என் மலர்
கார்
- ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
- கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.
இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த நிலையில் ஆடி நிறுவனம் Q5 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து போல்ட் எடிஷன் சிரீஸை கொண்டு வர உள்ளது. Q5 இன் மாடல் ரூ.72.30 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் Q5 போல்ட் எடிஷனை ஆன்லைன் மற்றும் டீலர்களிடம் சென்று வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
கிரில், ஆடி லோகோக்கள், ஜன்னல் சுற்றுகள், ORVMகள் மற்றும் ரூஃப்-ரெயில்கள் ஆகியவற்றில் உயர் பளபளப்பான கருப்பு பெயிண்ட் இதில் அடங்கும். மேலும், கிலேசியர் ஒயிட், நவெரா ப்ளூ, மித்தோஸ் பிளாக், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் மான்ஹட்டன் கிரே ஆகிய ஐந்து வண்ணம் விருப்பங்களில் கிடைக்கிறது.

அம்சங்களைப் பொறுத்தவரை, ஆடி Q5 ஆனது நினைவக செயல்பாடு, 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் உதவி, ஆறு டிரைவ் மோட்கள், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 19-ஸ்பீக்கர்கள் மற்றும் ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் காக்பிட், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.
இயந்திர ரீதியாக, Q5 ஆனது 2.0-லிட்டர் TFSi பெட்ரோல் மோட்டார் மூலம் 261bhp மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதே நேரத்தில் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- பின்புறத்தில், டெயில்-லேம்ப்களில் லேசான மாற்றங்கள் இருக்கும்.
- 2025 ஆம் ஆண்டில் ஸ்கோடாவிற்கான மூன்றாவது புதிய தயாரிப்பாக ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கும்.
பிரபலமான ஸ்கோடா ஸ்லாவியா செடான் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. ஸ்கோடாவின் மேட் ஃபார்-இந்தியா செடான் பிப்ரவரி 2022 முதல் விற்பனையில் உள்ளது.
இந்தியா 2.0 தயாரிப்புகளில் ஸ்லாவியா நான்கு மாடல்களில் ஒன்றாகும். இதில் ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் எஸ்யூவிகளுடன் அதன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட இரட்டை ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் செடானும் அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஸ்லாவியாவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட குஷாக் அறிமுகம் செய்யப்படும். ஸ்கோடாவின் புதுப்பிக்கப்பட்ட செடான் முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்டைலிங் மாற்றங்களைக் கொண்டிருக்கும்.
ஹெட்லேம்ப்கள் லேசான மறுவடிவமைப்பைக் காணும், கிரில் சற்று அகலமாக இருக்கும், மேலும் குரோம் பிட்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக, ஹூண்டாய் வெர்னாவில் காணப்படுவது போன்ற கனெக்டெட் ஹெட்லேம்ப்கள் உள்ளன. பின்புறத்தில், டெயில்-லேம்ப்களில் லேசான மாற்றங்கள் இருக்கும்.
உட்புறத்தில், மாறுபாட்டைப் பொறுத்து சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்களை எதிர்பார்க்கலாம்.
பவர்டிரெய்ன் விஷயத்தில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட முடியாது. அதாவது மேனுவல் மற்றும் DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், மற்றும் 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இத்துடன் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

2025 ஆம் ஆண்டில் ஸ்கோடாவிற்கான மூன்றாவது புதிய தயாரிப்பாக ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கும். இந்த பிராண்ட் அனைத்து புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுகத்துடன் புதிய ஆண்டைத் தொடங்கும், பின்னர் முறையே குஷாக் மற்றும் ஸ்லாவியாவிற்கான ஃபேஸ்லிஃப்ட்கள் அறிமுகம் செய்யப்படும்.
முன்னதாக, ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மிட்சைஸ் செடான் மற்றும் குஷாக் மிட்சைஸ் எஸ்யூவியின் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை குறைத்தது. இத்துடன் கார் வேரியண்ட்களுக்கு புதிய பெயர்களையும் ஸ்கோடா வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
- புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
யூரோ NCAP புதிய கிராஷ் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய Suzuki Swift, 2024 Dacia Duster, புதிய Skoda Kodiaq போன்ற பல கார் மாடல்களின் சோதனை முடிவுகள் அடங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட்டின் சோதனை முடிவுகள் குறித்து பார்ப்போம்...
