என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மேம்பட்ட டொயோட்டா யாரிஸ் விரைவில் அறிமுகம்
Byமாலை மலர்3 May 2020 6:15 AM GMT (Updated: 2 May 2020 11:53 AM GMT)
டொயோட்டா நிறுவனத்தின் மேம்பட்ட யாரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டொயோடா நிறுவனம் வாடகைக் கார் உபயோகிப்பாளருக்கென மேம்படுத்தப்பட்ட யாரிஸ் மாடலை வாடகைக் கார் பிரிவினருக்கானதாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக வேகக் கட்டுப்பாடு செயல்பாட்டை கொண்ட கருவி பொருத்திப்படுகிறது.
டொயோட்டா யாரிஸ் செடான மாடல் மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8.76 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், பவர் அட்ஜெஸ்டபிள் மிரர், அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், ரிமோட் லாக்கிங், பவர் விண்டோ, பின் இருக்கை பயணிகள் கைகளை வைக்க வசதியான ஆர்ம் ரெஸ்ட் மற்றும் 3 ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கிறது.
இது 107 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் கிடைக்கிறது. வாடகைக் கார் உரிமையாளர்களுக்கென சில சுலப நிதி சலுகைத் திட்டங்களையும் இந்நிறுவனம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டொயோடா மாடல்களில் முன்னர் டீசல் மாடல் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது சந்தையில் பெரும் வரவேற்பை பெறவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ளது விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X