என் மலர்
கார்
இந்திய சந்தையில் வாகனங்களை விற்பனை செய்வது மற்றும் சர்வீஸ் முன்பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வால்வோ நிறுவனம் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது.
ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது வானங்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும், சர்வீஸ் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது.
புதிய திட்டத்தை வால்வோ நிறுவனம் வால்வோ காண்டாக்ட்லெஸ் புரோகிராம் என அழைக்கிறது. புதிய திட்டத்தில் வால்வோ வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்க விரும்புவோர் பயன்பெற முடியும். இதில் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்துடன் புதிய வால்வோ கார் வாங்குவோரும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான டெஸ்ட் டிரைவ் வழங்கப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் நிதி சேவைகள் டிஜிட்டல் முறையிலும், ஆன்லைனில் ஆவனங்களை சரிபார்ப்பது என வாகனத்தை முழுமையாக ஆன்லைன் மூலமாகவே வாங்க முடியும்.
தற்போதைய கொரோனா பாதிப்பையொட்டி வால்வோ நிறுவன விற்பனையகங்கள் முழுக்க பாதுகாப்பானதாக மாற்ற கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. இத்துடன் கார்களை சுத்தம் செய்ய வால்வோ நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனம் ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளத்தை துவங்கியுள்ளது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் (எஃப்சிஏ) நிறுவனம் தனது ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய தளத்தை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் புக் மை ஜீப் எனும் தளத்திற்கு சென்று வாங்க விரும்பும் எஸ்யுவி மாடலை மூன்றே வழிமுறைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
தற்சமயம் நாடுமுழுக்க கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய ஆன்லைன் தளத்தை எஃப்சிஏ நிறுவனம் துவங்கி உள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நேரடியாக விற்பனையகம் செல்லாமல் புதிய வாகனத்தை தேர்வு செய்ய முடியும்.

ஜீப் இந்தியா வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ள புக் மை ஜீப் தளம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜீப் மாடலின் சரியான வேரியண்ட், பவர்டிரெயின் ஆப்ஷன், நிறம் மற்றும் இதர விவரங்களை தேர்வு செய்யலாம். வாகனம் கான்ஃபிகர் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
ஆன்லைன் முன்பதிவு நிறைவுற்றதும் புக் மை ஜீப் தளம் வாடிக்கையாளருக்கென பிரத்யேக ஐடியை உருவாக்கி, அதனை வாடிக்கையாளர் வசிக்கும் விற்பனையாளருடன் இணைத்து விடும். பின் விற்பனை மைய அதிகாரி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு டெஸ்ட் டிரைவ் ஏற்பாடு செய்யப்படும்.
டொயோட்டா நிறுவனத்தின் மேம்பட்ட யாரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டொயோடா நிறுவனம் வாடகைக் கார் உபயோகிப்பாளருக்கென மேம்படுத்தப்பட்ட யாரிஸ் மாடலை வாடகைக் கார் பிரிவினருக்கானதாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக வேகக் கட்டுப்பாடு செயல்பாட்டை கொண்ட கருவி பொருத்திப்படுகிறது.
டொயோட்டா யாரிஸ் செடான மாடல் மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8.76 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், பவர் அட்ஜெஸ்டபிள் மிரர், அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், ரிமோட் லாக்கிங், பவர் விண்டோ, பின் இருக்கை பயணிகள் கைகளை வைக்க வசதியான ஆர்ம் ரெஸ்ட் மற்றும் 3 ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கிறது.