சோதனையில், 2024 ஸ்விஃப்ட் விபத்து சோதனையில் மூன்று நட்சத்திர மதிப்பீடு பெற்றது. இதில், வயது வந்தோர் பாதுகாப்பில் 67 சதவீதமும், குழந்தைகள் பாதுகாப்பில் 65 சதவீதமும், பாதுகாப்பு உதவியில் 62 சதவீதமும், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகளுக்கு 76 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
ஸ்விஃப்ட்டின் இந்த சோதனை செய்யப்பட்ட யூனிட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள் மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு ஆகியவை அடங்கும். மேலும், இது இரண்டாவது வரிசையில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் ADAS வசதிகளை கொண்டுள்ளது. முன்பக்க ஆஃப்செட் சோதனையில் காரினல் பயணிகள் அமரும் பெட்டி நிலையானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது, எனவே இந்தியாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் உடன் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESP, HSA, பின்புற பார்க்கிங் சென்சார்கள், சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு, வேக எச்சரிக்கை அமைப்பு, Isofix குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் சில கூடுதல் அம்சங்களை இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் கொண்டுள்ளது. சுசுகி கனெக்ட் தொழில்நுட்பம். வரவிருக்கும் மாதங்களில் புதிய ஸ்விஃப்ட் BNCAP-ல் சோதிக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
டிசைனை பொருத்தவரை 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்ப்பர்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் முன்புற கிரில், எல்.இ.டி. ஃபாக் லைட்கள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. 2024 ஸ்விப்ட் மாடல் லஸ்டர் புளூ மற்றும் நோவல் ஆரஞ்சு என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
- காரின் பின்புறத்தில் எல்.இ.டி. லைட் பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
- மஹிந்திரா XUV 3XO மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XUV 3XO மாடல் இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த மாடல் மே மாத இறுதியில் டெலிவரி செய்யத் தொடங்கப்பட்டது.
இந்த காரின் விலை ரூ. 7 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் முற்றிலும் புதிய டிசைன், அதிக அம்சங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்டிருக்கிறது.
XUV 3XO இன் மிட் மற்றும் டாப் எண்ட் மாடல்கள் விரைவில் வினியோகம் செய்யப்பட உள்ளன. இப்போது, என்ட்ரி லெவல் MX1 மாடல்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்பட இருக்கிறது.
புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் MX1, MX2, MX3 மற்றும் MX2 ப்ரோ, AX5, AX5L, AX7 மற்றும் AX7L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் C வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிளாக்டு அவுட் கிரில், மெஷ் பேட்டன் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது.
காரின் பின்புறத்தில் எல்.இ.டி. லைட் பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் டெயில்கேட், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர், அகலமான பம்ப்பர் மற்றும் புதிய XUV 3XO லெட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
உள்புறம் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, லெதர் இருக்கைகள், ரிவைஸ்டு சென்டர் கன்சோல், ரியர் ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா XUV 3XO மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- காரில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
- மாடலில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக விலைகள் சற்று அதிகரிக்கலாம்.
ஹூண்டாய் இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அல்கஸார் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் க்ரெட்டா EV வருவதற்கு முன்பு அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ஹூண்டாயின் பெரிய அறிமுகமாக இருக்கும்.
இந்தியாவில் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் டெஸ்டிங் மூலம், ஹூண்டாய் SUVயின் முன்பக்கத்திலும் பின்புறத்திலும் ஸ்டைலிங் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் சில தனித்துவமான பிட்டிங்களை கொண்டிருக்கிறது. அவை க்ரெட்டாவை அல்காஸரில் இருந்து பிரித்து வைக்கும்.
ஸ்பிலிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், கிரில் மற்றும் முன்புற பம்பரில் சில வேறுபாடுகள் இருக்கும். அலாய் வீல் டிசைன்கள் மற்றும் பக்கவாட்டு கிளாடிங்குகள் போன்றவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

க்ரெட்டா ஃபேஸ்பிலிட்டில் காணப்பட்ட இரட்டைத் திரை அமைப்புடன் புதிய தோற்றம் கொண்ட டேஷ்போர்டு வடிவமைப்பு, அல்காசரிலும் இடம்பெற்று இருக்கும். முந்தைய மாடலைப் போலவே, அல்கஸார் ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.
இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. பெட்ரோல் பவர்டிரெய்ன் 160hp மற்றும் 253Nm டார்க் மற்றும் 6-ஸ்பீடு MT அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டீசல் மோட்டாரின் 116hp மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6MT மற்றும் 6AT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கான ஹூண்டாய் புதிய மாடல் ஆகும். செப்டம்பர் மாதத்தில் இந்த காரின் விலை அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
மாடலில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக விலைகள் சற்று அதிகரிக்கலாம். தற்போதைய வெரியண்ட்டுகளின் விலை ரூ.16.78 லட்சம்-21.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- எடிஷன் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு-டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
- வெளிப்புறம் ஸ்கிட் பிளேட்கள், 15-இன்ச் டைமன்ட் கட் அலோய் வீல்கள், ஹூண்டாய் லோகோ மற்றும் பேட்ஜ்கள், எக்ஸ்டர் நைட் எடிஷன் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் எக்ஸ்டரின் நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ.8.38 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாயின் ஸ்பெஷல் எடிஷன் SX மற்றும் SX (O) வேரியன்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டுதான் எக்ஸ்டர்ரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், புதிய எக்ஸ்டர் கார் இதுவரை 93,000 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த எடிஷன் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு-டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
இதில் ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக் ரூஃப் கொண்ட ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், ஷேடோ கிரே மற்றும் ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் ஆகியவை அடங்கும்.
வெளிப்புறம் ஸ்கிட் பிளேட்கள், 15-இன்ச் டைமன்ட் கட் அலோய் வீல்கள், ஹூண்டாய் லோகோ மற்றும் பேட்ஜ்கள், எக்ஸ்டர் நைட் எடிஷன் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இவை காருக்கு கவர்ச்சிகர தோற்றத்தை வழங்குகின்றன.
இது தவிர, இந்த எஸ்யுவியின் பம்ப்பர்கள், டெயில்கேட் மற்றும் முன்புற பிரேக் கேலிப்பர்களில் சிவப்பு நிற அக்சென்ட் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் சிவப்பு மற்றும் கருப்பு நிற அக்சென்ட் பெறுகிறது. இதில் ஃபுட்வெல் லைட்டிங், மெட்டல் ஸ்கஃப் பிளேட்ஸ், ரெட் தையல் கொண்ட ஃபுளோர் மேட்ஸ் மற்றும் சீட்களுக்கு ரெட் நைட் எடிஷன் தீம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 83hp, 114Nm வெளிப்படுத்தும் 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- மாருதி சுசுகி வேகன் ஆர் ஹேச்பேக் ரகத்தை சேர்ந்தது.
- மூன்றாவது நிதியாண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் வேகன்ஆர் இணைந்துள்ளது.
மாருதி நிறுவனம் அதன் சமீபத்திய வேகன்ஆர் மாடலை ஜனவரி 23, 2019 அன்று அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் பிரபல டால்-பாய் ஹேச்பேக் மாடலாக இருக்கும் வேகன்ஆர் விற்பனைில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை கடந்துள்ளது.
மாருதி சுசுகி வேகன் ஆர் ஹேச்பேக் ரகத்தை சேர்ந்தது. மாருதி சுசுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விற்பனை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
2024 நிதியாண்டில், வேகன் ஆர் மாடல் 2,00,177 யூனிட்கள் விற்பனையானது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.

இது மாருதி சுசுகியின் மொத்த பயணிகள் வாகன விற்பனையான 17.5 லட்சம் யூனிட்களில் 11 சதவீதமாக இருந்தது. தற்போதைய மாடலின் ஒட்டுமொத்த விற்பனை 10,06,413 யூனிட்டுகளாகக் கொண்டு, மில்லியன் (10 லட்சம்) எனும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 2019-இல் அறிமுகமான நிலையில், புது வேகன்ஆர் மாடல் 5.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் வேகன் ஆர். ஒட்டுமொத்தத்தில் இந்த கார் இதுவரை சுமார் 32.1 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஹேட்ச்பேக் இந்த ஆண்டு தனது 25 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே 2023 மாதம் வேகன்ஆர் மாடல் 30 லட்சம் விற்பனையைத் தாண்டியது.
- மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
- இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி சந்தையில் தனது மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் சமயத்தில் XUV700 காரின் விலையை தற்காலிகமாக குறைத்துள்ளது. மஹிந்திரா XUV700 AX7 விலை இப்போது ரூ.19.49 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.24.99 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது. இந்த சிறப்பு விலைகள் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
AX7 டீசல்-AT 7-சீட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.20 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. AX7 L டீசல்-MT 7-சீட்டர் விலை ரூ.1.50 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு XUV700 விற்பனையை மேலும் அதிகப்படுத்த உதவிகரமாக இருக்கும்.
AX7 மற்றும் AX7 L டிரிம்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. உதாரணமாக, AX7 பதிப்புகளில் பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 1 ஆண்டு இலவச Adrenox சந்தா, TPMS, முழு-எல்இடி விளக்குகள், 18-இன்ச் அலாய் வீல், ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

சோனியின் 3டி ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட்-வியூ மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரியர் எல்இடி சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களை AX7 L கொண்டுள்ளது.
மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அதாவது 200hp பவர் கொண்ட 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் அல்லது 185hp வழங்கும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின்களில் XUV700-ஐ வாங்கலாம்.
இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டீசல் எஞ்சின் AT கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனைப் பெறுகிறது. மஹிந்திரா சமீபத்தில் XUV700 இன் 2,00,000 யூனிட் உற்பத்தி மைல்கல்லைக் கொண்டாடியது.
- இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
- வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்தது.
இந்தியாவில் தனது முதல் மின்சார கார் ஆன ஸியோமி SU7 காரை இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த கார் அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டார்க் திறன் 838 ஆகும்.
இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரால் மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதுதவிர, வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
இந்த கார் சிறப்பான பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் பிரேக் பிடித்தால் வெறும் 33.3 மீட்டர் தூரத்திலேயே நின்று விடும்.
இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
- மெர்சிடிஸ் EQB-ஐ எலெக்ட்ரிக் ஆர்ட் லைன் மற்றும் ஏஎம்ஜி லைன் என இரண்டு வகைகளில் தேர்வு செய்யலாம்.
- ஏஎம்ஜி லைன் ஐந்து இருக்கைகள் கொண்ட வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் கார் அனைவரையும் ஈர்க்கும் டிசைன் கொண்டது. இந்த நிறுவனத்தின் மாடலை பயன்படுத்த பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வர். அந்த வகையில், கார் பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQA மற்றும் EQB ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் அதன் மிகவும் மலிவு மின்சார SUV EQA ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). GLA இன் மின்மயமாக்கப்பட்ட பதிப்பு, இந்த மாடல் EQA 250+ எனப்படும் Fully Loaded வேரியண்டில் வழங்கப்படுகிறது. பெரிய EQB இப்போது 2024 புதுப்பித்தலுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 70.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
வடிவமைப்பில், புதிய EQA ஆனது முன் மற்றும் பின்புறத்தில் LED லைட் பார்கள், மூன்று புள்ளிகள் கொண்ட நட்சத்திர வடிவத்துடன் கூடிய புதிய கிரில், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களைப் பெறுகிறது. இந்த கார் போலார் ஒயிட் ஹைடெக் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மவுண்டன் கிரே, ஸ்பெக்ட்ரல் ப்ளூ, படகோனியா ரெட் மற்றும் மவுண்டன் கிரே மேக்னோ என ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை 360-டிகிரி கேமரா, HUD, சைகைக் கட்டுப்பாடு, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், மின்முறையில் இயக்கக்கூடிய டெயில்கேட், நான்கு டிரைவ் மோட்கள், பனோரமிக் சன்ரூஃப், இரண்டு 10.25-இன்ச் திரைகள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2024 EQA ஆனது 70.5kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒருமுறை முழு சார்ஜில் 560 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த காரின் ஆற்றல் வெளியீடு 188bhp மற்றும் 385Nm ஆகும்.
