என் மலர்tooltip icon

    கார்

    டாடா மோடடார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சர்வதேச அளவில் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 2020 நிதியாண்டின் கடைசி காலாண்டு வாக்கில் சர்வதேச அளவில் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இந்த  காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,31,929 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. 

    இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் விற்பனை 49 சதவீதம் சரிவடைந்து, மொத்தம்  72,608 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் சரிவடைந்து 1,59,321 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

    லேண்ட் ரோவர்

    உலகாளவிய விற்பனையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையும் அடங்கும். இந்நிறுவனம் மொத்தம் 1,26,979 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இத்துடன் செரி ஜாகுவார் லேண்ட் ரோவர் சீனாவில் 6288 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. 

    ஜாகுவார் ஒட்டுமொத்த வாரனங்கள் விற்பனை 32,940 யூனிட்களாகவும், லேண்ட் ரோவர் சர்வதேச சந்தையில் 94,039 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

    மார்ச் 2019 மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 11,012 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. இது 84 சதவீதம் வரை சரிவாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதே விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
    ஃபோக்ஸ்வேகன் குழும நிறுவனத்தில் வாகனங்கள் விற்பனை ஒரே மாதத்தில் சுமார் 37 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.



    ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தங்களது நிறுவன கார்களின் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்து இருக்கிறது. இதில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கார்கள் விற்பனை 37.6 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை மையங்கள் மூடப்பட்டு இருப்பதால் வாகனங்கள் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. 

    ஃபோக்ஸ்வேகன் கார்

    மேற்கு ஐரோப்பாவில் மார்ச் மாதத்தில் வாகனங்கள் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.6 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. இதே போன்று மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பகுதிகளிலும் வாகனங்கள் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. 

    பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதால் விற்பனை நிலவரம் ஏப்ரல் மாதத்தில் மேலும் மோசமடையலாம் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 81 சதவீதம் வரை சரிவடைந்து இருப்பதால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது எதிர்கால கணிப்புக்களை திரும்ப பெற்றிருக்கிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது.



    பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

    இதுவரை டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பெரும்பான்மை நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க துவங்கி இருக்கின்றனர். 

    டாடா நெக்சான் இவி

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் இவி மாடலை அறிமுகம் செய்தது. விற்பனையை பொருத்தவரை டாடா நிறுவனம் இதுவரை 198 நெக்சான் இவி மாடல்களையும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 116 இசட் எஸ் இவி யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஹூண்டாய் கோனா இவி விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    நெக்சான இவி மாடலின் துவக்க விலை ரூ. 13.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார்களில் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல்களில் சத்தமில்லாமல் புதிய 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கி இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பில்ட் இன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் இதில் ப்ளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ்-இன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தவிர காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் உள்புறம்

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலில் விரைவில் 1.2 என்ஜினுக்கு மாற்றாக பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 பிஎஸ் பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    தற்போதைய பெட்ரோல் என்ஜினை போன்றே புதிய என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் 2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் புதிய மாடலில் மேம்பட்ட பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

     

    கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவை ஏப்ரல் 14 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின் பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து இருக்கிறார்.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாகனங்களை சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தன. கடும் சூழ்நிலையிலும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    முன்னதாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்து இருந்தது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    வால்வோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டியை நீட்டிப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோ துறையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. பெரும்பாலான ஆட்டோ நிறுவன விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனினும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தன்பங்கிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு வழங்கப்பட்டு இருந்த வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வாரண்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வால்வோ கார்

    வாரண்டி நீட்டிப்பு சலுகை  மார்ச் 22 ஆம் தேதி துவங்கி மே 3 ஆம் தேதி வரை வாரண்டி நிறைவு பெறும் வாகனங்களுக்கு பொருந்தும் என வால்வோ இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

    "வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும். கொரோனா வைரஸ் பாதிப்பு பராமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்து இருக்கும் ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் வாரண்டியில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்" என வால்வோ கார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃபிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.  
    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது.



    பிஎம்டபிள்யூ நிறுவனம் காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் எனும் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்காக துவங்கி இருக்கிறது. 

    புதிய காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் திட்டம் கொண்டு வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் கார்களை கான்ஃபிகர் செய்வது, பணம் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இவ்வாறு செய்தபின் கார் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

    பிஎம்டபிள்யூ காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ்

    காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் சேவையை பிஎம்டபிள்யூ வலைதளத்தில் இயக்க முடியும். வாடிக்கையாளர்கள் கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை தேர்வு செய்ததும், ஆன்லைன் கான்ஃபிகரேட்டர் திறக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் வாகனத்தில் செய்ய விரும்பும் மாற்றங்களை தேர்வு செய்யலாம்.

