என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா கார் முன்பதிவு துவங்கிய ஏழு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.



    ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது 2020 கிரெட்டா எஸ்.யு.வி. மாடலை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2020 கிரெட்டா மாடலுக்கான முன்பதிவுகளை மார்ச் 2-ம் தேதி துவங்கியது. இதன் வெளியீடு மார்ச் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களை 2020 கிரெட்டா எஸ்.யு.வி. கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் கிரெட்டா

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள் மற்றும் பத்து வித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவைதவிர புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இதே என்ஜின்கள் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் 115 பி.எஸ். பவர், 1.4 லிட்டர் டி -ஜி.டி.ஐ. மோட்டார் 140 பி.எஸ். செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் பிஎஸ்.6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலாக இருக்கிறது. இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பி.எஸ்.4 மாடல்களை சலுகை விலையில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன.

    அந்த வகையில் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பி.எஸ்.4 ரக வாகனங்களுக்கு அதிரடி சலுகை மற்றும் சேமிப்புகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. மேலும் பி.எஸ். 4 வாகனங்களுக்கான சலுகை மார்ச் 19-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.

    டாடா டியாகோ

    அதன்படி டாடா ஹெக்சா மாடல் வேரியண்ட்களுக்கு ரூ. 2.05 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ஹேரியர் பி.எஸ். 4 மாடலுக்கு ரூ. 1.30 லட்சம் மற்றும் பி.எஸ். 6 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று டாடா செஸ்ட் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    டாடா போல்ட் காருக்கான விலையில் ரூ. 80 ஆயிரமும், டிகோர் மாடலுக்கு ரூ. 70 ஆயிரம், டாடா சஃபாரி ஸ்டாம் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம், டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் மற்றும் டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை அப்டேட் செய்து வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

    கடந்த ஆண்டு வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா சப்காம்பேக்ட் செடான் மாடல்களை வெளியிட்ட ஹூண்டாய் தற்சமயம் புதிய கிரெட்டா மற்றும் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரில் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், ஜி.டி.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் வழங்கப்பட்டுள்ளன. வென்யூ மாடலை போன்றே புதிய வெர்னா மாடலிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் டீசர்

    இதுதவிர புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டை முன்னிட்டு டீசர் புகைப்படம் ஒன்றை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஃபேஸ்லிஃப்ட் வெர்னா காரில் புத்தம் புதிய கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. காரின் பின்புறத்திலும் எல்.இ.டி. டெயில்லைட்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் எஸ்.யு.வி. கார் மாடல் முன்பதிவில் 300 யூனிட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டி ராக் எஸ்.யு.வி. மாடலினை மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதுவரை சுமார் 300 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டிகுவான் ஆல்ஸ்பேஸ், டி ராக் மற்றும் டைகுன் என மூன்று மாடல் கார்களை வெளியிட ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வரிசையில் நான்காவதாக புதிய எஸ்.யு.வி. ஒன்று இணைந்து இருக்கிறது. எனினும் புதிய எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.

    ஃபோக்ஸ்வேகன் டி ராக்

    புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 205 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொணடிருக்கிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.4 நொடிகளில் எட்டிவிடும்.
    ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.



    ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. முதல் முறையாக அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் புதிய காரில் பி.எஸ். 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடலில் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட்

    முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு பார்க்க ஹனிகொம்ப் மெஷ் போன்று காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், புதிதாக எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் பின்புற மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய அலாய் வீல்களும் வழங்கப்படலாம். 
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 எக்ஸ்1 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. இந்தியாவில் 2020 எக்ஸ்1 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடல்: ஸ்போர்ட் எக்ஸ், எக்ஸ்லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 1 ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 42.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் எக்ஸ் லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் ஸ்போர்ட் எக்ஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் டாப் எண்ட் ஸ்போர்ட் எக்ஸ் மாடல் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1

    அதன்படி பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடலில் பி.எஸ். 6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. மேம்பட்ட 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 192 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம்., 280 என்.எம். டார்க் @ 1350 - 4600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    இதன் டீசல் யூனிட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 400 என்.எம். டார்க் @ 1700-2500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது. டீசல் என்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடல்: ஆல்பைன் வைட், பிளாக், பிளாக் சஃபையர், கிளேசியர் வைட், மினரல் வைட், மினரல் கிரே, ஸ்பார்க்ளிங் பிரவுன், ஸ்பார்க்ளிங் ஸ்டாம், மெடிட்டரேனியன் புளூ, சன்செட் ஆரஞ்சு, ஜூகாரோ பெய்க் மற்றும் ஸ்டாம் பே மெட்டாலிக் என 12 நிறங்களில் கிடைக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரை வாங்க 20 நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 விட்டாரா பிரெஸ்ஸா காரினை வாங்க 20 நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் இந்த எஸ்.யு.வி. மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா பார்க்க பி.எஸ்.4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் எல்.இ.டி. லைட்டிங், புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    விட்டாரா பிரெஸ்ஸா பி.எஸ்.6

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் K சீரிஸ் யூனிட் ஆகும். இதே என்ஜின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் டாப் எண்ட் மாடல்களில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய பெட்ரோல் என்ஜின் தவிர மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் ஸ்டீரிங் வீல் லெதர் ஸ்டிராப் செய்யப்பட்டு, ஆட்டோ டிம்மிங் IRVMகள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவி்ட்டி கொண்டிருக்கிறது.
    ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஜீப் நிறுவனம் இந்தியாவில் புதிய ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் ராங்ளர் ரூபிகான் மாடலின் துவக்க விலை ரூ. 64.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஜீப் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வருவதாக ஜீப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜீப் ராங்ளர் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான விநியோகம் மார்ச் 15-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.

