என் மலர்tooltip icon

    பைக்

    • ஹோண்டா நிறுவனம் விரைவில் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இது யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வேரியோ 160 என்று அழைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ளதை போன்றே ஹோண்டா வேரியோ 160 மாடலும் ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கிரேசியா மாடலை போன்று காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஷார்ப் லைன்கள் மற்றும் கிரீஸ்கள் உள்ளன. இந்த மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர், 13.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹோண்டா வேரியோ மாடலில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏ.பி.எஸ்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், 18 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் வேறு எந்த மாடலையும் ஹோண்டா விற்பனை செய்யாத நிலையில், வேரியோ மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் புதிய G சீரிஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இது அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் தனது புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.


    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மற்றும் கே.டி.எம். RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தது.
    • இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மே 2022 விற்பனையில் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மே மாத விற்பனை அமோகமாக நடைபெற்று இருக்கிறது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகம் வர வலியுறுத்தி இருப்பதை அடுத்து தனிப்பட்ட போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.

    அந்த வகையில், மே 2022 மாதத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளர்களின் வாகன விற்பனை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மே 2022 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 466 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 561 யூனிட்களை மட்டும் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை மே 2022 மாதத்தில் 59 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 60 ஆயிரத்து 342 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மே 2022 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 844 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் வெறும் 38 ஆயிரத்து 763 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 482 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் மொத்தத்தில் 52 ஆயிரத்து 084 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 மே மாதத்தில் 53 ஆயிரத்து 525 யூனிட்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 073 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மே மாதம் 60 ஆயிரத்து 518 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி RR 310 மாடல் பந்தய களத்தில் புது சாதனையை படைத்து இருக்கிறது. இத்தகைய சாதனையை படைத்த முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.


    டி.வி.எஸ். ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்றவர்கள் அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக் கொண்டு பந்தய களத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ரேசிங் பைக் செபாங் சர்வதேச சர்கியூட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மலேசியாவில் உள்ள இந்த பந்தய களத்தில் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடல் மணிக்கு 201.2 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அந்த வகையில் இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை அபாச்சி RR 310 பெற்று இருக்கிறது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு, டி.வி.எஸ். ரேசிங் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கியது,

     டி.வி.எஸ். அபாச்சி RR310, ரேஸ் பைக்

    நான்கு கட்டங்களில் நடைபெறும் ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரில் 16 பேர் பங்கேற்கின்றனர். அபாச்சி RR 310 ஆசியா OMC ரேஸ் பைக்கில் 312சிசி, DOHC, 4 வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான அபாச்சி RR 310 மாடலை விட 38 சதவீதம் கூடுதல் திறன் வெளிப்படுத்துகிறது. 

    இதுதவிர டி.வி.எஸ். அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக்கில் குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் பாடிவொர்க், வீல்ஸ் மற்றும் சப்-ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகன வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே புதிய துணை பிராண்டை விடா பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி விடா பிராண்டிங்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 

    முந்தைய தகவலின் படி ஜூலை 1, 2022 அன்று விடா பிராண்டிங்கில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விடா பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

     ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம்

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் செமி கண்டக்டர் குறைபாடு காரணமாகவே எலெக்ட்ரிக் இருசக்கர வாகன வெளியீடு தாமதம் ஆகி இருக்கிறது. தற்போதைய அறிவிப்பை சேர்த்து இதுவரை இரண்டு முறை ஹீரோ எலெக்ட்ரிக் வாகன வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முதன் முதலில் ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு பின், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    ஹீரோவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம், பெரும்பாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இருக்கும் என கூறப்படுகிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

    டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     டி.வி.எஸ். ஐகியூப்

    உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

    டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவிலும் அதன்பின் 9 நகரங்களில் இவை அமைக்கப்படுகிறது.


    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் விரைவில் பேட்டரி மாற்றும் மையங்களை (battery swapping station) கட்டமைக்க இருக்கிறது. இதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேட்டரி மாற்றும் மையங்கள் கட்டமைக்கப்பட உள்ளன. 

    பல கட்டங்களாக நிறுவப்பட இருக்கும் பேட்டரி மாற்றும் மையங்கள் முதலில் பெங்களூருவிலும், அதன்பின் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. ஸ்கூட்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பவுன்ஸ் ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அருகாமையில் உள்ள பேட்டரி மாற்றும் மையத்தை அறிந்து கொள்ளலாம். 

     பவுன்ஸ் இன்பினிட்டி

    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் E1-ஐ இரண்டு வேரியண்ட்களில் வழங்குகிறது. அதாவது ஒரு வேரியண்டில் பேட்டரியும் மற்றொரு வேரியண்டில் பேட்டரி இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாத ஸ்கூட்டர்களை வாங்கினால், பேட்டரி மாற்றும் மையங்களில் உள்ள பேட்டரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    இந்தியாவில் பவுன்ஸ் இன்பினிட்டி E1 மாடலை பேட்டரி இல்லாமல் வாங்கும் போது ரூ. 56 ஆயிரத்து 999 என்றும், பேட்டரியுடன் சேர்த்து வாங்கும் போது ரூ. 79 ஆயிரத்து 999 வரை செலுத்த வேண்டும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டெஸ்ட் ரைடு பற்றி புது தகவல் தெரிவித்து உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது.


    எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான சிம்பில் எனர்ஜி தனது முதல் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- சிம்பில் ஒன் டெஸ்ட் ரைடுகள் ஜூலை 20 ஆம் தேதி நாட்டின் 13 நகரங்களில் துவங்கும் என தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக டெஸ்ட் ரைடுகள் பெங்களூருவிலும் அதன் பின் சென்னை, ஐதராபாத், மும்பை, பூனே, பனாஜி மற்றும் இதர நகரங்களில் துவங்குகிறது.