    கான்ஃபிகர் செய்வதில் உள்புறத்தில் பயன்படுத்தப்படும் மென்மையான துணி வகை, வாகனத்தின் அலாய் வீல்கள் மற்றும் இதர அக்சஸரீக்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்பின் பிஎம்டபிள்யூ ஆன்லைன் ஸ்டோர் திறக்கும். இதல் வாடிக்கையாளர் விற்பனையாளரை தேர்வு செய்ய வேண்டும். 

    பின் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வாகன விற்பனை பற்றிய தகவல்களை கேட்டறிந்து, முறையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதியில் வாகனத்தை டெலிவரி செய்வார்கள்.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.



    இந்தியாவில் வெளியான முதல் மூன்று மாதங்களுக்குள் கியா கார்னிவல் எம்பிவி 3000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 24.95 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்பிவி கார் மாடலை இரண்டாவது வாகனமாக வெளியிட்டது. கார்னிவல் எம்பிவி கார் அறிமுகத்தின் போதே அதிக வரவேற்பை பெற்றது. பிரீமியம் மாடலாக உருவாகி இருக்கும் கார்னிவல் எம்பிவி மாடலில் அதிக அம்சங்கள் நிறைந்திருக்கிறது. 

    கியா கார்னிவல்

    கியா கார்னிவல் கார்: பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமௌசின் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 64 சதவீதம் பேர் டாப் எண்ட் லிமௌசின் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    காரின் உள்புறங்களில் நப்பா லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் பேனல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு 10.1 இன்ச் பொழுதுபோக்கு திரை, லேப்டாப் சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், ஒன்-டச் பவர்டு ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய கார்னிவல் காரில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டார் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் அதிக வரவேற்பு பெற்ற ஹெக்டார் எஸ்யுவி விற்பனையிலும் அசத்தியது. எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் எஸ்யுவி பெட்ரோல் மாடலை பிஎஸ்6 தரத்துக்கு ஏற்கனவே அப்டேட் செய்துவிட்டது.

    இந்நிலையில் எம்ஜி ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட என்ஜின் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எம்ஜி ஹெக்டார் பிஎஶ் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13.88 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுளஅளது.

    எம்ஜி ஹெக்டார்

    பிஎஸ்6 வேரியண்ட்டிலும் 2.0 லிட்டர் ஃபியாட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168.4 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

    காரின் வெளிப்புறம் டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் டூயல்டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், டைனமிக் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    உள்புறத்தில் 10.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கிளைமேட் கண்ட்ரோல்கள், எம்ஜி நிறுவனத்தின் ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இ-சிம் எம்பெட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு எப்போதும் இணைய வசதியை வழங்குகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல்வேறு விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனினும், எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மற்றும் கிளோஸ்டர் மாடல்களை திட்டப்படி வெளியிட இருப்பதாக தெரிகிறது. இந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்த ஆண்டு மத்தியிலும் எம்ஜி கிளோஸ்டர் மாடல் பண்டிகை காலத்திலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.

    ஏற்கனவே இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.

    எம்ஜி குளோஸ்டர் காரில் எம்.ஜி. பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 
    டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடல் காரை 2009 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த எஸ்யுவி அதிக விற்பனையாக துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு எஸ்யுவி மாடல்கள் இந்திய சந்தையில் களமிங்கி வருகின்றன. 

    இதனால் ஃபார்ச்சூனர் மாடல் சற்றே பழையதாகி இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா நிறுவன மூத்த துணை தலைவர் நவீன் சோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    புதிய லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடல் பிஎஸ்6 வேரியண்ட்டை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    தற்சமயம் இந்த மாடலின் விலை ரூ. 28.18 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் கார் விற்பனையகங்களுக்கு வந்தடைந்தது. விரைவில் இதன் விநியோகம் துவங்கப்பட இருக்கிறது.



    ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் 245 கார் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் குவக்க விலை ரூ. 36 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் 242 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் மற்றும் பேடிள் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245

    ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் ஆடி மாடல்களில் உள்ளதை போன்ற விர்ச்சுவல் காக்பிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல்- ரேலி கிரீன், ரேஸ் புளூ, கொரிடா ரெட், மேஜிக் பிளாக் மற்றும் கேண்டி வைட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
    ×