    ஜீப் ராங்ளர் ரூபிகான்

    உலக சந்தையில் முன்னணி ஆஃப் ரோடர் மாடல்களில் ஒன்றாக ஜீப் ராங்ளர் ரூபிகான் இருக்கிறது. ஜீப் ராங்ளர் ரூபிகான் மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    சக்திவாய்ந்த என்ஜின் தவிர ஜீப் ராங்ளர் ரூபிகான் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் ஏர்பேக், பார்க் அசிஸ்ட் சிஸ்டம், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டிரெயிலர் ஸ்வே கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் கியா கார்னிவல் ஆடம்பர எம்.பி.வி. கார் விற்பனை பிப்ரவரி மாதத்தில் அதிகரித்து இருக்கிறது.



    கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,620 கார்னிவல் எம்.பி.வி. கார்களை விற்றுள்ளது. 

    இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா கார்னிவல் விலை ரூ. 24.95 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கியா கார்னிவல் கார் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது என மூன்று வித இருக்கை அமைப்புகளில் பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமோசின் என மூன்று ட்ரிம் மற்றும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    கியா கார்னிவல்

    கார்னிவல் கார் மட்டுமின்றி செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலையும் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் செல்டோஸ் கார் மொத்தம் 14,024 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இரு கார்கள் தவிர கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. காரினை சொனெட் எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் 2020 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட இருக்கிறது. 

    இந்த கார் இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. 
    ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய கிரெட்டா காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது.



    ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய கிரெட்டா எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய கிரெட்டா காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களை 2020 கிரெட்டா எஸ்.யு.வி. கொண்டிருக்கிறது. 

    2020 ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவில் மார்ச் 17-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதற்கான விநியோகம் மார்ச் 17 முதல் துவங்கும் என தெரிகிறது. வெளியானதும் புதிய கிரெட்டா எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் கியா செல்டோஸ், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள் மற்றும் பத்து வித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவைதவிர புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இதே என்ஜின்கள் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் 115 பி.எஸ். பவர், 1.4 லிட்டர் டி -ஜி.டி.ஐ. மோட்டார் 140 பி.எஸ். செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய கிரெட்டா மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக், சி.வி.டி. மற்றும் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2020 கிரெட்டா கார்: இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ்.(ஒ) என ஐந்து முக்கிய வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. 
    ஃபோஸ்வேகன் நிறுவனத்தின் புத்தம் புதிய போலோ செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடங்களை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த தொடர்ச்சியாக, தற்சமயம் போலோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய போலோ கார் விற்பனை முதற்கட்டமாக ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது.

    புதிய போலோ மாடல் 4483 எம்.எம். நீளமாகவும், 1484 எம்.எம். உயரமாகவும், முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 170 எம்.எம். அளவில் இருக்கிறது. தோற்றத்தில் புதிய போலோ செடான் மாடல் அகலமான கிரில், கூர்மையான ஹெட்லேம்ப்கள் மற்றும் குரோம் பிட்களை கொண்டிருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் போலோ

    இதன் பின்புற வடிவமைப்பு எளிமையாக காட்சியளிக்கிறது. இதுதவிர கதவுகள், கிளாஸ்ஹவுஸ் மற்றும் ரூஃப் உள்ளிட்டவை ஸ்கோடா ரேபிட் போன்றே தெரிகிறது. உள்புறம் மல்டி-லேயர் டேஷ்போர்டு, இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய போலோ செடான் மாடல் - 90 பி.ஹெச்.பி. அல்லது 110 பி.ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 1.6 லிட்டர் எம்.பி.ஐ. பெட்ரோல் மற்றும் 125 பி.ஹெச்.பி. பவர் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    இதன் 1.6 லிட்டர் வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஆக்டேவியா ஆர்.எஸ். 245 காருக்கான முன்பதிவுகளை ஆன்லைன் தளத்தில் நடைபெற இருக்கிறது.



    ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்.எஸ். 245 காருக்கான முன்பதிவினை மார்ச் 1-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஸ்கோடா ஆக்டேவியா 245 கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல் வெறும் 200 யூனிட்களே முன்பதிவு செய்ய முடியும். 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 காரின் விலை ரூ. 36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல்- ரேலி கிரீன், ரேஸ் புளூ, கொரிடா ரெட், மேஜிக் பிளாக் மற்றும் கேண்டி வைட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. ஆர்.எஸ். 245 மாடலில் 242 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இதன் விலை ஸ்கோடா ஆக்டேவியா எல் அண்ட் கே வேரியண்ட்டை விட ரூ. 13 லட்சம் வரை அதிகமாகி உள்ளது.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் ஆடி மாடல்களில் உள்ளதை போன்ற விர்ச்சுவல் காக்பிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.
    ×