இது 107 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் கிடைக்கிறது. வாடகைக் கார் உரிமையாளர்களுக்கென சில சுலப நிதி சலுகைத் திட்டங்களையும் இந்நிறுவனம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டொயோடா மாடல்களில் முன்னர் டீசல் மாடல் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது சந்தையில் பெரும் வரவேற்பை பெறவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ளது விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா கார் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா காரை வாங்க இந்தியாவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இரண்டாம் தலைமுறை கிரெட்டா காரை வாங்க 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து தற்சமயம் கிரெட்டா முன்பதிவு 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்திலும் கிரெட்டா காருக்கு இத்தனை வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என ஹூண்டாய் மோட்டார் நிறுவன விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய தலைமுறை கிரெட்டா காருக்கான விநியோகம் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் துவங்கும் என தருன் கார்க் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்தியா முழுக்க பல்வேறு விற்பனையாளர்களுக்கு 6703 கிரெட்டா யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்பட்ட மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 13.20 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் துவங்கும் என கூறப்படுகிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் W5, W7, W9 மற்றும் W11(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் W11(O) வேரியண்ட் விலை ரூ. 17.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாகனங்களின் ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது. ஆன்லைன் கார் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்க முடியும்.
கார் வாங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடலை தேர்வு செய்வது, வாகனத்தை முன்பதிவு செய்வது மற்றும் அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் வாங்கும் கார்களை வீட்டிற்கே விநியோகம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளருக்கு கார் விநியோகம் செய்யும் முன் விற்பனையாளரின் பணியாளர்கள் காரை முழுமையாக சுத்தம் செய்து வழங்குவர்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 137 விற்பனை மற்றும் 116 சரீவாஸ் டச் பாயிண்ட்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் இயக்க முடியும்.
இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், பணிகளை துவங்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி ராக் எஸ்யுவி மாடல்களின் விநியோகத்தை துவங்க இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் பிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கான முன்பதிவுகள் ரூ. 5 ஆயிரம் தொகையில் மேற்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய காரை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
புதிய ஸ்கார்பியோ மாடல் எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் புதிய கிரில், க்ரோம் இன்சர்ட்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் மேம்பட்ட டெயில்கேட், க்ரோம் அப்லிக், மெல்லிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் பியல் வைட், நபோளி பிளாக், மோல்டன் ரெட் மற்றும் சாட் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 பேஸ் மாடலின் விலை ரூ. 11.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது பிஎஸ்6 எக்ஸ்யுவி500 மாடல் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள போதும், இவற்றின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய பிஎஸ்6 ரக எஸ்யுவி மாடலின் முழு விவரங்களும் மஹிந்திரா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், இதன் விற்பனை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் துவங்கும் என தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் பலமுறை இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 மாடலின் டீசர் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட என்ஜினுடன் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.

தற்போதைய பிஎஸ்4 மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 180 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 மாடலிலும் இதே என்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் சங்யொங் ரெக்ஸ்டன் மாடலுக்கு இணையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய அலாய் வீல் வடிவமைப்பு சோதனை செய்யப்பட்ட மாடல்களில் பலமுறை காணப்பட்டது.
லெக்சஸ் நிறுவனத்தின் ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
லெக்சஸ் நிறுவனம் பிஎஸ் பிளாக் லைன் காரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மொத்தம் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்படும் என லெக்சஸ் அறிவித்து இருக்கிறது. லெக்சஸ் ஜிஎஸ் லைன் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும் முன் வெளியாகும் கிடைசி எடிஷன் காராக இது இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் லெக்சஸ் ஜிஎஸ்350எஃப் ஸ்போர்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ் லைன் பிளாக் எடிஷன் ரியர்-வீல் டிரைவ் கொண்டிருப்பதோடு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. விங் மிரர் கேப்கள், கிரில் இன்சர்ட்கள் மற்றும் ஸ்பாயிலர் உள்ளிட்டவை கிளாஸ் வைட் நிறத்திலும் சக்கரங்கள் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கின்றன.

காரின் உள்புறம் பிளாக் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ட்ரிம்களும், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஆம்ரெஸ்ட் உள்ளிட்டவை அல்கான்ட்ரா லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் காரின் உள்புறங்களில் அதிகளவு கஸ்டமைசேஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புதிய லெக்சஸ் ஜிஎஸ் பிளாக் எடிஷன் மாடலில் 3.5 லிட்டர் வி6 மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை இந்த ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் கார் ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எம்ஜி குலோஸ்டர் எஸ்யுவி மாடல் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட இருக்கிறது. இதனை எம்ஜி மோட்டார் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
புதிய எம்ஜி குளோஸ்டர் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. தற்சமயம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய எஸ்யுவி திட்டமிட்டப்படி வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி குளோஸ்டர் மாடல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நான்காவது வாகனம் ஆகும். முன்னதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டார், இசட்எஸ் இவி மற்றும் ஹெக்டார் பிளஸ் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டு இருக்கிறது. இவற்றில் ஹெக்டார் பிளஸ் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.
புதிய எம்.ஜி. குளோஸ்டர் கார் எம்.ஜி. நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது
எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 220 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி கிளாஸ் செடான் மாடலில் புதிய என்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சத்தமில்லாமல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட சி200 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ஜின் சி200 பிரைம் மற்றும் சி200 புரோகிரெசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 40.90 லட்சம் மற்றும் ரூ. 46.54 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் மோட்டார் முந்தைய 1.5 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ஏஎம்ஜி இல்லாத மாடல் மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை ரூ. 4.90 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 51.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி200 மாடலில் 1991சிசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி திறனை 5800 முதல் 6100 ஆர்பிஎம் செயல்திறனில் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 7.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 239 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
புதிய மாடலில் பெட்ரோல் என்ஜின் தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இதன் தோற்றம் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.






