search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hero Splendor"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
    • இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புது அறிவிப்பின் படி இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை அதிகரிக்க இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் சந்தைக்கு ஏற்ப வேறுபடும்.


    தொடர்ச்சியாக செலவீனங்கள் அதிகரித்து வருவது மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு தவிர வாகனங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலை யூரோ 5 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்ற அப்டேட்கள் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 4V மாடலின் இந்திய வேரியண்டிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலென்டர் விற்பனையில் உலக சாதனை படைத்து இருக்கிறது. #heromoto



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலென்டர் மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறது. 

    ஹீரோ ஸ்பிலென்டர் ஒரே மாதத்தில் சுமார் 7.69 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் ஒரே மாதத்தில் 7.5 லட்சம் விற்பனையை கடந்த முதல் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    உலகளவில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் பெரிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் சுமார் 46% ஹீரோ மோட்டோகார்ப் மாடல்கள் ஆகும்.



    உலகளவில் இந்திய சந்தை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஹோன்டா, சுசுகி மோட்டார்சைக்கிள் மற்றும் யமஹா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிக முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களை எடுத்துக் கொண்டால், ஹீரோ மாடல் நிச்சயம் முன்னணியில் இருக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் ஏழு லட்சம் விற்பனை மைல்கல்லை அந்நிறுவனம் ஐந்தாவது முறையாக கடந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 42 லட்சம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

    மேலும் பண்டிகை காலத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என ஹூரோ மோட்டோகார்ப் எதிர்பார்க்கிறது. ஸ்பிலென்டர் தவிர, ஹீரோ பேஷன் மோட்டார்சைக்கிள் மாடல்களும் விற்பனையில் வளர்ச்சி பெற்று வருகிறது. இத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா அபார வளர்ச்சி பெற்று, இந்திய சந்தையில் முன்னணி இடத்தை பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HondaActiva
    இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஜூன் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஹோன்டா நிறுவனம் மட்டும் 81% பங்குகளை பெற்றிருக்கிறது.

    அந்நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச வளர்ச்சி பெற்று ஹோன்டா நிறுவன ஸ்கூட்டர்கள் சந்தையில் 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த காலாண்டில் மட்டும் ஹோன்டா நிறுவனம் 9,04,647 ஆக்டிவா மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. இதே காலாண்டில் முன்னதாக இந்தியாவில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருந்த ஹீரோ ஸ்ப்லென்டர் 8,24,999 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மோட்டார்சைக்கிள்களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவா தொடர்ந்து இந்தியாவில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இதே காலாண்டில் அதிகம் விற்பனையாகியிருக்கும் ஸ்கூட்டர், சுமார் 9 லட்சம் யூனிட்களை கடந்த ஒற்றை இருசக்கர வாகனமாக இருக்கிறது. மேலும் ஆக்டிவா மற்றும் ஸ்ப்லென்டர் யூனிட்களிடையே குறைந்த இடைவெளியாக பதிவாகியுள்ளது.


    முன்னதாக செப்டம்பர் 2017 காலாண்டில் 9,51,186 ஆக்டிவா யூனிட்கள் விற்பனையான நிலையில் 7,13,182 ஸ்ப்லென்டர் யூனிட்களே விற்பனையாகி இருந்தது. மே 2016-ம் ஆண்டு ஸ்ப்லென்டர் மாடலை பின்னுக்குத் தள்ளி ஹோன்டா ஆக்டிவா இந்திய சந்தையில் முதலிடத்தை பிடித்தது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் முதலிடத்தை ஹோன்டா நிறுவனம் பிடித்தது.

    "ஒரே காலாண்டில் சுமார் 18 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதே காலாண்டில் ஆக்டிவா மட்டும் 40% வேகமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இது ஒட்டுமொத்த சந்தையை விட வேகமானது," என ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் வை.எஸ். குலேரியா தெரிவித்திருக்கிறார்.  #HondaActiva
    ×