    டெஸ்ட் ரைடுகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கின்றன. முன்னதாக சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தாமதமாக துவங்கும் என சிம்பில் எனர்ஜி அறிவித்து இருந்தது. அந்த வகையில், டெஸ்ட் ரைடுகளை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடல்களின் வினியோகம் துவங்கும். 

     சிம்பில் ஒன்

    இந்தியாவில் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் லாங் ரேன்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 999 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ் நாட்டின் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ஆலை தமிழ் நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 12.5 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

    தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணித்து கொண்டிருக்கும் போது பாதி வழியில் உடைந்து விட்டதாக மற்றொரு வாடிக்கையாளர் புதிதாக குற்றம்சாட்டி உள்ளார்.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஓடும் போதே பாதி வழியில் உடைந்து விழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது இதே பிரச்சினை குறித்து மற்றொரு வாடிக்கையாளரும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

    வழக்கறிஞராக இருக்கும் பிரியண்கா பரத்வாஜ் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருக்கும் போது, ஸ்பீடு பிரேக்கர் ஒன்றின் மீது ஏறும் போது திடீரென உடைந்து விழுந்து என குற்றம்சாட்டி இருக்கிறார். இதோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புற டையர் உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்களையும் பிரியண்கா தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    “எனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றும் போது தானாக உடைந்து விட்டது. உடனே ஏதோ முறிந்தது போன்ற சத்தமும் கேட்டது. இதில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால் எனது ஸ்கூட்டருக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருக்கிறது, தயவு செய்து இதனை விரைந்து சரி செய்து தாருங்கள். நன்றி,” என பிரியண்கா பரத்வாஜ் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். 

    இவரது ட்விட்டர் பதிவை பார்த்த பலர் ஓலா ஸ்கூட்டர் மூலம் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தெரிவித்தனர். மேலும் பலர் ஓலா ஸ்கூட்டர்களின் உற்பத்தி தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டினர். பிரியண்கா பரத்வாஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓலா எலெக்ட்ரிக், “இந்த பிரச்சினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நாங்கள் விரைவில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என தெரிவித்துள்ளது.
    கீவே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இதில் எல்.இ.டி. லைட்டிங் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதுவரவு நிறுவனம் கீவே புதிதாக சிக்ஸ்டீஸ் 300i பெயரில் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் ஆகும். 

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடல் அதிநவீன-ரெட்ரோ பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்கள் வளைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங் மற்றும் எல்.சி.டி. போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 278.2சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கீவே சிக்ஸ்டீஸ் 300i

    இந்த என்ஜின் 18.7 பி.ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் விஸ்டி 300 மேக்சி ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனிற்கு கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ரியர் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 230mm ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது.

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பெனலி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.  
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல் ஓடிக் கொண்டு இருக்கும் போதே பாதி வழியில் உடைந்து விழு சம்பவங்கள் அரங்கேறி இருகிறது.


    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக ஓலா ஸ்கூட்டரில் பேட்டரி தீப்பிடித்து எரிவது மற்றும் வாடிக்கையாளர்களை விபத்தில் சிக்க வைத்தது என பல்வேறு பிரச்சினைகளில் ஓலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது. இதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உறுதித் தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. 

    வாடிக்கையாளர் ஒருவர் ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென முன்புற சஸ்பென்ஷன் யூனிட் இயங்காமல் போனது என குற்றம் சாட்டி உள்ளார். இதை அடுத்து ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் வாடிக்கையாளரான ஸ்ரீநாத் மேனன் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என ட்விட்டரில் தெரிவித்தார். 

     ஓலா  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இதை அடுத்து மற்றொரு பயனர், தனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது என தெரிவித்து இருக்கிறார். இவரின் ட்விட்டர் பதிவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்த போது, சஸ்பென்ஷன் வேலை செய்யாமல் போனதை அடுத்து சுவரில் மோதியது என குறிப்பிட்டுள்ளார். 

    இத்துடன் சஸ்பென்ஷன் இயங்காமல் போனதை தெரிவிக்கும் புகைப்படங்களை ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். ஓலா ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போனது என குற்றம்சாட்டி இருந்தார். அதன்படி முன்புற சஸ்பென்ஷன் இயங்காததால், முன்னே சென்று கொண்டு இருந்த வாகனத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோதியது. 

    இதுவரை மூன்று முறை ஓலா ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போனது பற்றி ஓலா நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 
    கிரெட்டா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    குஜராத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான கிரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடல் முற்றிலும் வித்தியாசமான பேமண்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் பயனர்கள் பேட்டரி மற்றும் சார்ஜரை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. 

    கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I ஸ்கூட்டர் பேஸ் மாடல் விலை ரூ. 41 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் வரும் சார்ஜர் தொழில்நுட்பம் ஸ்கூட்டரை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். மேலும் மூன்று மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறி விடும். 

     கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I

    இந்த ஸ்கூட்டர் BLDC மோட்டார் மற்றும் 48-60 வோல்ட் லி-அயன் பேட்டரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. பயனர்கள் 60 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றின் விலை ரூ. 17 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 31 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர் விருப்பப்படி சார்ஜர்களின் விலை ரூ. 3 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I மாடல்களில் 3-ஸ்பீடு டிரைவ் மோட்களில் கிடைக்கிறது. இத்துடன் ரிவர்ஸ் மோட், எல்.இ.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, கீலெஸ் ஸ்டார்ட், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் கண்ட்ரோலர், ஹைவே லைட்கள், சைடு இண்டிகேட்டர் பஸர், எல்.இ.டி. மீட்டர், இக்னிஷன்/சைல்டு லாக், பார்க் மோட், பிக்சட் ரிவர்ஸ் ஸ்பீடு மோட், மேம்பட்ட செல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ×