search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • கிராண்ட் செரோக்கி மாடலில் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் செரோக்கி விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை தற்போது ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் கிராண்ட் செரோக்கி விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    கிராண்ட் செரோக்கி மாடலில் 7-பாக்ஸ் முன்புற கிரில், கிளாம்ஷெல் பொனெட், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 5-சீட் எஸ்யுவி-யாக கிடைக்கிறது. இந்த காரில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப் உள்ளது.

     

    ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஜீப் நிறுவனம் தனது ஜீப் ராங்ளர் மற்றும் மெரிடியன் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதில் மெரிடியன் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரு. 20 ஆயிரமும், ராங்ளர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டது.

    விலை உயர்வை அடுத்து இரு கார்களின் விலை தற்போது ரூ. 30 லட்சத்து 10 ஆயிரமும், ரூ. 59 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுகிறது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் தனது கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வர இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    யூரோக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கு காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. முந்தைய விலை உயர்வு உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதால் அறிவிக்கப்பட்டது என மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருந்தது.

     

    புதிய விலை உயர்வின் படி மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மற்றும் GLA மாடல்கள் விலை ரூ. 2 லட்சம் வரை அதிகரிக்க இருக்கிறது. சி கிளாஸ், இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் மாடல்கள் விலை முறையே ரூ. 2.5 லட்சம், ரூ. 3.5 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. GLE 300d 4மேடிக், GLE 400d 4மேசிக் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் உயர்கிறது. GLS விலை ரூ. 10 லட்சம் வரை உயர்கிறது.

    டாப் எண்ட் மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்580 விலை ரூ. 12 லட்சமும், EQS 580 விலை ரூ. 4 லட்சம் வரை உயர்கிறது. முன்னதாக மெர்சிடிஸ் AMG E 53 4மேடிக் பிளஸ் கேப்ரியோலெட் மாடல் வெளியீட்டின் போது இந்திய சந்தையில் 2023 முதல் பாதியில் மட்டும் பத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்தது.

    • ஃபிஸ்கர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஃபிஸ்கர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் பியர் என அழைக்கப்படுகிறது.

    ஃபிஸ்கர் நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் பியர் எலெக்ட்ரிக் கார், அதற்கான அனுமதிகளை பெறும் கட்டத்தில் உள்ளது. இதன் விலை 29 ஆயிரத்து 999, இந்திய மதிப்பில் ரூ. 24.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய ஃபிஸ்கர் பியர் மாடல் காம்பேக்ட் கிராஸ்ஒவர் என்றும் இதன் ஸ்டைலிங் கடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஒரே மாதிரியான ஹெட்லேம்ப், ஃபிளாட் ரூஃப், வீல் ஆர்ச்கள், பின்புறத்தில் ஹை மவுண்ட் செய்யப்பட்ட டெயில் லேம்ப்கள், பிரத்யேகமாக காட்சியளிக்கும் ரியர் விண்ட்ஸ்கிரீன் உள்ளது.

     

    காரின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இள்லை. புதிய பியர் மாடலின் விசேஷ வடிவம் பல்வேறு ஏரோடைனமிக் டெஸ்டிங்கை எதிர்கொண்டிருக்கிறது. இதன் E/E ஆர்கிடெக்ச்சர், எலெக்ட்ரிக் நிர்வாகத்திற்கு பிளேடு கம்ப்யுட்டர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள பேட்டரிகள் அமெரிக்க டெஸ்ட் சைக்கிளில் 450 கிமீ ரேன்ஜ், ஐரோப்பிய டெஸ்ட் சைக்கிளில் 700 கிமீ ரேன்ஜ் வழங்கி அசத்தி உள்ளன. ஃபிஸ்கர் பியர் எலெக்ட்ரிக் காரின் டெஸ்டிங் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதன் சர்வதேச வெளியீடு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
    • இந்திய பயணத்தின் போது தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

    இருவரின் சந்திப்பின் போது குழுக்களும் உடனிருந்தனர். ஐடி மற்றும் வியாபாரம் கடந்து இருவரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பில் கேட்ஸ் இந்திய பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் காட்சிகள் உள்ளன.

