஒரு யூனிட்டை முற்றிலும் மறைக்காமல் வெளிப்படுத்தின.


    ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் விற்கப்படும் மாடலுடன் ஒப்பிடுகையில், முன் மற்றும் பின்பக்க பம்பர்களில் சில்வர் இன்சர்ட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் உட்பட சிறிய வேறுபாடுகளைப் பெறுகிறது.

    புதிய Q6 e-tron இன் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு அம்சங்களில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்கள், பிளாங்க்-ஆஃப் கிரில், OLED டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் ஒரு LED லைட் பார் ஆகியவை அடங்கும்.

    இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனை ஆடி நிறுவனம் விர்ச்சுவல் அதாவது மெய்நிகர் காக்பிட் என்று அழைக்கிறது, 14.5-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன் பயணிகளுக்கான 10.9-இன்ச் டிஸ்ப்ளே, டச்-அடிப்படையிலான புதிய ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், ஆக்மென்டட் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் மூன்று-டோன் இன்டீரியர் தீம் கொண்டுள்ளது.

    ஹூட்டின் கீழ், ஆடி க்யூ6 இ-ட்ரான் இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட 100கிலோவாட் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 270கிலோவாட் சார்ஜர் உதவியுடன் 21 நிமிடங்களில் 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய இந்த பேட்டரி, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 625கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    • ஜூன் 30-ந்தேதி வரைதான் தள்ளுபடி சலுகை.
    • ஸ்மார்ட், கிரியேட்டிவ், பியர்லெஸ் கார்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெக்சான் வகை காரை அறிமுகம் செய்தது. சொகுசு கார், மின்சார வெர்சன் என அப்டேட் ஆன நிலையில் ஏழு லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஜூன் 30-ந்தேதி வரை பல மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பெட்ரோல ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், ஸ்மார்ட் பிளஸ் எஸ் வேரியன்ட்ஸ்களுக்கு 16 ஆயிரம், 20 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் என தள்ளுபடி சலுகை வழங்கியுள்ளது.

    Pure and Pure S பெட்ரோல் வேரியன்ட்ஸ்களுக்கு 30 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என அறிவித்துள்ளது. டீசல் வேரியன்ட்ஸ்களுக்கு 20 ஆயிரும் ரூபாய் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் என தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.

    கிரியேட்டிவ் (Creative), கிரியேட்டிவ் பிளஸ், கிரியேட்டிவ் பிளஸ் எஸ் வேரியன்ட்ஸ்களுக்கு அதிகபட்சமாக 60 ஆயிரம், 80 ஆயிரம், ஒரு லட்சம் என பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு சலுகை அறிவித்துள்ளது.

    பியர்லெஸ் (Fearless) பியர்லெஸ் எஸ், பியர்லெஸ் பிளஸ், பியர்லெஸ் பிளஸ் எஸ் வேரியன்ட்ஸ்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி சலுகை அளித்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கும் உண்டு.

    • முதன் முதலில் 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2013-ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் விற்பனையானது.
    • தற்போது 4-வது தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஸ்விஃப்ட் அதன் தொடக்கத்தில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்று ஸ்விஃப்ட். இந்த மாடல் மிகவும் பிரபலமானது மற்றும் பெயர் பெற்றதும் கூட.

    ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டத்தில் இருந்து 30 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    முதன் முதலில் 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2013-ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் விற்பனையானது. பின்னர் இந்த எண்ணிக்கை 2018-ல் இரட்டிப்பாக்கியது. தற்போது 4-வது தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஸ்விஃப்ட் அதன் தொடக்கத்தில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் மாடலின் ஆரம்ப விலையாக ரூ.6.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஸ்விஃப்ட் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் அதிக உயரிய வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் முற்றிலும் புதிய எஞ்சினைப் பெற்றுள்ளது.


    ஒவ்வொரு புதிய தலைமுறை வெர்ஷனிலும், ஸ்விஃப்ட் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கி அதன் விற்பனையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. 'Swift DNA' தற்கால பாணி மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    "இந்த மகத்தான சாதனைக்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்விஃப்ட் உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று மாருதி சுசுகி இந்தியாவின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.

    • டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி-இன் AMT வகைகளை அறிமுகப்படுத்தியது.
    • இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய முதல் CNG வாகனம் இதுவாகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் அதன் பிரபலமான நெக்சான் காம்பாக்ட் எஸ்.யு.வி.யில் சிஎன்ஜி பவர்டிரெய்னை சேர்க்கும் என்று உறுதி செய்துள்ளது.

    வரவிருக்கும் நெக்சான் சிஎன்ஜி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி விழாவில் உற்பத்திக்கு நிகரான நிலையில் (நெக்சான்-ஐ சிஎன்ஜி கான்செப்டாக) காட்சிப்படுத்தப்பட்டது.

    நெக்சான் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட சிஎன்ஜி வாகனமாக வெளியாகிறது. நெக்சான் சிஎன்ஜி வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் அதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ளதை போன்றே கொண்டிருக்கும்.

    இருப்பினும், சிஎன்ஜி தொடர்பான மெக்கானிக்கல் மேம்பாடுகள் மற்றும் மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படுவதை குறிக்க இரண்டு இடங்களில் ஐ-சிஎன்ஜி பேட்ஜ்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சிஎன்ஜி-யில் இயங்கும் நெக்சான் பெட்ரோல் மாடல்களில் இருந்து அதே 1.2-லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3-சிலிண்டர் எஞ்சினுடன் வழங்கப்படும். அதாவது இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய முதல் CNG வாகனம் இதுவாகும்.


    டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி-இன் AMT வகைகளை அறிமுகப்படுத்தியது. எனவே வரவிருக்கும் நெக்சான் சிஎன்ஜி மாடலிலும் AMT-கியர்பாக்சை கொண்டிருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

    அறிமுகப்படுத்தப்பட்டதும், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட பல எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைக்கும் இந்தியாவின் ஒரே வாகனமாக நெக்சான் இருக்கும். நெக்சான் சிஎன்ஜி மாடல் இந்தியாவில் பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலுக்கு போட்டியாக அமையும்.

    நெக்சான் சிஎன்ஜியைத் தவிர, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் மற்றும் கர்வ் மாடலை எலக்ட்ரிக் மற்றும் ஐசி எஞ்சின் என இருவித பவர்டிரெயின்களில் அறிமுகப்படுத்தும்.

    • மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
    • அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கிறது.

    மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை மையங்கள் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்.யு.வி. மற்றும் XL6 எம்.பி.வி. உள்ளிட்ட கார்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.

    பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் மாடல்கள் அதே விலையில் தொடர்கின்றன. அதே நேரத்தில் இன்விக்டோ எம்.பி.வி.-க்கு எந்த தள்ளுபடியும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே, மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு ரூ.74,000 தள்ளுபடியும், 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 66 ஆயிரம் தள்ளுபடி சேர்த்து காரின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

    மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சிக்மா மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,000 மற்றும் ரூ.14,000 தள்ளுபடி பெறுகின்றன.

    இந்தியாவில் கிராண்ட் விட்டாரா மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.


    இந்த காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே எஞ்சின் CNG-மேனுவல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 116 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    மாருதி XL6 மீதான தள்ளுபடிகள் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ. 40,000 ஆகவும், சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ. 25,000 ஆகவும் உள்ளது. இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 103 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த CNG மோடில் இயங்கும் போது 88 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×