11kW AC சார்ஜிங் மூலம் EQA காரை ஏழு மணி 15 நிமிடங்களில் 0-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் 100kW DC சார்ஜர் மூலம் 10-80 சதவிகிதம் வெறும் 35 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில், பிஎம்டபிள்யூ iX1 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு எதிராக EQA போட்டியிடும்.
மெர்சிடிஸ் EQB-ஐ எலெக்ட்ரிக் ஆர்ட் லைன் மற்றும் ஏஎம்ஜி லைன் என இரண்டு வகைகளில் தேர்வு செய்யலாம். ஏழு இருக்கைகள் கொண்ட அமைப்பில் கிடைக்கும். இதன் ஏஎம்ஜி லைன் ஐந்து இருக்கைகள் கொண்ட வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை ரூ.77.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB இன் ஏஎம்ஜி மாடலில் ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், நினைவக செயல்பாடுகளுடன் இயங்கும் முன் வரிசை இருக்கைகள் மற்றும் கதவு பேனல்களில் ஒளிரும் நட்சத்திர வடிவங்களைக் கொண்ட கருப்பு நிற இன்டீரியர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது.
- அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மற்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில், இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 8 புதிய கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்திய வாகனத் துறையின் முக்கிய நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகியவை புத்தம் புதிய கார்களை, பெரும்பாலும் SUVக்களைக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளன.
1. மஹிந்திரா தார் அர்மடா & XUV.e8:
மஹிந்திரா தார் ஆர்மடா ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய மாடல் மூன்று-கதவு மாடலை விட பெரியதாக இருக்கும். பெரிய தொடுதிரை, ADAS, டூயல்-பேன் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் கன்சோல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மிகவும் ஆடம்பரமான இன்டியர் வேலைபாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, XUV.e8 மின்சார SUV இந்த வருட இறுதியில் அல்லது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. டாடா கர்வ் EV & ICE, Nexon iCNG:
டாடா கர்வின் எலெக்ட்ரிக் மாடல், 500 கி.மீ.க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படும் ரேஞ்சில் வரும் மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து ICE பதிப்பு அறிமுகப்படுத்தப்படும். இது புதிய 1.2 லிட்டர் நேரடி-இன்ஜெக்ஷன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் Nexon இலிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும். கூடுதலாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Nexon iCNG, 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
3. ஹூண்டாய் க்ரெட்டா EV & Alcazar Facelift:
ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கோனா எலெக்ட்ரிக் உடன் மின்சார மோட்டாரைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் ICE இணையான க்ரெட்டாவிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறும். இந்த நடுத்தர அளவிலான மின்சார SUV 450 கிமீ ரேஞ்சை வழங்கும் மற்றும் வழக்கமான க்ரெட்டாவைப் போன்ற உபகரணங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்காசர் இந்த பண்டிகைக் காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளேயும் வெளியேயும் பல சீரமைப்புகளைக் கொண்டிருக்கும்.

4. புதிய மாருதி சுசுகி டிசையர்:
அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு டிசைன்களைப் பெறுகிறது. இருப்பினும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இந்த வரிசையில் புதிய 1.2L Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
- மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மாறும்.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ எம்பிவி மாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ மாடலின் விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எம்பிவி மாடல் 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறுப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனம் இறுதியாக உற்பத்தி செய்த செடான் கார் மாடலாக வெரிட்டோ இருந்தது. தற்போது மராசோ விற்பனை நிறுத்தப்பட்டால், மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மட்டும் மாறும்.
இந்திய பயணிகள் வாகன சந்தையில் எம்பிவி மாடல்கள் மட்டும் 16 சதவீதமாக உள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிலையில், கியா மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் விற்பனையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வரிசையில் மஹிந்திராவின் மராசோ மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 44,793 மராசோ யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 640 யூனிட்களாகவே இருக்கிறது. மராசோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் மாருதி 14,495 எர்டிகா யூனிட்களையும், கியா நிறுவனம் 4.412 கரென்ஸ் யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.