     

    இன்ஸ்டாகிராம் பதிவில், "புதுமைகளை படைப்பதில் இந்தியாவின் ஆசை எப்போதும் ஆச்சரியப்படுத்தாமல் இருந்தது இல்லை. நான் ஒரு எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டினேன், அது 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) ரேன்ஜ் கொண்டிருப்பதோடு, அதிகபட்சம் நான்கு பேருடன் பயணம் செய்ய உகந்தது. போக்குவரத்து துறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மஹிந்திரா போன்ற நிறுவனங்களை பார்ப்பது ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது. " என குறிப்பிட்டுள்ளார்.

    இதே போன்று இருவரின் சந்திப்பு குறித்து ஆனந்த் மஹிந்திராவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "பில் கேட்ஸ்-ஐ மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மேலும், வரவேற்கும் வகையில் எங்களது குழுக்கள் இணைந்து பேசிய விவகாரங்களில் ஐடி மட்டுமின்றி எந்த வியாபாரத்திலும் எப்படி ஒருங்கிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதை சார்ந்தே இருந்தது. (தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது, எனக்கு அவர் கையொப்பம் இட்ட புத்தகம் இலவசமாக கிடைத்தது)," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 2020 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தியில் 40 லட்சம் யூனிட்களை எட்டியது.
    • ஊழியர், வாடிக்கையாளர்களுக்கு புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் சிறப்பு திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவிக்க இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை வாகன உற்பத்தியில் 50 லட்சம் யூனிட்கள் எனும் புதிய மைல்கல் எட்டி இருக்கிறது. 40 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ததில் இருந்து வெறும் 2.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டியிருக்கிறது. முன்னதாக 2020 வாக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து இருப்பதாக அறிவித்து இருந்தது.

    2004 ஆம் ஆண்டு பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்திருந்த டாடா மோட்டார்ஸ், அதன் பின் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையே 20 லட்சம் மற்றும் 30 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்தது. உற்பத்தி மைல்கல்கள் சந்தையில் டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முந்தைய மைல்கல்களை 5 முதல் 6 ஆண்டுகளில் எட்டி வந்தது. தற்போது 40-இல் இருந்து 50 லட்சம் வாகனங்கள் எனும் இந்த இடைவெளி 2.5 ஆண்டுகளாக மாறி இருக்கிறது.

     

    "டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று உற்பத்தியில் 50 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியிருக்கிறோம். இந்த பயணம், ஒவ்வொரு பத்து லட்சம் யூனிட்களிலும் அதிக ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. ஆனாலும், இந்தியாவை ஒவ்வொரு புதிய வாகனத்தின் மூலம் தொடர்ந்து மாற்றி வருகிறோம். ஒவ்வொரு புதுமையான எண்ணமும் இந்தியாவை வளர்க்கும் வகையிலேயே இருந்து வந்தது."

    "பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அறியப்படும் டாடா மோட்டார்ஸ், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் இன்றி இந்த சாதனை இல்லை. இந்த மைல்கல்லை எங்களின் ஊழியர்கள், வினியோகஸ்தர்கள், சேனல் பார்ட்னர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு அர்பணிக்கிறோம்," என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.

    • டொயோட்டா ஹைகிராஸ் புதிய வேரியண்ட் VX மற்றும் ZX வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் இன்னோவா ஹைகிராஸ் VX (O) என அழைக்கப்படுகிறது. இது VX மற்றும் ZX வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹைகிராஸ் VX (O) 7 சீட்டர் விலை ரூ. 26 லட்சத்து 73 ஆயிரம் என்றும் 8 சீட்டர் விலை ரூ. 26 லட்சத்து 78 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னோவா ஹைகிராஸ் VX (O) மாடலின் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    இன்னோவா ஹைகிராஸ் VX வேரியண்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் புதிய VX (O) வேரியண்டில் பானரோமிக் சன்ரூஃப், மூட் லைட்டிங், எல்இடி ஃபாக் லேம்ப்கள், 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆறு ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹைகிராஸ் VX (O) வேரியண்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதோடு, இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 75 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    • புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் முன்பதிவு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த காரின் உற்பத்தி சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி புதிய ஹூண்டாய் வெர்னா விலை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதே நாளில் இந்த காரின் சர்வதேச வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் சில விற்பனையாளர்கள் ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு மற்றும் வினியோக விவரங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

