என் மலர்
கார்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டார் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் அதிக வரவேற்பு பெற்ற ஹெக்டார் எஸ்யுவி விற்பனையிலும் அசத்தியது. எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் எஸ்யுவி பெட்ரோல் மாடலை பிஎஸ்6 தரத்துக்கு ஏற்கனவே அப்டேட் செய்துவிட்டது.
இந்நிலையில் எம்ஜி ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட என்ஜின் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எம்ஜி ஹெக்டார் பிஎஶ் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13.88 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுளஅளது.

பிஎஸ்6 வேரியண்ட்டிலும் 2.0 லிட்டர் ஃபியாட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168.4 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
காரின் வெளிப்புறம் டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் டூயல்டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், டைனமிக் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்புறத்தில் 10.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கிளைமேட் கண்ட்ரோல்கள், எம்ஜி நிறுவனத்தின் ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இ-சிம் எம்பெட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு எப்போதும் இணைய வசதியை வழங்குகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல்வேறு விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மற்றும் கிளோஸ்டர் மாடல்களை திட்டப்படி வெளியிட இருப்பதாக தெரிகிறது. இந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்த ஆண்டு மத்தியிலும் எம்ஜி கிளோஸ்டர் மாடல் பண்டிகை காலத்திலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.
ஏற்கனவே இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
எம்ஜி குளோஸ்டர் காரில் எம்.ஜி. பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடல் காரை 2009 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த எஸ்யுவி அதிக விற்பனையாக துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு எஸ்யுவி மாடல்கள் இந்திய சந்தையில் களமிங்கி வருகின்றன.
இதனால் ஃபார்ச்சூனர் மாடல் சற்றே பழையதாகி இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா நிறுவன மூத்த துணை தலைவர் நவீன் சோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புதிய லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடல் பிஎஸ்6 வேரியண்ட்டை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
தற்சமயம் இந்த மாடலின் விலை ரூ. 28.18 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் கார் விற்பனையகங்களுக்கு வந்தடைந்தது. விரைவில் இதன் விநியோகம் துவங்கப்பட இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் 245 கார் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் குவக்க விலை ரூ. 36 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் 242 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் மற்றும் பேடிள் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் ஆடி மாடல்களில் உள்ளதை போன்ற விர்ச்சுவல் காக்பிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல்- ரேலி கிரீன், ரேஸ் புளூ, கொரிடா ரெட், மேஜிக் பிளாக் மற்றும் கேண்டி வைட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் காரை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடலின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
புதிய ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடலின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இவை முந்தைய மாடல்களில் இருந்ததை விட தற்சமயம் மெல்லியதாக இருக்கின்றன. இதன் பூட்-லிப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள புதிய லைட் பார் மேம்பட்ட டெயில் லைட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காரின் பக்கவாட்டு பகுதியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஐ20 மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், நீட் ஃபார் ஸ்பீடு மற்றும் ஃபோர்ஸா போன்ற வீடியோ கேம் சீரிஸ்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவற்றில் உள்ள கிரீஸ் கோடுகள் காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.
காரின் உள்புறம் மேம்பட்ட புதிய டேஷ்போர்டு டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு ஏர்-கான் வென்ட்களையும் இணைக்க கிடைமட்ட கோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10.25 அங்குல அளவில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.
புதிய ஐ20 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இதுதவிர 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. ஹோண்டா பிராண்டிங்கில் வெளியாக இருக்கும் வாகனங்கள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச இவி பிளாட்ஃபார்மில் உருவாக இருக்கிறது.
ஜெனரல் மோட்டார்ஸ் இவி பிளாட்ஃபார்ம் வாகனங்களில் அல்டியம் ரக பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய வாகனத்தின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்கள் ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்குகிறது. புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்கள் இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்படுகிறது.

இவற்றுக்கான பணிகள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வட அமெரிக்க ஆலையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விற்பனை 2024 ஆம் ஆணடு துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக இவை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இருநிறுவனங்கள் சார்பில் உருவாகும் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு வாக்கில் ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து பேட்டரி மாட்யூல் உருவாக்கும் பணிகளை துவங்கின.
எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஜெனர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆன்ஸ்டார் பாதுகாப்பு சேவைகளை ஒருங்கிணைக்கிறது. இதுதவிர ஜெனர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
கியா செல்டோஸ் மாடல் கார் விற்பனை ஹூண்டாயின் புதிய கிரெட்டா மாடலை விட அதிகமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை கியா செல்டோஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்று இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கியா செல்டோஸ் 7466 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டாவை விட அதிகம் ஆகும்.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் கிரெட்டா மார்ச் மாதத்தில் 6706 யூனிட்கள் விற்பனையானது. இதன் மூலம் சிறு இடைவெளிக்கு பின் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா இடம்பிடித்துள்ளது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா 7 இன்ச் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் புளூ லின்க் ஸ்மார்ட்வாட்ச் ஆப், பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டெட் சீட்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ்.6 எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் காரின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் காரின் டீசரை மாருதி சுசுகி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
முன்னதாக பி.எஸ்.6 எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் டீசல் வெர்ஷன் விற்பனை நிறுத்தப்பட இருக்கும் நிலையில், பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய எஸ் கிராஸ் மாடலில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் எஸ்.ஹெச்.வி.எஸ். மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் எர்டிகா, எக்ஸ்.எல்.6 மற்றும் சியாஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இது 103 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம்., 138 என்.எம். டார்க் @ 4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய பி.எஸ்.6 மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் கேப்டூர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் பாதுகாப்பு தர சோதனையில் அசத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஹோண்டா சிட்டி 2020மாடல் ASEAN NCAP தர சோதனையில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. ஹோண்டா சிட்டி தாய்லாந்திற்கான மாடலின் பயணிப்போர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.
தாய்லாந்திற்கான ஹோண்டா சிட்டி மாடலில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் சோதனை செய்யப்பட்டது. இவற்றில் ஜி ஃபோர்ஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, வெஹிகில் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், மல்டி வியூ ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சிட்டி மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முன்புறம், பக்கவாட்டு உள்ளிட்டவற்றில் சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகளில் புதிய ஹோண்டா சிட்டி நூற்றுக்கு 86.54 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் காரணமாக தாய்லாந்திற்கான ஹோண்டா சிட்டி மாடலுக்கு ஐந்து நடச்த்திர குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக மூன்று மற்றும் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு முறையே 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐந்து நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சிட்டி 2020 மாடல் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து மாடலுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் புதிய சிட்டி மாடல் நீளமாகவும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜ்களின் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடிக்கையாளர்ள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், இந்த அறிவிப்பினை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது, வாகனத்தின் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுறும் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் உள்ளிட்டவற்றை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் மார்ச் 22 முதல் மே மாதம் வரை ஸ்டாண்டர்டு வாரண்டி நிறைவுபெறும் வாடிக்கையாளர்கள் ஜூலை 31, 2020 வரை வாரண்டியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை ஸ்டாண்டர்டு வாரண்டியின் கீழ் கட்டணமின்றி சரிசெய்து கொள்ள முடியும்.
மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி நிறைவுறும் ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு மே 15 ஆம் தேதிக்குள் சென்று நீட்டிக்கப்பட்ட வாரண்டியின் கீழ் வாகனங்களை சரி செய்து கொள்ளலாம்.
ரெனால்ட் நிறுவனத்தின் நிசான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் டாடா நெக்சான் காருக்கு போட்டியாக புதிய அம்சம் பொருத்தப்படுகிறது.
ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் சன்ரூஃப் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெனால்ட் ஹெச்.பி.சி. மற்றும் நிசாசன் இ.எம்.2 காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் கிகெர் மற்றும் மேக்னைட் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரு நிறுவன மாடல்களில் சன்ரூஃப் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இறுக்கிறது. சன்ரூஃப் அம்சம் காரில் அதிக இடவசதி இருப்பது போன்ற உணர்வையும், காரினுள் அதிக காற்றோட்டம் புக வழி செய்யும்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் கார்களில் சன்ரூஃப் அம்சம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. கிகெர் மற்றும் மேக்னைட் மாடல்கள் சி.எம்.எஃப்.-ஏ பிளஸ் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடலும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய கார்களில் இருநிறுவனங்களும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், போல்டு ஷோல்டர் லைன்கள் உள்ளிட்டவை இடம்பெறலாம். இவை காருக்கு பிரம்மாண்ட தோற்றத்தை வழங்கும்.
இரு மாடல்களிலும் 1.0 லிட்டர், மூன்று சிலண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் ஹெச்.ஆர்.10 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 95 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எகிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
மார்ச் 15 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ஒஇ வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுறும் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை மாத இறுதி வரை சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை நீட்டிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தனது ஆலைகளின் உற்பத்தி பணிகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருந்தது. டாடா மோட்டார்ஸ் போன்றே பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஆலைகளின் உற்பத்தி பணிகளை நிறுத்துவதாக அறிவித்து இருந்தன.
அதன்படி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனையகங்கள், சர்வீஸ் மையங்கள், டெஸ்ட் டிரைவ் மற்றும் விநியோகம் என அனைத்து பணிகளையும் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விற்பனை மேலும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், புதிய வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் செலுத்துவதை குறைத்து கொண்டுள்ளனர்.