     

    கடந்த மாத துவக்கத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. புதிய மாடல் அறிமுகமாவதை ஒட்டி, ஏற்கனவே தற்போதைய வெர்னா மாடலை முன்பதிவு செய்தவர்கள் புதிய மாடல் வாங்க முன்பதிவை மாற்றி உள்ளனர்.

    விலை விவரங்கள் மார்ச் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய வெர்னா மாடலின் வினியோகம் ஒவ்வொரு வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப ஏப்ரல் மாத மத்தியில் துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் டிசைன்கள் சமீபத்தில் வெளியாகின.
    • அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய வெர்னா மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் மற்றும் ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய வெர்னா மாடலின் டிசைன் படங்கள் வெளியிடப்பட்டன.

    இதுதவிர 2023 ஹூண்டாய் வெர்னா புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன்படி புதிய கார் ரிடிசைன் செய்யப்பட்ட வெளிப்புறம், ஸ்போர்டினஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலாண்ட்ரா மற்றும் இதர ஹூண்டாய் செடான் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

     

    காரின் முன்புறம் அகலமான கிரில், பிளாக் இன்சர்ட்கள், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், செங்குத்தான எல்இடி ஃபாக் லேம்ப்கள் உள்ளன. ரிடிசைன் செய்யப்பட்ட காரின் பொனெட்டின் கீழ் நீளம் முழுக்க எல்இடி லைட்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், க்ரம் விண்டோ, பாடி நிறத்தால் ஆன டோர் ஹேண்டில்கள் உள்ளன.

    பிளாக் ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் விண்ட்ஷீல்டு, கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்கிட் பிளேட், வெர்னாவுக்கு மாற்றாக அக்செண்ட் எழுத்துகள் இடம்பெறுகின்றன. காரின் உள்புறம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், பவர்டு இருக்கைகள், ஆறு ஏர்பேக், புதிய லேயர் டேஷ்போர்டு, செண்டர் கன்சோல், ADAS போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் புதிய மாடலில் நிறுத்தப்படுகிறது. மேலும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது.

    Source: GaadiWaadi | Naver.com 

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபெண்டர் 130 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் டிஃபெண்டர் 130 மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்மோக்டு டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன.

    லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டிஃபெண்டர் 130 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிஃபெண்டர் 130 மாடல் விலை ரூ. 1 கோடியே 31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி மாடல் HSE மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில், இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 மாடல் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 394 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 296 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு வேரியண்ட்களிலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

     

    110 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய டிஃபெண்டர் 130 மாடலின் நீளம் 340mm ஆக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் இரண்டு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்மோக்டு டெயில் லைட்கள், 20 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 11.4 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, HUD சரவுண்ட் வியூ கேமரா, மெரிடியன் மியூசிக் சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், லெதர் இருக்கை மேற்கவர்கள், செண்டர் கன்சோல், 14 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், ஹீடிங் மற்றும் கூலிங் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • கிராண்ட் விட்டாரா 6 மற்றும் 7 சீட்டர் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல்.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இரண்டு 7 சீட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராண்ட் விட்டாரா மாடலின் மூன்று அடுக்கு இருக்கை கொண்ட வெர்ஷன் இந்த தசாப்தத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட் கிராண்ட் விட்டாரா XL என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    7 சீட்டர் மட்டுமின்றி மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராண்ட் விட்டாரா 6 சீட்டர் வேரியண்டிலும் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு வேரியண்ட்களும் குளோபல் C பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் TNGA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

     

    புதிய எஸ்யுவி தற்போதைய விட்டாரா மாடலை விட தோற்றத்தில் வித்தியாசப்படும் என எதிர்பார்க்கலாம். இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 25 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் இந்த மாடல் மஹிந்திரா XUV700, ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    பெரிய கிராண்ட் விட்டாரா வெளியீட்டு முன் மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கிராஸ்-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த பிரீமியம் எம்பிவி மாடல் டொயோட்டா மாருதி சுசுகி நிறுவனத்திற்கு வழங்கும் முதல் பேட்ஜ் என்ஜினியரிங் செய்யப்பட்ட மாடலாக இருக்கும்.

    இத்துடன் ADAS சார்ந்த டிரைவர் அசிஸ்டன்ஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய முதல் மாருதி சுசுகி மாடலாகவும் இது இருக்கும். இந்த மமாடல் மாட்யுலர் TNGA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இது முன்புற டிரைவ் வசதி கொண்ட எம்பிவி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹைகிராஸ் போன்றே இந்த மாடலும் 7 மற்றும் 8 சீட்டர் வெர்ஷன்களில் கிடைக்கலாம்.

    இந்த மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் TNGA ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 21 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலாக XUV400-ஐ அறிமுகம் செய்தது.
    • விசேஷமாக உருவாக்கப்பட்ட மஹிந்திரா XUV400 ஏலம் அந்நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்டது.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து XUV400 மாடல் அதிக பிரபலமாக உள்ளது. இந்தியாவில் XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை அறிமுகம் செய்யும் போதே, விசேஷமாக டிசைன் செய்யப்பட்ட XUV400 ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்தது. அதன்படி ஏலத்தில் விற்பனையாகும் தொகை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் மஹிந்திரா அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் XUV400 மாடலை ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்து இருக்கிறது. ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 காரை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஐதராபாத்தை சேர்ந்த கருணாகர் குந்தவரம் என்பவரிடம் வழங்கினார். இவர் ஸ்பெஷல் எடிஷன் மஹிந்திரா XUV400 மாடலை ரூ. 1 கோடியே 75 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கி இருக்கிறார்.

     

    ஏலத்தில் கிடைக்கும் தொகை முழுவதும் பூமியின் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மஹிந்திரா XUV400 மாடல் மஹிந்திரா மூத்த டிசைன் பிரிவு அலுவலர் பிரதாப் போஸ் மற்றும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரிம்ஸிம் டடு இணைந்து உருவாக்கி உள்ளனர். இந்த ஸ்பெஷல் எடிஷன் XUV400 மாடல் "ரிம்ஸிம் டடு X போஸ்" எடிஷன் என அழைக்கப்படுகிறது.

    இந்த கார் ஆர்க்டிக் புளூ பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் டுவின் பீக் லோகோ காப்பர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த XUV400 மாடலின் சில பகுதிகளில் "ரிம்ஸிம் டடு X போஸ்" லோகோ இடம்பெற்று இருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் தவிர மஹிந்திரா XUV400 முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காரின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV400 மாடல்- எவரஸ்ட் வைட், ஆர்க்டிக் புளூ, நபோளி பிளாக், கேலக்ஸி கிரே மற்றும் இன்ஃபினிட்டி புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய XUV400 மாடலை வாங்க இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ கார் மாடல் 2010 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த பிரிவில் மாருதி இகோ மாடல் மட்டும் 94 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து விற்பனையில் 10 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 2010 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி இகோ மாடல் அதிகம் விற்பனையாகும் வேன் எனும் பெருமையை பெற்று இருக்கிறது.

     

    இதுதவிர சந்தையில் இந்த பிரிவில் 94 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போது மாருதி இகோ மாடல் 13 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரும் இருக்கை அமைப்புகளில் கார்கோ, டூர் மற்றும் ஆம்புலன்ஸ் வடிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மாருதி இகோ வேன் மாடல் 1.2 லிட்டர் K சீரிஸ் டூயல் ஜெட், பெட்ரோல் என்ஜின் மற்றும் இதே என்ஜின் CNG கிட் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இவை மறையே 80 ஹெச்பி பவர், 104.4 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ×